search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சாட்டு"

    நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஷ், டோக்கியோ போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Nissan #CarlosGhosn
    டோக்கியோ:

    ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருபவர் கார்லோஸ் கோஷ். நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இவரை, விசாரணைக்கு பின்னர் டோக்கியோ போலீசார் நேற்று கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிதி முறைகேடு மற்றும் வருமானத்தை குறைத்து காட்டிய புகார் தொடர்பாக கார்லோஸ் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் ஜப்பானைச் சேர்ந்த என்.எச்.கே. வானொலியும் மற்றும் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

    நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்லோஸ் கோஷ், மீது கூறப்பட்ட புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரும், பிரதிநிதித்துவ இயக்குனர் கிரேக் கெல்லியும் நீண்ட காலமாக முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  #Nissan #CarlosGhosn
    முன்னாள் ‘மிஸ் இந்தியா’ அழகியும், நடிகையுமான நிஹரிகா சிங், ‘மீ டூ’ என்ற சமூக வலைத்தள ஹே‌ஷ்டேக் மூலம், தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். #MeToo #NiharikaSingh
    புதுடெல்லி :

    பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் பிரபலங்கள், ‘மீ டூ’ என்ற சமூக வலைத்தள ஹே‌ஷ்டேக் மூலம், தங்களது பாதிப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், முன்னாள் ‘மிஸ் இந்தியா’ அழகியும், நடிகையுமான நிஹரிகா சிங், அதில் தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜூலை மாதம், டெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் அனிசியா பத்ரா, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் மயாங்க் சிங்வி கைது செய்யப்பட்டார். மயாங்க் சிங்வி மீதுதான் நிஹரிகா சிங் குற்றம் சாட்டி உள்ளார். அதில், ‘‘கடந்த 2011-ம் ஆண்டு, சிங்வியை ஒரு பிறந்தநாள் விருந்தில் சந்தித்தேன். பிறகு அவர், எனது பெயரை தனது மார்பில் பச்சை குத்திக்கொண்டார்.

    என்னிடம் காதலை தெரிவித்தார். எனக்கு மோதிரம் பரிசளித்து, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவருக்கும், எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அவரது மோசமான குணம் தெரிந்தவுடன், நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தேன். அதனால் ஆத்திரம் அடைந்த அவர், என்னை ஆபாசமாகவும், சாதி ரீதியாகவும் திட்டினார். தாக்கவும் செய்தார். என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பினார்’’ என்று நிஹரிகா கூறியுள்ளார். #MeToo #NiharikaSingh
    நகர்ப்புற மாவோயிஸ்டு களை காங்கிரஸ் ஆதரிக் கிறது என்று சத்தீஷ்கார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #NarendraModi #Congress
    ஜக்தல்பூர்:

    90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு வருகிற 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அந்த மாநிலத்தில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடி, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சத்தீஷ்கார் மாநிலத்தில் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் பகுதியில் நேற்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். அங்குள்ள ஜக்தல்பூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி காங்கிரசை கடுமையாக தாக்கிப் பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    பழங்குடியின மக்கள் என்றாலே காங்கிரசுக்கு கேலியாக தெரிகிறது. ஒரு முறை இங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நான் வந்தபோது பழங்குடியினர் அணியும் தொப்பியை அணிந்தேன். அதை காங்கிரஸ் மிகவும் கிண்டல் செய்தது. இது பழங்குடியின மக்களை அவமதிக்கும் செயல்.

    மறைந்த பிரதமர் வாஜ்பாயின் லட்சியம் சத்தீஷ்கார் மாநிலத்தை வளமாக்கவேண்டும் என்பது ஆகும். அதை நிறைவேற்றும் வரை ஓயமாட்டேன். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தார் பகுதியின் வளர்ச்சிக்கு எதையும் காங்கிரஸ் செய்யவில்லை. மாவோயிஸ்டு பயங்கரம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    தலித்துகள், நலிவடைந்த பிரிவினர், பழங்குடியினர் பற்றி காங்கிரஸ் நிறைய பேசுகிறது. அதே நேரம் அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே கருதுகிறதே தவிர ஒருபோதும் மனிதர்களாக மதிப்பதில்லை.

