search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111704"

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஹெல்மெட் அணிந்தபடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். #Hyderabad
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஓஸ்மானியா என்ற மிகப்பழமையான மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும், அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மீதும் விழுந்து காயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மேற்கூரை இடிந்து விழுந்து காயம் ஏற்படாமல் இருக்கும்வண்ணம் தலைகளில் ஹெல்மெட் அணிந்தபடி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தை மேற்கொண்டனர்.



    ஐதராபாத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டிடத்தைப் புதுப்பிக்கக் கோரி மருத்துவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி சிகிச்சை அளித்து வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக வெளி நோயாளிகளை மரத்தடியில் வைத்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள், கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #Hyderabad
    42 உயிர்களை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #HyderabadTwinBombBlastVerdict
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேர் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் அருகே 10 பேர் என மொத்தம் 42 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர்.  



    இந்த வழக்கு நம்பள்ளி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 

    இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கிறது. தீர்ப்பு வெளியாக இருப்பதால் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #TwinBlast #HyderabadTwinBombBlastCase ##HyderabadTwinBombBlastVerdict 

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் ஐதராபாத் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #TelanganaAssembly #ChandrasekharRao
    நகரி:

    ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவரான சந்திரசேகர் ராவ் முதல்-மந்திரியானார்.

    அங்கு அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் மாநிலத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இதில் இறுதி முடிவு எடுக்கவில்லை என மந்திரி கே.டி.ராமராவ் நேற்று முன்தினம் கூறினார்.

    இந்த நிலையில் கடந்த 4½ ஆண்டு ஆட்சியில் மாநில அரசு மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செய்து வரும் நலப்பணிகள் உள்ளிட்ட நிலவர அறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் டி.ஆர்.எஸ். கட்சி நடத்துகிறது.

    ‘பிரகதி நிவேதன சபா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டம் ஐதராபாத் அருகே உள்ள கொங்கர கலான் பகுதியில் நடக்கிறது. இதற்காக அனைத்து வசதிகளுடன் 6 ஆயிரம் ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஆளுங்கட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் ஏராளமானோர் நேற்றே ஐதராபாத்தை நோக்கி புறப்பட்டு வருகின்றனர். அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 1000 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தில், முன்கூட்டிய தேர்தல் குறித்து முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் அறிவிப்பு வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக அவரது தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  #TelanganaAssembly #ChandrasekharRao
     #Tamilnews 
    ஐதராபாத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் அப்துல்லா பாசித் மற்றும் அப்துல் காதிர் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர். #NIA #Arrest
    ஐதராபாத்:

    இந்தியாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளை கடந்த 2016-ம் ஆண்டு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் இருவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 3-வது நபரான அட்னான் ஹசன் என்பவருக்கு எதிரான விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த பயங்கரவாதியிடம் விசாரணை நடத்திய போது, ஐதராபாத்தை சேர்ந்த அப்துல்லா பாசித் (வயது 24), அப்துல் காதிர் (19) ஆகிய இருவர் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அதன் மூலம் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான செயல்களில் அவர்கள் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அப்துல்லா பாசித் மற்றும் அப்துல் காதிர் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர். முன்னதாக ஐதராபாத்தின் பல பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், பல்வேறு சட்ட விரோத பொருட்களை அங்கிருந்து கைப்பற்றினர்.  #NIA #Arrest #Tamilnews 
    ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து மையம் குழந்தைகள் சாப்பிடும் உணவில் இருக்கும் பூச்சி கொல்லி மருந்து அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
    ஐதராபாத்:

    அமெரிக்கா, ஐரோப்பியா நாட்டு குழந்தைகள் சாப்பிடும் உணவை விட ஐதராபாத் குழந்தைகள் சாப்பிடும் உணவில் 40 சதவீதம் அதிக பூச்சி கொல்லி மருந்து இருப்பது தெரியவந்தது.

    6 வயது முதல் 15 வயது வரை உள்ள 188 சிறுவர்கள், 188 சிறுமிகளின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டது. மேலும் குழந்தைகள் சாப்பிடும் 40 வகையான உணவு பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    சிறுவர்களிடம் சேகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் சிறுநீரில் சராசரியாக 4.1 மைக்ரோமொல் வளர்ச்சிதை மாற்றத்துக்கான அளவு இருந்தது.

    இந்த அளவு அமெரிக்க குழந்தைகளுக்கு 0.101 அளவாக உள்ளது. சிறுவர்களை விட சிறுமிகளின் சிறுநீர் மாதிரிகளில்தான் அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து இருந்தது.

    ஏனென்றால் அந்த வயதில் சிறுமிகள் சிறுவர்களை விட அதிக பழங்கள் சாப்பிடுவது தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதிக விளைச்சலுக்காக ரசாயன பயிர்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பழங்கள், காய் கறிகளில் ரசாயன தன்மை படிந்து விடுகிறது.
    ஐதராபாத்தில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அங்கு தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார். #CMChandrasekharRao #DeveGowda
    ஐதராபாத்:

    தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை கடந்த மாதம் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்தார். 

