என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110335"

    • மைல் கல்லுக்கு நள்ளிரவில் பூஜை நடந்துள்ளது.
    • மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குலதெய்வமாக வழி படுவ தை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார்.

    திருமங்கலம்

    ஆயுதபூஜையன்று வழக்கமாக டிவி, பிரிட்ஜ், வாக னங்கள் மற்றும் தொழி லுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், தொழிற் சாலை களில் எந்திரங்களுக்கு பூஜை செய்வார்கள். ஆனால் திரு மங்கலம் பகுதியில் வினோத மாக மைல்கல்லுக்கு பூஜை நடத்தியுள்ளனர். அதன்விபரம் வருமாறு:-

    திருமங்கலம் புதுப்பட்டி யில் இருந்து நாகையாபுரம் செல்லும் சாலையில் அப்ப கரை பகுதியில் உள்ள தொலைவு கல்லுக்கு (மைல் கல்லுக்கு) மாலை அணி வித்து வாழைமரம் கட்டி வாழை இலை படையிட்டு பொங்கல் வைத்து நேற்று நள்ளிரவில் பூஜை செய்து உள்ளனர்.

    மேலும் 7 சிறிய கல்லுக்கும் பூஜை போட்டுள்ளனர் இது பொதுமக்களை ஆச்சரி யத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இதனை வினோதத்தை அப்பகுதி மக்கள் அல்லது அங்குள்ள வாலிபர்கள் தான் இதை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குலதெய்வமாக வழி படுவ தை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார். அந்த வகையில் திருமங்கலம் பகுதியில் மைல் கல்லுக்கு பூஜை படையல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடு களை தெய்விமுருகன் கோவில் தலைவர் வெற்றிவே லன், கவுரவத்தலைவர் அருள் குமரன், மகளிர் மன்ற தலைவி ராஜாத்தி குமரன், லதா வேலன், லதா முருகதாஸ் மற் றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக் கள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில், அக்.20-

    நாகர்கோவில் பெரு விளை தெய்வி முருகன் கோவிலில் 53-வது கந்த சஷ்டி விழா வருகிற

    25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல்நாள் சிறு வர் பக்த சங்கவிழாவாக காலை 6 மணிக்கு காப்பு கட் டுதல், சஷ்டி விரதம் ஆரம்பம், முருகன் பால முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய பூஜை நடக்கிறது.

    26-ந்தேதி உழவர் விழாவாக முருகன் சுப்பிரமணிய அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு பஜனை, 27-ந்தேதி வியாபாரிகள் விழாவாக முருகன் வேடன் அலங் காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு ஓவியப் போட்டி, கோலப்போட்டி, பரிசு வழங்குதல், 28-ந்தேதி முருகன் ஆறுமுகன் அலங்கா ரத்தில் காட்சி அளித்தல், இரவு 8 மணிக்கு புத்தக வெளி யீட்டு விழா மற்றும் பாராட்டு நடக்கிறது.

    நிகழ்ச்சியில் நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட திட்ட இயக்குனர் தனபதி பெற்றுக்கொள்கிறார். 29-ந்தேதி போர்கோல முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, மகளிர் மாநாடு நடக்கிறது.

    30-ந்தேதி கந்த சஷ்டி விழாவான காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு சக்திவேல் வாங்க வருதல், மதியம் 1 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹா ரம் நடக் கிறது. சூரசம்ஹாரத்தில் யானை ஊர்வலம், சிங்காரி மேளம், மயிலாட்டம், கோலாட்டம், கதகளி ஆகி யவை நடக்கிறது. இரவு 8.30 மணிக்குராஜமன்னார் தலை மையில் சிலம்பம் போட்டி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை, கேடயம் வழங்கப் படுகிறது.

    31-ந்தேதி பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம், அன்னதானம் மாலை 5 மணிக்கு சகஸ் ராம அர்ச்சனை, புஷ்பாபி ஷேகம், 6.30 மணிக்கு மணி கோல முருகன் அலங்காரத் தில் காட்சி அளித்தல், தீபா ராதனை ஆகியவை நடக் கிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை தெய்விமுருகன் கோவில் தலைவர் வெற்றிவே லன், கவுரவத்தலைவர் அருள் குமரன், மகளிர் மன்ற தலைவி ராஜாத்தி குமரன், லதா வேலன், லதா முருகதாஸ் மற் றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக் கள் செய்து வருகிறார்கள்.

    • அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு நடந்தது
    • 251 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி ஐயப்பன் நகரில் எழுந்தருளி உள்ள அருள்பாலித்து வரும் ஐயப்பன் கோவிலில் புரட்டாசி கமிட்டி தாரர்களால் நடத்தப்படும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஐயப்பனுக்கு பால், பன்னீர் உட்பட பல வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்ட ன. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்நிதானத்தில் பதினெட்டு படிகளுக்கு இருபுறத்திலும் 251 சுமங்கலி பெண்கள் அமர்ந்து திரு விளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜைக்கு பின் பெண்களுக்கு மாங்கல்ய கயிறு குங்கு மம் ஆகிய மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதான கமிட்டியாரால் அருசுவை உணவு வழங்கப்பட்டது.

    • குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
    • நவராத்திரி விழாவின் 5-வது நாள் மற்றும் வெள்ளிகிழமையை யொட்டி காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.முதலியார் தெரு பெரிய மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி விழாவின் 5-வது நாள் மற்றும் வெள்ளிகிழமையை யொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

    இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், முதலியார் தெரு பெரிய மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இந்த பூஜையில் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • செல்வ காளியம்மன் மற்றும் அனுமானுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து, பூக்களால் அலங்கரித்து சாமிக்கு மகா ஆராதனை நடந்தது.
    • சுற்றுவட்டார கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டனர்.

    சூளகிரி,

    சூளகிரி தாலுகா உத்தனபள்ளி ஊராட்சி பழைய கொத்தூர் சாலையில் உள்ளது பழமை வாய்ந்த செல்வ காளியம்மன் மற்றும் அனுமந்த ராய சுவாமி ஆலயம்.

    இங்கு புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையை முன்னிட்டு செல்வ காளியம்மன் மற்றும் அனுமானுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து, பூக்களால் அலங்கரித்து சாமிக்கு மகா மங்கள ஆரத்தி செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    இந்த பூஜைகளை கோயில் தர்மகர்த்தா விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்தனர். சுற்றுவட்டார கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டனர்.

    • ரூ 2.77 கோடியில் குடிநீர் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது
    • எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் தொடங்கிவைத்தார்

    திருச்சி:

    முசிறி அடுத்த தண்டல புத்தூரில் குடிநீர் பணிகள் மற்றும் பல்நோக்கு மையக் கட்டிடங்கள் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற பணிகளுக்கான பூமி பூஜை எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முசிறி எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடமும், இரண்டு கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில், தமிழ்நாடு வடிகால் வாரிய மூலம் வெள்ளுர் மற்றும் 24 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் மறு சீரமைப்பு, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், வட்டார சுகாதார மைய கட்டிடம் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் முசிறி ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் மாவட்ட கவுன்சிலர் வளர்மதி சின்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பெரியசாமி, திமுக நிர்வாகி புத்தூர் ஆனந்த், ஊராட்சி ஒன்றிய ஆணையர் கள் சந்திரசேகரன், ராஜ்மோகன், தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா செல்வ விநாயகம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    • முத்துமாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது
    • பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள முத்து மாரியம்மனுக்குத் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கருவரை முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. பின்னர் முத்துமாரியம்மன் மற்றும் சின்ன சின்ன மாரிய ம்மனுக்கு மஞ்சள், சந்தனம், திரவியம், பால், தயிர், பன்னீர்,தேன், கரும்புச் சாறு போன்ற பொருட்களால் அபி ஷேகம் நடைபெற்றது.அம்மன்கருக்கு பட்டுடுத்தி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராத னை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில். 201 பெண்கள் கலந்துகொண்டனர். விழாக் கமிட்டியாரால் தேங்காய், பழம், பத்தி, பூ, நெய், திரி தீப்பெட்டி போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள். சிவாச்சிவச்சாரியார் மந்திரங்கள் சொல்ல விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.

    • முப்பெரும் தேவியர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம் நடந்தது.
    • 1,008 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.

    புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும்தேவியர், பவானியம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. இதை முன்னிட்டு ஆவணி மாதம் பவுர்ணமி பூஜை சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமண பொருள்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்களும், 1,008 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.

    பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. பின் முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடியில் ஓம் அமர்ணா மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில், வாராந்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஓம் அமர்ணா மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில், வாராந்திர சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த வழிபாட்டில் மலர்மாலை அலங்காரத்தில் சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி மாதேஸ்வரி ஜவஹர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • 13 ஊர் குலால பங்காளிகள் பங்கேற்ற ஆதிப்பாட்டி அம்பாள் பூஜை விழா நடந்தது.
    • காவல் உதவி ஆய்வாளர் ஜேசுதாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நாடு ராஜக்கம்பட்டி நாட்டைச் சேர்ந்த கண்டவராயன்பட்டி, நடுவிக்கோட்டை பங்காளிகள் நடத்தும் 13 ஊர் குலால பங்காளிகளின் ஆதிப்பாட்டி அம்பாள் 6-வது பூஜை படைப்பு விழா நடந்தது.

    முதல் நாள் நிகழ்வாக நடுவிக்கோட்டையில் உள்ள சூலக்கருப்பர் கோவிலில் தீபாராதனை வழிபாடு, தொங்கலுடைய அய்யனார் கோவிலில் ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமி அழைப்பு, கிடா வெட்டுதல் நடைபெற்று, மேல்குடி ஆதினமிளகி அய்யனார், வல்லநாட்டுக்கருப்பர் கோவிலுக்கு சுவாமி அழைத்துச் செல்லும் நிகழ்வு நடந்தன.

    தொங்கலுடைய அய்யனார் கோவிலில் சிறப்பு தீபாரதனை நடைபெற்று, அதனை தொடர்ந்து படையல் விழா நடந்தது. மேல்குடி ஆதீனமிளகி அய்யனார், வல்லநாட்டு கருப்பர் கோவிலில் படையல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    வல்லநாட்டு கருப்பருக்கும், பரிவார தெய்வங்களுக்கும், சுவாமி அழைப்பும், சிறப்பு அபிஷேக ஆராதனை, கிடா வெட்டுதலும் நடந்தன. மாலையில் காடப்பிள்ளை அய்யனார், வல்லநாட்டுக்கருப்பர் கோவிலில் இருந்து சுவாமி அழைத்துக் கொண்டு நாட்டார் முழப்படல் வருதல், முழப்பொட்டலில் இருந்து நாட்டார், நகரத்தாரை மேளதாளம் வாணவேடிக்கையுடன் பங்காளிகள் மற்றும் பிறந்த பெண் பிள்ளைகள், குழந்தைகளின் பூத்தட்டு ஆதிப்பாட்டி அம்பாளை அலங்கரித்தல் அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது.

    விழாவில் கண்டவராயன்பட்டி, நடுவிக்கோட்டை, தி.புதுப்பட்டி, செண்பகம்பேட்டை, நெடுமரம், சதுர்வேதமங்கலம், காளாப்பூர், சிங்கம்புணரி, சொக்கலிங்கபுரம், மல்லாக்கோட்டை, கட்டாணிப்பட்டி, அழகம்மாநகரி, பிடாரம்பட்டி ஆகிய 13 ஊர் குலால பங்காளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் அமைச்சர் பெரியக்கருப்பன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். திருப்பத்தூர் கண்டவராயன்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ஜேசுதாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • விளக்கு பூஜைக்கு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
    • தேசிய செயற்குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விளக்கு பூஜையை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் (மகிஷாசுரமர்த்தினி) தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இந்த பூஜையை திருக்கைலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் வாமதேவ சந்தானம் 28 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் ஆசியுரை வழங்கி விழாவினை தொடக்கி வைத்தார். இத்திருவிளக்கு பூஜைக்கு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தார்கள்.

    திருக்கோயில் திருவிளக்கு பூஜைக்கு சரவணன் சுவாமிகள், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் டாக்டர் பழனி குமார், தஞ்சாவூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மோகன், வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், வழிபாட்டு குழு முரளி, முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கே. கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினர்.

    • அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிளக்குபூஜை நடைபெற்றது
    • 1,401 பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

    புதுக்கோட்டை:

    அழகியநாச்சியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 31 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 9-ந் தேதி தேரோட்ட விழா நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கோயிலின் அறங்காவலா் ராம. ராஜா அம்பலகாரா் தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின் தொடக்கமாக அழகிய நாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற விளக்குப் பூஜையில் 1,401 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். சிவாச்சாரியாா் சரவணன் குருக்கள் திருவிளக்கு மந்திரம் ஓதி பூஜையை வழிநடத்தினாா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜை குழுவினா் செய்திருந்தனா்.

    ×