search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்துறை"

    குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இடத்தில் நடந்த அதிரடி சோதனையில் 66 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Gujarat #FakeCurrency
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பது உறுதி செய்யப்பட்டது.

    அந்த இடத்தில் இருந்து 66 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பு கொண்ட புதிய இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்த போலீசார் ஜாகித் ஷேக் என்பவரை கைது செய்துள்ளனர்.

    ஜாகித் ஷேக் 10 வருடங்களுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர் என்பதும், கடந்த 1 மாதங்களாக கள்ள நோட்டுகளை அச்சடித்து பயன்படுத்தி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #Gujarat #FakeCurrency
    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. #Rewari #RewariRapeCase
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி,  கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை இன்று நேரில் சந்தித்த எஸ்.பி. நஷ்னீன் பாசின், பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை தேரி வருவதாகவும், அவரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாகவும் உறுதி அளித்த எஸ்.பி., குற்றவாளி குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். #Rewari #RewariRapeCase
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமியை 2 நபர்கள் கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். #UttarPradesh
    உத்தரப்பிரதேசம்:

    இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வரும் நிலையிலும் குற்றங்கள் குறையவில்லை என்பதாக தெரிகிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம், மிரான்பூர் பகுதியில் நேற்று காலை கடைக்கு சென்ற 14 வயது சிறுமி 2 நபர்களால் மோட்டார் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டார். ஒரு ரகசிய இடத்துக்கு அந்த சிறுமியை கொண்டு சென்ற அந்த இருவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பிறகு அவர்கள் இருவரும் அந்த பெண்ணை மாலை விடுவித்தனர்.

    வீடு திரும்பிய சிறுமி நடந்தவற்றை கூற அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து தஜிம், மற்றும் ஃபிரோஸ் ஆகிய இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்த இருவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #UttarPradesh
    சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்தும், குற்றத்தடுப்பு சம்பந்தமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் தயாரிக்கப்பட்டது.

    இந்த குறும்படத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நடித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு குறும்படத்திற்கான குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டு விழிப்புணர்வு குறுந்தகடை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் 1,000 கி.மீ. தூரம் உள்ளது. வடக்கு, தென் மாவட்டங்களை இணைக்கக்கூடிய வகையில் உள்ள விழுப்புரம் வழியாகத் தான் பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றன. மாதத்திற்கு சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விழுப்புரம் மாவட்டத்தை கடந்து செல்கின்றன. இதனாலேயே இங்கு சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது.

    மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 915 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து ‘பேரிகார்டு’ வைத்தல், அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களில் போலீசார் பணியில் இருந்து மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க செய்தல், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தி பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இதன் விளைவாக கடந்த 2017-ம் ஆண்டில் விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 834 ஆக குறைந்துள்ளது. விபத்துகளை தடுக்க பொதுமக்களிடம் போலீசார், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முதலில் போலீசார் வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட், ஷீட்பெல்ட் அணிந்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். போலீசாரை பார்த்து, மக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பார்கள். விபத்துகளை தடுக்க காவல்துறையினரால் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அந்தளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராஜன், ராபின்சன், சுரேஷ்பாபு, அப்பாண்டைராஜ், குறும்பட தயாரிப்பாளர் வெள்ளையன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ரஷ்யாவில் தனது காதலியை கொடூரமாக கொலை செய்து, அவளது மூளையை வறுத்து தின்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். #Russia
    மாஸ்கோ:

    ரஷ்யாவில் டிமிரிட்டி லிசின் என்ற 21 வயது இளைஞரும், ஒலாகா புடுனோவா என்ற 45 வயது பெண்ணும் காதலித்து வருகின்றனர். சீரியல் கில்லர்கள் குறித்து அதிக ஆர்வமுடைய டிமிரிட்டி லிசன், மனிதர்களை கொலை செய்து, உடலை தின்னும் சடங்குகள் குறித்தும் அதிகமாக வாசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்.

    இந்நிலையில், தனது காதலியின் வீட்டுக்கு சென்ற டிமிரிட்டி, மது பாட்டிலால் அவளது தலையில் 25 முறை கொடூரமாக தாக்கி அவரை கொலை செய்துள்ளான். அதனைத் தொடர்ந்து அவளது மூளையை எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளான்.

    இதையடுத்து, ஒலாகா புடுனோவாவின் கொலை தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் சைக்கோ கொலைகாரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தனது காதலியை கொடூரமாக கொலை செய்து மூளையை வறுத்து தின்ற சைக்கோ கில்லர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #Russia
    சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண் உட்பட பயணிகள் கீழே இறங்குவதற்கு காவலர்கள் படிக்கட்டுகளாக மாறி உதவி செய்த நிகழ்வு பாராட்டுகளை பெற்றுவருகிறது. #ElectricTrain #TNPolice
    சென்னை:

    தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரெயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது.  இதனையடுத்து, பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில், படிகள் உயரமாக இருந்ததால், கர்ப்பிணி பெண் அமுதா மற்றும் முதியவர்கள் சிலர் கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்து வந்தனர்.

