search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலட்டுத்தன்மை"

    குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
    உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கம், உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.

    தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.

    அதே நேரத்தில் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.

    அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்தப் பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும்.

    இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நலக் குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
    மருத்துவம் பல்வேறு வழிகளிலும் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் குழந்தையின்மை என்பதை பெரிய கவலையாகவோ பிரச்சனையாகவோ நினைக்க வேண்டியதில்லை.
    குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்.

    திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம். இந்த குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்… பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் என பொது காரணிகளும் இருக்கலாம்.மன அழுத்தம் குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரிஸ், ஃபைப்ராய்ட் கட்டிகள், குழந்தைப் பருவத்தில் பருவம் அடைந்துவிடுவதைப் போலவே 30, 35 வயதிலெல்லாம் மெனோபாஸ் ஏற்படச் செய்கிற ஹார்மோன் கோளாறுகள், காசநோய் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை ஏற்படலாம்.
    ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பழக்கம், மது, பருமன், விந்தணுக்களின் உற்பத்தி போதுமான அளவு இல்லாமல் போவது, உயிரணுக்கள் கருமுட்டையைச் சென்றடையும் வேகம் குறைந்திருப்பது, ஹார்மோன் குறைபாடுகள், மற்ற பாலியல் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

    * இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால், தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது.

    *  ஆண்கள் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சாதாரண ரத்தப்பரிசோதனை நிலையத்திலேயே இதை செய்துகொள்ளலாம்.

    * இன்று ஜீன்ஸ் அணிவது கலாசாரமாகிவிட்டது. குறைந்தபட்சம், அணிகிற ஜீன்ஸ் தளர்வானதாகவாவது இருக்க வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கிறவர்களாக இருந்தால், உடையால் ஏற்படும் அழுத்தமும் இதனால் கூடுதலாகிவிடும். ஜீன்ஸ் அணிகிற நேரத்தையும் முடிந்த வரை குறைத்து, மற்ற நேரங்களில் தளர்வான  காட்டன் உடைகள் அணிவது நல்லது.

    * சிலர் தூங்குகிற நேரங்களில் கூட இறுக்கமான ஆடைகள் அணிந்துகொள்வார்கள். இதனால் விதைப்பைக்குப் போதுமான ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகும்.



    * லேப்டாப், மொபைல் என்ற எலெக்ட்ரானிக் பொருட்களினால் ஏற்படுகிற பாதிப்புகள் நேரடியாக நிரூபிக்கப்படாவிட்டாலும், கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது, மொபைல் போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

    * உடன்பிறந்தவர்களில் யாருக்காவது குழந்தையின்மை பிரச்னை இருந்தால், மற்றவர்கள் அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம்.

    * சில ஆண்களுக்கு விதைப்பையே இருக்காது. இவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். ஆணுறுப்பில் வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

    * புகை, மது ஆகியவை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பதால், அப்பாவாக ஆசை உள்ளவர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

    * பெண்களில் முறையான மாதவிலக்கு இல்லாதவர்கள், மாதவிலக்கு ஏற்படுவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைவிட பாலிசிஸ்டிக் ஓவரி குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது முக்கியம்!

    * முக்கியமாக இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், உங்கள் மருத்துவரை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.
    நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம்.
    இப்போது குழந்தையின்மைப் பிரச்சனை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதற்கான மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனாலும், குழந்தையின்மை சிகிச்சை குறித்து பல தயக்கங்களும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன.

    நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம். நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வேண்டும் என்றெல்லாம் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். திருமணம் ஆனதும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால், குழந்தை பிறந்தால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற குழப்பம். பொருளாதாரரீதியாகத் தயாராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதமாகிவிடுகிறது.

    கருமுட்டை முதிர்ச்சியடைந்து சூலகத்திலிருந்து வெளியேறாதது, நீர்க்கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரீஸ்), நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்), கர்ப்பப்பையின் சதையில் உருவாகும் கட்டிகள் போன்றவை பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்கள். நார்த்திசுக் கட்டிகள் 20, 30 சதவிகிதம் பேருக்கு காணப்படும். சிறிய அளவிலான கட்டிகளை அகற்ற வேண்டியதில்லை. கர்ப்பப்பையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவிலான கட்டிகள் இருந்து, கர்ப்பப்பை பெரிதாக இருந்தால், அவை கர்ப்பத்தை பாதிக்கும். அவற்றை அகற்ற வேண்டும். இந்தப் பிரச்னை பரம்பரையாக வரக்கூடும். அம்மாவுக்கு நார்திசுக்கட்டிகள் இருந்திருந்தால், மகளுக்கும் வரக்கூடும். கர்ப்பப்பையை அடைத்துக் கொண்டிருக்கும் கட்டிகளை நீக்கினால்தான் குழந்தை தங்கும்.

    மற்றொரு பொதுவான பிரச்னை ‘ஓவரியன் சிஸ்ட்’ எனப்படும் சாக்லேட் கட்டிகள். மாதவிடாய் சுழற்சியின்போது வெளியேறும் ரத்தத்தின் சில துளிகள் கர்ப்பப்பையின் முன்னாலும் பின்னாலும் தேங்கிவிடும். அந்த ரத்தம் உறைந்து, பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கு சாக்லேட் நிறத்தில் இருக்கும். அதனால்தான் `சாக்லேட் கட்டி’ என்கிறோம். சிலருக்கு இந்தக் கட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பெரிதாக ஆகிவிடும்.



    பக்கத்திலிருக்கும் பகுதிகளுடன் ஒட்டிக்கொள்வதால், கருக்குழாய் தடைப்படும். இந்தக் கட்டிகளால் சிலருக்கு தாம்பத்யமே வலி நிறைந்ததாக மாறிவிடும். கருக்குழாய் அடைப்பு, கர்ப்பப்பைக்குள் சிறிய சதை வளர்தல், கருக்குழாய் சூலகம், அதிலுள்ள சிறிய ரத்தக்குழாய்கள் என ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டிருத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் சிகிச்சையளிக்கலாம்.

    ஆண்களைப் பொறுத்தவரை குடிப்பழக்கம், தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ளுதல், சிறிய வயதில் அம்மைக்கட்டு வந்தவர்கள், ஹெர்னியா அறுவை சிகிச்சை, விரைப் பகுதியில் ஏதேனும் அறுவை சிகிச்சை,  பந்து போன்ற பொருள்களால் ஏற்படும் காயங்கள், விந்தணுக்கள் வெளியேறும் பாதைகளில் அடைப்பு போன்ற காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதிக நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக நேரம் தோல் இருக்கையில் உட்கார்ந்திருப்பவர்கள், சுரங்கங்கள், உலைகள், கொதிகலன்களில் பணியாற்றுபவர்கள், தொடர்ந்து அடுப்பருகில் நின்று சமைப்பவர்களுக்கு விந்தணுக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.

    இவை தவிர ஆண், பெண் இருவருக்குமே பொதுவானவை ஹார்மோன் பிரச்சனைகள். தைராய்டு குறைபாடு, மூளையிலிருந்து சுரக்கும் `புரோலாக்டின்’ என்ற ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடைப்படும். இந்த ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருந்தால், சிலருக்கு மார்பில் நீர் கசியும். புரோலாக்டின் சுரப்பு அதிகரித்தால், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும். அதன் காரணமாக கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெளியே வருவது கடினமாகிவிடும். ஆண்களுக்கும் தைராய்டு குறைபாடு, விந்தணுக்கள் உற்பத்திக்குக் காரணமான ஹார்மோன் சுரப்பில் குறைபாடு இருக்கலாம். பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளை எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

    சுயஇன்பத்துக்கும் குழந்தையின்மைக்கும் தொடர்பில்லை. மாதவிடாய் சுழற்சி போன்று விந்தணுக்கள் உருவாவதும் சுழற்சிதான். விந்தணுக்கள் சிறிய அளவில் உருவாகி முதிர்ச்சியடைய மூன்று மாதங்கள் ஆகும். அப்படி முதியர்ச்சியடையும்போது பழைய விந்தணுக்கள் வெளியேறி, புதியவை உற்பத்தியாகிக்கொண்டே இருக்க வேண்டும்.

