search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு"

    ரெயிலில் காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் கோலநல்லி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). மார்பிள்ஸ் காண்டிராக்டர். இவர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 லட்சத்தை கொடுப்பதற்காக சூட்கேசில் எடுத்து கொண்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏ.சி. பெட்டியில் சென்றார்.

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது மர்மநபர்கள் பணம் இருந்த சூட்கேசை பெரியசாமிக்கு தெரியாமல் திருடிச்சென்றனர். அதில் இருந்த ரூ. 10 லட்சத்தை எடுத்து விட்டு காலியான சூட்கேசை ஆம்பூர் அடுத்த பச்சகுப்பத்தில் தண்டவாளத்தில் வீசி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ரெயில் மொரப்பூரில் நின்ற போது பெரியசாமி பெட்டியை பார்த்துள்ளார். அதன் பிறகு தூங்கியுள்ளார். ஜோலார்பேட்டையை ரெயில் கடந்த பிறகு அவர் கண் விழித்து பார்த்துள்ளார்.

    அப்போது பெட்டியுடன் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஆம்பூரில் ரெயில் நின்றுள்ளது. ஆம்பூரை கடந்து பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பெட்டியை வீசியுள்ளனர்.

    அதன் பிறகு ரெயில் குடியாத்தத்தில் நின்றது. இதனால் கொள்ளையர்கள் குடியாத்தத்தில் இறங்கி தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குடியாத்தம் ரெயில் நிலையத்தில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் குடியாத்தத்திற்கு பின்னர் காட்பாடி, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. ஒருவேளை கொள்ளையர்கள் இந்த ரெயில் நிலையங்களில் இறங்கி தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை கொள்ளை நடந்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு மாவட்டம் தோனாநள்ளியை அடுத்த நந்தகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி. பில்டிங் காண்டிராக்டர். இவர் தனது தொழில் வி‌ஷயமாக அடிக்கடி இந்த ரெயிலில் சென்னை வருவது வழக்கம்.

    நேற்று இரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தார். ஏ.சி. 2-ம் வகுப்பு (எச்.ஏ.1) பெட்டியில் ரூ.10 லட்சம் பணப் பெட்டியுடன் பயணம் செய்துள்ளார்.

    பணப்பெட்டியை அருகில் வைத்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணியளவில் காட்பாடி நிலையத்திற்கு ரெயில் வந்த போது திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது பணப் பெட்டியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் படுக்கை அருகில் உள்ள பகுதி முழுவதும் தேடினார். கிடைக்க வில்லை.

    பணப்பெட்டியில் ரூ.10 லட்சத்து 36 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்துள்ளது. பணத்தை பறிகொடுத்த காண்டிராக்டர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த வண்ணம் இருந்தார்.

    அதே ரெயிலில் மற்றொரு கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது. 2-ம் படுக்கை வசதி பெட்டி எண் எஸ்-12ல் பயணம் செய்த சண்முகசுந்தரம் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை போய் உள்ளது.

    சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த அவர் மனைவியுடன் பயணம் செய்தபோது அவரிடம் இருந்த பையை அபேஸ் செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    ஒரே ரெயிலில் அடுத்தடுத்து பயணிகளிடம் கொள்ளை நடந்திருப்பது ரெயில் பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

    பயணிகளை தாக்காமல் அவர்கள் தூங்கும் போது சக பயணியாக பெட்டிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4 மணிக்கு சென்ட்ரல் வந்து சேர்ந்ததும் ரெயில்வே போலீசில் காண்டிராக்டர் பெரியசாமியும், சண்முக சுந்தரமும் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தாமஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கொள்ளைப் போன ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியிலும் போலீசார் சோதனை நடத்தினர். எஸ்-12 பெட்டியின் கழிவறையில் சண்முகசுந்தரத்தின் கைப்பை வீசப்பட்டு இருந்ததை கைப்பற்றினர்.

    இதே போல் ரூ.10 லட்சம் வைத்திருந்த பணப்பெட்டி ஜோலார்பேட்டை அருகே பச்சைகுப்பம் என்ற இடத்தில் காலியாக கிடந்துள்ளது. அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

    ஜோலார்பேட்டை எல்லைக்குள் தான் கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. கொள்ளையர்கள் பணத்தை எடுத்து விட்டு பெட்டியை வீசி விட்டு அங்கு குதித்து தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    ஈரோடு அருகே வாடகை பணம் தருவதாக கூறி நூதன முறையில் கார் திருடி சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, பெரிய சேமூர், நந்தவனத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நவுசாத். இவரது மகன் சபீர் அகமது (வயது 33).

