search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகு"

    ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் தினமும் சில விரத வழிபாடுகளை முறையாக செய்து வந்தால் அதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
    தினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும்.

    தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

    துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி விரதம் இருந்து வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் விரதம் இருந்து வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

    ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

    ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் என்வென்ன பிரச்சனைகள் வரும், அதற்கு என்வென்ன பரிகாரங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.






    ராகு தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம்.



    ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தைவழி சொத்துக்கள் கைகூடி வரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது, எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இடமாற்றம், வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும். உடல் நலக் கோளாறுகள் மாறி மாறி ஏற்படும்.

    ராகு தோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி?

    ராகுவுக்கு தனியாக ஓரைகாலம் இல்லை. அதனால், சனிக்கிழமை சூரியோதயத்தில் 5 அகல் தீபம் ஏற்றி வையுங்கள். தினமும் துர்கை காயத்ரி கூறுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையை உதிரி 5 எலுமிச்சம்பழம் கொடுத்து, 5 அகலில் நெய்தீபம் ஏற்றி கும்பிடுங்கள். (எலுமிச்சை தீபம் கூடாது). 3 பழம் திரும்பி வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

    அடிக்கடி பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கையையும், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று ராகுவையும், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நாகரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். முடிந்தால் பக்தர்களுக்கு உளுந்துசாதம் தானமாக கொடுங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது அகத்திக்கீரை தீவனம் வாங்கிக் கொடுங்கள்.

    அடிக்கடி அருகிலுள்ள கோயிலில் துர்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் ராகுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை ரம்மியமாகும்.
    ஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும். இந்த தோஷ நிவர்த்திக்கான பரிகாரத்தை பார்க்கலாம்.
    ஒரு ஆணின் ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும்.

    இப்படிப்பட்ட சர்ப்பதோஷம் அமைந்த ஜாதகங்கள் சந்தோஷத்தை சந்திப்பது அரிதாக இருக்கும். அதுபோல் ஜாதகம் அமைந்தவர்களுக்கு திருமணத்தடை ஏற்படலாம். பிள்ளை பிறக்கவும் தடை ஏற்பட வழி உண்டு.

    அவர்கள் தங்கள் ஜாதகத்தில் ராகு - கேது இருக்கும் இடத்தை நன்கு ஆராய்ந்து அது யார் காலில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய நட்புக்கிரகத்தின் நாளில் அதிகாலையில் நீராடி, புளிப்பு கலந்த பதார்த்தத்தையும், அன்னம், உளுந்து கலந்த பலகாரத்தையும் தயாரித்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் படைத்து, மந்தாரை மலரை ராகு படத்திற்குச் சூட்டி வழிபட்டு விரதம் இருப்பது நல்லது.

    அதே போல் கேதுவிற்கு புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம் படைத்து ஐந்துவித மலர்களை மாலைகளாக்கி கேது படத்திற்கு சூட்டி வழிபட வேண்டும். விரதம் இருந்து நாக கவசத்தை நாள்தோறும் அல்லது வெள்ளிதோறும் அல்லது பூஜிக்கும் தினத்தில் பாடி வழிபட்டால் சர்ப்பகிரகங்கள் சந்தோஷமான வாழ்வை வழங்கும்.

    அருகில் உள்ள நாகத்துடன் கூடிய விநாயகப் பெருமானையும் வழிபட்டு, பின்னோக்கி ராகுவுக்கு நான்கு சுற்றும், கேதுவுக்கு ஏழு சுற்றும் வர வேண்டும். ஸ்ரீ விக்னேஸ்வரா என்றாலே சர்ப்பதோஷம் நீங்கி விடும்.

    கால சர்ப்ப தோஷத்தை போக்கும் சிறப்பான விநாயகர் தலங்களில் தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலம் தலமும் ஒன்றாகும். ஆயிரம் என்கிற எண்ணோடு சம்பந்தப்பட்ட விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்று. இவர் 2300 ஆண்டுகளுக்கு முன் வந்தவர் என்றும் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார் என்றும் கூறப்படுகிறது. பாண்டிய அரசனின் யாகத்திற்காக இந்த விநாயகர் நர்மதை நதிக்கரையிலிருந்து வரழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டவர் என்றும் ஓர் வரலாறு உள்ளது.

    ஒருசமயம் ஒரு பணக்காரர் 1008 பேர்களுக்கு அன்னம்பாலித்தபோது எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தது. என்ன செய்வதென்று யோசித்த அவர் விநாயகரிடம் வேண்டிக் கொண்டார். உடனே விநாயகர் இளைஞனாக இத்தலத்தில் வந்த சலனத்தைப் போக்கி ஆயிரத்தெண் பிள்ளையார் ஆனார்.

    கேது கிரகத்தின் அதிஷ்டான தேவதையாக விளங்குவதால் ராகு கேது பரிகாரம் மற்றும் காலசர்ப்ப தோஷ நிவர்த்தித் தலம். அபிஷேகம் மற்றும் சதுர் தேங்காய் 108, 1008 விடப்பட்டு வழிப்படப்படுகிறது. மேலும் கொட்டாரக்குறிச்சி கிராமத்தில் வீராசாமி, உச்சி மாகாளியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் ஆலயங்கள் உள்ளன.

    திருச்செந்தூரில் அரங்கேறிய சுப்பிரமணிய புஜங்த்தை ஆதிசங்கரர் பாடியதற்கு முன் இந்த ஊரின் விநாயகர் மேல் கணேச பஞ்சரத்தினம் பாடியதாகத் தகவல். ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க கணேச பஞ்ச ரத்தினம் பாடியது இவரை வைத்துத் தான் என்றும் நம்பப்படுகிறது.
    ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் யோகம் செய்யக்கூடாது என்பார்கள். அவ்வாறு யோகம் செய்யும் போது, மிகப் பெரிய கெடுதலையும் செய்து விடுவார் என்பது பொதுவான கருத்து.
    காரகன் - பிதாமகன்
    தேவதை - பத்திரகாளி
    தானியம் - உளுந்து
    உலோகம் - கருங்கல்
    நிறம் - கறுப்பு

    குணம் - தாமஸம்
    சுபாவம் - குரூரர்
    சுவை - புளிப்பு
    திக்கு - தென் மேற்கு
    உடல் அங்கம் - முழங்கால்

    தாது - இல்லை (நிழல் கிரகம் என்பதால்)
    நோய் - பித்தம்
    பஞ்சபூதம் - ஆகாயம்
    பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 7-ம் இடத்தை முழுமையாகவும், 3, 10 இடங்களை கால் பங்கும், 5,9 ஆகிய இடங்களை அரை பங்கும், 4,8 இடங்களை முக்கால் பங்கும் பார்ப்பார்.

    பாலினம் - பெண்
    உபகிரகம் - வியாதீபாதன்
    ஆட்சி ராசி - இல்லை
    உச்ச ராசி - விருச்சிகம்

    மூலத்திரிகோண ராசி - இல்லை
    நட்பு ராசி - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    சமமான ராசி - இல்லை
    பகை ராசி - மேஷம், கடகம், சிம்மம்

    நீச்ச ராசி - ரிஷபம்
    திசை ஆண்டுகள் - பதினெட்டு ஆண்டுகள்
    ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை ஆண்டுகள்
    நட்பு கிரகங்கள் - சுக்ரன், சனி
    சமமான கிரகங்கள் - புதன், குரு

    பகையான கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
    அதிகமான பகையான கிரகம் - சூரியன்
    இதர பெயர்கள் - வஞ்சன், நஞ்சன், கரும்பாம்பு
    நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம் 
    ×