search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்து"

    அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடங்கியிருப்பதால், டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கும் தனது குழுவின் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். #Trump #DavosSummit
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் அதிபர்  டிரம்ப் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை.



    அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் சுமார் ஒரு மாத காலமாக, பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால் 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

    அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, வெள்ளை மாளிகையில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். ஆனால், இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தனது நிபந்தனைகள் ஏற்கப்படாததால் பாதியில் வெளியேறினார் டிரம்ப்.

    அரசுத் துறைகள் முடக்கம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், டாவோசில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதை டிரம்ப் ரத்து செய்தார். அவர் சார்பில் கருவூலத்துறை மந்திரி ஸ்டீவ் மினுச்சின் தலைமையில், வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, வர்த்தகத்துறை மந்திரி வில்பர் ரோஸ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு டாவோஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஆனால், கடைசி நேரத்தில் அமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தையும் டிரம்ப் ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசுத் துறைகள் முடக்கத்தினால் 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காத நிலை நீடிப்பதாலும், அவர்களுக்கு தனது அமைச்சரவை உறுப்பினர்களின் உதவி தேவைப்படுவதாலும் டாவோஸ் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்திருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

    முன்னதாக, பிரசல்ஸ், எகிப்து, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மேற்கொள்ளவிருந்த பயணத்தை டிரம்ப் நேற்று ரத்து செய்தார்.

    உலக பொருளாதார மன்ற மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #Trump #DavosSummit

    அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பதால் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதை டிரம்ப் தவிர்த்துள்ளார். #Trump #DavosSummit
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார்.

    அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.



    சமீபத்தில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு டிரம்ப் ஏற்பாடு செய்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தனது நிபந்தனைகள் ஏற்கப்படாததால் பாதியில் வெளியேறினார் டிரம்ப்.

    அரசுத் துறைகள் முடக்கம் நீடிக்கும் நிலையில், டாவோஸ் சுற்றுப்பயணத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளார். உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்காக டாவோஸ் செல்லும் மிகவும் முக்கியமான பயணத்தை ரத்து செய்திருப்பதாக டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #Trump #DavosSummit

    அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தையை தலீபான்கள் ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Taliban
    தோகா:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இதற்கு தலீபான்களும் சம்மதித்தனர். அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான்கள் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை சவுதி அரேபியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் தலீபான்களோ கத்தார் தலைநகர் தோகாவில்தான் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டது.

    அதன்படி இருதரப்புக்கும் இடையேயான 2 நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்க இருந்தது. ஆனால் தலீபான்கள் இதில் பங்கேற்க முடியாது எனக்கூறி அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டனர். அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான செயல் திட்டத்தில் தலீபான்களுக்கு உடன்பாடு இல்லாததால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அமைதி பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்க தலீபான்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 
    இடைத்தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டதால் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. #Thiruvarurbyelection #pongalcashprize
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவையடுத்து காலியாக இருந்த திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகள் இன்னும் முடியாததால் இந்த இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.



    இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் கமிஷன் இன்று காலை உத்தரவிட்டது.

    இதனால் அந்த தொகுதியில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளும் ரத்தாகி உள்ளது. முன்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் திருவாரூர் தொகுதி மக்களுக்கு பின்னர் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், தற்போது அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றிலிருந்து அளிக்கப்படவுள்ள பொங்கல் ரொக்கப்பரிசு திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கும் சேர்த்து வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. #Thiruvarurbyelection #pongalcashprize 
    அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை குறைக்கவும், ரத்து செய்யவும் சீன அரசு சம்மதித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Chinatariffs #UStariffs #ChinaUStariffs
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரியையும், பிறநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் பலமடங்காக உயர்த்தி உத்தரவிட்டார்.
     
    இந்த உத்தரவால் சீனா- அமெரிக்கா இடையில் வரிவிதிப்பு வர்த்தகப் போர் மூண்டது. சீனாவும் அமெரிக்கா மீது ஏராளமான வரிகளை அறிவித்தது. இதற்கு பதிலடியாக சீனா மீது பல்வேறு பொருட்கள் மீது சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான வரிகளை டிரம்ப் சமீபத்தில் சுமத்தினார்.

    இந்த வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.

    சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது சீன அதிபர் க்சி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும், இருநாட்டு தலைவர்களும் வரிகளை தளர்த்த சம்மதம் தெரிவித்ததாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அமெரிக்கா, சீனா இடையிலான திருத்தப்பட்ட புதிய வரிவிதிப்பு கொள்கையை இறுதிசெய்ய மூன்று மாத (கருணை) கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது.



    இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யவும், குறைக்கவும் சீன அரசு சம்மதித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க கார்களுக்கு முன்னர் சீனா 40 சதவீதம் வரி விதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Chinatariffs  #UStariffs  #ChinaUStariffs  
    திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்படும் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு பக்தர்களின் கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் மாதத்திற்கு இருமுறை தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 8 ஆயிரம் பேருக்கு மாதத்தில் இரு நாட்களும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் பகுதி வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாதந்தோறும் இரு நாட்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிவந்தது.

    இந்நிலையில், டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, மார்கழி மாத உற்சவங்கள், அரையாண்டு விடுமுறை உள்ளிட்டவற்றால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த மாதத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இலவச தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.


    ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானம் நிர்வகித்து வரும் பல கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய துணிகளை வரும் 13-ந் தேதி இணையதளம் வாயிலாக ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாலியஸ்டர், பருத்தி வேட்டிகள், துணிகள், உண்டியலுக்கு பயன்படுத்தும் துணிகள், ரவிக்கைத் துணிகள், மேல்துண்டுகள், லுங்கிகள், சால்வைகள், படுக்கை விரிப்பு, தலையணை உறை, பஞ்சாபி ஆடைகள், ஜமுக்காளம், போர்வைகள், திரைச் சீலைகள் உள்ளிட்டவை ஏலம் விடப்பட உள்ளன.

    இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய www.tirumala.org, www.mstce commerce.com/ www.mstcindia.co.in  ஆகிய இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Tirupati #TirupatiTemple
    இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. #NEET #NEETExam #SC
    புதுடெல்லி:

    தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மதிப்பெண்கள் குறைந்தன.

    இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை 10-ந்தேதி தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ., சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, 196 கருணை மதிப்பெண்கள் அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து ஜூலை 20-ந்தேதி உத்தரவிட்டது.

    இதே அமர்வில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நீட் தேர்வு நடத்திய நிறுவனம் கேள்வித்தாளை மூலமொழியான ஆங்கிலத்தில் இருந்து பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் போது அதன் மொழிபெயர்ப்பு தரத்தை நிச்சயம் உறுதிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் இருந்து ஒரு கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்த பிறகு மீண்டும் அதனை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது சரியான பொருளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    தேர்வு எழுதிய மாணவர்களால் கண்டறிந்து விடை அளிக்காமல் ஒதுக்கி இருக்கக்கூடிய மொழிபெயர்ப்புக் குளறுபடிகளை காரணமாக வைத்து 196 கருணை மதிப்பெண்கள் ஐகோர்ட்டால் வழங்கப்பட்டுள்ளது.

    கேள்வித்தாளின் மொழிபெயர்ப்பில் ஏதேனும் குழப்பம் இருக்கும்பட்சத்தில் ஆங்கில மூலத்தில் உள்ள கேள்வித்தாளில் உள்ள கேள்விகளையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. பிளஸ்-2 மாணவர்கள் முழுக்க தமிழில் படித்து இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே அடிப்படை ஆங்கில அறிவு மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.

    இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆங்கில மூலத்தையும் சரிபார்த்து விடைகளை எழுதி இருக்க வேண்டும். சரியான விடையை எழுதியும் தேர்வாகவில்லை என்று மாணவர்கள் கூறமுடியாது. ஆங்கிலத்தில் இருந்து தவறாக மொழிபெயர்த்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. மூல மொழியான ஆங்கில கேள்வித்தாளில் குளறுபடி எதுவும் கிடையாது.



    எனவே, இந்த வழக்கில் ஜூலை 10-ந்தேதியன்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டு 2019-2020-ல் மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்வை ஏற்கனவே பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்தவண்ணம் தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) நடத்த வேண்டும்.

    மொழிபெயர்ப்பில் குளறுபடிகள் எதுவும் நேராத வகையில் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பரிசீலித்து கவனத்துடன் இந்த தேர்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. #NEET #NEETExam #SC

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. #PAKvNZ #NZvPAK
    துபாய்:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன் குவித்தது. பாபர் ஆசம் 92 ரன்னும், பஹர்ஜமான் 65 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 60 ரன்னும் எடுத்தனர். பெர்குசன் 5 விக்கெட் வீழ்த்தினார்.



    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 6.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. எனவே ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.

    இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அபுதாபியில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. #PAKvNZ #NZvPAK
    பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்ததை எதிர்த்து பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. #PakistanSC #AsiaBibi #AsiaBibiacquitted
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கு மேல்மூறையீடு செய்திருந்தார்.

    இந்த மனுவின்மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    அவர் மீதான மத அவமதிப்பு குற்றச்சாட்டை அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதால் இவ்வழக்கில் இருந்து ஆசியா பீபியை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிபதிகள் அவர்மீது வேறெந்த வகையிலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்துள்ளனர்.

    மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியாகியுள்ள இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



    இந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் கலவரமாகவும், வன்முறையாகவும் மாறாமல் இருக்க பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏராளமான போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில்,  மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என லாகூர் சிறையில் இருந்தவாறு தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசியா பீவி தெரிவித்துள்ளார்.

    ஆசியா பீபியின் விடுதலை செய்தி தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளதாக அவரது கணவர் ஆஷிக் மசிஹ் குறிப்பிட்டுள்ளார். கடவுளுக்கு நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். ஆசியா பீபி குற்றமற்றவர் என்பது எங்களுக்கு தெரியும். இந்த தீர்ப்பை அளித்த நீதிபதிகளுக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். #PakistanSC #AsiaBibi #AsiaBibiacquitted

    கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக 2 மாதங்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #Karunas #MaduraiHC
    மதுரை:

    முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் கடந்த ஆண்டு நடைபெற்ற பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் நான் பங்கேற்று மரியாதை செலுத்தினேன். அப்போது எனது ஆதரவாளர்கள் தாக்கியதில் தேவர் பேரவை தலைவர் கார் சேதப்படுத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புளியங்குடி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    சம்பவம் நடைபெற்ற போது நான் அங்கு இல்லை. இந்த வழக்கில் என்னை சேர்க்க முகாந்திரம் இல்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக 2 மாதங்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். #Karunas #MaduraiHC
    டெல்லியில் மனைவியை கொன்ற வழக்கில் டி.வி. அறிவிப்பாளரின் ஆயுள்தண்டனையை ரத்து செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #delhicourt #lifesentence

    புதுடெல்லி:

    டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் வர்ணனையாளராக பணியாற்றியவர் சுகைப் இல்யாசி. இவர் ‘‘இண்டியாஸ் மோஸ்ட் வான்டெட்’’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனார்.

    இவரது மனைவி அஞ்சு கிழக்கு டெல்லியில் வசித்து வந்தார். 18 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் சுகைப் இல்யாசி போலீசில் தெரிவித்து இருந்தார். ஆனால் விசாரணையில் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி சுகைப் இல்யாசி கொலை செய்தது தெரியவந்தது.

    விசாரணைக்குப்பின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் சுகைப் இல்யாசிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    இதற்கிடையே இல்யாசின் 2-வது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை கவனிப்பதற்காக 4 வாரம் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி இல்யாசியின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். #delhicourt #lifesentence

    டிரம்ப் அரசின் எச் 4 விசாதாரர்களின் பணி அனுமதியை ரத்து செய்யும் நடவடிக்கையால் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் இந்தியர்கள் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #H4Visa #Trump #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் எச்.1பி விசாவில் பணிபுரிவோரின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய முன்னாள் அதிபர் ஒபாமா அரசு அனுமதி வழங்கியது. அதற்காக ‘எச் 4’ விசா வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு ஏராளமான இந்தியர்கள் உள்பட வெளி நாட்டினர் பணி புரிகின்றனர்.

    இதை எதிர்த்து அமெரிக்காவை சேர்ந்த சேவ் ஜாப்ஸ் என்பவர் கொலம்பியாவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் ஒபாமா அரசின் இத்தகைய கொள்கை முடிவால் அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 28, மே 22 மற்றும் ஆகஸ்டு 20-ந்தேதிகளில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது உள்நாட்டு பாதுகாப்பு துறை ஆஜராகி விளக்கம் அளித்தது. அதில், ‘எச் 4’ விசாதார்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி அனுமதி இன்னும் 3 மாதத்தில் ரத்து செய்யப்படும். இதற்கான புதிய சட்டம் இன்னும் 3 மாதத்தில் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் நிர்வாக அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த விவகாரம் குறித்து டிரம்ப் அரசு ஏற்கனவே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தது. அதில் கோர்ட்டு விரும்பினால் ‘எச்4’ விசாவை ரத்து செய்ய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    தற்போது எச் 4 விசாவை ரத்து செய்ய வகை செய்யும் புதிய சட்டம் இன்னும் 3 மாதத்தில் தயாராகி விடும் என கோர்ட்டில் பகிரங்கமாக அறிவித்துள்ளது. டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்காவில் தங்கி ‘எச் 4’ விசாவில் பணிபுரிவோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எச் 4 விசாவில் பணிபுரிய 1 லட்சத்து 26 ஆயிரத்து 853 விண்ணப்பங்களுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அனுமதி வழங்கியுள்ளது. இவர்களில் 93 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் 5 சதவீதம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 2 சதவீதம் பேர் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள். #H4Visa #Trump #US

    ×