search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111713"

    காவலாளிதான் திருடன் என்பதை மக்கள் கோர்ட்டு மே 23-ந் தேதி முடிவு செய்யும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #Modi #Chor #LokSabhaElection2019
    புதுடெல்லி:

    ரபேல் ஒப்பந்த முறைகேட்டில் காவலாளியே திருடன் என சுப்ரீம் கோர்ட்டே ஒப்புக்கொண்டுள்ளது என்று கூறியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தனது வருத்தத்தை தெரிவித்தார். இனி எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தில் கோர்ட்டு உத்தரவை குறிப்பிடமாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

    அதே நாளில் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில், “மே 23-ந் தேதி தாமரை ‘பிராண்டு’ காவலாளி (பிரதமர் மோடி) தான் திருடன் என்பதை மக்கள் கோர்ட்டு முடிவு செய்யும். நீதி நிலைநிறுத்தப்படும். ஏழைகளின் பணத்தை திருடி தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியவர் தண்டனையை சந்திப்பார்” என்று கூறியுள்ளார்.



    அமேதியில் நேற்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தபோது கூறியதாவது:-

    பிரதமர் மோடி நேர்மையானவராக இருந்தால், ரபேல் ஒப்பந்தத்தில் அவர் ஒன்றும் செய்யவில்லை என்றால் அவர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க பயப்படத் தேவையில்லை. அவர் என்னுடன் 15 நிமிடம் மட்டும் அவர் முடிவு செய்யும் இடத்திலேயே நேருக்கு நேர் விவாதிக்கட்டும். பின்னர் நாட்டு மக்கள் காவலாளியின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்வார்கள்.

    இந்த பிரச்சினை குறித்து வேறு எதுவும் நான் கூற விரும்பவில்லை. நீங்கள் (பத்திரிகையாளர்கள்) உங்கள் மனதில் இருப்பதை சொன்னால், பிரதமர் உங்களை அடிப்பார். நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த தேர்தலில் மோடி வெளியே சென்றுவிடுவார். நாங்கள் வந்ததும் நீங்கள் விரும்புவதை எழுதலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமேதி, ரேபரேலி உள்பட உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூட்டத்தினரை பார்த்து, 2014-ம் ஆண்டு ‘நல்ல நாள் வரும்’ என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் பிரசாரம் காவலாளி என்று கூறினார். உடனே கூட்டத்தினர், திருடன் என குரல் எழுப்பினர். தொடர்ந்து, அமேதியில் 150 தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், இங்கிருந்து வெளியேற்றப்பட்ட உணவு பூங்கா மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.  #RahulGandhi #Modi #Chor #LokSabhaElection2019
    சீனாவில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் இருந்து திருடிய பணத்தை, அந்த வாலிபர் மீண்டும் திருப்பி கொடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றது. #ChinaRobberMercy
    பீஜிங்:

    திருடன் என்றாலே உலகின் அனைத்து நாடுகளிலும் மக்கள் அஞ்சத்தான் செய்கிறார்கள். பணம், நகைகள், வாகனங்கள் போன்றவற்றை திருடுவதற்காக கத்தியினை காட்டி மிரட்டி, துன்புறுத்தி இரக்கமின்றி திருடிச் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சீனாவில் ஒரு திருடனின் செயல் அனைத்து தரப்பு மக்களாலும் இணையத்தளத்தில் பாராட்டப்பட்டு வருகின்றது. சீனாவின் ஹூயிங் நகரில் உள்ள ஏடிஎம்மில் இருந்து பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக கார்டைப் போட்டு பின் எண்ணை அழுத்தியுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பணம் எடுக்க வந்ததை போல ஒருவன் பின்னே வந்து நின்றான். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டவே அந்த பெண் பயந்து கத்தியுள்ளார்.

    பின்னர் இயந்திரத்தில் இருந்து வந்த பணத்தை எடுத்து அந்த திருடனிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய திருடன், ஏடிஎம் இயந்திரத்தில் அப்பெண்ணின் பேலன்ஸை பார்த்துள்ளான். அதில் ஜீரோ பேலன்ஸ் காட்டவே, அந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு அப்பெண்ணை பார்த்து சிரித்து விட்டுச் சென்றான். இந்த காட்சி ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.



    இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு மக்களும் அவரது செயலை பாராட்டியபோதும், அந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதனையடுத்து இந்த வீடியோவிற்கு மீம்ஸ்களும், திருடனின் இந்த செயலுக்கு பாராட்டுகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. இதில் குறிப்பாக ஒருவர் தனது பதிவில்,  “என் வங்கிக் கணக்கைப் பார்த்தால் திருடன் அவனுடைய சொந்த பணத்தை மட்டுமல்லாமல், கத்தி மற்றும் அணிந்திருந்த சட்டையையும் கொடுத்து சென்றுவிடுவான்” என வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #ChinaRobberMercy 
    காவலாளி ஒரு திருடன் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொது கூட்டத்தில் பேசியுள்ளார். #RahulGandhi #Modi #CountryWatchman
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி, தான் பிரதமர் ஆக விரும்பவில்லை, நாட்டின் காவலாளியாக இருக்கவே விரும்புவதாக கூறினார். ஆனால், காவலாளி ஒரு திருடன் என்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்.



