search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திப்பு"

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதனை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தொடங்கிவைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 1994-97-ம் ஆண்டில் வனிகவியல்துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் 300 மரக்கன்றுகளை நட்டனர். இதனை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தொடங்கிவைத்தார்.

    முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டதுடன் பேராசிரியர்களின் கல்லூரிக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றவும் உறுதி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் பி.ஜி. குரூப் ஆப் சிங்கப்பூர், ஜே.பி.குரூப் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பாலமுருகன், ஆசிரியர் பாண்டியராஜன், நடேஷ், ராமசந்திரன், ராஜசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்தித்து பள்ளி அனுபவங்களையும், குடும்ப வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
    • இந்த நிகழ்வில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி தற்போது சிவகங்கை வட்டாட்சியராகவும், திருச்சியில் மருத்துவராக உள்ள சுஜா ஜெயமலர் உள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1982-89 வரை மாணவிகளாக படித்தவர்கள் ஒன்று கூடினர். இதை கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளி அனுபவங்களையும், குடும்ப வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

    இதில் பலர் அரசு அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிகழ்வை பள்ளியில் படித்த முன்னாள் மாணவியும் தற்போது சிவகங்கை வட்டாட்சியராகவும் உள்ள ஜெயந்தி, திருச்சியில் மருத்துவராக உள்ள சுஜா ஜெயமலர், மதுரை ரெய்சல் செல்வி, குழந்தைராணி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

    • 1990ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மேசை மற்றும் இருக்கைகளை தான் படித்த பள்ளிகள் மற்றும் தனது முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரன் செயலராகவுள்ள மயிலாடுதுறை ஸ்ரீ குருஞா னசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வைத்திஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளிக்கும் வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் 1990ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரிய ர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தருமையாதினம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமா ச்சாரிய சுவாமிகள் ஆசிர்வாதத்துடன் பள்ளியில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பள்ளியின் செயலர், தலைமை ஆசிரியர் முன்னாள், இந்நாள் ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் செந்தில்ராஜ்குமார் அனைவரையும் வரவே–ற்றார்.

    முன்னாள் ஆசிரி–யர்கள் அனைவருக்கும் மாணவர்களால்நினைவு ப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள். மேலும் ஆசிரியர்கள் முன்னாள் கல்லூரி முதல்வரும், ஆதீனத்தின் முன்னாள் பள்ளி கல்லூரி நிர்வாக செயலாளருமான திருநாவுக்கரசு, அகிலாண்டேஸ்வரி, ராஜாமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவனத்தின் நிதித்துறை பொதுமேலாளர் செந்தில், ராஜ்குமார் ஆகியோர் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மேசை மற்றும் இருக்கைகளை தான் படித்த பள்ளிகள் மற்றும் தனது முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரன் செயலராகவுள்ள மயிலாடுதுறை ஸ்ரீ குருஞா னசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வைத்திஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளிக்கும் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் முன்னாள் மாணவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • அனைத்து விதமான அரிசி உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பொருள்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கூடுதல் விலை நடுத்தரக் குடும்பத்தை மட்டும் இல்லாமல், தினசரி வேலைக்குச் செல்லும் அடித்தட்டு மக்களையும் பெருமளவில் பாதிக்கக் கூடியது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியைச் சார்ந்த தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ஜி.எஸ்டி. வரியிலிருந்து விலக்கு அளிப்பதற்கு உள்ள சாத்தியக் கூறுகள் பற்றி விவாதித்தனர்.

    கடந்த ஜூன் 28, 29-ந் தேதிகளில் பஞ்சாப் மாநிலம், சண்டிகர் நகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி. கவுன்சில் கூட்டத்தில் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பொருள்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை பதிவு செய்த பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி இருந்த சூழ்நிலையில், தற்போது பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால், ஒரு கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரக் கூடும். அதாவது, ரூ.1,000-க்கு விற்கப்படும் 25 கிலோ கொண்ட அரிசிப் பை, இனிமேல் ரூ.1,050 ஆக விலை உயரக் கூடும். இந்தக் கூடுதல் விலை நடுத்தரக் குடும்பத்தை மட்டும் இல்லாமல், தினசரி வேலைக்குச் செல்லும் அடித்தட்டு மக்களையும் பெருமளவில் பாதிக்கக் கூடியது.

