search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிவில்லியர்ஸ்"

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #WorldCup2019 #ABdeVilliers
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் உலககோப்பை போட்டியில் ஆடமாட்டார். சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். சிறந்த அதிரடி வீரரான அவர் இந்த உலககோப்பையில் இல்லாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தேன். 100 சதவீத திருப்தியுடன் இந்த முடிவை எடுத்தேன்.

    உலககோப்பையில் மீண்டும் விளையாட ஆர்வமாகவே இருந்தேன். ஆனாலும் ஓய்வு முடிவு மகிழ்ச்சியானதே. ஓய்வு முடிவை எடுத்ததற்காக நான் வருத்தம் எதுவும் படவில்லை.

    உலககோப்பையை வெல்லப்போவது யார்? என்று கணிப்பது கடினம். ஏனென்றால் பல அணிகளும் திறமையுடன் உள்ளன.

    இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார்கள். இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆடுகிறது. நியூசிலாந்து எப்போதுமே உலககோப்பையில் நன்றாக ஆடும். தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சு பலம் வாய்ந்து காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #WorldCup2019 #ABdeVilliers
    அடுத்த சீசனுக்கான (2019-ம் ஆண்டு) பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #IPL #ViratKohli #DeVilliers
    பெங்களூரு:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் களம் இறங்குவதும், பிறகு சொதப்புவதுமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை ஒரு முறை கூட பட்டம் வெல்லாத பெங்களூரு அணி மூன்று முறை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி, இந்த ஆண்டிலும் லீக் சுற்றை தாண்டவில்லை.



    இதையடுத்து பெங்களூரு அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர பெங்களூரு அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தலைமை பயிற்சியாளர் வெட்டோரி கழற்றிவிடப்பட்டு கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் 2008-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க அந்த அணி முடிவு செய்திருப்பதாக பெங்களூருவில் உள்ள செய்தி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

    கோலியை கேப்டன் பதவியில் இருந்து ஒதுக்கி விட்டு, அதிரடி ஆட்டக்காரரான தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்சை கேப்டனாக்க பெங்களூரு அணி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டதால் அடுத்த ஆண்டு நடக்கும் 12-வது ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியும்.

    விராட் கோலி 2013-ம் ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2016-ம் ஆண்டில் மட்டும் 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். தனிப்பட்ட முறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலியால், அணிக்கு மகுடத்தை கொண்டு வர முடியவில்லை. இதன் எதிரொலியாகவே பெங்களூரு அணி, பல புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. #IPL #ViratKohli #DeVilliers 
    ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் ஓய்வு பெற்ற டிவில்லியர்சுக்கு டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவு செய்துள்ளார். #ABDRetires #ABDevilliers #ViratKohli

    தென்னாப்ரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறினார். இது அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் டிவில்லியர்ஸ் விளையாடும் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோலி, அவருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் டிவில்லியர்சை சகோதரர் என குறிப்பிட்டுள்ளார்.



    கோலி பதிவு செய்துள்ள டுவிட்டில், சகோதரா, உன் வாழ்வில் இனி நீ செய்யும் அனைத்தும் செயல்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள். நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய நேரத்தில் பேட்டிங் செய்யும் முறையை மாறிவிட்டீர்கள். இனி உன்னுடைய குடும்பத்துடன், உனது அற்புதமான பயணத்திற்காக வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கோலி கூறியுள்ளார். #ABDRetires #ABDevilliers #ViratKohli
    தென்ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360

    ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த தென்ஆப்ரிக்கா வீரர் எனும் சாதனையையும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் மட்டையாளராகவும் , விக்கெட் கீப்பராகவும் துவக்கத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். மத்திய வரிசையில் இறங்கும் இவர் பல திசைகளிலும் அடித்து விளையாடும் வல்லமை படைத்தவர். நவீன காலத் துடுப்பாட்டப் போட்டிகளில் புதுமையான பேட்ஸ்மேன் என அறியப்படுகிறார். மேலும் விக்கெட் கீப்பர் மற்றும் பல திசைகளிலும் அடித்து விளையாடும் சில வித்தியாசமான முறைகளால் இவர் மிஸ்டர் 360 எனும் புனைபெயரால் அழைக்கப்படுகிறார். 

    2004-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2005-ம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2006-ம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் இவர் அறிமுகமானார். அவரின் பேட்டிங் சராசரி இரு வடிவங்களிலும் 50-ற்கும் அதிகமாக உள்ளது.

    தென்ஆப்ரிக்கா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்தினால் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நீடித்து வருகிறார். பின் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றின் தோல்விகளால் ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார்.



    டிவில்லியர்ஸ் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 

    இந்நிலையில், 123 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360
    ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.#IPL2018 #RCBvSRH #ABD #AbdeVilliers #viratkohli
    பெங்களூர்:

    11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் 6-வது பெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது.

