search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110454"

    நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தங்கினார். கூட்டத்தில் குடும்ப அட்டை, மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 264 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

    கூட்டத்தில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கால் கிராமத்தை சேர்ந்த ஆனந்தபிரபு, கூடலூர் காசிம் வயல் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கலெக் டரின் விருப்புரிமை நிதியிலிருந்து பெட்டிக்கடை வைக்க தலா ஒரு பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ஆக மொத்தம் ரூ. 40 ஆயிரத்திற்கான காசோலையினையும், பந்தலூர் வட்டம் நெல்லியாளம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் மனைவி புஷ்பவள்ளிக்கு மருத்துவ செலவுக்காக மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

    கோவையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனால் 2017-2018-ம் ஆண்டிற்கான நமது மாவட்டத்தில் கூடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவாலா நடுநிலைப்பள்ளி, குன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட அதிகரட்டி தொடக்க பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பள்ளி வளர்ச்சிக்காக தலா ஒரு பள்ளிக்கு ரூ.1 லட்சம்

    வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையும், கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதை தலைமை ஆசிரியர்கள் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றனர்.

    கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்ட) முருகன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குழந்தைவேலு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மத்திய சுற்றுசூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #maduraihighcourt

    மதுரை:

    தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கிய அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் ரசாயன பொருட்களில் சுற்றுச்சூழல் மாசுபடும் பொருட்களின் விகிதாசாரம் குறித்து மத்திய சுங்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

    2007-ம் ஆண்டு 900 டன் முதல் 1200 டன் வரை காப்பர் தயாரிப்பதற்கான உரிமம் பெறும்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு 172 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளதாக தவறான தகவல் அளித்த வேதாந்தா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உண்மையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 102 ஏக்கர் பரப்பளவு நிலம் தான் உள்ளது. தவறான தகவலை மத்திய-மாநில அரசுக்கு வேதாந்தா நிறுவனம் அளித்துள்ளது.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய சுற்றுச்சூழல்துறை செயலாளர் மற்றும் மத்திய சுங்கத்துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பவும், வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.

    ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் வருவாய் துறை சார்பில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
    பாடாலூர்:

    ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் வருவாய் துறை சார்பில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது. முகாமிற்கு ஆலத்தூர் தாலுகா சமூக நல பாதுகாப்பு திட்ட  தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தேவையான சான்றிதழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டார். 

    முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல் , வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள்கேட்டு மனுக்கள் அளித்தனர். அதில் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பட்டா மற்றும் முதியோர் உதவி தொகை ஆணை வழங்கப்பட்டது.

    முகாமில் வருவாய் ஆய்வாளர் அலுவலர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    நவல்பட்டு ஊராட்சியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்எல்ஏ மனு கொடுத்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி நவல்பட்டு ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள், அப்பகுதியில் இருந்து உய்யகொண்டான் கரை வழியாக திருவெறும்பூர் வரை தினசரி வந்து செல்வதற்கு பயன்படுத்தி வரும் சாலை, மிகவும் பழுதடைந்து நிலையில் இருந்து வந்தது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். 

    இதையடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம்  கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , கலெக்டர் ராசாமணியை சந்தித்து மனு கொடுத்தார். 

    அதில் பொதுமக்களின் அடிப்படை தேவையான சாலை வசதியை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதற்காக  கலெக்டருக்கு அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.
    அப்பல்லோவில் வருகிற 29-ந்தேதி ஆணையம் ஆய்வு செய்யும் போது என்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்று ஆணையத்திடம் ஜெ. தீபா சார்பில் அவரது வக்கீல் மனு அளித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அவ்வப்போது குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே ஆஜராகி இருக்கிறார். கடந்த 10 நாட்களாக அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    வருகிற 29-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆணையம் சார்பில் வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் அப்போது உடன் செல்கிறார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டுகள், அமைச்சர்கள் தங்கி இருந்த இடங்கள், வி.ஐ.பி.க்கள் வந்து சென்ற இடங்கள் என 10 இடங்களை ஆணையம் சார்பில் போட்டோ எடுக்க உள்ளனர்.

    இந்த ஆய்வின் போது அப்பல்லோவுக்கு தன்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்றுஜெ.தீபா கூறி உள்ளார்.

    இது குறித்து விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா சார்பில் வக்கீல் சுப்பிரமணியம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகிய நாங்கள் இருவரும்தான் ஜெயலலிதாவின் ரத்த உறவுகள். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில்தான் இதற்கு முன்பு வசித்து வந்தோம்.