    நகர்ப்புற மாவோயிஸ்டுகள் நகரங்களில் குளுகுளு வசதி கொண்ட வீடுகளில் சுகபோகமாக வசிக்கின்றனர். மிகவும் பளிச்சென்று காணப்படுகிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் வெளிநாடுகளில் படிக்கின்றனர். ஆனால் இவர்கள்தான் பழங்குடியின இளைஞர்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தூண்டி விடுகின்றனர். இவர்கள் ஏழ்மையில் உழலும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டனர்.

    இதுபோன்ற நகர்ப்புற மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றாலோ, பஸ்தார் பகுதிக்கு வந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பேசினாலோ அதை காங்கிரஸ் எதிர்க்கிறது?. இது போன்றவர்களை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்?... மாவோயிஸ்டு ஆதரவு மனோபாவத்தில் இருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும்.

    மாவோயிஸ்டுகளை ஆதரிப்பவர்கள் யாரும் இங்கே வெற்றி பெறக்கூடாது. பஸ்தார் பகுதியில் உள்ள அத்தனை சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு நீங்கள் வெற்றியைத் தரவேண்டும். வேறு யாராவது இங்கே வெற்றி பெற்றால் அது பஸ்தார் பகுதிக்கே கறையாக அமைந்துவிடும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பல லட்சம் பேரின் வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #Demonetisation #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்தியா எத்தனையோ சோகங்களை கண்டுள்ளது. அவையெல்லாம் வெளிநாட்டு எதிரிகள் நமக்கு இழைத்தவை. ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தனித்துவம் வாய்ந்தது.



    அது, நமக்கு நாமே தேடிக்கொண்ட சோகம். பல லட்சம் பேரின் வாழ்க்கையையும், ஆயிரக்கணக்கான சிறு தொழில்களையும் அழித்த தற்கொலை தாக்குதல்.

    அந்த நடவடிக்கை, மோசமாக வகுக்கப்பட்டு, தவறாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கை. ஆனால், நன்கு திட்டமிடப்பட்ட குற்றவியல் பொருளாதார ஊழல் ஆகும்.

    இதுதொடர்பான முழு உண்மைகள் இன்னும் வெளியாகவில்லை. அது வெளியாகும்வரை இந்திய மக்கள் ஓய மாட்டார்கள். அரசு எவ்வளவுதான் மறைத்தாலும் நாடு கண்டுபிடிக்கும். தகுதியற்ற நிதி மந்திரி உள்ளிட்டவர்கள், இந்த குற்றவியல் கொள்கைக்கு முட்டுக்கொடுக்கும் வேலையில் இறங்கி உள்ளனர்.

    பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. வெறும் பேரழிவாகவே முடிந்து விட்டதாக உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

    இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நாள், ஒரு மோசமான நாளாக இந்திய வரலாற்றில் எப்போதும் நினைவில் நிற்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். #Demonetisation #Congress #RahulGandhi
    ஷாபாஸ் ஷரிப் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இது எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கை என்று நவாஸ் ஷரிப் குற்றம்சாட்டியுள்ளார். #Imrankhan #NawazSharif #ShehbazSharif
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் தம்பி ஷாபாஸ் ஷரிப். இவர் பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஆக இருந்தார். நவாஸ் ஷரிப் சிறை தண்டனை பெற்றபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராக இருக்கிறார்.

    இவர் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்த போது வீட்டு வசதி வாரிய ஊழலில் ஈடுபட்டதாக கூறி சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே ஜாமீனில் விடுதலை ஆன நவாஸ் ஷரிப் தனது கட்சியின் மத்திய செயலாக்க கமிட்டியின் அவசர கூட்டத்தை லாகூரில் கூட்டினார், அப்போது பேசிய அவர் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் ஷாபாஸ் ஷரிப் கைது செய்யப்பட்டுள்ளார். இது எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.


