search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூளை"

    மூளையின் செயல்திறனை மேம்படுத்த பல்வேறு நுட்பங்கள் உள்ளன. இதனை முறையாக வழக்கமான முறையில் செயல்படுத்தினால் அறிவுத்திறனை முன்னேறச் செய்யலாம்.
    மூளையின் செயல்திறனை மேம்படுத்த பல்வேறு நுட்பங்கள் உள்ளன. இதனை முறையாக வழக்கமான முறையில் செயல்படுத்தினால் அறிவுத்திறனை முன்னேறச் செய்யலாம்.

    ‘மூளைத்திறன் குறையாமல் இருக்கவும், மேம்படவும் வாழ்நாள் முழுவதும் எதையாவது ஒன்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    இத்தகைய கற்கும் பயிற்சி மூலம் நமது ஞாபகசக்தி அதிகரிக்கும். மேலும் தினமும் உடற்பயிற்சிகள் செய்தால், மூளையில் புதிய செல்கள் உருவாகும். இதனால் அறிவுத்திறன் மேம்படும், மூளை நரம்பியல் மண்டலத்தில் உள்ள ‘நியூரான்கள்’ ஆரோக்கியமாக இருக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மூளையிலுள்ள முக்கியமான பகுதி ‘ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus). தமிழில் இதை ‘மூளை பின்புற மேடு’ என்பார்கள். இதுதான் நமது ஞாபகசக்தி மற்றும் கற்கும் திறனை மேம்படுத்தும் பகுதியாகும்.

    நாம் எப்போது கற்பதை நிறுத்த ஆரம்பிக்கின்றோமோ, அப்போது மூளையின் இந்தப் பகுதிகள் சுருங்க ஆரம்பித்துவிடுகின்றன.

    நமது மூளையின் இடதுபுறம் உள்ள பகுதி ‘டெம்பரல் லோப்’ (Temporal Lobe). இதை ‘தற்காலிக மண்டலம்’ என்பார்கள். இந்தப் பகுதிதான், வாக்கு சாதுர்யம், நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. இதன் திறனை மேம்படுத்த இசைப்பயிற்சி உதவுகிறது என்று கண்டுள்ளனர். இதனால் தான் இசைத்துறையைச் சார்ந்தவர்கள் சிறந்த ஞாபகசக்தி கொண்டுள்ளனர்.

    சில பயிற்சிகளாலும் மூளையின் செயல் பாடுகளை தூண்டலாம். அத்தகைய பயிற்சிகளில் ஒன்று ‘நிமானிக்’ (Mnemonic). இந்த நினைவூட்டும் பயிற்சி மூளையில் தகவல்களை பதிவு செய்யவும் (encode), பதிவு செய்துள்ள தகவல்களை மீட்டு எடுக்கவும் (retrieve) உதவுகிறது. மிகக்கடினமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள இந்த பயிற்சி உதவுகிறது.

    நாம் படித்தது, கேட்டது போன்றவற்றை மறந்துபோகாமல் ஞாபகத்தில் வைக்க எளியமுறையில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் படங்கள், வாக்கியங்கள் மற்றும் சில சாதாரண வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.

    இதுபோல இன்னொரு பயிற்சி ‘அக்ராஸ்டிக்’ (Acrostic). அகரவரிசைப்படுத்தும் முறையில் எழுத்துக்களின் வரிசைகள் நினைவில் வைத்துக்கொண்டு ஞாபகத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் முறைப்படுத்தப்படுகின்றன.

