search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சாட்டு"

    அமெரிக்காவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினார். #DonaldTrump #China #USElection
    வாஷிங்டன்:

    உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி, 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

    இதற்கிடையே அமெரிக்காவில் வரும் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.



    இந்த தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எங்கள் விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதின் மூலம், எங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக சீனா வெளிப்படையாகவே கூறி உள்ளது” என்று கூறினார்.

    டிரம்பின் இந்த குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

    இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங்க் சுவாங்க் நேற்று கருத்து தெரிவிக்கையில், “சீனாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள்கூட, நாங்கள் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்பதை அறிவார்கள்” என குறிப்பிட்டார். மேலும், “நாங்கள் எங்கள் அரசியலில் மற்றவர்களின் தலையீட்டை விரும்ப மாட்டோம். மற்றவர்களின் உள்நாட்டு அரசியலில் நாங்களும் தலையிட மாட்டோம்” என்று கூறினார். #DonaldTrump #China #USElection
    அருண் ஜெட்லி-விஜய் மல்லையா இடையே ஏற்பட்ட பேரத்தால், விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதிக்கப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #ArunJaitley #VijayMallya
    கர்னூல்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள கர்னூலில் நடைபெற்ற பொ துக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    பொதுத்துறை வங்கிகளின் ரூ.9 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையா ஒரு திருடன் என்று ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். ஆனால், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு தெரிந்தே அவர் தப்பி ஓடினார். ஏதோ ஒரு பிரதிபலனுக்காக அவர் தப்பிக்க அருண் ஜெட்லி அனுமதித்தார். அதற்காக அருண் ஜெட்லி-விஜய் மல்லையா இடையே ஒரு பேரம் உண்டானது.



    அருண் ஜெட்லிக்கு தெரிந்தே விஜய் மல்லையா தப்பி ஓடியும், பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிக்கிறார். அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அருண் ஜெட்லியை அவர் நீக்க வேண்டும்.

    பிரதமர் மோடி, தன்னை நாட்டின் காவலாளி என்று கூறிக் கொள்கிறார். ஆனால், இரவு நேரத்தில் திருடர்களுக்கு கதவு திறந்து விடும் காவலாளியாக அவர் இருக்கிறார்.

    முந்தைய காங்கிரஸ் அரசு, தலா ரூ.526 கோடி மதிப்பில் ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க திட்டமிட்டது. ஆனால், அந்த விலையை மோடி அரசு தலா ரூ.1,600 கோடியாக உயர்த்தி உள்ளது. மேலும், அதை இந்தியாவில் தயாரிக்கும் உரிமத்தை எந்த முன்அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளித்துள்ளது.

    பிரதமர் எப்போதும் மேலே பார்க்கிறார். கீழே குனிந்து வலது புறமும், இடது புறமும் பார்க்கிறார். ஆனால், என் கண்களைப் பார்க்க மறுக்கிறார்.

    மன்மோகன் சிங் அரசு, ஆந்திராவுக்கு 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க முன்வந்தது. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதா, 10 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தவுடன், அந்த வாக்குறுதியை மீறி விட்டார்.

    சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததுடன், ஆந்திர தலைவர்களை அவமரியாதை செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும். மேலும், விவசாய கடன்களை ரத்து செய்யும்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    கர்னூலில், மறைந்த முன்னாள் முதல்-மந்திரி தாமோதரம் சஞ்சீவய்யா இல்லத்துக்கு ராகுல் காந்தி சென்றார். மற்றொரு முன்னாள் முதல்-மந்திரி கோட்லா விஜயபாஸ்கர ரெட்டி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், கர்னூலில், கல்லூரி மாணவர்களுடனான ராகுல் காந்தி சந்திப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதில், ஜி.எஸ்.டி., ரபேல் போர் விமான விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்பட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். 
    பணமதிப்பு நீக்கம்தான் மோடி அரசின் மிகப்பெரிய ஊழல் என்று ராகுல் காந்தி கூறினார். #Demonestisation #Modi #RahulGandhi
    போபால்:

    மத்தியபிரதேசத்தில் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்வகையில், 15 கி.மீ. தூரத்துக்கு வாகன பேரணியாக சென்று மக்களை சந்தித்தார். பின்னர், போபாலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



    அதில், ராகுல் காந்தி பேசியதாவது:-

    70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், நரேந்திர மோடி அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது. இந்த திட்டம், பணக்காரர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க உதவியது. அதனால், 4 ஆண்டுகால மோடி அரசின் மிகப்பெரிய ஊழல் இதுதான்.

