search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111741"

    7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக 5 பேர் கும்பலில் ஒருவரை மாணவியின் தந்தை கத்தியால் குத்தினார்.

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த நெக்கினி மலை கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவருடைய தந்தைக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    நேற்று இரவு மாணவி மற்றும் அவரது தந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் குமார் உள்பட 5 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் மாணவியை தூக்கி கொண்டு மலை பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. திடீரென கண் விழித்து பார்த்த மாணவியின் தந்தை தூங்கி கொண்டிருந்த மகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது இளம்பெண் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடிவந்தார். நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அங்கு நின்று கொண்டிருந்த குமாரிடம் சென்று தட்டிக்கேட்டார். வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

    அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தந்தை குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் குமார் படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியின் தந்தையை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் நெக்கினி மலை கிராமத்திற்கு சென்று மரத்தில் கட்டி வைத்திருந்த மாணவியின் தந்தையை மீட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிபட்டணம் அருகே தகராறில் நண்பரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி மகன் முகேஷ்(20). கூலித்தொழிலாளியான இவருக்கும், இவரது நண்பர்கள் ஜமேதார்மேடு கதிரேசன் மகன் பாரத்(19), சின்னத்தம்பி மகன் அருண்குமார்(23), கருக்கன்சாவடி பர்கத் மகன் அஸ்கர்(20) இவரர்களுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுளளது. 

    இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3பேரும் முகேஷ்யை பலமாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முகேஷ் காவேரிபட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரத், அருண்குமார், அஸ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    மேட்டுப்பாளையம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கத்தியால் குத்திய வியாபாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள எடுக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி ஜெனீபர் அகல்யா (வயது 26). கணவன்- மனைவி இருவரும் தென்னம் பாளையம் அவினாசி மார்க் கெட்டில் வாழைப்பழம் மற்றும் வாழை இலை வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சின்னராஜூக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேம் ஏற்பட்டது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சின்னராஜ் தனது மனைவியை மேட்டுப்பாளையம் பாரதி நகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு குடிபோதையில் வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னராஜ் அங்கு இருந்த கத்தியை எடுத்து ஜெனீபர் அகல்யாவின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கிழித்தார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜெனிபர் அகல்யாவை அங்கு இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கனூரில் மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் நேற்று திருக்கனூரில் உள்ள தனியார் மதுகடைக்கு மதுகுடிக்க சென்றார். பின்னர் மது குடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல தயாரானார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜா (33) என்பவர் செல்வராஜை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார். ஆனால், செல்வராஜ் பணம் கொடுக்க மறுத்து விட்டார். தொடர்ந்து ராஜா பணம் கேட்டு ரகளை செய்யவே ஆத்திரம் அடைந்த செல்வராஜ் ராஜாவை தாக்கினார்.

    இதனால் ஆவேசம் அடைந்த ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வராஜை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், காயம் அடைந்த செல்வராஜ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
    தளி அருகே வடமாநில வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சபீத்பசுமாதிரி (வயது 26), பிரதீப்போரா (32). இவருடைய சகோதரியை தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சபீத்பசுமாதிரி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சபீத்பசுமாதிரி, பிரதீப்போரா ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கோட்டரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். தனது தங்கையை அசாமில் விட்டு வந்தது தொடர்பாக பிரதீப்போரா, சபீத்பசுமாதிரியிடம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த பிரதீப்போரா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சபீத்பசுமாதிரியை சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து ஓடி வந்தனர். இதைப் பார்த்த பிரதீப்போரா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சபீத்பசுமாதிரியை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சபீத்பசுமாதிரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரதீப்போராவை வலைவீசி தேடி வருகின்றனர். வடமாநில வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மத்தூர் அருகே வாலிபரை கத்தியால் குத்திய அக்காவின் கணவரை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள மாடரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் வெங்கடேசன் (38). இவரது மனைவியின் சகோதரர் அதே பகுதியை சேர்ந்த வள்ளரசு (வயது18). கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

    இந்த நிலையில் வெங்கடேன் தனக்கு பிடிக்காத ஒருவருடன் வள்ளரசு பேசி கொண்டு இருந்தார். அதனை வெங்கடேசன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேசன் வைத்திருந்த கத்தியை எடுத்து வள்ளரசை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து வள்ளரசு மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வெங்டேசனை கைது செய்தனர். பின்னர் போலீசார் போச்சம்பள்ளி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனர்.
    டி.வி.யில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதை தட்டிக்கேட்ட சித்தியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வடக்கு பார்வதிபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ராமு, பெயிண்டர். இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக லட்சுமி (வயது36) என்ற பெண்ணை  திருமணம் செய்தார். முதல் மனைவி மூலம் ராஜேஷ் உள்ளிட்ட 2 மகன்களும், 2-வது மனைவி லட்சுமி மூலம்  2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் ஒரேவீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேஷ் ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். லட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக  வேலைசெய்து வந்தார். 