    அடுத்தது, ‘மைண்ட் பேலஸ் மெமரி’ (Mind Palace Memory) என்ற பயிற்சி. தமிழில், ‘அரண்மனை நினைவகப்பயிற்சி’ எனப்படும் இது மிகவும் சக்தி வாய்ந்த பயிற்சி ஆகும். இதில் மூளையின் செயல்திறனை, வார்த்தைகள் மற்றும் படங்களைக் கொண்டு இணைப்பு ஏற்படுத்தி, நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்வதாகும். இப்பயிற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேற்று மொழி வார்த்தை களையும் சொற்றொடர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

    மூளைக்கு சில புதிய அனுபவ ஆற்றல் களைக் கொடுப்பதினாலும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். ‘நியூரோபிக் காக்னடிவ் டிரைய்னிங்’ (Neurobics Cognitive Training) என்னும் நரம்பியல் அறிவாற்றல் பயிற்சியில் மூளையைப் பயன்படுத்தி செய்யும் பயிற்சி முறைகள் உள்ளன. இதில் நமது உடல் மற்றும் உணர்வுகள் மூலம் மூளையின் பயன்பாடு மேம்படுத்தப்படுகிறது.

    உதாரணமாக, வலதுகைப் பழக்கம் உள்ளவர் தனது இடதுகையால் செயல்களைச்செய்யப் பழகவேண்டும். இதனால் மூளையின் பல பகுதிகள் இணைந்து தூண்டப்படும். இது நமது நரம்பணுக்களை வலிமையாக்கி அவை வயதாகாமல் இருக்க எதிர்ப்புசக்தியைத் தரும்.

    புதிர்கள், குறுக்கெழுத்துப்போட்டி, வரிசைப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மூளையின் திறனை அதிகரிக்கும். மூளைசார்ந்த விளையாட்டுகள் மூலம் மூளையின் நிர்வாக செயல்பாடு, வேலை நினைவாற்றல், செயலாற்றும் வேகம் போன்றவை அதிகரிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும், லேசான அறிவாற்றால் முரண்பாடு (Mild Cognitive Impairmrnt) உள்ளவர்களின் ஞாபகசக்தி அதிகரிப்பதாகவும், மனச்சோர்வினால் ஏற்படும் நோய்களும் குணமாகின்றன. மூளைக்கு அளிக்கப்படும் இதுபோன்ற முறைப்படுத்தப்பட்ட தூண்டுதல் பயிற்சியால் மனச்சோர்வு நோய் பாதிப்பில் இருந்து மீளமுடியும்.

    ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் மூலமும் மூளையின் ஆரோக்கியம் பலப்படுத்தப்படும். மூளையின் எடையில் 8 சதவீதம் ஒமேகா கொழுப்பு அமிலம் இருப்பதாகவும், இந்த கொழுப்பு அமிலம் மூளையின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் பாதுகாப்பதில் திறன் வாய்ந்ததாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    கணினிகள் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்கள் நம்முடைய பல வேலைகளை சிறப்பாக செய்ய ஆரம்பித்து விட்டன. இவை நமது மூளையின் செயல்பாடுகளை குறைத்து மனிதனை சோம்பேறி ஆக்கிவிட்டன.

    எனவே, நமது மூளைக்கு சவால் விடும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கணிதம் சார்ந்த மற்றும் மதிப்பீடு தரக்கூடிய பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வரவேண்டும். எந்த நிலையிலும் உடலையும், மூளையையும் சோம்பேறி ஆக்கிவிடக்கூடாது. இதுபோன்ற பயிற்சிகள் மூலம் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

    முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.
    மூளையே உடலின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு எனலாம். மூளையின் செயல்திறனை பாதிப்பது என்னென்ன என்பதனை அறிந்து அதனை தவிர்த்து விடுவோம்.
    மனித மூளையின் எடை சுமாராக 1,300-1,400 கி அளவு இருக்கும். மனித உடலின் எடையில் சுமார் 2 சதவீதம் அளவு மூளை எனலாம். இந்த மூளையே உடலின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு எனலாம். மூச்சு விடுதல், ஹார்மோன் இயக்கம், சதைகளின் இயக்க கட்டுப்பாடு, இருதய துடிப்பு, சிந்தனை, உணர்ச்சி என இவை அனைத்தும் இதில் அடங்கும். ஆகவே மூளைக்கு அதிக சக்தி தேவைப்படும்.