    பெண்களை அதிகம் தாக்கும் பிசிஓடி என்றால் என்ன… அதன் அறிகுறிகள், அது ஏற்படுத்தும் பாதிப்புகள், பரிசோதனைகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் அறிந்து கொள்ளலாம்.
    `பிசிஓடி’ எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிற `பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’தான் இன்று பெரும்பான்மை பெண்களின் பிரச்சனையாக இருக்கிறது. முறை தவறிய மாதவிலக்கு, முகமெல்லாம் ரோம வளர்ச்சி, பயமுறுத்தும் பருமன், குழந்தையின்மை… இப்படிப் பல பிரச்சனைகளின் பின்னணியிலும் `பிசிஓடி’யைக் காரணம் காட்டுகிறார்கள் மருத்துவர்கள். பிசிஓடி என்றால் என்ன… அதன் அறிகுறிகள், அது ஏற்படுத்தும் பாதிப்புகள், பரிசோதனைகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் அறிந்து கொள்ளலாம்.

    இது ஒருவகையான ஹார்மோன் தொந்தரவு. பிறவிக்குறைபாடாகப் பெண்களைப் பாதிக்கிற பிரச்சனை. 14 வயது முதல் 40 வயது வரை எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிகுறிகள் தோன்றலாம். சினைப்பைகளின் செயல் திறனில் பிரச்சனை ஏற்படுவதைத்தான் `பாசிஸ்டிக் ஓவரிஸ்’ என்கிறோம். அதாவது சினைப்பைகளை இயங்கச்செய்கிற ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யாததுதான் காரணம்.

    சினைப்பையில் குட்டிக்குட்டி கொப்புளங்கள் போன்று இருக்கும். இந்தக் கொப்புளங்களைக்கண்டு பயப்படத் தேவையில்லை. ஆனால், இவர்களுக்கு ஹார்மோன் கோளாறுகள் இருக்கும் என்பதால், அதில் கவனம் அவசியம். பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஆகிய பெண் ஹார்மோன்களும் டெஸ்டோஸ்டீரான் என்கிற ஆண் ஹார்மோனும் இருக்கும். இவற்றின் சமநிலையில் பிரச்சனை வருவதைத் தான் `ஹார்மோனல் இம்பேலன்ஸ்’ என்கிறோம். சிலருக்கு ஆண் ஹார்மோன் அதிகமிருக்கும். அதற்கேற்ற அறிகுறிகளை உணர்வார்கள்.

    அறிகுறிகள்

    *  முறையற்ற மாதவிலக்கு சுழற்சி (40, 50 நாள்களுக்கொரு முறை வரும் அல்லது மாத்திரைகள் எடுத்துக்கொண்டால்தான் மாதவிலக்கு வரும்).
    *  அதிகளவில் பருக்கள் வரும்.
    *  முடி உதிரும்.
    *  எடை அதிகரிக்கும்.

    எப்படி உறுதிபடுத்துவது?



    *  குழந்தை பிறக்கும்போதே இந்தப் பிரச்சனை இருந்தாலும், அவர்கள் பூப்பெய்தும் வயதில்கூட இதை உறுதிபடுத்த முடியாது. சாதாரணப் பெண்களுக்கே அந்தப் பருவத்தில் மாதவிடாய் முறைதவறி வரும். 20 வயதுக்கு மேலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் முறையின்றித் தொடர்ந்தால் பிசிஓடி இருக்கிறதா எனப் பார்க்கலாம்.

    *  முறையற்ற மாதவிடாய், குழந்தையின்மைப் பிரச்சனை, அதிகரித்துக்கொண்டே போகும் எடை என குறிப்பிட்ட பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு பிசிஓடி இருக்கிறதா எனப் பரிசோதிக்க வேண்டும். எந்த வயதில் பூப்பெய்தினார்கள், எத்தனை நாள்களுக்கொரு முறை மாதவிடாய் வருகிறது என்கிற தகவல்களைக் கேட்டறிய வேண்டும்.

    *  கழுத்துக்குப் பின்பகுதியிலும் முழங்கைகளிலும் கருமை இருக்கிறதா எனப் பார்ப்போம். Acanthosis nigricans  எனப்படுகிற அது ஹார்மோன் தொந்தரவின் அறிகுறி.