    சிறு வணிகர்களின் கையில் உள்ள பணத்தை பறித்து 15 பெரும் பணக்காரர்களின் பாக்கெட்டில் போடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். 15 பெரு நிறுவனங்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை மோடி அரசு ரத்து செய்தது. ஆனால், வெறும் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் கடனை ஏன் ரத்து செய்யவில்லை?

    லட்சங்களிலும், கோடிகளிலும் வாங்கப்பட்ட கடன்களை ‘வாராக்கடன்’ என்கிறார்கள். ஆனால், வெறும் ரூ.5 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயியை ‘கடன் தவறியவர்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.

    மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் களும் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இதுபோல் ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன்களை ரத்து செய்துள்ளோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.  #Demonestisation #Modi #RahulGandhi
    விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் என்று மாயாவதி குற்றம்சாட்டினார். #Mayawati #VijayMallya
    லக்னோ:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தான் வசித்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு லக்னோ நகரில் புது வீட்டில் குடியேறிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது நாடாளுமன்றம் மற்றும் விரைவில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, மாநில சட்டசபை தேர்தல்கள் என்றாலும் சரி எங்களுக்கு மதிப்பளித்து கணிசமான தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இல்லையென்றால் பகுஜன் சமாஜ் தனித்தே களம் இறங்கும்.

    நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு சம பொறுப்பு உள்ளது. இதனால்தான் சில தொழில் அதிபர்கள் தொழில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டை கொள்ளையடித்து விட்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடியதற்கும் இந்த 2 கட்சிகளுமே முக்கிய காரணம்.



    பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இது ஜனநாயகத்தின் மீது படியும் கறை ஆகும். இப்பிரச்சினையில் பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றன.

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா இதே தந்திரத்தை கையாள முயற்சிக்கிறது. கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. வாஜ்பாய் உயிருடன் இருந்தவரை ஒரு நாளும் பா.ஜனதா அவருடைய வழியை பின்பற்றி நடந்தது இல்லை. தற்போது பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும், தங்களது தோல்விகளை மறைக்க வாஜ்பாயின் பெயரை பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. இதனால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Mayawati #VijayMallya
    என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து மட்டுமல்ல, அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன் என்று, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். #MinisterVelumani
    புதுடெல்லி:

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு டெல்லியில் நேற்று விருது வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசை கவிழ்க்க வேண்டும், அ.தி.மு.க.வை முடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். உள்ளாட்சி துறையை சிறப்பாக நிர்வகித்த காரணத்தால் விருது கிடைத்து இருக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சித்துறைக்கு ரூ.21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பணிகளை செய்துள்ளேன். ஆனால் தி.மு.க. ஆட்சியில் வெறும் ரூ.7 ஆயிரம் கோடி தான் ஒதுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நானும், அமைச்சர் தங்கமணியும் உறுதுணையாக இருந்து வருகிறோம். கட்சியின் “நமது அம்மா’ பத்திரிகை, அரசின் சாதனைகளை விளக்க தொடங்கப்பட உள்ள டி.வி. ஆகியவற்றை முடக்குவதற்காக தான் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

    விதிமுறையை மீறி டெண்டர் விட்டதாக கூறுகிறார்கள். நான் அமைச்சர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சிறிய தவறு கூட செய்யவில்லை.



    உலக பணக்காரர்கள் வரிசையில் மு.க.ஸ்டாலின் குடும்பம் 10-வது இடத்தில் உள்ளது. கலைஞர் டி.வி.க்கு பணம் வந்தது எப்படி? என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால் என்னை பதவி விலக சொல்கிறார்கள். சரி, நான் அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.

    நான் பதவி விலக தயார். நீங்களும் (மு.க.ஸ்டாலின்) எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. தலைவர் பதவியில் இருந்து விலகி, அந்த பதவியை துரைமுருகனுக்கோ, மு.க.அழகிரிக்கோ கொடுக்க தயாரா?

