search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்துறை"

    பாகிஸ்தானில் கில்ஜித் பல்டிஸ்தான் தொடர்பான புதிய உத்தரவை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய பேரணியை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளனர். #GilgitBaltistan #protestagainstgovernment
    இஸ்லாமாபாத்:

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித் -பல்டிஸ்தான் பிராந்தியத்தை பாகிஸ்தான் தனது ஐந்தாவது மாகாணமாக அறிவிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பிராந்தியம் கடந்த 2009-ம் ஆண்டு தனி சுயாட்சி மற்றும் அதிகாரம் கொண்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் பிற பகுதிகளைப் போன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம், நிதி உதவி வழங்க பிரதமர் அப்பாஸி மே 21-ம் தேதி ஆணையிட்டார்.

    இந்த பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் இந்த உத்தரவு இருப்பதாக அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், அப்பகுதி மக்களும், அரசியல் தலைவர்களும் சட்டமன்றத்தை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். இந்த பேரணியை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தப்பட்டது. மேலும், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொதுமக்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதமர் அறிவித்துள்ள புதிய உத்தரவை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்த உள்ளதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர். #GilgitBaltistan #protestagainstgovernment
    வங்காளதேசத்தில் போதை பொருட்கள் வியாபாரம் செய்யும் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய என்கவுண்டரில் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். #Bangladeshdrugwar
    தாகா:

    வங்காளதேசத்தில் ‘யாபா’ எனப்படும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவ்வகை போதை மருந்துகளை ஒழிக்க அந்நாட்டு அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான போதை மருந்து வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், வங்காளதேச போலீசார் போதை மருந்து வியாபாரிகள் 11 பேரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதை மருந்து வியாபாரிகள் 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் சம்பவங்கள் அனைத்தும் போதை மருந்துகளுக்கு எதிரான போர் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரிஜ்வி அகமது, ‘போலீசார் நடத்திய இந்த என்கவுண்டரில் எங்கள் கட்சியின் மாணவரணியைச் சேர்ந்த அஜ்மத் உசைன் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

    போதை மருந்துக்கு எதிரான போரை வரவேற்பதாகவும், ஆனால் இதுபோன்ற என்கவுண்டர் சம்பவங்கள் ஆளும் கட்சிக்கு எதிரானவர்களை கொல்ல பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    போதை மருந்து விற்பனை மிகப்பெரிய குற்றமாகும், ஆனால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் நூர்கான் தெரிவித்துள்ளார்.

    கடந்த 3 மாதங்களில் 9 மில்லியன் யாபா போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Bangladeshdrugwar
    பண மோசடி வழக்கில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 5 இடங்களில் காவல்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். #Malaysia #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டாலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால் இதனை மறுத்துள்ள நஜீப்பின் வழக்கறிஞர் ஹர்பால் சிங், ‘ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘கைப்பை போன்ற சில பொருட்கள் காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன, ஆனால் அதுகுறித்து அச்சப்பட ஏதுமில்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.

    நஜீப் ரசாக் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்பால் சிங், ‘அதற்கான அவசியம் இல்லை, நஜீப்பும் அவரது குடும்பத்தினரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்’ என கூறியுள்ளார். #Malaysia #NajibRazak #moneylaunderingcases
    குழந்தை கடத்தல் சம்பவத்தில் சட்டம்- ஒழுங்கை போலீசார் சரியான முறையில் கையாளவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை மலர் நிருபருக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    தமிழகத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெறுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதற்காக தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது. யூகத்தின் பேரில் அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்துவதும் சரியானது அல்ல.

    சட்டத்தை யாரும் தன் கையில் எடுக்க கூடாது அது தவறு. எதனால் இது நடைபெறுகிறது என்றால் போலீஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் சட்டத்தை கையில் எடுப்பதாக கருத வேண்டி உள்ளது.

    மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரும் அளவுக்கு போலீஸ் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.

    வட மாநிலத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம். அவர்களுக்கு மொழி பிரச்சனை இருக்கலாம். அதனால் காரணம் இன்றி தாக்கக் கூடாது.

    காவல் துறை மீதும், அரசு மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கின்றனர். இதை தவிர்க்க வட மாநிலத்தவர் விவகாரத்தில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இந்த பிரச்சனையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசுக்கு உள்ளது. அதை முறையாக கையாளவில்லை.

    குழந்தை கடத்தல் பீதியில் படுகொலை செய்யப்பட்ட மூதாட்டி

    வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி இருப்பவர்கள் பற்றிய முழு விவரமும் போலீசாரிடம் இருக்க வேண்டும். என்ன வேலைக்காக வந்துள்ளனர். எங்கு தங்கி உள்ளனர். அவர்களது பின்னணி போன்ற முழுமையான தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் கையாள முடியும்.

    ஒருசில விரும்பத்தகாத சம்பவங்களில் வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டதையொட்டி தாக்குதல் சம்பவம் நடைபெறுவதாக கூறினாலும் அதற்காக சட்டத்தை எல்லோரும் கையில் எடுக்க கூடாது.

    எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வெளிமாநிலத்தில் சென்று தேர்வு எழுதிய பிரச்சனை குறித்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேட்டில் மத்திய அரசை சாடி கடுமையான விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசுக்கு உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    புதுடெல்லியில் காஷ்மீரை சேர்ந்த 5 பேரை பலர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #kashmirpeopleattacked
    புதுடெல்லி:

    புதுடெல்லியின் சன்லைட் காலணி என்ற பகுதியில் வசிக்கும் காஷ்மீரை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேரை நேற்றிரவு அப்பகுதியிலிருந்த மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

    இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் பேசுகையில், ‘நாங்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதாலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், எங்களை தாக்கியவர்கள் எனது உறவினர்களையும் தாக்கியதுடன் எனது சகோதரியையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

    அவர்கள் தாக்கும்போது 'காஷ்மீர் பயங்கரவாதிகளே வெளியேறுங்கள்' என்று கூறியபடி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அச்சத்துடனேயே வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #kashmirpeopleattacked
    ×