    உங்களது அன்றாட கலோரி சக்தியில் 20 சதவீதம் மூளைக்கே தேவையாகின்றது. இது வயது, ஆண்பால், பெண்பால், மூளையின் சக்தியினை உபயோகிக்கும் அளவு இவற்றினை பொறுத்து சற்று மாறுபடும். ஆக இந்த மூளையின் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதனை அறிய வேண்டும். மூளையின் செயல்திறனை பாதிப்பது என்னென்ன என்பதனை அறிந்து அதனை தவிர்த்து விடுவோம்.

    * மெத்தனமாக போர் அடித்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பவர்களுக்கு மூளை செயல்திறன் வெகுவாய் குறைந்து விடும். உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ அதுபோல் மூளைக்கு வேலை, பயிற்சி அவசியம். இது இல்லையெனில் மூளை சுருங்கி விடும்.

    * காலை உணவினை துரத்தி, திட்டி கொடுப்பவர்கள் பெண்கள்தான். காலை உணவினை யாரும் உண்ணாமல் வீட்டில் உள்ளவர்களை வெளியில் செல்ல, வீட்டில் உள்ள பெண்கள் விடவே மாட்டார்கள். இது இவர்கள் செய்யும் மாபெரும் உதவி. அவசரம் என்ற பெயரில் ஓடும் நபர்கள் அவர்களது மூளைக்கு தேவையான சக்தி அளிக்காமல் விட்டு விடுவதால் உங்கள் அனைத்து செயல்திறன்களும் குறைந்து விடும். இதனைத் தொடர்ந்து செய்தால் அதிக பாதிப்புகள் ஏற்படும்.

    ஜப்பான் நாட்டில் மேற்கொண்ட ஆய்வில் காலை உணவினை தவிர்ப்பவர்களுக்கு 26 சதவீதம் கூடுதலாக மூளையில் ரத்தக்குழாய் வெடிக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது என்று கூறப்படுகின்றது. மேலும் காலை உணவினை தவறாது எடுத்துக் கொள்பவர்களுக்கு மூளை நன்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காலை உணவினை முறையாக எடுத்துக் கொண்டால் நொறுக்கு தீனி உண்ணும் பழக்கம் வெகுவாய் குறையும்.

    * கதிர்வீச்சு கொண்ட செல்போன்களை காதை விட்டு அகற்றும் வழக்கமே குறைந்து விட்டது. காதோடு வைத்துக் கொள்ளும் வகையில் இன்றைய இளைய சமுதாயம் உள்ளது. தூங்கும் பொழுதும் அருகிலேயே வைத்து தூங்குகின்றனர். இந்த கதிர்வீச்சினால் தலைவலி, குழப்பம் போன்றவை ஏற்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு சமீபத்திய ஆய்வு புற்றுநோய், மூளை கட்டி போன்ற தாக்குதல்கள் ஏற்படுவதாக உறுதி செய்துள்ளன. உடல்நலம் சரியில்லாத பொழுது உலகமே தன் தலையில்தான் என்பதுபோல் அந்த நேரத்திலும் வேலை செய்யாதீர்கள். சளியாக இருந்தால் கூட சற்று ஓய்வு அவசியம். ஓய்வும், சிகிச்சையும் நோய்க்கு அவசியம் என்பதனை உணர்க.

    * தேவைக்கு அதிகமாக உண்ணாதீர்கள். மேலும் சத்தான உணவினை மட்டுமே உண்ணுங்கள். உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காதபொழுது உடல் சோர்வும், மூளையில் மறதி, சோர்வும் ஏற்படும். பேச்சுக்கு ஒரு தேவை உண்டு. தனிமையில் வாழ்பவர்களும் அதிகம் பேசாது இருப்பவர்களும் மனச்சோர்வு, படபடப்பு இவற்றுக்கு ஆளாவார்கள். எனவே தேவையானவற்றுக்கு பேசுங்கள்.