    இவர் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த காரை கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்த ராஜாராம் என்கிற ராஜா அடிக்கடி வாடகைக்கு எடுத்தார்.

    அந்த வாடகை பணம் பாக்கி தரவேண்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 12-ந் தேதி ராஜாராமை சபீர் அகமது தொடர்பு கொண்டார்.

    பெருந்துறைக்கு நேரில் வந்து வாடகை பாக்கி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய சபீர் அக மது பெருந்துறைக்கு காரில் சென்றார்.

    புதிய பஸ் நிலையம் பகுதியில் காரை சாவியுடன் நிறுத்தி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த காரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராஜாராமிற்கு போனில் தொடர்பு கொண் டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக காரின் உரிமையாளருக்கு சபீர் அகமது தகவல் தெரிவித்தார்.

    பல்வேறு இடங்களில் காரை தேடியும் கிடைக்க வில்லை. எனவே கார் திருடப்பட்டது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ், ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், காந்தி மற்றும் லோக நாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை பெருந்துறை டோல்கேட் அருகேயுள்ள வாய்ப்பாடி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். காரை ஒட்டிவந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    எனவே அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நூதன முறையில் சபீர் அகமதுவை பெருந்துறைக்கு வரவழைத்து காரை திருடிச் சென்றதை ராஜாராம் என்கிற ராஜா ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த அவர்கள் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    ஈரோட்டில் பதுங்கி இருந்த இரிடியம் புரோக்கர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு முத்தம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் இரிடியம் புரோக்கர்கள் 3 பேர் பதுங்கி இருப்பதாக ஈரோடு தாலுகா போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் முத்தம்பாளையத்துக்கு விரைந்து சென்றனர். குறிப்பிட்ட அந்த வீட்டுக்குள் போலீசார் சென்றனர்.

    அப்போது அந்த வீட்டிற்குள் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து 3 பேரையும் தாலுகா போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை சேர்ந்த தவபாண்டியன் (வயது 29), திட்டக்குடியை சேர்ந்த திருநாவுக்கரசு (28), திருவண்ணாமலையை சேர்ந்த முகமதுசெரீப் (28) என்பது தெரியவந்தது.

    இவர்களில் தவபாண்டியன் வெள்ளோட்டில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது சொந்த மாவட்டம் மதுரை என கூறப்படுகிறது. 3 பேரும் இரிடியம் புரோக்கர்கள் என்பது விசாரணையில் வெட்ட வெளிச்சமானது.

    இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தவபாண்டியன், திருநாவுக்கரசு, முகமது செரீப் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு ஈரோடு கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    திருநாவுக்கரசு, முகமது செரீப், தவபாண்டியன் ஆகிய 3 பேரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது.

    3 பேரும் இணைந்து தொழிலதிபர்களை சந்தித்து ‘‘எங்களிடம் இரிடியம் உள்ளது. இதை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்‘‘ என்று ஆசைவார்த்தை கூறி அவர்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளனர்.

    இவர்களது ஆசை வார்த்தையில் ஏராளமான தொழிலதிபர்கள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    கைதான 3 பேருக்கும் பின்னால் ஒரு பெரிய நெட் ஒர்க் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.எனவே அது பற்றிய விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    ஈரோடு அருகே கடைக்கு சென்ற பிளஸ்-2 மாணவி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ரோட்டில் வசிப்பவர் ஜீவராஜ், இவரது மகள் தமிழ் செல்வி(வயது 18).

    தமிழ்செல்வி ஈரோட்டில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி மாணவி தமிழ் செல்வி கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிகொண்டு, வெளியே சென்றார், ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும், மாணவியை காணவில்லை.

    இது தொடர்பாக மாணவின் தந்தை ஜீவராஜ் கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் இது குறித்து விசாரனை நடத்தி மாணவியை தேடி வருகிறார்.

    மாயமான மாணவி அவராக எங்கும் சென்று விட்டாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்று விட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கீழ் திண்டல் நல்லியம்பாளையம், பாலாஜி ஆர்கேட் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 51).

    சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று வழக்கம் போல் ரவி வேலைக்கு சென்றுவிட்டார்.