    இதையடுத்து, தமிழக காவல் துறையை சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர், அமுதா கீழே இறங்குவதற்காக ரெயில் பெட்டி வாசலில் இரு காவலர்களும் படிக்கட்டு போல குனிந்து கொண்டு, தங்கள் முதுகின் மீது அவரை இறங்குமாறு செய்தனர்.

    காவலர்களின் இந்த மனித நேயமிக்க செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. #TNPolice #ElectricTrain
    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 3 கோடி மதிப்பிலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Pune #DemonetisedCurrency
    மும்பை:

    மோடி தலைமையிலான மத்திய அரசு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதுடன், அதற்காக சிறிது கால அவகாசமும் வழங்கியது. கள்ள நோட்டுகளையும், கருப்பு பண பதுக்கலையும் தடுக்கவே இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், புனோ காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் 5 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.

    அவர்களிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #Pune #DemonetisedCurrency
    சாலையோரமாக நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கைகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் ரோடு மற்றும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் சாலையோரமாக அணி வகுத்து நிற்பார்கள்.

    அப்போது அந்த வழியாக கார், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை அவர்கள் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு இருந்து வந்தது.

    இதனை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து இணை ஆணையர் அன்பு மேற்பார்வையில் திருநங்கைகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    சூளைமேடு பஜனை கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் செல்வநாகரத்தினம், நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் சுமார் 100 திருநங்கைகள் கலந்து கொண்டனர். அப்போது சாலையோரமாக நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதற்கு மாற்றாக உங்களுக்கு வேறு வேலை வாங்கி தருகிறோம் என்று திருநங்கைகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.

    அழகு கலை நிபுணராக, ஓட்டல் வரவேற்பாளராக வேலை வாங்கி தருவதற்கு தயாராக இருப்பதாக துணை கமி‌ஷனர் செல்வ நாகரத்தினம் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட திருநங்கைகள் ஒன்று கூடி பேசி முடிவெடுப்பதாக கூறினர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகளில் பலர் என்ஜினீயரிங் முடித்திருந்தனர். எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., பி.எஸ்.சி., டிப்ளமோ படிப்புகளை முடித்துள்ளனர். இவர்களில் பலர் நிறுவனங்களில் வேலையும் செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக 15 நாள் கழித்து மீண்டும் ஒரு கூட்டம் நடத்துவதற்கும் போலீசார் முடிவு செய்துள்ளனர். #Tamilnews
    கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கோரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் மூன்றாவது பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கணவருக்கு தெரியாமல் செய்த தவறுக்கு மனம் வருந்தி பாவ மன்னிப்பு கேட்பதற்காக கோட்டயம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பாவமன்னிப்பு கேட்பதற்காக நடந்தவற்றை கூற, அதனை பதிவு செய்த பாதிரியார், அதனை வைத்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

    அவர் மட்டுமன்றி, இன்னும் 4 பாதிரியார்களும் இதேபோன்று அந்த பெண்ணை பயன்படுத்தியுள்ளனர். அவரது கணவர் மூலம் வெளியான இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து, கேரள குற்றப்பிரிவு போலீசார் 4 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில் 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜான்சன் மேத்யூ எனும் பாதிரியார் பதனம்திட்டா மாவட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, பாதிரியார்களின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  #Kerala
    பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கண்டித்து, வக்கில் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வக்கீல் சங்க உறுப்பினர் எஸ். மோகன், தனது மனுதாரருடன் பெரம்பலூர் காவல் நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற போது, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ் பெக்டர் மோனிகா ஆகியோர் வழக்கீலை தகராறு செய்து, காவல் நிலையத்திலிருந்து வெளியேற வேண்டுமென கூறினார்களாம். 

    இதேபோல, வழக்கு சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு செல்லும் வழக்கறிஞர்களை ஒருமையில் பேசுவதாக கூறப்படுகிறது. 
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது துறை சார்ந்த  நடவடிக்கைஎடுக்க வேண்டு மென வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கடந்த ஜுன்-18 முதல் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 8 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர் ராஜ் முன்னிலை வகித்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ் பெக்டரை பணியிடை  மாற்றம் செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. #ThoothukudiFiring #PoliceFiringReport
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.



    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை தொடங்கியதும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

    தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளனர் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இதுவரை நடந்த 7 பேரின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். #ThoothukudiFiring #PoliceFiringReport
    வங்காள தேசத்தில் அதிகரித்து வரும் போதை மருந்து உபயோகத்தை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கையில் இதுவரை 105 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Bangladesh #Drugencounter
    டாக்கா:

    வங்காளதேசத்தில் ‘யாபா’ எனப்படும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அண்டை நாடான மியான்மரில் இருந்து இந்த போதை மருந்துகள் கடத்தப்பட்டு, விற்கப்படுகிறது. போதை மருந்து விற்பனையாளர்கள் அதிகம் இளைஞர்களையே குறிவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வகை போதை மருந்துகளை ஒழிக்க அந்நாட்டு அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான போதை மருந்து வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த போதை மாபியாவை ஒடுக்க சிறப்பு அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த 14 நாட்களில் போதை மருந்து வியாபாரிகள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாள் இரவில் நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் சுமார் 12 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், போதை மருந்துகளை தடுப்பதற்கான நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த என்கவுண்டர்களுக்கு வங்காள தேச மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Bangladesh #Drugencounter
     
    ×