    * தூக்கமின்மை அதிக ஞாபகமறதியினை ஏற்படுத்தி விடும்.
    * புகை பிடித்தல் நரம்புகளை பாதிக்கும் தன்மை கொண்டது.
    * அதிக சர்க்கரை உட்கொள்வது மறதி நோயினை ஏற்படுத்தும்.
    * காற்றில் மிக அதிக மாசு இருந்தால் மூளை சுருங்கும்.

    ஆக தவிர்க்க வேண்டியவைகளுக்கு சற்று கவனம் கொடுத்து தவிர்த்தால் நமது மூளை நன்கு செயல்படும்.
    மூளைக்கு சற்று மாறுதலான நல்ல பழக்கங்களை தரும் பொழுது 80 வயதிலும் மறதி ஏற்படாது மூளை சுறுசுறுப்புடன் இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய வாழ்க்கை என்பது ஒரு பெரிய சவால் ஆகி விட்டது. ஒரே நேரத்தில் அஷ்டாவதானி போல் பல வேலைகளை ஒருவர் செய்ய வேண்டி உள்ளது. இது காலப்போக்கில் அதிக உளைச்சலை மூளைக்கு அளிக்கின்றது. ஆக மூளைக்கு சற்று மாறுதலான நல்ல பழக்கங்களை தரும் பொழுது 80 வயதிலும் மறதி ஏற்படாது மூளை சுறுசுறுப்புடன் இருக்கும்.

    * அன்றாடம் ஏதாவது படியுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். மூளைக்கு சவால்களை கொடுங்கள்.

    * உங்களுக்கு காது கேளாமை இருப்பின் உடனடியாக அதனை சரி செய்யுங்கள். சில முதியவர்களுக்கு காது கேளாமையினை சரி செய்தவுடன் அவர்கள் சுறுசுறுப்பாய் நல்ல மூளைத் திறனோடு செயல்படுவார்கள்.

    * 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவதும் 6 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தூங்குவதும் மூளை செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும்.

    * இருதயம் சீராய் இருத்தல், முறையான ரத்த அழுத்தம் இரண்டுமே ஆரோக்கியமான மூளைக்கு மிக அவசியம்.

    * அதிக உடல் எடை, சதை கூடியவர்களுக்கு மறதி பாதிப்பு ஏற்படும். சரியான உடல் எடையினை வைத்திருங்கள்.

    * புகை பிடிப்பவர்களின் மூளைத் திறன் மழுங்கி விடுகின்றது என பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    * அதிக சோகம், மனஉளைச்சல் இவை சுறுசுறுப்பான மூளையின் எதிரிகள்.

    * எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருங்கள். முடங்கி இருக்காதீர்கள்.



    * அக்கம் பக்கத்தினரிடம் நட்போடு பழகுங்கள்.

    * சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பது மிக அவசியம்.

    * காலையில் காபி, டீ குடியுங்கள். மதியம் 12 மணிக்கு மேல் வேண்டாம்.

    * வானவில் நிறத்தில் காய்கறிகளை உண்ணுங்கள்.

    * ஆயுர்வேத மசாஜ் முறை சிறந்ததே.

    * வாய்விட்டு சிரியுங்கள்.

    * பகலில் 10-20 நிமிட சாய்வு நாற்காலி தூக்கம் நல்லதே.

    * சிறிதளவு பட்டை தூளினை உணவில் தூவிக் கொள்ளுங்கள்.

    * சிறு சிறு தொட்டிகளுடன் தோட்டம் உருவாக்கலாமே.

    இவையெல்லாம் செய்து பாருங்கள். உங்கள் உடலும் மூளையும் சுறுசுறுப்பாய் இருப்பதனை நீங்களே உணருவீர்கள்.

    யாருக்குத்தான் உடலில் அதிக எடையினை தூக்கிக் கொண்டு வாழ பிடிக்கும். வாழும் முறையில் சில மாற்றங்களே அதிக பலனை உடலுக்கு அளிக்கும்.