    அவரது மனைவியும் 2 மகள்களும் ஜவுளி எடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர். நேற்று இரவு ரவி வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ள 2 பீரோக்கள் கதவு திறந்து துணிகள் சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ரவி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

    கொள்ளை நடந்த வீட்டிலும் அந்த பகுதியிலும் சி.சி.டி.வி. கேமிரா இருக்கிறதா? என்று போலீசார் பார்த்தனர். ஆனால் கேமிரா பொருத்தப்படவில்லை.

    இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு தாலுகா போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஈரோடு அருகே வாய்தகராறில் கூலி தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த ஓடப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா முகைதீன் (வயது 24) கூலித் தொழிலாளி.

    இரவு நேரத்தில் அந்தபகுதியில் உள்ள மதுகடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஜீவானந்தம் நகரை சேர்ந்த பெயிண்டர் ரவீந்திரன்(வயது 33) என்பவரும் வந்தார்.

    அப்போது இருவருக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர்.

    தகராறு முடிந்து காஜா முகைதீன் தனது வீட்டுக்கு போய்விட்டார் எனினும் அவரை தொடர்ந்து ரவீந்தரனும் சென்றார். மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவீந்திரன், அவரை சரமாரியாக கத்தியால் குத்தினாராம். இதில் காஜா முகைதீனுக்கு கை, தொடை பகுதியில் கத்தி குத்துகள் விழுந்தது. ரத்தக் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி ரவீந்தரனை கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் உள்ளனரா? என போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். #Maoist

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் உள்ளனரா? என போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவுப்படி நக்சல் பிரிவு போலீசார், சிறப்பு அதிரடி படை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மற்றும் ஆதி வாசிகளை குறி வைத்து அவர்களை மூளை சலவை செய்து தங்கள் வசப்படுத்த மாவோயிஸ்டுகள் திட்ட மிட்டு செயல்படுவதாக தகவல் வந்தது.

    இதன் அடிப்படையிலேயே சத்தியமங்கலம், கடம்பூர், தாளவாடி மற்றும் கேரளா எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியை தமிழக போலீசார் முடக்கி விட் டுள்ளனர்.

    கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மல்லியம்மன் துர்கம் வன கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நக்சல் மற்றும் அதிரடிப்படை போலீசார் 25-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற் கொண்டனர்.

    புதிய நபர்கள் யாராவது வருகிறார்களா? பண உதவி செய்கிறோம் என கூறி ரேசன் கார்டு, ஆதார் கார்டுகள் கேட்கிறார்களா? என கேட்டறிந்தனர்.

    அப்படி யாராவது வந்தால் உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பழங்குடி மக்களை கேட்டு கொண்டனர்.

    கடம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார வன கிராமங்கள் மற்றும் வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. #Maoist

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று காலை ஈரோடு வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #TNGovernor #BanwarilalPurohit

    ஈரோடு:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று ஈரோடு வந்தார்.

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்த அவரை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், ஏ.டி.எஸ்.பி. பாலாஜி சரவணன், டவுண் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வரவேற்றனர்.

    மேலும் அதே ரெயிலில் வந்த மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணியும் கவர்னர் பன்வாரிலாலை வரவேற்றார்.

    வரவேற்பை பெற்றுக்கொண்ட கவர்னர் பிறகு நேராக காலிங்கராயன் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார்.

    அங்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதனை கவர்னர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து காலை 9 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால் கோபிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

    கவர்னர் வருகையையொட்டி கோபிக்கு செல்லும் இரு வழியிலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள டி.எஸ். ராமன் விடுதியில் உள்ள தியாகி லட்சுமணன் சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவில் தியாகி லட்சுமணன் சிலையை கவர்னர் பன்வாரிலால் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

    விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கலெக்டர் பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    விழா முடிந்ததும் மதியம் மீண்டும் காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.

    அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்கிறார்.

