search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110454"

    • சுமார் 250 ஏக்கர் நிலம் வருவாய் துறையால் சூரிய நாராயணபுரம் கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • 8 மாதங்களாக அனைத்து அதிகாரிகளிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் களத்தூரை சேர்ந்த விவசாயிகள் நில உரிமை மீட்பு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

    மேலும் இது தொடர்பாக பட்டுக்கோட்டை சித்துக்காடு கிராம கமிட்டி தலைவர் மற்றும் களத்தூர் கிராம பொதுமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் களத்தூர் ஊராட்சி உட்பட்ட 237 களத்தூர் மேற்கு கிராமத்தில் உள்ள சுமார் 250 ஏக்கர் நிலம் வருவாய்த் துறையால் சூரிய நாராயணபுரம் கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இது நிலத்தை மீண்டும் எங்கள் கிராமத்தோடு இணைக்க கோரி இது சம்பந்தமாக கடந்த மே 2ம் தேதி அஞ்சல் வழியாக கிராம மக்கள் சார்பாக மனு அளித்துள்ளோம். மேலும் இது சம்பந்தமாக 8 மாத காலங்களாக அனைத்து அதிகாரிகளிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    இந் நிலையில் மாவட்ட கலெக்டர் அந்த இடங்களை மறு ஆய்வு செய்தும் ஆவணங்களை சரிபார்த்தும் தடையை நீக்கி ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து இன்று காலை நில உரிமை மீட்பு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான களத்தூர் ஊராட்சி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டுத் தொகை பதிவு செய்த விவசாயிகளுக்கு வங்கிகளில் வந்துள்ள காப்பீட்டுதொகையை உடனே வழங்க வேண்டும் என்று தி.மு.க. விவசாயஅணி கோரிக்கை விடுத்துள்ளது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விவசாயஅணி துணை அமைப்பாளர் ஆப்பனூர் குருசாமி கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    2017-ம் ஆண்டு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பிரதமர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர்.

    15 மாதங்கள் கழித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 32 கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் அரசு செலுத்தியுள்ளது.

    அதனை வழங்க போதிய அலுவலர்கள் இல்லாமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். போதிய அலுவலர்களை நியமித்து விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கடலாடி தாலுகா கே.வேப்பங்குளம் பிர்கா உள்பட 40-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் காப்பீடு பதிவு செய்த விவசாயிகளுக்கு காப்பீடுத் தொகை வங்கிகணக்குகளில் அரசு செலுத்தாமல் உள்ளது.

    அந்த விவசாயிகளுக்கும் நிவாரணத்தொகை கிடைப்பதற்கும் கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலை மாற்று தேதியில் நடத்த கோரி மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் கலெக்டர் கந்தசாமியிடம் மனு கொடுத்துள்ளார். #ParliamentElection #TiruvannamalaiGirivalam
    திருவண்ணாமலை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கிறது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அன்றைய தினம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவு பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தென்னிந்தியாவின் புகழ்மிக்க சிவாலயமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம், பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதி அமைந்திருக்கிறது.

    இதனால் திருவண்ணாமலை தொகுதியிலும் தேர்தலை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் கலெக்டர் கந்தசாமியிடம் திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலை மாற்று தேதியில் நடத்த கோரி மனு கொடுத்துள்ளார்.



    ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் அன்று இரவு சித்ரா பவுர்ணமி வருவதால் அன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதில் தவறும் நிலை உருவாகும்.

    மேலும் ஓட்டுபெட்டியை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் திருவண்ணாமலை தொகுதி தேர்தலை மாற்று தேதியில் நடத்த ஆவன செய்ய வேண்டும்.

    இந்து மக்களின் தருமத்திற்கும், எண்ணங்களுக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மாற்று தேதியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

    சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம், ஏப்ரல் 18-ந் தேதி இரவு 7.05 மணிக்கு தொடங்கி, 19-ந்தேதி மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது. அதன்படி, 18-ந் தேதி இரவு, சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள்.

    வாக்குப்பதிவு நடைபெறும் 18-ந் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், அன்றைய தினம் திருவண்ணாமலை தொகுதியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கும் என தெரிகிறது.

