search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கென்யா"

    இண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பையில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி சாதனையை சமன் செய்துள்ளார் சுனில் சேத்ரி. #SunilChhetri #Messi
    மும்பை:

    கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின. தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. 

    இந்த போட்டியில் இந்தியா 2--0 என்ற கோல்கணக்கில் வென்று காண்டினெண்டல் கால்பந்து கோப்பையை வென்றது. 
    கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்டார்.

    இந்த 2 கோல்களுடன் சேர்ந்து சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் அர்ஜெண்டினாவுக்காக ஆடிய மெஸ்சியின் 64 கோல்கள் என்ற மைல்கல்லை சமன் செய்துள்ளார்.

    போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ 81 கோல்கள் அடித்து  முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SunilChhetri #Messi
    இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. #INDvKEN #IntercontinentalCup
    மும்பை:

    கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன.

    இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.



    ஆட்டத்தின் தொடக்கத்தில் 8வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, 29-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி 2வது கோலையும் அடித்தார். இதையடுத்து, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.



    அதன்பின், தொடர்ந்து ஆடிய கென்யா அணி இறுதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #INDvKEN #IntercontinentalCup
    கென்யா அணியுடனான கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #Chhetri100 #INDvKEN #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup

    புதுடெல்லி:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

    இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. இது இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியின் 100-வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் செத்ரிக்கு ஆதரவளிக்க ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டது.

    இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டட்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் கேப்டன் சுனில் செத்ரி கோல் அடித்தார். இது அவரின் 60-வது சர்வதேச கோலாகும். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 



    அதைத்தொடர்ந்து 71-வது நிமிடத்தில் ஜேஜே ஒரு கோல் அடித்தார். அதன்பின் கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் சுனில் செத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

    இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 7-ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. #Chhetri100 #INDvKEN #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup 
    கென்யாவில் அணை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. #KenyaDamBurst
    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகள், விளை நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கின.

    முதல் கட்டமாக 41 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் ஆணையம் தெரிவித்தது.



    இந்நிலையில், கென்யாவில் அணை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. 

    இதுதொடர்பாக பேரிடர் மீட்பு அதிகாரிகள் கூறுகையில், நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் மாயமாகி உள்ளனர் என தெரிவித்தனர். #KenyaDamBurst
    ×