    இதைத்தொடர்ந்து, தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கும் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார். கடந்த மாதம் சென்னை வந்த சந்திரசேகர் ராவ், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அங்கு தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார்.

    இதுதொடர்பாக சந்திசேகர் ராவ் மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியான கே டி ராமா ராவ் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது தானும் உடனிருந்ததாக பதிவிட்டுள்ளார். #CMChandrasekharRao #DeveGowda
    தெலங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UAEConsulate #Hyderabad
    ஐதராபாத்:

    யுனைடெட் அரபு எமிரேட்சின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயன் கடந்த 24ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவர் மும்பை, அகமதாபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். 

    இந்நிலையில், தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவை யுனைடெட் அரபு எமிரேட்சின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயன் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



    இதுதொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யு.ஏ.இ. நாட்டின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லாவுடன் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதரகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. #UAEConsulate #Hyderabad
    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவில் பங்கேற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என ஐதராபாத் எம்.பி ஓவைசி தெரிவித்துள்ளார். #AsaduddinOwaisi #PranabMukherjee #Congress
    ஐதராபாத்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் அந்த இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா நேற்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் இதில் பங்கேற்க கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.

    பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நாக்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.

    இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவில் பங்கேற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என ஐதராபாத் எம்.பி ஓவைசி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு காலம் இருந்தவரும், இந்திய ஜனாதிபதியாக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவுக்கு சென்றுள்ளார். இனி காங்கிரசிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என குற்றம் சாட்டியுள்ளார். #AsaduddinOwaisi #PranabMukherjee #Congress
    ஐதராபாத்தில் ஆஸ்துமாவை குணமாக்கும் மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை முகாமில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இன்றும், நாளையும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Asthma
    நகரி:

    ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐதராபாத்தில் ஆண்டு தோறும் மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பத்தினா சகோதரர்கள் குடும்பத்தினர் கடந்த 175 ஆண்டுகளாக இந்த சிகிச்சையை அளித்து வருகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசு செய்து கொடுத்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை இன்று ஐதராபாத்தில் உள்ள நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் தொடங்கியது. இதற்காக நேற்று இரவில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சி மைதானத்தில் குவிந்தனர்.

    தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, மராட்டியம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெற குவிந்துள்ளனர். இங்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்குவதற்காக 40 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 2 மொபைல் கவுண்டர்களும், 2 வி.ஐ.பி. கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறிய மீன் வாயில் மூலிகை மருந்து வைத்து ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் வாயில் போட்டு விழுங்க சொல்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு குடிக்க மோர் கொடுக்கிறார்கள். இந்த மருந்தை சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா நோய் குணம் ஆகிறது.

    இன்றும், நாளையும் நடக்கும் இந்த முகாமில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக 1 லட்சத்து 32 ஆயிரம் சிறிய மீன்களை தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. 2 நாள் முகாமில் சிகிச்சை பெற முடியாதவர்கள் பத்தினா சகோதரர்களின் வீட்டுக்கு சென்று சிகிச்சை பெறலாம்.

    மீன் மருத்துவ முகாமையொட்டி ஐதராபாத் மகாத்மா காந்தி பஸ் நிலையம், ஜூப்ளி பஸ் நிலையம், நாம் பள்ளி, செகந்திராபாத், காட்சிகுடா ரெயில் நிலையங்கள், சம்சா பாத் விமான நிலையம் ஆகிய இடங்களில் இருந்து 133 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 1000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தாகம் தீர்க்க இலவசமாக தண்ணீர் பாக்கெட்டுகள், மோர் வழங்கப்படுகிறது. 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. #Asthma
    ஐதராபாத்தில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக ஏற்பட்ட பீதியில் பிச்சைகாரர் ஒருவரை பொதுமக்கள் அடித்து கொலை செய்துள்ளனர்.#ChildAbduction
    ஐதராபாத்:

    குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக ஏற்பட்ட பீதியில் தமிழ்நாட்டில் சில அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்டனர். இங்கு அமைதி நிலவிய நிலையில் தற்போது தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் குழந்தை கடத்தல் பீதி பரவிவருகிறது.

    இதனால் அங்கு சந்தேகப்படும் நிலையில் நடமாடும் நபர்களை பொதுமக்களே பிடித்து தாக்குதல் நடத்தும் சம்பவம் நடந்து வருகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இதுபோன்று கடந்த 13 நாளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் அடித்து கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் பிச்சைக்காரர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது பெயர் சந்திரய்யா (52) மெகபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    இவர் மேலும் 3 பிச்சைக்காரர்கள் சுவானி, நரசிம்மா மற்றும் ரவி ஆகியோருடன் ஐதராபாத்தின் மையபகுதியான சந்திராங்குட்டா பகுதியில் நள்ளிரவில் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் அரவாணி உடையில் இருந்தனர்.