    மேலும் பேசிய அவர் கட்சியின் எம்.பி.க்கள் எதிர்க்கட்சியினரை சந்தித்து இம்ரான்கானின் அடக்கு முறை நடவடிக்கையை எடுத்துரைக்க வேண்டும். அதற்கு எதிராக போராட அவர்களையும் அழைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் இம்ரான்கான் அரசுக்கு எதிராக தமது பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ்) கட்சியின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது ஷாபாஸ் ஷரிப்பை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  #Imrankhan #NawazSharif #ShehbazSharif
    சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், மாநிலத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார். #SabarimalaTemple #KeralaCM #PinarayiVijayan #SabarimalaVerdict
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இடதுசாரி கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு அந்த மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்து அமைப்புகள் கேரள அரசின் முடிவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. பாரதீய ஜனதா சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.



    இந்த நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல்வேறு மத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும், வழிபாட்டு தலங்களையும் பாதுகாப்பதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட சவால்களை கேரள மக்கள் ஒற்றுமையுடன் எதிர்கொண்டனர். மக்களிடம் நிலவும் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் நோக்கத்துடன் மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பணிவது என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    சபரிமலை அய்யப்பன் கோவில் பிரச்சினையில் அரசின் நிலைப்பாடு குறித்து யாருக்காவது தவறான கருத்துகள் இருந்தால், அது தொடர்பாக யாருடனும் பேசுவதற்கு அரசு தயாராக உள்ளது.

    முன்பு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்ற எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ரமேஷ் சென்னிதலா, அதன்பிறகு அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது ஆச்சரியமாக உள்ளது. பாரதீய ஜனதா கட்சியும் இந்த பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்” என்றார்.

    முன்பு ஆட்சியில் இருந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, சபரிமலை கோவிலின் வழிபாட்டு முறைகளும், பக்தர்களின் நம்பிக்கையும் பாதுகாக்கப்படவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், ஆனால் அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இடதுசாரி கூட்டணி அரசு அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

    திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த கவுரி லட்சுமி பாயி வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை கோவில் தொடர்பாக நடந்து வரும் சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நடைமுறைகள் மீறப்படுவது வருந்தத்தக்கது என்றும் கூறி உள்ளார்.  #SabarimalaTemple #KeralaCM #PinarayiVijayan 
    கடைசி நிமிடத்தில் மோடிக்கு வசதியாக செய்தியாளர் சந்திப்பு நேரத்தை தேர்தல் கமிஷன் மாற்றி அமைத்தது என தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. #Congress #AAP #ElectionCommission
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் டெல்லியில் நேற்று மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் இந்த சந்திப்பு பின்னர் திடீரென பிற்பகல் 3 மணிக்கு மாற்றப்பட்டது.



    இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில், “மோடி பகல் 1 மணிக்கு ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு வசதியாக தேர்தல் கமிஷன் செய்தியாளர்கள் சந்திப்பை பிற்பகல் 3 மணிக்கு மாற்றிவிட்டது. இதுவா? தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்படும் லட்சணம்?” என்று குற்றம் சாட்டினார்.

    இதேபோல் ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் கூறுகையில், “கடைசி நிமிடத்தில் தேர்தல் கமிஷன் எதனால் செய்தியாளர் சந்திப்பு நேரத்தை மாற்றியது?...தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தானில் பிரதமர் மோடி சலுகைகளை அறிவிப்பதற்கு வசதியாகத்தானே இப்படி மாற்றினர்?... தலைமை தேர்தல் கமிஷன், மோடி, நாட்டு மக்கள் இந்த மூவரில் இதற்கு யார் வெட்கப்படவேண்டும்?” என்று கேலி செய்துள்ளார். #Congress #AAP #ElectionCommission
    ஓ.பன்னீர் செல்வம் தம்மை சந்தித்து பேசியதாக டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். #OPS #TTVDhinakaran
    சென்னை:

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு, தம்மை முதல்வராக ஆக்குவதற்கு ஓபிஎஸ் கூறியதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

    இதற்கு மறுப்பு தெரிவிப்பதற்காக இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 4 நாட்களுக்கு முன்பு, பாஜகவுடன் தாம் இணைந்து தமிழக அரசை கவிழ்க்க முயற்சித்ததாக தினகரன் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தினகரன் என் மீது அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.