    என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது மட்டுமல்ல, அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன். நாளையே மு.க.ஸ்டாலின் பதவி விலகினால் நானும் பதவி விலக தயார்.

    இப்போதுகூட திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து, மு.க.ஸ்டாலின் பினாமி சொத்துகள் தொடர்பாக முதல்-அமைச்சருக்கு புகார்கள் வந்துள்ளன. அவர்கள் என்ன செய்தாலும் எங்கள் கட்சியையும், ஆட்சியையும் முடக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterVelumani
    பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டினார். #KeralaFlood #KCVenugopal #PMModi
    கொச்சி:

    முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் கேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.



    ஆனால் பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் நேற்று கொச்சியில் நிருபர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி அவரது அலுவலகத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் பின்னர் அந்த கடிதம் அங்கிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, கேரள எம்.பி.க்களை சந்திக் குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாகவும் கே.சி.வேணுகோபால் கூறினார்.



    கேரள எம்.பி.க்கள் குழு ஏற்கனவே ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ள நிலையில், மீண்டும் அவரை சந்தித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்றும் அப்போது அவர் கூறினார். #KeralaFlood #KVVenugopal #PMModi
    காவிரி கால்வாய்களை தமிழக அரசு தூர்வாராததால் காரைக்காலுக்கு தண்ணீர் வரவில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். #PuducherryCM #Narayanasamy #TamilNadu
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் திருமலைராஜன் ஆறு, நூலாறு, அரசலாறு, நாட்டாறு, முல்லையாறு, பிரவிடையான் ஆறு, வாஞ்சி ஆறு ஆகிய காவிரி கிளை ஆறுகள் பாய்கின்றன.

    இவற்றில் திருமாலை ராஜன், அரசலாறு ஆகியவற்றில் மட்டுமே தண்ணீர் வருகிறது. மற்ற ஆறுகளில் தண்ணீர் வரவில்லை.

    தமிழக எல்லைப் பகுதியான காவிரி கடைமடைப் பகுதியில் அந்த மாநில அரசால் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம்.


    எனவே காவிரி கடைமடைப்பகுதியில் உள்ள கருவேல மரங்களை வெட்டி ஆறுகளை தூர்வார வலியுறுத்தி தமிழக முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன்.

    காரைக்கால் பகுதி ஆறுகளில் ரூ.60 லட்சத்தில் தூர் வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் பகுதியில் சம்பா சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    புதுவை அரசு வசம் 100 டன் விதைகள் தயார் நிலையில் உள்ளது. அதுபோல 150 டன் உரங்களும், பாட்கோ, பஜன்கோ நிறுவனங்களில் தயார் நிலையில் உள்ளன.

    எனவே, புதுவை விவசாயிகள் விதைகள், உரங்களுக்காக தமிழகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை இந்த ஆண்டு இருக்காது. உரத்தை மானிய விலையில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அது போல வேளாண் சாகுபடிக்குத் தேவையான பூச்சி மருந்துகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy #TamilNadu
    ஊழல் பணத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #Malaysia #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் 60 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.), கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். உடனே அவர் மீதான ஊழல் புகார்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    ‘1 எம்.டி.பி.’ என்று அழைக்கப்படுகிற 1 மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் அங்கமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிதி 10.3 மில்லியன் டாலரை ( சுமார் ரூ.69 கோடி) தன் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி ஊழலில் ஈடுபட்டார் என்பதுதான் நஜிப் ரசாக் மீது உள்ள முக்கிய குற்றச்சாட்டு.

    இந்த ஊழல் பணத்தை அவர் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்து உள்ளதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அந்த வழக்கு, கோலாலம்பூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நஜிப் ரசாக் மீது நீதிபதி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி பதிவு செய்தார்.

    அப்போது கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் அமைதியாக நின்ற நஜிப் ரசாக், பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நீதிபதியின் சகோதரர், நஜிப் ரசாக் கட்சியில் முக்கிய பதவி வகித்தவர். எனவே அவர் இப்போது மாற்றப்பட்டு, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு நேற்று விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.  #Malaysia #NajibRazak #Tamilnews 
    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் செயல்பாட்டால் மாநில வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கவர்னர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார். #PuducherryGovernor #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி அடிக்கடி அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார்.