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி.யில்  பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில்  லட்சுமி செல்போன் அழைப்பு  வந்ததால் டி.வி. சவுண்டை குறைக்கும்படி  ராஜேசிடம் கூறினார். ஆனால் சவுண்டை  குறைக்காமல் ராஜேஷ் பிடிவாதம் செய்தார். 

    இதனால் ரஜேசை மிரட்ட போலீசில் புகார் செய்ய போவதாக  லட்சுமி கூறினார்.  இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியின் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த  லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில்  சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக  லட்சுமி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த  புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ்  இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
    ஊத்துக்கோட்டை அருகே என்ஜினீயரை கத்தியால் குத்திய விவசாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (27). என்ஜினீயர். சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    அதே கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் விவசாயி. இவர் நண்பர் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

    இதனை சுதாகர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பூபாலனும், விஜயகுமாரும் சேர்ந்து கத்தியால் சுதாகரை குத்தினர். பலத்த காயம் அடைந்த அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து பென்னாலூர் பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து பூபாலனை கைது செய்தார். தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனர்.
    வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் மகள் கண்ணெதிரே தந்தையை கத்தியால் வெட்டிய கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 52) தனியார் கம்பெனியில் வேலை செய்யும் இவரது மகள் ரஞ்சிதா (19) என்பவரை நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கூட்ரோட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது ஜெயின் கோவில் அருகே சென்ற போது பின்னால் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் (55) (கூலித் தொழிலாளி) என்பவர் ரஞ்சிதா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். பின்னால் துரத்தி சென்ற ஜீவா ஏன் எனது மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்கின்றாய் என கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜீவாவை மறைத்து வைத்திருந்த கத்தியால் உலகநாதன் வெட்டியுள்ளார்.

    மேலும் உலகநாதனுக்கு ஆதரவாக அவரது மகன் அஜித்குமார் (19) என்பவர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த ஜீவா வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக ஜீவா வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஜித்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    உத்தனபள்ளி அருகே முன் விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தனபள்ளி அருகே உள்ள தேன் துருகம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ருணப்பா மகன் அருண்குமார் (வயது25). அதே பகுதியை சேர்ந்த மற்றொரு அருண்குமார் (27). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.  

    இந்த நிலையில் நேற்று காலை இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதனை அருண்குமார் நண்பர் மகேஷ் தட்டி கேட்டார். அப்போது திடீர் என கிருஷ்ணப்பா மகன் அருண்குமார் அவர் நண்பர்கள் சிவப்பா, மாதேவப்பா, தருன்குமார், அருண்குமார் ஆகிய 4 பேர் சேர்ந்து மகேஷை சரமாரி தாக்கி மறைத்து வைத்து இருந்த கத்தியால் மகேஷ் கால், தொடை பகுதியில் குத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஒடினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த மகேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து  உத்தனபள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
    திருவட்டார் அருகே மளிகை கடைக்காரரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 3 பேர் பெயர்களும் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே பூவான்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜெயக்குமார் (வயது 50). இவர் வேர்கிளம்பி சந்தையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முளகுவிளையைச் சேர்ந்த ஜோஸ் (வயது 24), அவரது சகோதரர்கள் சுபின் (22), யூஜின் (21) மற்றும் கண்டால் தெரியும் நபர்கள் சிலர் ஜெயக்குமாரை வழி மறித்தனர்.

    அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோஸ் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து ஸ்டாலின் ஜெயக்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதையடுத்து ஸ்டாலின் ஜெயக்குமார் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசிலும் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். ஜோஸ்,சுபின், யூஜின் மீது கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் 3 பேர் பெயர்களும் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
    விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிளை எடுக்கும் தகராறில் வாலிபரின் முதுகில் கத்தியால் குத்திய இளம்பெண்ணின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 20). கூலி தொழிலாளி.

    அதே தெருவில் அவரது மாமா சக்திவேல் வசித்து வருகிறார். இவரது மனைவி பொன்னி (30). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்திவேல் வெளிநாடு சென்று விட்டார்.

    இன்று காலை அன்பரசன் தனது மாமா சக்திவேல் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த மோட்டார் சைக்கிளை அன்பரசன் எடுக்க முயன்றார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த பொன்னி மோட்டார் சைக்கிளை எடுக்கக்கூடாது என்றார்.

    இதைத்தொடர்ந்து அன்பரசனுக்கும், பொன்னிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பொன்னி சமையலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து அன்பரசனின் முதுகில் குத்தினார். பின்னர் அந்த கத்தியை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

    கத்தி குத்தில் காயம் அடைந்த அன்பரசன் கூச்சல் போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ரத்தம் சொட்ட சொட்ட அன்பரசனை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் முதுகின் விலா எலும்பில் குத்தி இருந்த கத்தியை எடுக்க முடியாமல் திணறினர். கத்திய அகற்ற ஆஸ்பத்திரியில் போதிய உபகரணங்கள் இல்லை.

    இதனை தொடர்ந்து அன்பரசனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆபரே‌ஷன் மூலம் அந்த கத்தியை அகற்ற முயற்சி நடந்து வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×