    *  அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தால் சினைப்பைகளில் கொப்புளங்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஹார்மோன்களின் அளவுகளை அறியும் ரத்தப் பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படும். இது மாதவிலக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் செய்யப்படும்.

    * அல்ட்ரா சவுண்டில் பிசிஓடி இருப்பது, உடல்ரீதியான அறிகுறிகள் இருப்பது, ரத்தப் பரிசோதனையில் அசாதாரணம் என இந்த மூன்றில் இரண்டு இருந்தால் அதை `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்’ என்கிறோம்.

    தீர்வுகள்?

    முறையற்ற மாதவிலக்கு, பருக்கள், குழந்தையின்மை என எந்தப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது தீர்வு. எடை அதிகரிக்க, அதிகரிக்க, ஹார்மோன் தொந்தரவுகள் தீவிரமாகும். அதனால் சினைப்பைகளின் செயல்திறன் பாதிக்கப்படும். பிசிஓடி உள்ளவர்களுக்கு மிக எளிதில் எடை அதிகரிக்கும். எனவே, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வீட்டுவேலைகளைச் செய்வது, சாக்லேட், இனிப்பு போன்ற அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பது எனத் தீவிர முயற்சிகளில் இறங்க வேண்டும்.

    பிசிஓடி இருந்தால் கர்ப்பம் தரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். குழந்தையின்மைக்கான பிரத்யேக சிகிச்சையிலும் எடைக் குறைப்புதான் பிரதானமாக இருக்கும். பிறகு கருமுட்டை உருவாக மாத்திரைகள் தரப்படும். அவை உதவாதபட்சத்தில் ஊசிகள் போடவேண்டியிருக்கும். அதிலும் முட்டை வளர்ச்சி இல்லாவிட்டால் லேப்ராஸ்கோப்பி செய்ய வேண்டும். கடைசித் தீர்வாக ஐவிஎஃப் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மற்றபடி பிசிஓடி பிரச்சனையும் சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். முற்றிலும் குணப்படுத்த முடியாது. கட்டுப்பாட்டில் மட்டுமே வைக்க முடியும்.

    மெனோபாஸை நெருங்கும்போது பிசிஓடி பிரச்சனையின் அறிகுறிகள் குறையத் தொடங்கும். மெனோபாஸை நெருங்கும்போது சிலருக்கு அதீத ரத்தப்போக்கு இருக்கும். அவர்களுக்கு டி அண்டு சி செய்து புற்றுநோய் அபாயம் ஏதுமிருக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    டைப் 2 டயாபடிஸ், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவற்றுக்கும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

    சரியான எடையைப் பராமரிக்க வேண்டும். பிசிஓடி இருக்கும் சிலர் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மூலம் எடையைக் குறைத்து விடுவதால் கர்ப்பம் தரித்துவிடுவார்கள். அதே நபர் மீண்டும் எடை அதிகரித்தால் மறுபடி மாதவிலக்கு சுழற்சி முறைதவறிப் போகும்.
    உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
    உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது. உடல் பருமன் அதிகமாவதால் கருமுட்டைகளின் உற்பத்தி திறன் பாதிப்பு, வளர்வதில் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் சுரப்பில் மாறுபாடு, கருமுட்டை வளர்ச்சி, முதிர்ச்சி, வெளியாகும் திறன், கருவாக்கும் திறன் ஆகியவை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

    உடல் பருமன் அதிகமாவதால் கரு உருவாகும் போது ஹார்மோன் குறைகள் ஏற்பட்டு, அபார்ஷன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மேலும் கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்பு பலமடங்கு அதிகரித்து அதனால் ஏற்படும் பின்விளைவுகளான கருவில் குறைபாடு, கரு வளரும் போது கருவின் இதயம், மூளை, நரம்பு மண்டலம், சிறுநீரகம் மற்றும் கை, கால்களில் குறைபாடுகள் போன்றவை கருவிற்கு ஏற்படுவதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

    உடல் பருமன் அதிகரிப்பதால் திடீரென்று குழந்தை கருவிலே இறப்பது கூட ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் உப்பு சத்து மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பது இதனால் ஏற்படும் பின்விளைவுகளும் அதிகமாகலாம். இரத்த அழுத்தம் அதிகமாவதால் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம், வயிற்றிலேயே குழந்தை இறந்து போதல், தாய்க்கு நஞ்சு பிரிதல், வலிப்பு நோய் மற்றும் உயிருக்கு ஆபத்தான பின்விளைவுகளும் ஏற்படலாம்.

    உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.
    உடல்பருமன் உள்ள பெண்களின் கருவுறுதலை பாதிக்கும் காரணிகளாக, அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள், முறையற்ற உணவு பழக்கங்கள், உடல் பருமன், திருமண வயது, மன அழுத்தம் போன்ற பலவற்றை கூறலாம். உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    உடல் பருமன் அதிகமாவதால் கருமுட்டைகளின் உற்பத்தி திறன் பாதிப்பு, வளர்வதில் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் சுரப்பில் மாறுபாடு, கருமுட்டை வளர்ச்சி, முதிர்ச்சி, வெளியாகும் திறன், கருவாக்கும் திறன் ஆகியவை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் அதிகரிப்பதால் செயற்கை முறையில் (IVF) கருத்தரிக்கும் பெண்களுக்கு குறைந்த சதவீதமே கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.

    உடல் பருமன் அதிகம் உள்ள ஆண்களில் கருவாக்க தன்மையினை தீர்மானிக்கும் ஹார்மோன்களான “டெஸ்ட்டோஸ்டீரோன்” மற்றும் “கோனடொட்ரோபின்” போன்றவற்றின் அளவுகள் குறைவாகவும் ஈஸ்ட்ரோஜெனின் அளவு அதிகமாகவும் இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமன் என்பது “பாடி மாஸ் இன்டெக்ஸ்” (BMI) எனும் ஒரு அளவுகோலால் அளவிடப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எடுத்துள்ள ஆய்வின்படி “இந்தியாவில் மட்டும் 4 கோடி பேருக்கு உடல் பருமன் பிரச்சனை உள்ளதாகவும் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டு 2 மடங்காக அதிகரிக்கும்” என்றும் எச்சரிக்கிறது.

    உடல் பருமன் அதிகமாக உள்ள ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு உருவமைப்பு, உருசிதைவு, டி.என்.ஏ  சிதைவு, உயிரோட்டம் அனைத்தும் ஆண்கள் குழந்தையின்மையை அதிகரிக்கிறது. உடல் பருமன்  அதிகரிப்பதனால் விந்துப்பையில் கொழுப்பு அதிகமாகி அதனால் உஷ்ணநிலை அதிகரித்து விந்தணு உற்பத்தி திறன், உயிரோட்டம் ஆகியவை பாதிக்கப்படுகிறது. மேலும் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு அதனாலும் விந்தணு உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது. இதை ஐரோப்பிய ஆய்வுகள் மற்றும் 2008 - ல் இந்தியாவில் செய்த ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
    கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன.
    ஆண்மையும் பெண்மையும் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. அதன் முதல் அறிகுறியே குழந்தையின்மை தான். கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலும் உடலுறவு கொண்டும் குழந்தை பிறக்கவில்லை என்றால் நிச்சயம் மருத்துவரை சந்திப்பது நல்லது. பெண்கள் இதுபோன்று தடையேதுமின்றி உறவு கொள்ளும்போதும் கர்ப்பமடையாமல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    ஆனால் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன.

    பெண்மைத்தன்மை குறைவதற்கான அறிகுறிகள்

    பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் இருந்து தான் இந்த பிரச்னை தொடங்கும்.  எப்போதும் போல் மாதவிலக்கு இருக்காது. ரத்தப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.

    முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உண்டாகும்.

    சில சமயங்களில் பல மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது. திடீரென நின்றுவிடும்.

    முதுகுவலியும் தாங்கமுடியாத வயிற்று வலியும் உண்டாகும்.

    ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் என்பதால் கருமுட்டை வளர்ச்சி குறைவாகவோ அல்லது வயிற்றில் கருமுட்டை தங்காமலோ இருக்கும்.
    ×