search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர்கள்"

    மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் உருவானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MaduraiCentralPrison
    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள்  சட்டைகளை அவிழ்த்து சிறையில் கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் மீது கைதிகள் கற்களை வீசினர். சிறை அருகே உள்ள சாலைகளில் கற்களை வீசியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiCentralPrison
    பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. #cellphoneusebanned #dgpoffice
    சென்னை

    சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி  மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு  பணியில் இருக்கும்போது,  காவலர்கள்  செல்போனை பயன்படுத்துவதால் பணியில் கவனக்குறைவு ஏற்படுகிறது.  அதுப்போல் காவலர்கள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.  வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், டிஜிபி அலுவலகம் ஒவ்வொரு  காவலருக்கும்  சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கபட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்போன் பயன்படுத்தலாம் என கூறப்பட்டு உள்ளது. #cellphoneusebanned #dgpoffice 
    ×