    ஜெயலலிதாவின் இறுதி சடங்கையும் தீபக் நடத்தினார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது ஆஸ்பத்திரிக்குள் என்னை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

    இப்போது ஆணையம் சார்பில் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும், போயஸ் கார்டனிலும் ஆய்வு செய்ய போவதாக அறிகிறேன். இந்த ஆய்வின் போது என்னையும், எனது வக்கீலையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும்.

    நான் ரத்த உறவு என்பதால் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டை பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஆணையத்தில் அளிக்க கூடிய சாட்சிகள் சில உண்மை தன்மை இல்லாததால் தன்னை முக்கிய சாட்சியாக ஆணையம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    விசாரணை ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். #Jayalalithaa #Deepa
    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
    பெரம்பலூர்:

    குன்னம் தாலுகா தேனூரை சேர்ந்த மணிவேல் என்பவர் கொடுத்த மனுவில், தேனூர் பகுதியில் சிலர் மீண்டும் சாராயம் மற்றும் சட்ட விரோதமாக மது பானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    பெரம்பலூர் பெரியவெண்மணியை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுக்களில், கிராம சபை கூட்டம் நடத்தும் அதிகாரிகளுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், மற்றொரு மனுவில் குன்னம் தாலுகா கொத்தவாசல் கிராமத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையீட்டு குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    பெரம்பலூர் மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தின் தலைவர் இளங்கோவன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுடன் வந்து கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சியில் பணி செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியகுழு தமிழ்நாட்டில் பரிந்துரை செய்த திருந்திய ஊதிய நிர்ணயத்திற்கான நிலுவை தொகையினை 1-10-2017 அன்று முதல் வழங்கிடவும் உத்தரவிட்டது.

    ஆனால் பெரம்பலூர் ஒன்றியத்தில் மட்டும் தான் அந்த நிலுவை தொகை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்களில் பணி செய்பவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நிலுவை தொகை வழங்கப்படாத ஒன்றியங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவை தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி ஊராட்சிக்கு உட்பட்ட எசனை காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 40 வருடங்களாக குடியிருக்கிறோம் என்றும், ஆனால் இது வரை எங்கள் வீட்டு மனைக்கு அரசு பட்டா வழங்கவில்லை. நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதே போல் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி வடக்கு தெருவில் வசிக்கும் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் கடந்த 20 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். எங்களால் வாடகை பணம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    பூலாம்பாடி மாதவி தெருவை சேர்ந்தவர் சுதந்திரகுமார் கொடுத்த மனுவில், மானியத்துடன் விவசாய டிராக்டர் வழங்குவதாக ஏஜென்சி கூறியதால் கடனாக தனியார் நிதி நிறுவனம் மூலம் டிராக்டரை பெற்று கொண்டேன். ஆனால் அந்த நிதி நிறுவனம் எனது வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து எனக்கு தெரியாமல் காசோலை மூலம் லட்சக்கணக்கில் பணம் எடுத்து மோசடி செய்தது. நானும் சரியாக தவணை தொகையினை செலுத்தினேன். மேலும் பொய்யான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உயர்நீதிமன்றத்தில் உத்தரவை பெற்று எனது விவசாய டிராக்டரை அந்த நிதி நிறுவனம் ஜப்தி செய்தது. விவசாய டிராக்டர் கடன் தவணை 4 ஆண்டுகள் இருக்கும்போதே டிராக்டரை ஜப்தி செய்த தனியார் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் சாதிய படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    பொதுமக்களிடம் இருந்து மேற்கண்ட மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை சாலைக்கு நிலம் எடுக்க ஆட்சேபனை தெரிவித்து மொத்தம் 627 பேர் மனு அளித்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை திருவண்ணாமலை உள்பட 5 மாவட்ட விவசாயிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர். இத்திட்டத்திற்காக விவசாய நிலங்கள், வீடுகள் என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகம் குறித்து ஆட்சேபனை தெரிவிக்கலாம் என கடந்த மாதம் 19-ந் தேதி முதல் நேற்று (9-ந் தேதி) வரை காலக்கெடு வழங்கப்பட்டது. அதன்படி, ஆட்சேபனை தெரிவித்து மொத்தம் 627 விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

    இவற்றில் இழப்பீட்டு தொகை அதிகம் கோரியும், நில இழப்பீட்டுக்காக அரசு வேலை வழங்கக் கோரியும், ஈடு நிலம் வழங்க கோரியும், இதர வகை கோரிக்கைகளை தெரிவித்தும் பலர் மனு அளித்துள்ளனர்.

