என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாம்பலம்"
சென்னை:
தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருண்கோயில். இவரது மகன் ஆதித்யா (9). நேற்று விடுமுறை நாள் என்பதால் அருண்கோயில் அவரது மனைவி ஆகியோர் ஆதித்யாவையும் அழைத்துக் கொண்டு தி.நகருக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.
பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி செல்வதற்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது சிறுவன் ஆதித்யா பிளாட் பாரத்தில் அங்கும் இங்கும் ஓடியபடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்சார ரெயில் வந்ததை கவனிக்காமல் தவறி விழுந்தான். இதில் ரெயிலில் அடிபட்டு உடல் நசுங்கி இறந்தான்.
தங்கள் கண் முன்னாலேயே மகன் இறந்ததை பார்த்து அருண் கோயிலும், அவரது மனைவியும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
தகவல் அறிந்ததும் எழும்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு இன்றும், நாளையும் கூட்டம் அலைமோதும்.
இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வரையில் மாம்பலம், பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் தினமும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் தி.நகரில் மக்கள் கூடும் இடங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் பாதுகாப்பு பணிகள் இன்று தொடங்கின.
கூட்டத்தில் புகுந்து திருடும் கொள்ளையர்களின் 50-க்கும் மேற்பட்ட போட்டோக்களை போலீசார் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளனர். பேஸ் டிடெக்டிவ் என்கிற கண்டு பிடிப்பு முறையில் புகைப்படத்தில் இருக்கும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை காட்டிக் கொடுக்கும் வகையிலும் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருடும் எண்ணத்தில் எந்த குற்றவாளியாவது மாம்பலம் பகுதியில் ஊடுருவினால் நிச்சயம் போலீசில் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் தப்ப முடியாது.
தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானமும் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். இதன் மூலம் போலீசார் பணியில் இல்லாத இடங்களிலும் கூட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும்.
ஜி.பி.எஸ். கருவியுடன் கேமரா இணைக்கப்பட்டிருப்பதால் போலீஸ்காரர் எங்கு இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் போலீசார் யாராவது தவறு செய்திருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
இது தவிர 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 8 இடங்களில் கண்காணிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. #Drone
சென்னை பரங்கிமலை ரெயில் நிலைய விபத்துக்கு பின்னர் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் அதிவேக மின்சார ரெயில் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பயணிகளின் தேவைக்காக சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை தெற்கு ரெயில்வே நீட்டித்தது.
இதற்கிடையே தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16115/16116), இன்று(சனிக்கிழமை) முதல் கிண்டி மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்