என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விக்கிரமராஜா"
திருச்சி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 11 லட்சம் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இந்த உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை மாற்ற வேண்டும். பிளாஸ்டிக்கில் எதை தடை செய்ய வேண்டும் என்பதை அரசு எங்களை அழைத்து பேச வேண்டும்.
ஒரு முறை கூட சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும். ஒரு முறை கூட சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை தடை செய்து விட்டு மறு சுழற்சி முறையை பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் தடைக்கு எதிராக வருகிற 23-ந்தேதி திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், மதுரை, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், சேலம், கடலூர், வேலூர், கோவை ஆகிய 12 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். வணிகர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திய ரதம் ஒன்று டெல்லியில் இருந்து தமிழகம் வந்து கொண்டிருக்கிறது. அந்த ரதம் வருகிற 23-ந்தேதி சென்னை வருகிறது. அன்றைய தினம் உண்ணாவிரதத்தில் டெல்லி பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.
மத்திய, மாநில அரசுகள் வணிகர்களுக்கு நெருக்கடியை தந்து கொண்டிருக்கின்றன.
பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். வருகிற 2019- ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்கள் மாற்று முடிவை எடுத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். பிளாஸ்டிக் தடை தொடர்பாக வணிகர்களை அழைத்துக் கொண்டு முதல்-அமைச்சர், அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். வியாபாரிகள், தொழிலாளர்களை பாதிக்காத வகையில் அரசின் நியாயமான முடிவுக்கு நாங்கள் துணை நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டத்தில் விக்கிரமராஜா சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் முத்துமாணிக்கம், துணை தலைவர் பசுபதி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #vikramaraja
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, உணவு பாதுகாப்பு, தரநீர்ணய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:-
வணிகர்களின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றுவது இல்லை. அந்நிய நிறுவனங்களான வால்மார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வணிகத்தில் ஈடுபடுகிறது. இதை தடுக்க வேண்டும்.
நாங்கள் கடந்த 4½ ஆண்டுகளில் 5 முறை மத்திய மந்திரிகளை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், தமிழக அமைச்சர்களையும் சந்தித்து மனு கொடுத்தேன். எங்கள் மனுக்கள் என்ன ஆனது? பத்திரமாக வைத்து இருக்கிறீர்களா? அல்லது குப்பை தொட்டியில் போட்டு விட்டீர்களா?
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. வணிகர்களின் ஓட்டு உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திடமா ஓட்டு கேட்பீர்கள்?
தமிழ்நாட்டில் ஒரு கோடி வணிக குடும்பங்கள் உள்ளன. நாங்கள் பணத்துக்கு ஓட்டுகளை விற்பதில்லை. அதற்கு வியாபாரிகள் துணை போகமாட்டார்கள். எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்று கேட்கிறோம். நாங்கள் எந்த கால கட்டத்திலும் அரசியல் பக்கம் செல்ல மாட்டோம்.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் 23-ந்தேதி உண்ணாவிரதம் இருப்போம். அடுத்த கட்டமாக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். அதன் பிறகும் அரசு அழைத்து பேசாவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர்கள் ஜோதிலிங்கம், மோகன், ஜெயபால், அமல்ராஜ், ஆதிகுருசாமி, சாமுவேல், ரவி, நிர்வாகிகள் வி.பி.மணி, ராஜ்குமார், அம்பத்தூர் ஹாஜிமுகமது, ஆர்.கே.எம்.துரைராஜன், அய்யார் பவன் அய்யாதுரை, தங்கதுரை, மனோகரன், ராஜேந்திரன், வேலுசாமி, ஆர்.எம்.பழனியப்பன், சுப்பிரமணியன், பால்ஆசீர், எட்வர்டு, வில்சன், முகமது செரீப், தேசிகன், சின்னவன், அடையாறு துரை, பாஸ்கர், கே.ஏ.மாரியப்பன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதுபோல் 12 மண்டலங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உணவு தர நிர்ணய பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை திருத்தக் கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் சார்பில் நாளை இந்தியா முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கடை அடைப்புக்கு பதிலாக கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் கருப்பு சட்டை அணிந்து மண்டலம் தோறும் நாளை வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்குகிறார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் முன்னிலை வகிக்கிறார்.