    மேலும், ஆர்.கே நகரில் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதுபோல், கட்சியில் தினகரனின் பொய் பிரச்சாரம் பலிக்காது என தெரிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் தினகரன் இவ்வாறு செய்துவருவாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தினகரன் மிக தரக்குறைவான அரசியலை செய்துவருவதாகவும், இனி அவருக்கு வெற்றி இல்லை வருகிற இடைத்தேர்தல்களில் அதிமுகவே வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தினகரனை சந்தித்தது உண்மைதான் என்றும், கடந்த ஆண்டு தர்ம யுத்தத்தின்போது, தினகரன் எங்களது பொது நண்பர் மூலம் சந்தித்து பேச பலமுறை தூது அனுப்பினார். அதன் அடிப்படையில், அவரை சந்தித்தபோது, முதல்வராகும் எண்ணத்திலேயே அவர் பேசியதாகவும், அதனால் அவருடன் உடன்படவில்லை எனவும் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். #OPS #TTVDhinakaran
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கா முடிவு கட்ட வேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். #DonaldTrump #China #UNSecurityCouncil
    பீஜிங்:

    நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 26-ந் தேதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாகவும், இது தனது நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் புகார் கூறினார்.இது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில், பீஜிங் நகரில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டிரம்பின் புகார் குறித்து கேள்வி எழுப்ப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், “பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது சீன வெளியுறவுக்கொள்கையின் கலாசாரம் ஆகும். இது உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது” என்றார்.

    மேலும், “எந்த நாடு, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் கூடுதலாக தலையிட்டு வருகிறது என்பதை சர்வதேச சமூகம் தெளிவாக அறிந்திருக்கிறது. தங்களது தேர்தலில் சீனா தலையிட முயற்சிக்கிறது என்பது போன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கும், அவதூறுகளுக்கும் அமெரிக்கா முடிவு கட்ட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு சோனியா காந்தியின் மருமகன் மறுப்பு தெரிவித்துள்ளார். #RafaleDeal #RobertVadra #BJP
    புதுடெல்லி:

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமான நிறுவனத்தை பங்குதார நிறுவனமாக சேர்த்துக்கொள்ள பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் மறுத்து விட்டதால்தான், அந்த பேரத்தை காங்கிரஸ் அரசு முறித்துக்கொண்டதாக பா.ஜனதா சமீபத்தில் குற்றம் சாட்டியது.



    இதற்கு ராபர்ட் வதேரா நேற்று மறுப்பு தெரிவித்தார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    பா.ஜனதா கடந்த 4 ஆண்டுகளாக எனக்கு எதிராக அடிப்படையற்ற அரசியல் அவதூறுகளை பரப்பி வருகிறது. எனக்கு தொடக்கத்தில் அது வியப்பாக இருந்தது. ஆனால், இப்போது அது முழுமையான கேலிக்கூத்தாக தோன்றுகிறது.

    ஏனென்றால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு என எந்த பிரச்சினையில் நெருக்கடியில் சிக்கினாலும், பா.ஜனதா எனது பெயரை இழுத்து வருகிறது.

    அதிலும், ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பா.ஜனதா முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறது. பொய்களின் பின்னால் ஒளிந்து கொள்வதை பா.ஜனதா நிறுத்த வேண்டும். அவர்கள் திரும்பத்திரும்ப சொல்வதை கேட்டு மக்கள் வெறுத்துப்போய் விட்டனர்.

    அதற்கு பதிலாக 56 அங்குல மார்பை நிமிர்த்திக்கொண்டு, இந்த விவகாரத்தில் உண்மையை சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மன்மோகன் சிங் அரசு நடந்தபோது, அந்த அரசு துணிச்சலாக செயல்பட வேண்டும் என்ற பொருளில், ‘56 அங்குல மார்பு வேண்டும்’ என்ற சொற்றொடரை நரேந்திர மோடி பயன்படுத்தி வந்தார். அதை சுட்டிக்காட்டும் வகையில், அதே சொற்றொடரை ராபர்ட் வதேரா பயன்படுத்தி உள்ளார்.  #RafaleDeal #RobertVadra #BJP
    மோடியும், அனில் அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். #Rafale #Modi #AnilAmbani #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூரத்தக்கது.



    இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் கருத்து, பிரதமர் மோடி ஒரு திருடர் என்பதற்கு உறுதியான ஆதாரமாக அமைந்து உள்ளது. அது நமது பிரதமரை திருடர் என்று கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவது பற்றி மோடி தெளிவு படுத்தவேண்டும். ஏனென்றால் பிரதமர் ஊழல்வாதி என்பதில் நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதேபோல் நாட்டின் பாதுகாவலரான பிரதமர் திருடர் என்பது நாட்டு மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.

    எனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஹாலண்டே கூறியிருப்பது பற்றி மோடி விளக்கம் அளிக்கவேண்டும். இதில் ஏன் பிரதமர் மவுனம் சாதிக்கிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் இது நாட்டின் பாதுகாப்பு படை பற்றிய விவகாரம். ஊழல் தொடர்பான விஷயம்.

    ஹாலண்டேயின் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா?...அல்லது ஹாலண்டே பொய் சொல்கிறாரா? என்பது பற்றி பிரதமர் மோடி விளக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.

    ரபேல் போர் விமான முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயையும் அழைக்கலாம்.

    மோடியை இந்த விவகாரத்தில் பாதுகாப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு ராணுவ மந்திரிகளும் பொய் சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதை மோடி அரசு பெருமையாக கூறுவதை ரபேல் போர் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி கிண்டல் செய்தார்.

    அவர், “பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் ரூ.1.30 லட்சம் கோடி மீது துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்கள் சிந்திய ரத்தத்தை நீங்கள்(மோடி) அவமதித்து உள்ளர்கள். இது வெட்கக் கேடானது. மேலும் நீங்கள் இந்தியாவின் ஆன்மாவிற்கு துரோகமும் செய்து விட்டீர்கள்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். Rafale #Modi #AnilAmbani #RahulGandhi 
    பிரதமர் மோடி தனது 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். #PondicherryCM #Narayanasamy #PMModi
    கடலூர்:

    கடலூர் மாவட்ட உலகத்திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா கடலூரில் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் மீட்கப்பட்டு ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். ஆனால் இதுநாள் வரை எந்த பணமும் வங்கியில் செலுத்தவில்லை. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை.

    ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். பொருளாதார வீக்கம் குறைக்கப்படும் என்றார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்போம் என்றார். ஆனால், இதில் எதுவும் நடைபெறவில்லை.

    தமிழகத்திலேயே கடலூரில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் ரூ.34 மட்டுமே விற்பனை செய்கிறோம். இது மிகப்பெரிய கொள்ளை. இவ்வாறு, கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு கொள்ளையடித்து வைத்துள்ளது.

    பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் எதுவும் நடைபெறவில்லை. ஜி.எஸ்.டி வரியால் பல தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லை, நிலம் விற்பனை முடக்கியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் கேட்டால் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் சண்டை நடக்கிறது என்று கூறுகிறார், பிரதமர் மோடி.

    வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் மிகப்பெரிய பாடத்தை கற்பிக்கும்.

    இலங்கையில் தமிழர்கள் இறப்பிற்கு காங்கிரஸ் காரணமல்ல. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் எங்களுக்கு வருத்தம் இருந்தது. எனது தனிப்பட்ட கருத்து தலைவரை கொன்றவரை விடக் கூடாது என்பதே. ஆனால், ராகுல்காந்தி இந்த வி‌ஷயத்தில் தெரிவித்த கருத்தினை ஏற்றுக்கொண்டோம். அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்மீது ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். தீவிரவாதத்தால் காங்கிரஸ் கட்சிக்குத் தான் அதிகப்படியான இழப்பு. இந்திரா காந்தி, ராஜீவ்காந்தியை இழந்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க. எந்த இழப்பையும் சந்திக்கவில்லை. எனவே, தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கையாகும்.

    இவ்வாறு கூறினார். #PondicherryCM #Narayanasamy #PMModi
    ×