    எந்த அரசும் மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு இதுவரை வரி அறிவிப்பு செய்ததில்லை. எனவே, மக்களைப் பாதிக்கும் இந்த 5 சதவீத வரியை மத்திய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் பெரும் பாதிப்பினை பற்றியும், தமிழக நிதித்துறை அமைச்சரைச் சந்தித்து கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், திமுக. சுற்றுசூழல் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு தெரிவித்தனர்.

    இதையடுத்து நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைச் சந்தித்து சுமார் 30 நிமிடம் உரையாடி அரிசி மீதான ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிப்பதற்கு உரியச் சாத்தியக்கூறுகள் பற்றியும் விவாதித்தார். வருகின்ற மத்திய அரசின் ஜிஎஸ்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் நிச்சயமாக மத்திய நிதியமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.

    • பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது.
    • விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    பெருந்துறை:

    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஆண்டு தோறும் முன்னாள் மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

    அந்த அடிப்படையில் 1997-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களுக்கான வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் பலர் உலகில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு உயர் பணிகளில் வேலை செய்து கொண்டி ருக்கின்றனர். அவர்களில் சிலர் அரசு உயர் அதிகாரி களாகவும் இருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

    அனைவரும் வேலை வாய்ப்பு, இன்டர்ன்ஷிப் மற்றும் பாடங்களை உருவாக்குதல் போன்ற வற்றில் இந்த கல்லூரிக்கு உதவுவதாக உறுதி அளித்தனர்.

    இந்த சந்திப்பின் முக்கிய நிகழ்வாக கல்வியை மேலும் முன்னேற்று வதற்காகவும், தொழில் நுட்ப தேவையையும், கல்லூரியையும் இணை ப்பதற்கான வழிகளையும் ஆலோசித்தனர். மேலும் இவ்விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப க்கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பி.சி.பழனிசாமி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதா னந்தன், கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஏ.எம்.நடராஜன், முதல்வர் வீ.பாலுசாமி, முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    • 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அசோகன், முனியாண்டி, சேர்முக பாண்டியன் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் உள்ளது சத்திரிய இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி. இங்கு 11-ம் வகுப்பு (பழைய எஸ்.எஸ்.எல்.சி.) படித்த மாணவ - மாணவிகள் மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள குமார் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துகொண்டனர்.

    அசோகன், முனியாண்டி, சேர்முக பாண்டியன் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்தனர். அவர்களில் தொழிலதிபர்கள், சிறு, பெரு வணிகர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், இல்லத்தரசிகள் என பலவாறாக உள்ளனர். ஆசிரியர்களாக, மத்திய-மாநில அரசு பணியாளர்களாக, ஓய்வுபெற்றவர்களும் அடங்குவர்.

    மறைந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பிறகு கூட்டம் தொடங்கியது. ராஜமாணிக்கம், முகமது காசிம்,இந்திரா ஆகியோர் தலைமை தாங்கினர். அசோகன் முன்னிலை வகித்தார். லியாகத் அலிகான் வரவேற்றார்.

    சேர்முக பாண்டியன் தொடக்க உரையாற்றுகையில், பள்ளி ஆசிரியர்கள் நல்ல கல்விக்கு அடித்தளமிட்டது மட்டுமின்றி அறம் சார்ந்த பழக்கங்களையும், நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தந்ததால் தான் வாழ்வில் முன்னேற முடிந்தது என்பதை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

    பள்ளியில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஒருவருக்கொருவர் பேசி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அரை நூற்றாண்டுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பின்போது உணர்வு பெருக்கில் நெகிழ்ந்தனர். தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்டு வியந்து பேசிக்கொண்டனர்.

    அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவது, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்குவது, வறுமையில் வாடும் மாணவிகளின் கல்விக்கு உதவுவது என்று கதிரேசன் கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இந்த சந்திப்புக்கு இடமும், உணவும் தந்த தொழில் அதிபர் ராஜமாணிக்கம், அவரது மனைவி அழகம்மாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஜெகதீசன் நன்றி கூறினார்.

    • ஓமலூர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
    • கடந்த 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்ெகாண்டனர்.

    ஓமலூர்:

    ஓமலூர் வேலசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கடந்த 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை படித்து முடித்த முன்னாள் மாணவர்கள், அவர்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், 1975-76, 1976-77-ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

    அவர்களில் பலரும் படித்த அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். அதேபோல பல்வேறு அரசு பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இந்தநிலையில், இவர்கள் தாங்களுக்கு பாடம் நடத்தி, தங்களை பண்புள்ளவர்களாக, அவர்களை போலவே சிறந்த ஆசிரியர்களாக மாற்றிய, அவர்களின் ஆசிரியர்களை அழைத்து வந்து மரியாதை செலுத்தினர்.