இதில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா விளக்கவுரை நிகழ்த்துகிறார். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா வி.பி.மணி, ராஜ்குமார், எட்வர்டு, நடராஜன், மகேஸ்வரன், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் மற்றும் எஸ்.சாமுவேல் உள்ளிட்ட மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்.
வணிகர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் இதன் அடுத்தகட்ட போராட்டமாக உண்ணாவிரத போராட்டம், சட்டமன்ற முற்றுகை போராட்டம், தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சில்லரை வணிகத்தை பாதிக்கும் வால்மார்ட்டை தடை செய்யக்கோரி செப்டம்பர் 28-ந்தேதி அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. போராட்டம் தொடர்பாக வருகிற 4-ந்தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வால்மார்ட்டை விட்டு விட்டால் 2 வருடத்தில் சில்லரை வர்த்தகமே இல்லாத நிலை ஏற்படும்.
தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இப்போதே பல மாவட்டங்களில் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து கடைகளுக்குள் புகுந்து சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. இது தொடர்பாக நாளை மறுநாள் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் வால்மார்ட்டுக்கு தடை விதித்ததோடு, அந்நிறுவனத்தின் கட்டிடத்திற்கு சீல் வைத்தார். அது போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி.யினால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு, அதன்பின்னர் வந்த ஜி.எஸ்.டி.யால் 40 சதவீத வியாபாரம் சரிந்துள்ளது. வரியை குறைத்தால்தான் வரி ஏய்ப்பு குறையும். அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்ததில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் துணி, பேப்பர் பைகள் ஆகியவற்றிற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பூதலூர்:
பூதலூரில் அனைத்து வணிகர் சங்க 19-ம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றுவிழா, உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா இணைந்த முப்பெரும் விழா தலைவர் சண்முகராஜ் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சங்க கொடியேற்றி, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், தேசிய முதன்மை செயலாளருமான ஏ.எம்.விக்கிரமராஜா பேசும் போது கூறியதாவது:-
தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தால் வணிகர்களுக்கு ரூ 3 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வால்மார்ட் நிறுவனம் சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்துவிடும். இந்த நிறுவனத்தை வரவிடாமல் தடுப்பது நம் கடமை.
வணிகர்களை பாதிக்கும் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை ,சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது. ஆகியவற்றை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகிற 23,24,25 தேதிகளில் தேசிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தின் சார்பில் அடுத்த 24-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டதில் தமிழகத்தில் இருந்து ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளோம். மேலும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக அரசியல்கட்சிகளுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சங்கரன் கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்களில் வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, குறு வியாபாரிகளை பாதிக்கும் வால்மார்ட் நிறுவனத்தை அனுமதிக்கக்கூடாது.
கடந்த 2012-ம் ஆண்டு சென்னையில் வால்மார்ட் நிறுவனம் தனது கிளையை திறக்க முயற்சி செய்தது. அப்போது வணிகர் சங்கங்களின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அன்றைய முதல்அமைச்சர் ஜெயலலிதா வால்மார்ட் நிறுவனத்திற்கு தடை விதித்து, அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தார்.
தற்போது வேறு பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் கால் ஊன்ற வால்மார்ட் நிறுவனம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து டெல்லியில் அடுத்த மாதம் (ஜூலை) 24ந்தேதி பெரிய அளவில் கண்டன பேரணி நடத்த உள்ளோம். ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன்கோவில் நகரில் பாரம்பரிய திருவிழா ஆடித்தவசு திருவிழாவாகும். திருவிழா காலங்களில் இரவில் கூடுதல் நேரம் வியாபாரிகள் கடைகள் நடத்த அனுமதி கொடுக்க வேண்டும். அதேபோல் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட நேரங்களில் கடைகளை அடைக்க வியாபாரிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. தொடர்ந்து வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்பது விதியாகும்.