    செங்கம் தாலுகாவில் 225 விவசாயிகள், திருவண்ணாமலை தாலுகாவில் 127 பேர், கலசப்பாக்கம் தாலுகாவில் 65 பேர், போளூர் தாலுகாவில் 51 பேர், சேத்துப்பட்டு தாலுகாவில் 89 பேர், வந்தவாசி தாலுகாவில் 32 பேர் மற்றும் செய்யாறு தாலுகாவில் 38 விவசாயிகளும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

    காலக்கெடு வழங்கப்பட்ட 21 நாட்களிலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலம் எடுக்க ஆட்சேபம் தெரிவித்து அதகாரிகளை சந்தித்து மனு அளிக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் மனுக்களை பெற்று கொள்ளாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கவும் முன்வரவில்லை.

    மாறாக, பெறபட்ட ஒருசில மனுக்களை அதிகாரிகள் குப்பை தொட்டியில் வீசினர். மனுக்களை கொடுக்க செல்லும் போது வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக பேசி மிரட்டினர். அளவுக்கு அதிகமான மனுக்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.

    மத்திய-மாநில அரசுகள் உறுதியாக பசுமை சாலை அமைப்போம் எனக்கூறிய பிறகு ஆட்சேப மனுக்களை கேட்பது விவசாயிகளை ஏமாற்றும் கபட நாடகம் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
    கோவை பி.என்.புதூரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தங்கவேலு, கிளை செயலாளர் சந்திரன், தி.மு.க.வை சேர்ந்த பன்னீர், குணசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்.புதூர் சென்னிமலை ஆண்டவர் நகரில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. தற்போது குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, தேவையற்ற அசம்பாவிதங்களும் ஏற்படும்.

    மேலும் மதுக்கடை திறக்கப்பட உள்ள இடத்தின் அருகே மைதானம் உள்ளது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கோவை கவுண்டம்பாளையம் உடையார் வீதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

    நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக மண் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். இதனை நம்பி 40 குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 யூனிட் களிமண் தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் நாங்கள் கணுவாய், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வந்து மண்பானை செய்தோம். தற்போது எங்களுக்கு களிமண் எடுக்க அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் எங்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு களிமண் எடுக்க நிரந்தர அனுமதி சான்று வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில், வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் மீது சிலர் கடந்த மாதம் 30-ந்தேதி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் பதிவு செய்யப்பட்டும் குற்றவாளி கைது செய்யப்பட வில்லை.

    டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைந்த பார்களின் உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்கின்றனர். இதனை எதிர்க்கும் மதுக்கடை ஊழியர்கள் மீது சில நபர்களை தூண்டி விட்டு தாக்குதல் நடத்துகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் டாஸ்மாக் பார்களின் உரிமையை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உள்ளது.

    கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு (வயது 39) என்பவர் அளித்த மனுவில், சிறு வயதில் ஏற்பட்ட நோய் காரணமாக எனது 2 கால்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளியான எனக்கு வடவள்ளி பஸ்நிலையம் அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இருந்தது.

    கோவை அருகே உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அளித்த மனுவில், நாங்கள் தொழிற்சங்கத்தில் முன்னணி நிர்வாகிகளாக இருந்ததால் எங்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உள்ளது. எனவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 
    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. #PNBFradu #NiravModi
    மும்பை:

    ரூ.13 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன. இவ்விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, நிரவ் மோடி மற்றும் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    அதன் அடிப்படையில், நிரவ் மோடிக்கு எதிராக மும்பை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. நிரவ் மோடி இங்கிலாந்து, பெல்ஜியம் உள்பட எந்த நாட்டில் இருந்தாலும் அவரை நாடு கடத்திக்கொண்டு வருமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  #PNBFradu #NiravModi #Tamilnews 
    கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு கொடுத்தார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு கொடுத்தார். அப்போது இது குறித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அன்பழகன் பதில் கூறினார்.

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 232 மனுக்கள் வரப்பெற்றன. மனுவை பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்ற கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனு தாரருக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டார்.


    கைக்குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஸ்ரீமதி உள்பட அவரது குடும்பத்தினரை படத்தில் காணலாம்.