    உத்தரவுகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சமீபத்தில் கூறி இருந்தார்.

    இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேட்டி அளித்தார். கவர்னருக்கு அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்த அதிகாரம் இல்லை. அவர் அதிகாரிகளை மிரட்டுகிறார். இந்த போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளம் மூலமாக கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் அலுவலக பணிகள், கடமைகள், பொறுப்புகள் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து எதிரான கருத்துக்களை கூறுகிறார்.

    கவர்னர், அதிகாரிகளுக்கு இடும் உத்தரவுகளை சீர் குலைக்கும் வகையில் அவருடைய கருத்துக்கள் இருக்கின்றன. இப்படி அவர் சொல்வதால் மாநில வளர்ச்சியின் வேகம் பாதிக்கும் என்பதை அவர் உணராமல் இருக்கிறார் என நான் கருதுகிறேன்.


    மாநில வளர்ச்சிதான் அவருக்கு முதன்மையானது என்று கருதினால் இது போன்ற கருத்துக்களை அவர் தெரிவிக்க கூடாது.

    கவர்னர் அலுவலகத்துக்கு என்னென்ன பொறுப்புகள் உள்ளது என்பது சட்டத்திலும், விதிகளிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் படித்து பார்க்கலாம்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது டெல்லி மாநிலத்துக்காக சொல்லப்பட்டது. அந்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது.

    எல்லா நிலைகளிலும் புதுவையை நம்பர்-1 யூனியன் பிரதேசமாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது திட்டம். கவர்னர் மாளிகையை பொறுத்த வரை சட்டத்தின்படியும், விதிகள்படியும் எங்கள் பணிகளை மக்களுக்காக அதிகபட்ச அளவுக்கு செய்வோம்.

    இந்த பணி எப்போதும் தொடரும். மக்கள் மாளிகையாக கவர்னர் மாளிகை இருக்கும். அதிகாரிகளும் கவர்னரின் பணிகளை உணர்ந்து இருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சரின் தகவல்கள் அதிகாரிகளை குழப்பத்தில் தள்ளுகிறது. இது, மாநில வளர்ச்சிக்கு சாதகமாக இருக்காது.

    கவர்னரின் உத்தரவு என்பது தனிப்பட்ட கிரண்பேடியின் உத்தரவு அல்ல. அது, கவர்னர் மாளிகையின் உத்தரவு. அரசியல் சாசன சட்டத்தின்படி செயல்பாடுகள் தொடரும்.

    அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சிகளை ஏற்படுத்துவோம். பழைய குறைபாடுகளை களைந்து முன்னேற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #PuducherryGovernor #Kiranbedi #Narayanasamy
    தேவையற்ற கருத்துக்களை கூறி பிராந்திய மக்கள் இடையே கவர்னர் மோதலை உருவாக்குகிறார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார். #kiranbedi

    புதுச்சேரி:

    அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து பெறுதல் சம்பந்தமான பிரச்சினையில் கவர்னர் தேவையற்ற கருத்துக்களை எடுத்துக்கூறி பிராந்திய அளவில் மோதல் போக்கை உருவாக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளார்.

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப் பட்ட நிலையில இன்றைய அரசியல் நிலவரப்படி ஏதோ ஒரு காலணி ஆதிக்கத்தின் கீழ் செயல் படக்கூடிய இடமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு போன்று புதுவை அரசியல் நிர்வாகம் இருந்து வருகிறது.

    நீண்டநாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து சம்பந்தமாக 1998-ம் ஆண்டிலேயே மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தி மத்திய அமைச்சரவையில் மாநில அந்தஸ்து கிடைக்க கொள்கை முடிவினை அறிவிக்க செய்தார். அதன்பிறகு அ.தி.மு.க. சார்பில் கூட்டப்பட்ட பல்வேறு செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மக்கள் பிரதிநிதிகள் சபையாக இருக்கின்ற புதுவை சட்டமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட முறை மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் புதுவை காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்களும் கட்சி வித்தியாசமின்றி மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் எண்ணத்துக்கு ஏற்ப மாநில அந்தஸ்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

    ஆனால், சட்டமன்றத்தை கேவலப்படுத்துகின்ற விதத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தவறான தகவல்களை கூறி வருகின்றனர்.

    உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் சைனா மின் மீட்டரை திரும்ப பெற கோரி நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்தோம்.

    புதுவையில் அரசானது இவற்றை கருத்தில் கொள்ள வில்லை. நாராயணசாமி வழக்கம் போல் மக்களின் மீது சிந்தனை இல்லாமல் உள்ளார்.

    தமிழகத்தைபோல் புதுவையிலும் உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும். விரைவில் மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும் மின் மீட்டரை திரும்ப பெற கோரி அ.தி.மு.க. தலைமை கழகத்திடம் அனு மதி பெற்று புதுவையில் அ.தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.

    புதுவையில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    ஆனால், ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகாலமாக உதவித் தொகை பெற்று வந்த வர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு சொற்ப காரணங்களை கூறி உதவித்தொகையை இந்த அரசு நிறுத்தி வைத்து உள்ளது.

    நிதி மசோதாவிற்கு ஒப்புதல் கொடுப்பதற்கு முன்பு நியமன எம்.எல்.ஏ.க் களை சட்டமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் கொடுக்க வில்லை. ஆனால் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டணம் வாங்காத வக்கீலாக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார். #kiranbedi

    தமிழகத்தில் மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சி நடைபெறுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தெரிவித்தார். #ARaja #DMK
    காரைக்குடி:

    காரைக்குடி பாண்டியன் திடலில் 21-ம் ஆண்டு கலைஞர் தமிழ்ச்சங்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலைஞர் தமிழ்ச்சங்க புலவர் தொழில் அதிபர் படிக்காசு முன்னிலை வகித்தார். சங்க நிறுவுனரும், முன்னாள் அமைச்சருமான தென்னவன் வரவேற்று பேசினார். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ரகுபதி வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராஜா, நகைச்சுவை பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆ.ராசா தனது சிறப்புரையில் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கலைஞரின் அரசியலோடு இலக்கியமும் எப்போதும் இணைந்தே இருக்கும். தந்தை பெரியார், கலைஞரின் இலக்கிய ஆற்றலை கண்டு வியந்து பாராட்டியுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் 50 ஆண்டுகாலமாக தனது ஆளுமையை நிலை நாட்டி வருபவர் கலைஞர். பெண்களுக்கு சொத்துரிமை, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உள்பட பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர். இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசும் நிறைவேற்ற தயங்கிய சட்டங்களை துணிச்சலாக நிறைவேற்றியவர் கருணாநிதி.

    தற்போதுள்ள மாநில அரசு ஊழலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், குட்கா ஊழல், சமீபத்தில் ஆளுவோருக்கு வேண்டியவர்களான காண்டிராக்டர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். மத்தியில் மதவெறி கொண்ட ஆட்சியும், மாநிலத்தில் மக்களை பற்றி சிறிதும் சிந்திக்காத ஆட்சியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கான மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் விழாவில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார். இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், நகர அவைத்தலைவர் ராகோ அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுப.சின்னத்துரை, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த், கல்லல் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  #ARaja #DMK
    ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்து உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிர்மலா சீதாராமன் மீது குற்றம் சாட்டியுள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #RahulGanthi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்து உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

    நாடாளுமன்றத்தில் 20-ந் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்று பேசியபோதும், “ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் பிரதமரிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களிடம் உண்மையைப் பேசவில்லை” என்று சாடினார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். திரும்பவும் ரபேல் போர் விமான பேர பிரச்சினையை எழுப்பி இருக்கிறார்.

    அதில் அவர், “நமது ராணுவ மந்திரி ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் ரகசியம் ஏதும் இல்லை. அதை சொல்வேன் என்றார். ஆனால் இப்போது சொல்ல மாட்டேன் என்கிறார். இதில் ரகசியம் இல்லை என்று சொல்லி விட்டு இது மிகப்பெரிய ரகசியம் என்று நிலை மாற்றி பேசுகிறார். ரபேல் போர் விமானத்தின் விலை பற்றி நான் கேட்டால் பிரதமர் நெளிகிறார். என்னை நேருக்கு நேர் பார்க்க மறுக்கிறார். இதில் நிச்சயம் ஊழல் நடந்து உள்ளது” என்று கூறி உள்ளார்.  #RafaleDeal #NirmalaSitharaman #tamilnews 
    ×