    இந்த விழாவில், பள்ளியின் நிர்வாக பணியில் இருந்தவர்களுக்கும் கல்வி போதித்த வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கும் சந்தன மாலை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் மரியாதை செய்தனர். மேலும் தங்களது பழைய நினைவுகளை நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டனர். பின்பு ஒன்றாக உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    • அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
    • மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி வாழ்த்து பெற்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1988-89, 1989-90 ஆகிய கல்வி ஆண்டில் படித்த அறிவியல் பிரிவு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அந்தியூர்-பவானி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு சால்வை அணி–வித்து அவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி வாழ்த்து பெற்றனர்.

    இதில் அந்தியூர், நாகலூர், செம்புளிச்சாபாளையம், பச்சாம்பாளையம், அண்ணா மடுவு, கந்தம்பாளையம், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கராபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து படித்த மாணவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் இருந்து வருகின்றார்கள்.

    அந்த மாணவர்கள் தங்களுடைய ஆசிரியருக்கு நினைவு பரிசினை வழங்கியதை பெற்று கொண்ட ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

    • வருகிற செப்டம்பர் 8, 9-ந் தேதிகளில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • முதல் 10 ஏற்றுமதியாளருக்கு, கட்டணத்தில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்,

    அதிக வாய்ப்புகள் நிறைந்த இத்தாலிய சந்தையை வசப்படுத்துவதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்( ஏ.இ.பி.சி.,) தொடர் முயற்சி மேற்கொண்டுவருகிறது. இத்தாலி நாட்டின் மிலன் நகரில் வர்த்தகர் - ஏற்றுமதியாளர் சந்திப்புக்கு ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி வருகிற செப்டம்பர் 8, 9-ந் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இத்தாலி நாட்டு வர்த்தகர்கள் பங்கேற்று ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வழங்குவதற்கான வர்த்தக விசாரணைகள் நடத்த உள்ளனர். இதில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. வரும் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கும் முதல் 10 ஏற்றுமதியாளருக்கு, கட்டணத்தில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0421 2232634, 99441 81001 என்கிற எண்களில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குமாரபாளையம் நகராட்சி தலைவருடன் மார்க்கெட் வியாபாரிகள் சந்தித்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுமான பணிகள் நடைபெற பூமி பூஜையும் போடப்பட்டது. பணிகள் துரிதமாக நடைபெற பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் விஜய்கண்ணன் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.

    இந்நிலையில் குமாரபாளையம் தினசரி மார்க்கெட் சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வெங்கிடு என்கிற வெங்கடேசன், செயலர் விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனை நேரில் சந்தித்து, மார்க்கெட் பழைய இடத்திலிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டில் மாற்றி அமைத்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.

    இதே போல் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் துரைசாமி, செயலர் தாமோதரன், பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நகராட்சி தலைவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    மேலும் விடுபட்ட பகுதியில் மின் இணைப்பு கொடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

    • சொத்தவிளை சிவராம் பீச் ஹவுசில் நடந்தது
    • முன்னாள் மாணவ, மாணவிகள் 30 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    என்.ஜி.ஓ.காலனி அருகே உள்ள சீயோன்புரம் எல். எம். எஸ். மேல்நிலைப் பள்ளியில் 1992 -1994 கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவர்களும், அவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் ஆசிரியர்கள், குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி "சுவடுகள் பதிப்போம்" என்று சொத்தவிளை சிவராம் பீச் ஹவுசில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் புவிராஜன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாணவர் சசிகுமார், மாணவி ரெஸா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். கலந்துரையாடலில் முன்னாள் மாணவ, மாணவிகள் 30 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு பாடம் நடத்திய முன்னாள் ஆசிரியர்கள் சார்லஸ் தேவசிகாமணி, சஜீவ பிரகாசதாஸ், புனிதவதி, ஷீலாஷியாம், வசந்தா அன்னபெல், கிரேஸ்லின் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து முன்னாள் மாணவ மாணவிகள் தங்களது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.விழாவில் சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது. பின்னர் ஆசிரியர்களுக்கும், மாண வர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவர்களுக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.முன்னாள் மாணவர் வழக்கறிஞர் ராஜேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் 25ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
     
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசி தீர்வுகாண 3-வது சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் 25ம் தேதி ரஷியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    ×