    இதற்கிடையே, மெகபூப் நகர் பகுதியில் இது போன்று உடை அணிந்திருந்த 2பேர் ரோட்டோரோம் சந்தேகப்படும் நிலையில் சுற்றித்திரிந்தனர். அப்போது ‌ஷகிலா பாத் பகுதியில் குழந்தை கடத்தலில் ஈருபட்டதாக ‘வாட்ஸ் அப்’பில் வந்த தகவல் அடிப்படையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இத்தகவல் ‘வாட்ஸ் அப்’பில் பரவியதை தொடர்ந்து சந்திராயங்குட்டா பழைய நகர் பகுதியில் தங்கியிருந்த சந்திரய்யா உள்ளிட்ட 4 பேரை கும்பலாக பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் அடித்து உதைத்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து பிச்சைக்காரர்களை தாக்கிய கும்பலை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். 2 போலீஸ் வாகனங்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

    இதற்கிடையே அக்கும்பல் அங்கு கட்டுமான பணிக்காக வைத்திருந்த கான்கிரீட் பலகைகளால் பிச்சைக்காரர்கள் மீது தாக்கினர். அதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்திரய்யா மற்றும் சுவாமி ஆகியோரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரய்யா பரிதாபமாக இறந்தார். சுவாமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொருவர் கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 25 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#ChildAbduction
    ஆந்திரப்பிரதேசத்தின் நலனுக்காக பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை மறுத்துள்ளேன் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu #PMPost
    ஐதராபாத்:

    தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டு கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேச கட்சி தலைவரும், மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள், சந்திரபபு நாயுடுவை வருங்கால பிரதமர் எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர்.
    இதையடுத்து, சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

    பிரதமர் பதவி மீது எனக்கு விருப்பம் இல்லை. ஏற்கனவே பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது மாநில நலனுக்காக அதை மறுத்துள்ளேன்.

    இப்போது சிலர் பாஜக- காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் நான் அதை 22 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து காட்டியுள்ளேன். 1996ல் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. மாநில நலனுக்காக அதை மறுத்த நான், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவே கவுடாவை பிரதமராக ஆதரவு அளித்தேன்.

    இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு இல்லாமல் சி மத்தியில் எந்த கட்சியும் ஆட்சி செய்யமுடியாது.

    திருப்பதி கோவிலின் நகைகள் எனது வீட்டில் இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முதலில் திருப்பதி கோவில் நகை பட்டியலில் இல்லாத வைரம் இப்போது பட்டியலில் இடம்பிடித்தது எப்படி?

    அலிபிரியில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் இருந்து திருப்பதி பெருமாள் என்னை காப்பாற்றி மறுபிறவி கொடுத்துள்ளார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். திருப்பதி தேவஸ்தானம் விவகாரத்தில் பாஜக எந்த நாடகத்தையும் நடத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். #ChandrababuNaidu #PMPost
    ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்களை தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்த கொல்கத்தா அணியின் பவுலர்களை ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் வெகுவாக பாராட்டினார்.#IPL2018 #KaneWilliamson
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்து 8-வது வெற்றியுடன் (16 புள்ளி) 6-வது முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

    இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டுவது போல் சென்ற ஐதராபாத் அணியின் ரன்வேகம், கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் தளர்ந்து போனது. இந்த இலக்கை கொல்கத்தா அணி கிறிஸ் லின் (55 ரன், 4 பவுண்டரி, 3 சிக்சர்), ராபின் உத்தப்பா (45 ரன்), சுனில் நரின் (29 ரன்) ஆகியோரின் அதிரடியின் துணையுடன் 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் 6-வது முறையாக ‘சேசிங்’கில் தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    வெற்றிக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘டாப்-4 அணிகளில் ஒன்றாக போராடி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் சரியான நேரத்தில் உச்சத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்’என்றார்.

    ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாகவே இருந்தது. 200 ரன்களோ அதற்கு சற்று அதிகமாகவே எட்ட வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தோம். அந்த ஸ்கோரை நாங்கள் அடைந்திருக்க வேண்டும். ஆனால் கொல்கத்தா பவுலர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். எல்லா பெருமையும் அவர்களையே சாரும். இதுவரை நடந்தது பற்றி கவலையில்லை. ‘பிளே-ஆப்’ சுற்றில் வீரர்கள் சுதந்திரமாக, எங்களது பலத்துக்கு தகுந்தபடி விளையாட வேண்டியது அவசியமாகும். அதற்கு முன்பாக ஒரு சில விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. ஒவ்வொரு வீரர்களும் அடுத்த சுற்றை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்’ என்றார். #IPL2018 #KaneWilliamson
    ×