    * அதிக நேரம் உட்கார்ந்தே நாளை செலவழிக்காதீர்கள். முடிந்த வரை வீட்டில் கூட நடந்த படியே இருங்கள்.

    * சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பது மிக அவசியம் என இன்றைய காலத்தில் அனைவரும் அறிவர். கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் தான் முடியாமை ஏற்படுகின்றது. சிறு சிறு அளவிளான உணவினை அடிக்கடி உண்டு வந்தால் இதற்கு மிக நல்ல தீர்வு கிடைக்கும்.

    * கண்டிப்பாய் 1½-2 லிட்டர் நீரினை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாய் குடியுங்கள். 
    பதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.
    பெரும்பாலானவர்கள் இப்போது நினைவாற்றல் குறைபாட்டால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நினைவாற்றல் குறைபாடு ஒவ்வொரு தனி மனிதர் வாழ்க்கையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் திணறுவார்கள். அலுவலக பணிகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க முடியாமல் தடுமாறுவார்கள். அதனால் தேவையற்ற மனஅழுத்தத்தி்ற்கும் உள்ளாகுவார்கள். நினைவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால், மூளை சுறுசுறுப்பாக இயங்கவேண்டும்.

    பதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும். கடினமான உடற்பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் மென்மையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலேபோதும். ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    ‘‘மூளையின் செயல்பாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகும்போதுதான் அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சினைகள் உருவாகிறது. மூளையில் ஹிப்போகாம்பஸின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நினைவுத்திறனை அதிகரிக்கலாம். அதற்காக உடற்பயிற்சி செய்யவேண்டும். தினமும் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூட போதுமானது. அது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை உயர்த்தும்’’ என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.
    மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும்.
    நினைவுத்திறன் அதிகரிக்க, ஞாபக மறதியை நீக்க வல்லாரைக் கீரை சாப்பிடுங்க! என்று சொல்வது வழக்கம். இனி, ஆப்பிளும் சாப்பிடுங்க என்று சொல்லலாம். ஆப்பிள் சாறுக்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    நம்மில் பலருக்கு வயது ஏற, ஏற நினைவாற்றல் குறைந்து மறதி ஏற்படுவது இயல்பாகவே உள்ளது. மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும்.

    மேலும், வயது ஏற ஏற ஏற்படும் ஞாபக மறதியும் தடுக்கப்படும் என்று மெசக்யுசெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆரோக்கியமான மூளைக்கு ஆப்பிள்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவாகும்.

    இவை செரிமானத்துக்கும், உடல் எடை குறைவுக்கும் ஆப்பிள்கள் ஏற்றவை. ஆப்பிள்களில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்த் தடுப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. உலக அளவில் 7,500 ஆப்பிள் வகைகள் பயிரிடப்படுகின்றன.

    மூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.
    மூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் தேவையான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அவைகளை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் அவசியமானது. எந்தெந்த நேரத்தில் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.

    காலையில் எழுந்ததும் டீயோ, காபியோ பருகுவதற்கு முன்பாக லவங்கப்பட்டை கலந்த பானம் பருகுவது நல்லது. அதிலிருக்கும் வேதியியல் பொருட்கள் பெருமூளையின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் வழிவகை செய்கின்றன. லவங்கத்தை பொடி செய்து எலுமிச்சை சாறு மற்றும் சூடான நீரில் கலந்தும் பருகலாம். தினமும் காலையில் இதனை பருகுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம்.

    காலை உணவுடன் முட்டையை அவித்தோ, ஆம்லேட்டாக தயார் செய்தோ சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் பி, கோலின் போன்றவை நினைவாற்றல், மனநலத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. தினமும் காலை உணவுடன் முட்டையை சேர்க்கும்போது திருப்தியாக சாப்பிட்ட மன நிறைவு கிடைக்கிறது. மதியம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும் உதவுகிறது.

