search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கென்யா"

    மொராக்கோவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்ய வீரர், வீராங்கனைகள், பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றினர். #MoroccoMarathon #KenyanAthletes
    ரபாத்:

    மொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 24 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் கென்யாவைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.  ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சமி கிகன் பந்தய தூரத்தை 2 மணி 2 நிமிடம் 12 வினாடிகளில் கடந்து புதிய சாதனையுடன், முதல் பரிசை தட்டிச் சென்றார்.

    மொராக்கோ வீரர் ஆத்மனே எல் கவும்ரி பந்தய தூரத்தை 2 மணி 8 நிமிடம் 20 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்தார். எத்தியோப்பிய வீரர் சிலி டிசாசா (2 மணி, 9 நிமிடம், 25 வினாடிகள்)  மூன்றாம் பரிசை வென்றார்.



    பெண்கள் பிரிவில் கென்ய வீராங்கனை சில்வியா கிபட் 2 மணி, 25 நிமிடம், 52 வினாடிகள் என்ற சாதனையுடன் முதல் பரிசை வென்றார். இதேபோல் கென்யாவின் செல்மித் மியூரிகி, பிரிஸ்கா செரோனோ ஆகியோர் 2 மற்றும் 3வது பரிசை தட்டிச்சென்றனர். #MoroccoMarathon #KenyanAthletes

    கென்யா நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பஸ் விபத்தில் குழந்தை, பெண்கள் உள்பட 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். #KenyaBusAccident
    நைரோபி:

    கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டேரா பகுதியில் இருந்து நைரோபி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் மசாகோஸ் பகுதியில் வந்தபோது லாரி மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் 11 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #KenyaBusAccident
    கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று நடந்த விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். #planecrash #Foreignersdead
    கெரிசோ:

    கென்யாவின் வடமேற்கு பகுதியில் இன்று காலை மசாய் ஒமாரா பகுதியில்  இருந்து  லோட்வார் நோக்கி, ஒரு சிறிய ரக விமானம் சென்றுக்கொண்டிருந்தது. கெரிசோ கவுன்டி வான் வெளியில் பறந்த போது கட்டுபாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொருங்கியது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கென்யா நாட்டினர் அல்ல. வெளிநாட்டவர் என தெரியவந்துள்ளது.  

    விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. மேலும்  இந்த விமான விபத்து குறித்து போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  #planecrash #Foreignersdead

    கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. #KenyaHotelAttack #AlShabab
    நைரோபி:

    கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியதால், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடி ஆங்காங்கே பதுங்கினர். தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் சுற்றி வளைத்ததும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு போலீசார் பதிலடி கொடுத்தனர்.



    சுமார் 20 மணி நேரம் நடந்த இந்த சண்டை நேற்று காலை முடிவுக்கு வந்தது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிப்பு வெளியானது. அதன்பின்னர், மீட்பு பணியை தொடங்கியபோது, மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழப்பு 21 ஆக உயர்ந்தது. தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். பலத்த காயங்களுடன் 28 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்ததற்கு பழிதீர்க்கும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. #KenyaHotelAttack #AlShabab
    கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. #KenyaHotelAttack #UNcondemns
    நைரோபி: 

    கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று மாலை பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.  

    இதில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இந்நிலையில், கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக ஐ.நா. சபை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது கொடூரமானது. இந்த தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. சபை தலைவர் எஸ்பினோசா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலையும், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KenyaHotelAttack #UNcondemns
    கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகி உள்ளனர். #KenyaHotelAttack #AlShabab
    நைரோபி:

    கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று மாலை பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் சுற்றி வளைத்ததும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தினர்.



    விடிய விடிய நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலையில் ஓட்டலின் ஒரு பகுதியில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இன்று காலை நிலவரப்படி ஓட்டலுக்குள் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #KenyaHotelAttack #AlShabab
    கென்யா தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் சோமாலியா பயங்கரவாதிகளான அல் ஷபாப் அமைப்பினர் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர். #KenyaHotelAttack #AlShabab
    நைரோபி:

    கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் இன்று பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் பற்றியெரிந்தன. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.

    பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார் ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    இந்நிலையில், கென்யாவின் நைரோபி நகரில் ஓட்டலில் நடைபெற்ற தாக்குதலுக்கு சோமாலியா நாட்டை சேர்ந்த அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #KenyaHotelAttack #AlShabab
    கென்யாவில் வணிக மையத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் காயமடைந்தனர். மேலும் இத்தாலி பெண் ஊழியரை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். #Kenya #ItalianWomanKidnap
    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கிலிப்பி நகரில் ஒரு வர்த்தக மையம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள்.

    அவர்களை சுட்டு வீழ்த்திய அந்த நபர்கள், அங்கிருந்து 23 வயதான ஒரு பெண்ணை துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றனர். அந்தப் பெண், இத்தாலியை சேர்ந்தவர் என்றும், தொண்டு அமைப்பு ஒன்றில் சேர்ந்து பணியாற்றி வந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதின் பின்னணி என்ன, தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. ஆனால் இதை பயங்கரவாத தாக்குதல் என்று கருதி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KenyaBusAccident
    நைரோபி:

    கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள காகமேகா நோக்கி பேருந்து ஒன்று இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 52க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அந்த பேருந்து கெரிச்சோ கவுண்டி பகுதியில் சென்றபொழுது சாலையில் திரும்பியபோது திடீரென கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 50 பேர் பலியாகினர். பேருந்தின் மேற்கூரை உடைந்து நொறுங்கியது.



    தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் கென்யாவில் சாலை விபத்துகளில் 3 ஆயிரம் பேர் பலியாகின்றனர். இந்த எண்ணிக்கை 12 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. #KenyaBusAccident
    கென்யாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் தைவான் சுற்றுலா பயணியை நீர்யானை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நைரோபி:

    கென்யாவின் தலைநகர் நைரோபி அருகே நைவாசா என்ற ஏரியில் நீர்யானைகள் சரணாலயம் உள்ளது. இது மலைக்கு இடையில் அமைந்துள்ளது.

    தைவானை சேர்ந்த சுற்றுலா பயணி சங் மிங் சாங் (66) என்பவர் அங்கு சென்று இருந்தார். வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப் பார்த்தார்.

    பின்னர் மலையின் உயரமான இடத்தில் இருந்து நீர் யானைகளை போட்டோ எடுத்தார். அப்போது கால் தவறி நீர்யானைகள் இருந்த குளத்துக்குள் விழுந்து விட்டார். இதனால் ஆவேசம் அடைந்த நீர்யானை அவரை கடித்து குதறியது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

    உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டனர். இருந்தும் மார்பில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 6 பேர் நீர்யானைகளால் கடித்து கொல்லப்பட்டுள்ளனர்.
    துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா 50-15 என்ற புள்ளிக்கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் மூன்று லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில், இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, கென்யாவை எதிர்கொண்டது.

    தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் கென்யா வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் கென்யா வீரர்களை அவுட் ஆக்கி புள்ளிகளை தட்டிச்சென்றனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 29-5 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 21 புள்ளிகளும், கென்யா 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 50-15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் 57-27 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND
    துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா 48-19 என்ற புள்ளிக்கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. அறிமுக ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. 

    தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் கென்யா வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் கென்யா வீரர்களை அவுட் ஆக்கி புள்ளிகளை தட்டிச்சென்றனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 27-9 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 21 புள்ளிகளும், பாகிஸ்தான் 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 48-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் 54-24 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 25-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன.  #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND
    ×