    கார்த்திகை தீபத்திரு விழாவுக்கு இணையாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

    சென்னை, வேலூர், சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட தொலைதூர நகரங்களில் இருந்து திருவண்ணாமலை வரும் பக்தர்கள், தங்களுடைய வாக்குகளை செலுத்திவிட்டு வருவதில் சிக்கல் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    மேலும், திருவண்ணாமலை தொகுதியிலும் சித்ரா பவுர்ணமியன்று வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கலாம். அதோடு, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், 20 லட்சம் பக்தர்கள் வருகை தரும் சித்ரா பவுர்ணமி விழாவுக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.

    அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவற்றில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே, இரண்டு தொகுதிகளில் உள்ள 3,475 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு வந்து, திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவல நெரிசலை கடந்து வாக்கு எண்ணும் மையங்களில் சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    எனவே, திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, தேர்தல் ஆணையம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சட்டரீதியான பரிசீலனை செய்து முன் கூட்டியே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #ParliamentElection #TiruvannamalaiGirivalam
    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். #ChandrababuNaidu #Andhraspecialstatus #RamnathKovind
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
     
    டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அவரது கோரிக்கை வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.



    தனது உண்ணாவிரதத்தை இரவு 8 மணியளவில் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா அவருக்கு பழச்சாறு அளித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

    இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தவாறு இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.  #ChandrababuNaidu #Andhraspecialstatus #President #RamnathKovind
     
    அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் நாள் இன்றுடன் நிறைவடைகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. சார்பில் கடந்த 4-ந்தேதி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களை பலர் வாங்கினர். அவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.

    நேற்று வரை 40 தொகுதிகளுக்கும் 1000-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ளனர். கடைசிநாள் விருப்பமனு விநியோகம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து இன்று தலைமை கழகத்தில் விருப்ப மனு அளிக்க ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர். அவர்கள் பூர்த்தி செய்த விருப்ப மனுக்களை அளித்தனர்.

    தென்சென்னை தொகுதிக்கு ஜெயவர்தன் எம்.பி., வடசென்னை தொகுதிக்கு வெங்கடேஷ் பாபு எம்.பி., பொள்ளாச்சிக்கு லியாகத் அலிகான், ஈரோடுக்கு முன்னாள் மேயர் மல்லிகா உள்பட பலர் விருப்பமனு கொடுத்தனர்.

    மதியம் 12 மணி வரை மொத்தம் 1300 பேர் விருப்ப மனு கொடுத்தனர். அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படும். இதற்கிடையே விருப்பமனு விநியோகிக்க காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக நேற்று மாலை வரை 3,850 பேர் விண்ணப்பித்து உள்ளனர். #JactoGeo #Temporaryteachers
    தர்மபுரி:

    புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்தால், நடுநிலை, தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. முழு ஆண்டு தேர்வு நெருங்கும் வேளையில், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு அறிவித்து உள்ளது.

    முதலில் அவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக டி.டி.எட். மற்றும் பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    நேற்று மாலை வரை 3,850 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் 900 பேரும் அடங்குவார்கள். மனு கொடுத்தவர்களிடம் இருந்து திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று முதல் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். #JactoGeo #Temporaryteachers

    தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு செய்திருப்பதாக அதிகாரி தெரிவித்தார். #JactoGeo
    தர்மபுரி:

    புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்தால், நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. முழு ஆண்டு தேர்வு நெருங்கும் வேளையில், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு அறிவித்து உள்ளது.

    முதலில் அவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இன்று மாலை வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு மனு கொடுக்கலாம் என்று அரசு அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக டி.டி.எட். மற்றும் பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    நேற்று மாலை வரை 1480 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இன்றும் ஏராளமானோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து வேலைகேட்டு மனுக்களை எழுதி கொடுத்தனர். இதேபோல பாலக்கோடு மற்றும் அரூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் ஏராளமானோர் மனு கொடுத்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு செய்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருப்பவர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் வேலை கேட்டு விண்ணப்பம் கொடுத்தனர்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) முதல் அவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் நிமனத்திற்கு ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.
    சிவகங்கை:

    9அம்ச கோரிக்கை தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை, இதனால் அரசு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை பணிக்கு நியமிக்க முடிவு செய்துள்ளது.