ஆனால் இப்போது பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியதன் மூலம் அதில் உள்ள 1 கோடி வாடிக்கையாளர்களுக்கும் வால்மார்ட் பொருட்களை விற்பனை செய்ய வழி வகை ஏற்பட்டுள்ளது. இது சிறுகடைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் தமிழகத்தில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் கடுமையாக பாதிக்கப்படும். ஒட்டு மொத்தமாக சிறு வணிகர்களை அழித்து விடும்.
காவிரி வறண்டதால் விவசாயிகள் தற்கொலை செய்வது போல் கடைகளில் வியாபாரம் இல்லாமல் வணிகர்கள் தற்கொலை செய்யும் அவல நிலை உருவாகும். மத்திய அரசின் தவறான அணுகுமுறை காரணமாக தமிழகத்தில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகும்.
வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் உலக அளவில் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவதால் இந்தியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட், மால்கள், காய்கறி மார்க்கெட், மளிகை கடை, மருந்து கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபார நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்படும். இதனால் லட்சக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஆனால் இதை மறைப்பதற்காக ஆன்லைன் வியாபாரம் மூலம் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அந்நிறுவனம் சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.
தமிழ்நாட்டில் 21 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். அவர்களை சார்ந்து 1½ கோடி குடும்பத்தினர் உள்ளனர். இவர்களை காப்பது அரசின் கடமையாகும்.
எனவே வால்மார்ட் ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவதை அரசு தடை செய்ய வேண்டும்.
இந்திய வணிகர்களை காப்பாற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இதுவரை கண்டிராத அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் வி.பி.எம். ஸ்டோர்ஸ் நடத்தும் மொத்த வியாபாரியான வி.பி.மணி கூறியதாவது:-
எங்கள் கடையில் அழகு சாதன பொருட்கள், குளிர் பானங்கள், பேன்சி பொருட்கள், எழுது பொருட்கள், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மொத்த விற்பனையில் கொடுக்கிறோம்.
பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வியாபாரத்தில் உள்ளதால் எங்கள் கடைகளில் வியாபாரம் பெருமளவு குறைந்துவிட்டது.
இப்போது வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. இது உள்ளூர் கடை விற்பனையை வெகுவாக பாதிக்கும்.
இந்திய பொருளாதார சந்தையை கைப்பற்ற நேரடியாக சில்லறை விற்பனைக்குள் வால்மார்ட் நிறுவனம் நுழைந்துவிட்டது. இதை நாங்கள் உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.
இந்தியாவில் ஒரு பொருள் உற்பத்தியானால், அது மாநில வினியோகஸ்தர், மண்டல விநியோகஸ்தர், ஏரியா விநியோகஸ்தர், மொத்த வியாபாரி, ஆகியோர் கைமாறி, சில்லரை கடைகளுக்கு வரும். அங்கிருந்து பொது மக்களுக்கு பொருட்கள் கிடைக்கும்.
ஆனால் வால்மார்ட் நிறுவனம், உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பொருட்களை வாங்கி ஆன்லைன் மூலம் பொது மக்களுக்கு பொருட்களை விற்க உள்ளனர்.
ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை இழுப்பார்கள். இதன் பாதிப்பால் கடைகளில் வியாபாரம் குறைந்து விடும். நாளடைவில் கடைகளை இழுத்து மூடும் நிலை உருவாகும்.
சில்லறை வியாபாரிகளை நசுக்கிய பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது பொருட்களுக்கான விலையை அதிகமாக்கி விடுவார்கள். அதனால்தான் எதிர்க்கிறோம். எனவே ஆன்லைன் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு வி.பி. மணி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்