    டிவில்லியர்ஸ் 39 பந்தில் 69 ரன்னும், மொய்ன் அலி 34 பந்தில் 65 ரன்னும், கிராண்ட் ஹோம் 17 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன்னே எடுத்தது. இதனால் பெங்களூர் 13 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் நீடிக்கிறது.

    ஐதராபாத் அணி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோர்ட்டில் நின்ற டிவில்லியர்ஸ் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்து பிரமிக்க வைத்தார்.



    வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    வெற்றி உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. பனியின் தாக்கம் இருந்தது. ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டிவில்லியர்ஸ், மொய்ன் அலி, கிராண்ட் ஹோம் பேட்டிங் அபாரமாக இருந்தது.

    எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்தது. இதை நீங்கள் சாதாரண மனிதனாக இருந்தால் செய்ய முடியாது. அவரது பீல்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது.



    அவரது ஷாட்டுகள் இன்னமும் எனது பிரமிப்பில் இருந்து செல்லவில்லை. இந்த வெற்றி உத்வேகத்தை கடைசி போட்டியில் (ராஜஸ்தானுக்கு எதிராக) கொண்டு செல்வோம்.

    தற்போது 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அமைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொயின் அலி தனது பணியை நன்றாக செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இரு கைகளிலும் நன்றாக பிடித்து கொண்டுள்ளார்.

    எங்களது சொந்த மைதானமான பெங்களூரில் இது கடைசி ஆட்டம். ரசிகர்களின் ஆதரவு அற்புதமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.#IPL2018 #viratkohli #AbDeVilliers
    நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வீரர் டிவில்லியர்ஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தை விட்டு வெளியில் சென்றது. #IPL2018 #VIVOIPL #RCBvSRH #ABD #AbdeVilliers

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

    பெங்களூரு அணியில் நட்சத்திர பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 24 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தாலும், அதையும் மைதானத்துக்கு வெளியில் அனுப்பினார் டி வில்லியர்ஸ்.

    106 மீட்டர் தூரத்துக்கு அடிக்கப்பட்ட அந்த சிக்ஸர் மைதானத்தின் மேற்கூரையில் விழுந்தது. இதுவே இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் அடிக்கப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய சிக்ஸராகும். இந்த பட்டியலில் முதல் மற்றும் ஐந்தாவது இடத்திலும் டி வில்லியர்ஸ் தான் உள்ளார். அவர் சமீபத்தில் நடந்த மற்றொரு போட்டியில் 111 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிக்ஸரை அடித்தார். அந்த முறையும் பந்து மைதானத்தை விட்டு வெளியில் சென்றது. இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேபடன் டோனி அடித்த 108 மீட்டர் சிக்ஸர் இரண்டாவது இடத்தில் உள்ளது. 



    நேற்றைய போட்டியில் டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவது இது 18-வது முறையாகும். அந்த பட்டியலில் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் உள்ளார். அவர் 20 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். #IPL2018 #VIVOIPL #RCBvSRH #ABD #AbdeVilliers
    டிவில்லியர்சுடன் இணைந்து பேட் செய்வதை எப்போதும் விரும்புவதாகவும் அவருடன் ஆடுவது எனக்கு கிடைத்த கவுரவம் எனவும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.#IPL2018 #RCB #ABD #ViratKohli
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. ரிஷாப் பான்ட் 61 ரன்களும், அபிஷேக் ஷர்மா 46 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி (70 ரன், 40 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), டிவில்லியர்ஸ் (72 ரன், 37 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர், நாட்-அவுட்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 19-வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது.

    வெற்றிக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இறுதிகட்டத்தில் நாங்கள் பந்து வீசிய விதம் திருப்தி அளிக்கவில்லை. ஆட்டத்தின் இடைவேளையின் போது டிவில்லியர்ஸ் என்னிடம், ‘கவலைப்படாதீர்கள் கோலி, நாம் இலக்கை அடைந்து விடுவோம்’ என்று கூறினார். அவரது வார்த்தை எனக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.



    டிவில்லியர்சுடன் இணைந்து பேட் செய்வதை எப்போதும் விரும்புகிறேன். இருவரும் இணைந்து பல முறை நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்திருக்கிறோம். அவருடன் ஆடுவது எனக்கு கிடைத்த கவுரவமாகும். ரன்ரேட்டை அதிகப்படுத்தி கொள்ள 3 ஓவர் மிச்சம் வைத்து வெற்றி பெற விரும்பினோம். அது நடக்காவிட்டாலும் 2 புள்ளி பெற்றது முக்கியமானது’ என்றார்.#IPL2018 #RCB #ABD #ViratKohli
    ×