    அதைத்தொடர்ந்து நேற்று சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பகல் 2 மணி வரை சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக ஆசிரியர் பணி வேண்டி விண்ணப்பங்களை கொடுத்தனர். இது தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 1,115-ம், உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவைகளில் 7 ஆயிரத்து 586 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

    இவர்களில் நேற்று முன்தினம் 5ஆயிரத்து 355 பேர் பணிக்கு வரவில்லை. ஆனால் இவர்களில் நேற்று 119 பேர் மட்டும் பணிக்கு வந்து விட்டனர். பணிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 28-ந் தேதி பணிக்கு வரவில்லை என்றால் பெற்றொர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7ஆயிரத்து 500 வழங்கப்படும். இதையடுத்து தற்போது ஏராளமானவர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக தங்களின் விண்ணப்ப மனுவை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பாலக்கரையில் ஜனநாயக விவசாயிகள் சங்கம் மற்றும் வயலூர் கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் ராமர், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்க தலைவர் வக்கீல் தனவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். வடகிழக்கு பருவமழை குறைந்துவிட்டதால் 2018-19-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருத்தாசலம் நகரத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வயலூர் ஏரியை என்.எல்.சி. நிதியில் ஆழப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும், விருத்தாசலம்-கடலூர் ரெயில் பாதையில் மூடப்பட்ட வயலூர் கேட்டினை பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று சப்-கலெக்டர் பிரசாந்தை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    கணவரை மீட்டு தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மலேசிய பெண் கோரிக்கை மனு அளித்தார்.
    திருவாரூர்:

    கணவனை மீட்டு தர வலியுறுத்தி மலேசியாவை சேர்ந்த துர்காதேவி என்பவர் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறேன். திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனியார் நிறுவன டிரைவராக சிங்கப்பூரில் பணியாற்றினார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான பெருகவாழ்ந்தானுக்கு வந்த ராஜ்குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் நேற்று முன்தினம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதாக தகவல் அறிந்தேன்.

    இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து ஆன்லைன் மூலம் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் அளித்தேன். பின்னர் மலேசியாவில் இருந்து புறபட்டு நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்துக்கு போலீசாருடன் நேரில் சென்றேன். ஆனால் அங்கு ராஜ்குமார் இல்லை. அவரது உறவினர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் ராஜ்குமாருக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே எனது கணவர் ராஜ்குமாரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், நீதிமன்றத்தின் மூலம் அணுகும்படி துர்கா தேவிக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து இலவச சட்ட உதவி மையத்தை நாடுவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். தற்போது இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்்வதற்கான ஏற்பாடுகளை துர்காதேவி ரமீஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews 
    கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கி பலியான தந்தையின் உடலை மீட்டுத்தரக்கோரி அவரது மகள் மற்றும் குடும்பத்தினர் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். #Fishermendeath

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே உள்ள இலந்தைகூட்டம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (வயது50) என்பவரும், கருப்பையா என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சென்றிருந்தார்.

    நேற்று இரவு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்ததாக கூறி 28 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. மீனவர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.

    அப்போது கருப்பையா படகில் இருந்த முனியசாமி எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவரை காப்பாற்ற கடலில் குதித்தனர். ஆனால் பலனில்லை.

    இதற்கிடையில் முனியசாமியின் உடல் யாழ்பாணம் அருகே கரை ஒதுங்கியது. இந்த தகவலை இலங்கை அரசு இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

    இந்திய அதிகாரிகள் ராமேசுவரம் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மேலும் இலந்தை கூட்டத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகள் சண்முகப்பிரியாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இன்று காலை சண்முகப்பிரியா, அவரது கணவர் சண்முகநாதன் மற்றும் உறவினர்கள ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு உதவி இயக்குநர் யுவராஜிடம், இலங்கையில் கரை ஒதுங்கிய தனது தந்தையின் உடலை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தனர். #Fishermendeath

    கம்ப்யூட்டர்களில் ஊடுருவி கண்காணிக்க 10 உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிரான மனுவை விசாரிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்துள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள எல்லா கம்ப்யூட்டர்களிலும் ஊடுருவி கண்காணிக்க 10 உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனோகர் லால் சர்மா என்ற வக்கீல் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.


    அதில், இந்த அறிவிப்பாணை சட்ட விரோதமானது என்றும், இதன்படி செயல்பட விசாரணை அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார்.



    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த விவகாரத்தை மனோகர் லால் சர்மா முறையிட்டார். அவசர மனுவாக விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள், “பார்க்கிறோம். எப்போது தேவையோ அப்போது விசாரிப்போம்” என்று கூறினர். #SupremeCourt
    ×