search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு"

    ஈரோட்டில் அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதி, மஜீத் வீதி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.

    இதையொட்டி மாநகராட்சி கமி‌ஷனர் சீனிஅஜ்மல்கான் உத்தரவுப்படி அங்கு நகர் நல அலுவலர் சுமதி, துப்புரவு ஆய்வாளர்கள் நாச்சிமுத்து, நல்லசாமி ஆகியோர் சோதனை நடத்தினர்.

    அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இது குறித்து நகர் நல அலுவலர் சுமதி கூறும்போது, ‘‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதையும் மீறி சிலர் விற்று வருகிறார்கள். இனி தொடர்ந்து அப்படி விற்று வந்தால் கடை உரிமத்தை ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை’’ என்று கூறினார்.

    முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஒரு வேனில் ஏற்றி கொண்டு சென்ற போது அந்த பகுதி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேனையும் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப் பான சூழ்நிலை நிலவியது.

    கோபி அருகே மோட்டார் சைக்கிளும் அரசு பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 28). கூலி தொழிலாளி.

    நேற்று இரவு தண்டபாணி குள்ளம்பாளையத்தில் இருந்து முத்துக்காளிமடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் குள்ளம் பாளையம் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட தண்டபாணி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே தண்டபாணி பரிதாபமாக இறந்தார். பலியான தண்டபாணிக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் அரசு பஸ் மோதிய விபத்தில் தறிப்பட்டறை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு, மாணிக்கம் பாளையம், ஹவுசிங் யுனிட் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ்(வயது44). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி முத்துகுட்டி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு அந்தோணிராஜ் கடைக்கு சென்றார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத வகையில் அந்தோணிராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தோணிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கோடை மழை பெய்தது. அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடைமழை கொட்டி வருகிறது. நேற்றும் வழக்கம் போலவெயில் வறுத்தெடுத்தாலும் மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தன.

    மாலை 6 மணிக்கு மேலும் இரவு 8 மணிக்கு மேலும் இடி-மின்னலுடன் மழை கொட்டத்தொடங்கியது.

    பவானி, மொடக்குறிச்சி மற்றும் சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல் பெருந்துறை, பவானிசாகர் மற்றும் வனப்பகுதியான தாளவாடியிலும் பரவலாக மழை பெய்தது. சூறை காற்றுடன் மழை பெய்ததால் இக்களூர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டமரங்கள் முறிந்து விழுந்தது. மின்சார கம்பம் மீது மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

    தாளவாடி பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக கோடைமழை கொட்டி வருகிறது. அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த இடியும்- மின்னலுமாக இருந்தது. கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிதமான மழை மட்டுமே பெய்தது.

    எனினும் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே முதியோர் இல்லத்தில் இருந்த பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையில் முதியோர் இல்லம் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த இல்லத்தில் ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.

    பவானி பெரிய புலியூரை சேர்ந்த ரத்தினம் (வயது 60) என்பவரும் இங்கு தங்கி இருந்தார். நேற்று மதியம் அவர் வெளியே சென்றார்.

    ஆனால் அவர் முதியோர் இல்லத்துக்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    அவர் மாயமானது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் முதியோர் இல்ல நிர்வாகி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரத்தினத்தை தேடி வருகிறார்கள். #Tamilnews
    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரேசன் கடையை அமைக்காமல் நூலகம் அமைக்கப்படுவதை எதிர்த்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரம் பட்டக்காரன் பாளையம் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

    ஆனால் 2014-ம் ஆண்டு அந்த பகுதியில் ரேசன் கடை அமைப்பதற்காக இந்த கட்டிடத்தில் இருந்த நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டு ரேசன் கடை அமைப்பதற்கான மராமத்து பணிகள் நடைபெற்றது. ஆனால் இதுவரை இந்த இடத்தில் ரேசன் கடை திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த கட்டிடத்தை மீண்டும் நூலகமாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதுவரை இந்த பகுதியில் ரேசன் கடை அமைக்காததை கண்டித்தும் பட்டக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பு கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    கடந்த பல வருடங்களாகவே இந்த பகுதியில் ரேசன் கடை இல்லை. இதனால் அருகில் உள்ள ஆயிக்கவுண்டன் பாளையம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வருகின்றோம்.

    இங்கு ரேசன் கடை அமைக்க பல முறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் தற்போது ரேசன் கடைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை மீண்டும் நூலகமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் அனைவரும் வீடுகளின் முன்பு கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Tamilnews
    அம்மா பாணியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி புரட்சிதலைவி ஜெயலலிதாவின் வாரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
    ஈரோடு:

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

    விழாவில் சுற்று சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மறைந்த அம்மாவின் ஆசியுடன் இந்த ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் செயல்படுத்தி வருகிறார்.

    இன்று மக்களை முதல்வர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். அம்மா பாணியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி புரட்சிதலைவி ஜெயலலிதாவின் வாரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

    ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. 7 ஆண்டாக மின்துறை அமைச்சர் தங்கமணி தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் விமர்சித்து வருகிறார். அவர் செயல் தலைவர் அல்ல செயல் இழந்த தலைவராக உள்ளார். அவர் என்னதான் ஆட்சியை விமர்சனம் செய்தாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள். அவர் மீது மக்கள் வெறுப்புடன்தான் உள்ளனர்.

    காவிரி ஆணையத்தை புதுப்பிக்க தவறியவர் கலைஞர். ஆனால் 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு வாங்கியவர் ஜெயலலிதா.

    தினகரன் புதிய கட்சி தொடங்கி இருப்பது வேடிக்கை. அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. குறிப்பாக கொங்கு நாட்டு மக்களுக்கு தினகரன் யார் என்று தெரியாது.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
    ×