search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியங்கா"

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரான பிரியங்கா உத்தரபிரதேசத்தில் இன்று பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். #PriyankaGandhi
    ஜான்சி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கிய பாராளுமன்ற தேர்தல் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 5  கட்டங்களாக  ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டார்.



    அதன் பின்னர் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பிரியங்கா, ரோட்ஷோ நடத்தி மக்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை உத்தரபிரதேசத்தின்  ஜான்சி தொகுதியில் பிரம்மாண்டமான ரோட்ஷோ  நடத்தினார். வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள் மலர் தூவி, முழக்கங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

    பின்னர்  ஜலாவுன் தொகுதிக்கு உட்பட்ட குர்சராய் மற்றும் ஓராய் பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொண்டார். இதேப்போல் நாளை மதியம் 12.30 மணி அளவில் உன்னாவோ பகுதியில் ரோட்ஷோ நடத்தி, பின்னர் இஸ்ரவுளி மற்றும் தெவா ஷெரீப் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #PriyankaGandhi
    வயநாடு தொகுதியில் நாளை முதல் 2 நாட்களுக்கு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #PriyankaGandhi

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு வருகிற 21-ந் தேதியுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. அதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் இருப்பதால் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    வயநாடு தொகுதியில் மனுதாக்கல் செய்த பிறகு ராகுலும், பிரியங்காவும் சேர்ந்து ரோடு ஷோ நடத்தி னார்கள். அதன் பிறகு சமீபத்தில் ராகுல் மட்டும் வந்து ஒருநாள் சூறாவளி பிரசாரம் செய்தார்.

    அவர் மற்ற மாநிலங்களுக்கும் செல்ல வேண்டி இருப்பதால் மீண்டும் வயநாடு தொகுதிக்கு வர இயலவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு பதில் பிரியங்கா வயநாடு தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 2 நாள் தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

     


    பிரியங்கா இன்று உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு மே 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள அமேதி தொகுதியில் ராகுலை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இன்று பிற்பகல் அவர் கான்பூரில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.

    அந்த ரோடு ஷோ முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற இருக்கிறது. ரோடு ஷோ முடிந்ததும் பூல்பக் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு லக்னோ சென்று டெல்லிக்கு செல்கிறார்.

    மீண்டும் 23-ந்தேதி அமேதிக்கு செல்ல பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.

    வயநாடு தொகுதிக்கு பிரியங்கா நாளை (சனிக்கிழமை) வருகிறார். வயநாட்டில் அவர் பங்கேற்கும் பிரமாண்ட ரோடு ஷோ நடைபெற உள்ளது.

    அதன் பிறகு 2 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரியங்கா பேசுகிறார். நாளை இரவு அவர் வயநாடு தொகுதியில் தங்குகிறார். நாளை மறுநாளும் அவர் வயநாடு தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    வயநாடு தொகுதியில் 80 சதவீதம் பேர் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்த பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.

    அதன்பிறகு வயநாடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளையும் பிரியங்கா சந்தித்து பேச உள்ளார். 2-வது நாள் நிலம்பூர், மலப்புரம் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அன்று இரவு அவர் கேரளாவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டு செல்கிறார். #LokSabhaElections2019 #PriyankaGandhi

    ×