    மாலை 4.30 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார பணியை மேற்கொள்கிறார். #TNGovernor #BanwarilalPurohit
    நான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்று கலெக்டர் பிரபாகர் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் கதிரம்பட்டி மூலக்கரை கிராமம் வாரக்காடு தோட்டம் பகுதியில் பெரும் பள்ளம் ஓடை குறுக்கே ரூ.25 லட்சம் செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. 3 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேக்கும் அளவுக்கு இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு புதிய தடுப்பணையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

    ஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவர் அக்னி சின்னச்சாமி, செயலாளர் எஸ்.கணேசன், பொருளாளர் ஞானவேல், நீர் மேலாண்மை குழு தலைவர் ராபின், துணைத் தலைவர்கள் யூ.ஆர்.சி.தேவராஜ், சி.டி.குமார், அறங்காவலர்கள் பி.வி.மகேஷ், எஸ்.கே.எம்.சிவக்குமார், ஆர்.ஆர்சத்தியமூர்த்தி, காமதேனு மாட்டுத்தீவன நிறுவன தலைவர் ஆர்.ஜி.சுந்தரம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், காசிபாளையம் கோவிந்தராஜ், சூரம்பட்டி முன்னாள் நகர்மன்றத் தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர் பூவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தடுப்பு அணையின் மேல் பகுதியில் ஏற்கனவே ரூ.10 லட்சம் செலவில் இரண்டு தடுப்பணைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. மேலும் இதன் கீழ் பகுதியில் 5 தடுப்பணைகள் தூர் வாரப்பட்டுள்ளன.

    விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:-

    தற்போது எனக்கு கிருஷ்ணகிரியில் பணி செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கும் தொடர்ந்து சிறந்த முறையில் பணியாற்றுவேன். நான் வருகிற வியாழக்கிழமை கிருஷ்ணகிரியில் பொறுப்பேற்க உள்ளேன். ஒளிரும் ஈரோடு அமைப்பு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதற்கு நானும் ஒரு படிக்கல்லாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கட்டமாக நிறைவேற்றப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்து ஒரு குறிப்பு எழுதி வைத்துள்ளேன்.

    அந்தக் குறிப்பை அடுத்ததாக பதவியேற்க உள்ள மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளேன். நாளை மறுநாள் (புதன் கிழமை) புதிய கலெக்டராக பொறுப்பேற்க உள்ள கதிரவனுடன் எனக்கு 15 ஆண்டுகளாக சிறந்த நட்பு உள்ளது. இதை பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து எனது ஆலோசனை வழங்க முடியும்.

    இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    காவிரியில் வெள்ளம் 3 லட்சம் கன அடி அளவுக்கு பாய்ந்தோடுகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி கரையோரப் பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். இதற்காக இன்று அவர் சேலம் செல்கிறார்.

    நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். பவானியில் தொடங்கி காளிங்கராயன் பாளையம், குமாராபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களையும், பின்னர் கரூர் மாவட்டத்தில் வெள்ளப் பகுதிகளையும் பார்வையிடுகிறார்.

    நாளை மாலை ஈரோட்டில் வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். #TNCM #EdappadiPalaniswami

    ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து நடந்துவரும் கொள்ளையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் சமீபகாலமாக ரோட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் வீடு முன்பு கோலம் போடும் பெண்கள் இவர்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

    இதுதவிர பூட்டிக்கிடக்கும் வீட்டை உடைத்து பணத்தை திருடுவது பூட்டிக்கிடக்கும் கடைகள் மேல் கூரைகளை உடைத்து பணம் பொருட்களை திருடுவது என சமீப காலமாக ஈரோடு பகுதியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.

    மக்கள் அதிகம் நடமாடும் உள்ள பகுதியில் மிகவும் துணிச்சலாக வந்து தங்கள் தங்களது கைவரிசையை காட்டி கொண்டு செல்கின்றனர் இதில் பெரும்பாலான கொள்ளைகளில் இன்னும் துப்புத் துலங்கவில்லை நேற்று கூட சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள அடுத்தடுத்த இரண்டு கடைகளின் மேற்கூரையை பிரித்து ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்

    மேலும் அருகிலுள்ள மற்றொரு கடையிலும் கொள்ளையர்கள்புகுந்து கொள்ள அடிக்க முயன்றுள்ளனர் ஆனால் முடியவில்லை கொலை நடந்த இரண்டு கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதத்திலும் இதே சூரம்பட்டி நால்ரோடு அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு தொடர்ந்து நடந்துவரும் கொள்ளையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது கொள்ளை சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக அடுக்கு மாடி குடியிருப்புகள் வணிக வளாகங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு செய்வதில்லை பெரிய பெரிய திருட்டு கொலை வழக்குகளில் சிசிடி கேமரா ஆதாரங்களை வைத்து பல்வேறு சமயங்களில் குற்றவாளியை பிடித்துள்ளோம் பொதுமக்களின் பயத்தைப் போக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வருகிறோம் பொதுமக்களும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    ×