search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தியப்பிரதேசம்"

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி கமல்நாத், மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Kamalnath
    போபால்:

    மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த  கமல்நாத் பதவிவகித்து வருகிறார். இவர் சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    இதற்கிடையே, சிந்த்வாரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தனது மகன் நகுல் நாத்தை களமிறக்கி உள்ளார் கமல்நாத்.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி கமல்நாத்,  மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, தனோரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்நாத் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த பிராந்தியத்துடன் 40 ஆண்டு காலமாக இணைந்து பணியாற்றி வருகிறேன். நீங்கள் கொடுத்த அன்பும், வலிமையும்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

    நகுல் நிச்சயம் உங்களுக்கு சேவையாற்றுவார். அதற்கான பொறுப்பை நான் அவரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். உங்களுக்கு பணியாற்றுவதற்கு அவரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சேவையாற்றவில்லை என்றால், அவரது உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Kamalnath
    வடமாநிலங்களில் பெய்து வரும் புயல் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #RainStrom
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் தற்போது புயல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையில் சிக்கி மக்கள் பலியாகி வருகின்றனர்.

    ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியதுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    ராஜஸ்தானில் அதிகபட்சமாக 25 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 15 பேரும், குஜராத்தில் 10 பேரும் பலியாகினர். மேலும் மகாராஷ்டிராவில் 3 பேர் மழைக்கு உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அத்துடன்  மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #RainStrom
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சிந்த்வாரா தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்த முதல் மந்திரி கமல்நாத் மகன் நகுல் நாத்துக்கு 660 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #Chhindwara #NakulNath
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகிப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத். இவரது மகன் நகுல் நாத் வரும் பாராளுமன்ற தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், சிந்த்வாரா பாராளுமன்ற தொகுதியில் நகுல் நாத் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்புக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்துக்களின் விவரம் வருமாறு:

    அசையும் சொத்துக்களின் மதிப்பு 615 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு 42 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தனக்கு 869 கிராம் எடையில் தங்க கட்டிகளும், 7 கிலோ வெள்ளி நகைகளும் உள்ளது. மேலும் 147 காரட் வைரம் மற்றும் கல் நகைகள் உள்ளிட்ட நகைகள் 78 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Chhindwara #NakulNath
    மத்தியப்பிரதேச முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். #Kamalnath #ITraid
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் கமல்நாத்.

    முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரியாக பிரவீன் காக்கர் என்பவர் இருந்து வருகிறார். இவரது இல்லம் தலைநகர் போபாலில் உள்ள விஜய்நகர் பகுதியில் அமைந்துள்ளது.



    இந்நிலையில், டெல்லியில் இருந்து 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தவிர்த்து ஷோரூம் ஒன்றிலும் மற்றும் பிற இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    இதேபோல், போபால், இந்தூர், கோவா மற்றும் டெல்லி உள்பட 50க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். #Kamalnath #ITraid
    மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். #PulwamaAttack
    போபால்:

    புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது.

    மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

    மேலும் மத்தியப்பிரதேசத்தில் விளையும் தக்காளிக்கு பாகிஸ்தானில் வரவேற்பு இருந்தது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.


    காஷ்மீரில் புல்வாமாவில் மத்தியப்படை வீரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் பெத்லவாட் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டனர்.

    பாகிஸ்தானில் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்ட தக்காளியை அவர்கள் குறைந்த விலையில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றனர். #PulwamaAttack
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இரு பெண்கள் உள்பட 28 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். #28ministers #MPministers #ministerstakeoath
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதைதொடர்ந்து, கடந்த 17-ம் தேதி அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்.



    இந்நிலையில், கமல்நாத் தலைமையிலான அரசில் இரு பெண்கள் உள்பட 28 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றனர். தலைநகர் போபாலில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆனந்தி பென் படேல், புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். #28ministers #MPministers   #ministerstakeoath
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவியேற்ற கமல்நாத், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் முதல் கோப்பில் இன்று கையெழுத்திட்டு உள்ளார். #Madhyapradesh #Kamalnath #FarmLoanWaiver
    போபால்:

    மத்திய பிரதேசத்தின் முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த கமல்நாத் இன்று காலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    காங்கிரஸ் சார்பில் நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட கமல்நாத் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதல் கோப்பில் இன்று கையெழுத்திட்டார். #Madhyapradesh #Kamalnath #FarmLoanWaiver
    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றியாகும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Congressworkers #RahulGandhi #2018Electionresults
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்றிரவு சுமார் 8 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 90 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 88 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், கோண்ட்வானா கந்த்தந்த்ரா கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 21 தொகுதியிலும், காங்கிரஸ் 23 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 1 தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    61 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 57 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
     
    பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்றிரவு சுமார் 8 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றி. இந்த வெற்றி காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நாங்கள் நிறைவேற்றுவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

    ’சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் ஒன்றானவை, பா.ஜ.க.வின் சித்தாந்தத்தில் இருந்து மாறுபட்டவை.

    காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களுக்கான புதிய முதல் மந்திரிகளை தேர்வு செய்வது பெரிய காரியமல்ல. அது சுமுகமாக முடிந்துவிடும். எங்களை வெற்றிபெற வைத்த மாநில மக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தை வகுத்து, அவர்கள் பெருமைப்படும் வகையில் அவற்றை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும்.

    இந்த நாட்டின் பிரதமரை மக்கள் தேர்ந்தெடுத்தபோது, ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் விவசாயிகள் பிரச்சனை ஆகிய மூன்று விவகாரங்களை முன்வைத்து தேர்வு செய்தனர். பிரதமர் ஊழலுக்கு எதிராக போராடுவார் என்று மக்கள் மனதில் இருந்தது. ஆனால், இப்போது பிரதமரே ஊழல்வாதி என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.



    பா.ஜ.க.வை பற்றி நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை இந்த தீர்ப்பின் மூலம் பிரதமருக்கு மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

    பா.ஜ.க.வுக்கு என்றொரு சித்தாந்தம் உள்ளது. அதை எதிர்த்து போராடி நாங்கள் வெற்றி பெறுவோம். இன்று அவர்களை நாம் தோற்கடித்து இருக்கிறோம். 2019-பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம். ஆனால், யாரையும் நாங்கள் அழிக்க விரும்பவில்லை’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults
    சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் முதல்வர்கள் யார்? என்பது தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். #RahulGandhi #MPCM #RajasthanCM #ChhattisgarhCM #2018electionresults
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
     
    இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 198 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்று, 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்று, 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.



    இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும்.

    இதேபோல், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை (புதன்கிழமை) அந்தந்த மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது. #RahulGandhi #MPCM #RajasthanCM #ChhattisgarhCM #2018electionresults
    மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், மோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு என காங்கிரஸ் தலைவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அந்த மாநிலத்தின் சில தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.



    இந்நிலையில், ம.பி.யில் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், மோடியின் தாயார் வயதுபோல் ரூபாயின் மதிப்பும் தேய்ந்து வருகிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மபியின் இந்தூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னால் இந்திய ரூபாயின் மதிப்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது போல் ரூபாயின் மதிப்பு உள்ளது என தெரிவித்திருந்தீர்கள்.

    ஆனால், தற்போது உங்கள் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு உங்களது தாயாரின் வயதுபோல் தேய்ந்து வந்துள்ளது என தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ராஜ் பாப்பரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.  #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    கட்சி தலைவர் பதவியை நேரு குடும்பத்தை சேராதவர்களுக்கு தருவீர்களா? என ம.பி.யில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி காங்கிரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். #MadhyaPradeshAssemblyElections #Modi #NehruFamily
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர்.

    பிரதமர் மோடி இன்று தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். குவாலியர் மாவட்டத்தின் அம்பிகாபூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்துள்ளது என்பதை அவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    செங்கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உரையாற்றி வருவதை மக்கள் கவனித்து வருகின்றனர்.

    மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை அடல்ஜி உருவாக்கினார். அந்த இரண்டு மாநிலங்களும் வளர்ச்சியும் அமைதியும் நிலவி வருகின்றன. ஆனால் காங்கிரஸ் உருவாக்கிய தெலுங்கானா மாநிலத்தின் நிலைமை என்ன? கடந்த நான்கரை ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    டீ விற்றவர் எப்படி பிரதமராக முடிந்தது என காங்கிரசார் அழுது புலம்பி வருகின்றனர். நேரு குடும்பத்தை சேராதவர்களுக்கு கட்சியின் தலைவர் பதவி கொடுத்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். #MadhyaPradeshAssemblyElections #Modi #NehruFamily
    மத்தியப்பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான சத்ரஜ் சிங் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். #SatrajSingh #Hoshangabad #Congress
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் ஹொஷங்காபாத் சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்ரஜ் சிங். முதல் மந்திரி சிவராஜ் சிங் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மந்திரியாக பதவி வகித்தவர்.

    75 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று பாஜக சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது.  அதன்படி, ம.பி.யில் இருந்து மந்திரி பதவியில் இருந்து விலக்கப்பட்டவர் சத்ரஜ் சிங்.



    இந்நிலையில், பாஜகவின் முன்னாள் மந்திரியான சத்ரஜ் சிங் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹொஷங்காபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹொஷங்காபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பாடுபடுவேன் என தெரிவித்தார்.
    #SatrajSingh #Hoshangabad #Congress 
    ×