    அந்த அளவுக்கு ‘ரபேல்’ விமான பேரத்தில் இந்த அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி வங்கிப்பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையாவை தப்ப விட்டுள்ளது.

    பணமதிப்பு இழப்பு நடவடிக்கை என்ற பெயரில், மோடி சாதாரண மக்களை வங்கி முன்பு வரிசையில் நிற்க வைத்தார். 15 தொழில் அதிபர்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். அவரால் விவசாயிகள் கடனை ரத்து செய்ய முடியாதா? இவ்வாறு அவர் பேசினார்.   #RahulGandhi #Modi #CountryWatchman
    கந்தர்வக்கோட்டை மற்றும் கரூரில் பெண்களிடம் மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை வங்கார ஓடை தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன். பருத்தி வியாபாரி. இவரது மனைவி ஹேமா (வயது 38). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. நேற்று இரவு ராமசந்திரன் குடுத்துடன் வீட்டில் தூங்கினார். அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து நைசாக உள்ளே நுழைந்தனர். 

    பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஹேமா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பிடித்து இழுத்தனர். அவர் திடுக்கிட்டு எழுந்தார். உடனே மர்ம நபர்கள் அரிவாள் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்தனர். ஆனால் ஹேமாவதி மர்ம நபர்களுடன் நகைளை கொடுக்காமல் போராடினார். 

    இந்த சத்தம் கேட்டு ராமசந்திரன் எழுந்தார். அவர் திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதனால் பயந்து போன மர்ம நபர்கள் கையில் கிடைத்த பாதி நகையுடன் தப்பியோடினார். போராடியதால் ஹேமாவிடம் பாதி நகை சிக்கியது. 

    இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கரூர் பஞ்சமேடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி சங்கீதா (வயது 31). இவர்கள் 2 பேரும் இன்று காலை வெண்ணேய்மலை அருகே நடை பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பின்னால் ஹெல்மெட் அணிந்து பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சங்கீதா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து சென்றனர். இது குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
    மாணவரின் கைப்பையை திருடிக்கொண்டு ஓடியவர் தன்னை விரட்டிப்பிடித்த போலீஸ்காரரின் விரலை கடித்து துண்டாக்கினார். அதை பொருட்படுத்தாமல் போலீஸ்காரர் அவரை கைது செய்தார்.
    கோயம்பேடு:

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் ஜெகதீஷ்(வயது 17), பள்ளி மாணவர். இவர் நேற்று மாலை காஞ்சீபுரம் சென்றுவிட்டு, அங்கிருந்து கோயம்பேடு பஸ்நிலையம் வந்தார். அவர் கொளத்தூர் செல்வதற்காக ஷேர் ஆட்டோ ஏறுவதற்கு 100 அடி சாலையில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒருவர் ஜெகதீஷின் கைப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடினார். ஜெகதீஷ் கத்தி கூச்சல்போட்டார். சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் கார்த்திக் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்தார். அப்போது அந்த நபர் தப்பிக்க போலீஸ்காரர் கார்த்திக்கின் கை விரலை கடித்ததில் விரல் துண்டானது.

    வலியையும் பொருட்படுத்தாமல் கார்த்திக் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை கைது செய்தார். விசாரணையில், அவர் பல்லாவரம் பம்மலைச் சேர்ந்த அய்யப்பன்(24) என்று தெரிந்தது. அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள். #tamilnews
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஜய் ஆண்டனி ‘வாய்மை’ படத்தை இயக்கிய அ.செந்தில்குமார் இயக்கத்தில் ‘திருடன்’ என்ற தலைப்பில் நடிக்க இருக்கிறார். #VijayAntony #Thirudan
    இசையமைப்பாளராக இருந்து ‘நான்’ படம் மூலம் ஹீரோவாக மாறியவர் விஜய் ஆண்டனி. ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ என்று வரிசையாக வெற்றிப் படங்களாக கொடுத்ததைத் தொடர்ந்து முன்னணி நடிகர் ஆனார். எதிர்மறை தலைப்புகளையே தொடர்ந்து தனது படங்களுக்கு வைத்தார்.

    இந்தியா - பாகிஸ்தான், எமன், சைத்தான் என்று வரிசை நீண்டது. அவரது நடிப்பில் காளி படம் வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அவர் தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ என்ற தலைப்பிலும் ‘கொலைகாரன்’ என்ற தலைப்பிலும் நடித்துவருகிறார்.



    அடுத்து ‘திருடன்’ என்ற தலைப்பில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘வாய்மை’ படத்தை இயக்கிய அ.செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்கும் கதை. இந்த படத்துக்காக விஜய் ஆண்டனியை ஸ்டைலிஷாக மாற்றவிருக்கிறாராம் செந்தில்குமார். #VijayAntony #Thirudan

    ×