    மதிய உணவில் கட்டாயம் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் அமினோ அமில டைரோசின் உள்ளடங்கி இருக்கிறது. அது டோபமைன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க டோபமைன் துணைபுரிகிறது. மேலும் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடலுக்கு நலம் சேர்க்கிறது. மதியம் சாப்பிட்டபிறகு மந்தமான உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்கும்.

    மாலை வேளையில் வால்நெட் சாப்பிடுவது மூளைக்கு நல்லது. அதிலிருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அறிவாற்றல் திறனை அதிகரிக்கும். நினைவாற்றலும் மேம்படும். தினமும் 7 வால்ெநட்டுகள் சாப்பிட வேண்டும். 
    தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மூளையின் வளர்ச்சி தடைபடும், அதன் அளவும் சுருங்க தொடங்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
    துரித உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தருபவை. அவை மூளையின் செயல்பாட்டுக்கும் பங்கம் விளைவிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மூளையின் வளர்ச்சி தடைபடும், அதன் அளவும் சுருங்க தொடங்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர் மோனிஷா கூறுகையில், ‘‘அளவுக்கு அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுவது மூளையின் வளர்ச்சியை பாதிக்கும். அதனால் ஞாபகத்திறனும் குறையும். தொடர்ந்து துரித உணவுகளை சுவைத்தால் டோகோமைன் என்ற ரசாயனம் சுரக்கும். இது துரித உணவுகளை சாப்பிட தூண்டிக்கொண்டே இருக்கும். அதனால் துரித உணவுகள் சாப்பிடுவதை குறைப்பது கடினமான காரியமாகிவிடும்.’’ என்கிறார்.

    மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். காலி பிளவரில் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் நிறைந்திருக்கின்றன. இவை மூளையின் நலனையும் பாதுகாக்கும். அதேபோல் தினமும் காலையில் ஆறு பாதாம் பருப்புகளை சாப்பிடுவது நல்லது. அது நினைவாற்றலை அதிகப்படுத்த உதவும்.

    இதில் ஏ, டி ஆகிய வைட்டமின்கள், புரதச்சத்து, நல்ல கொழுப்பு போன்றவை நிறைந்திருக்கின்றன. இவை ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்த உதவும். பூண்டுவை தினமும் சமையலில் சேர்த்துக்கொள்வது அவசியமானது. அது மூளை சுருங்குவதை தடுக்கும். முட்டைக்கும் மூளையை சுருங்காமல் பாதுகாக்கும் ஆற்றல் இருக்கிறது. அதனால் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட்டு வர வேண்டும். கோழி இறைச்சியும் மூளைக்கு நல்லது. அதில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளடங்கி இருக்கிறது. 
    மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
    நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது, மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கருதுகிறோம்.

    ஆனால், உண்மையில் இரு பாலித்தனவருக்கும் உடல் மட்டுமல்ல, மூளையும் வித்தியாசப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறுவிதமாக வேலை செய்கின்றன என்பதே அவர்கள் சொல்லும் காரணம்.

    பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களைக் கொண்டதாக இருக்கிறது. முதல் மையம், உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

    இரண்டாவது மையம், மொழி வளத்துக்கானதாக உள்ளது. இது வார்த்தைகளையும் உரையாடல்களையும் கவனிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம், முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரைத் துல்லியமாக எடை போடும் தன்மை கொண்டது.

    ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால் அவை வேறுவிதமாகச் செயல்படுகின்றன.



    ஒரு விஷயத்தை பெண் பேசுவது போல் ஆணால் விவரித்துக் கூற முடிவதில்லை. ஓர் ஆண் தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல மொழியால் விலாவரியாகக் கூற முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பு கொண்டு அவர் மனதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    ஆண்களின் மூளை அமைப்பு, கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம்.

    ஆனால் பெண்ணின் மூளை அப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் பெரிதாக இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மட்டும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

    பெண்ணுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது. பெண்ணைப் பொறுத்தவரை, ஆண் அதீத அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

    அது போன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றிய சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே இரு தரப்புக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 
    ×