என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தன்னம்பிக்கை"
- இலக்குகளை நிர்ணயிக்கும்போது, அவை யாரை சார்ந்து இருக்கிறது என்பது முக்கியம்.
- இலக்கை அடைய தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்பட வேண்டும்.
வாழ்க்கையில் கடினமாக உழைத்தாலும், பலருக்கு முன்னேற்றம் எட்டாக் கனியாகவே இருக்கும். சரியான இலக்கை நிர்ணயித்து செயல்படாததும் இதற்கு காரணமாகும். நாம் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்து இலக்குகளை நிர்ணயிப்பது முக்கியமானது. இலக்குகள் வரையறுக்கக் கூடியதாக, அளவிடக் கூடியதாக, அடையக் கூடியதாக, கால வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
அவற்றை மூன்று படிநிலைகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். நீண்டகால, குறுகியகால, மத்திய கால இலக்குகள் என்று எல்லாவற்றையும் பிரித்து, அதற்கான செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே நம்முடைய இலக்கை எளிதாக அடைய முடியும். சாதனையாளர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றனர். அதனாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
நம் அன்றாட வாழ்க்கையிலும், ஒரு இலக்கை நிர்ணயித்து அதன்படி நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். மாணவர்கள் உயர்கல்வி கற்பது, விளையாட்டு வீரர்கள் முதல் பரிசு பெறுவது, தொழில்முனைவோர் தனது தொழிலில் வெற்றி பெறுவது, பணி புரிபவர்கள் அவர்களது துறையில் முதன்மை பதவிக்கு செல்வது போன்ற இலக்குகளை நிர்ணயித்து பயணிக்கலாம்.இதன் மூலம் நேரத்தையும், திறமையையும் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த முடியும்.
இலக்குகளை நிர்ணயிக்கும்போது, அவை யாரை சார்ந்து இருக்கிறது என்பது முக்கியம். நம்முடைய தனிப்பட்ட குறிக்கோளாக, குடும்பம், சமூகம் சார்ந்ததாக இருக்கும்போது அந்த இலக்குகளை எவ்வளவு நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமான, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். இலக்கினை தீர்மானம் செய்த பிறகு, 'இதை நம்மால் செய்துவிட முடியுமா?' என்று நம்மை நாமே குறைத்து மதிப்பிடுதல் கூடாது. அது நம்முடைய ஊக்கத்தைக் குறைக்கும்.
நம்முடைய பலவீனமே, எல்லாம் நமக்கு உடனடியாக நடைபெற வேண்டும், நினைத்த வண்ணம் நடக்க வேண்டும் என்று நினைப்பது தான். அவற்றை எல்லாம் நீக்கி விட்டு, சிறிது கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. ஆனால், இலக்கை அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்பட வேண்டும். நம் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று முழுமையாக நம்ப வேண்டும்.
இலக்குகளை நிர்ணயித்த பின்பு, அதில் உள்ள சிக்கல்கள், நாம் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்த தீர்வு பற்றியும் சிந்திக்க வேண்டும். சவால்களை சமாளிக்கும் திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது குறித்த தெளிவான முடிவுகளை ஆராய்ந்து, அவற்றில் தோல்வி கண்டாலும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான மன உறுதியையும் வளர்த்துக் கொள்ளுதல் அவசியமானது.
பொதுவாக, வெற்றி என்பது ஒரு நல்ல செயலின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்றே எடுத்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்களை விட அப்படி ஒன்றும் பிரமாதமான திறமை படைத்தவர்கள் இல்லை. அவர்கள் வெற்றி பெற, தோல்வி அடைந்தவர்களுக்கு காரணமாகிறார்கள். ஆனால் தோல்விகள் நிரந்தரமில்லை. “நாமும் ஜெயிக்க முடியும்“ என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.
அவமானங்கள் வெற்றியின் அஸ்திவாரம்
இன்று வாழ்க்கையில் பலர் பலவிதமான அவமானங்களை சந்திக்கின்றனர். அதை சகிக்க முடியாமல் சிலர் தவறான முடிவு கூட எடுத்து விடுகின்றனர். அவமானத்தை அவமானமாக எடுத்து கொள்ளாமல் லட்சியத்தை அடைவதற்கான வெறியாக மாற்றி கொள்ள வேண்டும். கிரேக்க நாட்டில் ஒரு சிறுவன் ‘திக்குவாயன்‘ என்று அவமானப்படுத்தப்பட்டான்.
பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட அவனுக்கு பேச்சு வரவில்லை. எல்லோரும் ஏளனம் செய்தனர். அப்போது அவனுக்குள் ஒரு வெறி பிறந்தது. கூழாங்கற்களை வாயில் போட்டு பேசிப் பழகு என்று அவன் தாய் சொன்னபடி செய்தான். நாளடைவில் அவன் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. வார்த்தைகள் சரளமாக வந்தன. சொற்பொழிவில் ஒரு ஈர்ப்பு இருந்தது. கூட்டம் கூடியது. உலக புகழ்பெற்ற பேச்சாளர் ஆனார். அவர்தான் டெமாஸ்தனிஸ் என்ற பேச்சாளர். அவமானங்கள் வெற்றியின் அஸ்திவாரம்.
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை உள்ளவர்களை யாராலும் வெற்றி காண முடியாது. மருத்துவமனையில் உள்ள நோயாளியை நண்பர்களும், உறவினர்களும் சென்று பார்க்கிறார்கள். ஏன்? அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டத்தான். மிகவும் கடுமையான வியாதியாக இருந்தாலும் மற்றவர்கள் கொடுக்கும் ஆறுதலான வார்த்தைகள்தான் அவரது வியாதியை பாதியாக குறைக்க காரணமாகிறது. நமது எண்ணங்களும், நிலைப்பாடுகளும், உளம் சார்ந்தது என்றாலும், தன்னம்பிக்கைதான் உயிர் சார்ந்தவை.
ஆகவே, தன்னம்பிக்கையை உறுதிபடுத்துங்கள். வெற்றிதரும் சிந்தனைகளை மட்டும் உயிர்மூச்சாக கொள்ளுங்கள். நீங்கள் எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே ஆவீர்கள். மனோதைரியமும், தன்னம்பிக்கையும்தான் நம்மை வாழ வைக்கும் உயிர்நாடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்