    இதில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்தும், கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்டவற்றின் மூலம் பிழைப்பு நடத்துகின்றனர். இந்த நிலையில் தற்போது விவசாயம் பொய்த்து போனதாலும், முறையாக காவிரி, அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி மறுக்கப்படுவதாலும் அவர்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கால்நடைகளை பராமரிக்க கூட வழியில்லாமல் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். எனவே கரூர் மாவட்ட மக்களின் கட்டுமான பணிகளுக்காக காவிரி, அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் எடுத்து கொடுத்து பிழைப்பு நடத்தும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா பொய்யாமணியை சேர்ந்த வைரபெருமாள், சுக்கம்பட்டி சுப்ரமணி, நச்சலூர் ராஜா, சின்னபணையூர் பாலசுப்ரமணியம் மற்றும் ஜீயபுரத்தை சேர்ந்த ரவி உள்ளிட்ட நெல்கொள்முதல் வியாபாரிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், நாங்கள் குளித்தலை பகுதியை சேர்ந்த 600 விவசாயிகளிடம் 29,249 மூட்டை நெல் கொள்முதல் செய்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த சின்னகண்ணு(வயது 38) மற்றும் அவரது மனைவி கவுசல்யா ஆகியோரது நிறுவனத்திற்கு விற்பனைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்தோம். அதற்குரிய பணம் ரூ.3½ கோடியை 15 நாட்களில் தந்து விடுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை ரூ.61 லட்சத்து 54 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி ரூ.2 கோடியே 89 லட்சத்தை தர மறுத்து இழுத்தடித்தனர். இந்த நிலையில் பணத்தை எப்போது திருப்பி தருவீர்கள் என சின்னகண்ணு, கவுசல்யாவிடம் கேட்டபோது உரிய பதில் இல்லை. எனவே பணமோசடியில் ஈடுபட்ட இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணத்தை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் அருகே வாங்கல் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி ஸ்ரீமதி(23) தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், எனது கணவர் சிவக்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் லாரிக்கு படுதா கட்டும் வேலைக்காக சென்றார். அப்போது அங்கு லாரியில் மணல் ஏற்றி கொண்டு கடத்தியது தெரிய வந்தது. பொக்லைன் மூலம் மணலை அள்ளி லாரியில் போட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரம் மோதியதில் எனது கணவர் சிவக்குமார் படுகாயமடைந்தார். அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டனர். எனவே அவருக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க வேண்டும். மேலும் மணல் கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    குளித்தலை வட்டம் வீரம்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி தெருக்களில் கடந்த சில வாரங்களாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் அருகே கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான அளவில் இடவசதி இல்லாததால் நோயாளிகளில் சிரமப்படுகின்றனர். எனவே நவீன வசதிகளுடன் இந்த சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் லாலாப்பேட்டை நாகராஜன் அளித்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்து மக்கள் கட்சியின் கரூர் நகர தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை முதல் சுங்ககேட் வரையும், சில பகுதிகளிலும் தள்ளுவண்டி கடைகள் வைத்து போக்குவரத்திற்கு சிலர் இடையூறாக வியாபாரம்செய்கின்றனர். எனவே இது பற்றி உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரூர் நகராட்சியிலுள்ள அரசு டாஸ்மாக் கடை பாரில் கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் அரசு காலனி பகுதியில் சாக்கடை வடிகாலை சிலர் அடைத்து வைத்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணி உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.

    இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மனு அளித்த 3 பயனாளிகளுக்கு அம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 1 பயனாளிக்கு பிரெய்லி கைக்கடிகாரம், 2 பயனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையினையும் கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ஜாமீன் கேட்டு வேல் முருகன் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #Velmurugan #HighCourt
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடந்தது.

    அப்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை (என்.எல்.சி.யை) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து நெய்வேலி அனல் மின்நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

    அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை சிலர் தாக்கினர்.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

    இந்த இரு வழக்குகளில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சார்பில் ஜாமீன் கேட்டு உளுந்தூர்பேட்டை கோர்ட்டிலும், கடலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வேல்முருகன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி நெய்வேலி அனல்மின் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #Velmurugan #HighCourt
    தூத்துக்குடியில் 18-ந்தேதி அமைதி பேரணி நடத்த அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் திருமாவளவன், தெகலான் பாகவி ஆகியோர் மனு கொடுத்தனர். #ThoothukudiShooting #Thirumavalavan
    அடையாறு:

    சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், அடக்குமுறைக்கான ஜனநாயகசக்தி என்ற பெயரில் வருகிற 18-ந்தேதி தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தூத்துக்குடியில் அமைதி பேரணி மற்றும் இரங்கல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கும் 6 பேரை விடுதலை செய்ய வேண்டும், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வேல்முருகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

    பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

    தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தூத்துக்குடி போராட்டத்திற்கு பிறகு பல்வேறு வழக்கு பதிவுகளும் கைது சம்பவங்களும் தொடர்ந்து நடந்துவருகிறது, இதுபோன்ற ஒடுக்குமுறைகளை கைவிட்டு, ஜனநாயகரீதியாக போராடுபவர்களை தண்டிக்கக்கூடாது. அவர்களுக்கான ஜனநாயக உரிமையை வழங்க வேண்டும். சிறையில் வேல்முருகனுக்கு போலீசாரால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    வருகிற 18-ந்தேதி தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தூத்துக்குடியில் அமைதி பேரணி மற்றும் இரங்கல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #ThoothukudiShooting #Thirumavalavan
    ×