search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    அரசியல் ரீதியாக என்னுடன் மோத பலமில்லாத காங்கிரசார் அரசியல் பற்றி எதுவுமே தெரியாத தனது தாயாரை விமர்சிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். #Modi #ModiMother #Modislams
    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடைந்துவரும் வீழ்ச்சி தொடர்பாக சமீபத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பார், அமெரிக்க டாலரின் உயர்வை மோடியின் தாயார் வயதுபோல் டாலரின் விலையும் கூடிக்கொண்டே போகிறது என்று சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சத்தர்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பேசிய மோடி கூறியதாவது:-

    கடந்த 17,18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நான் வெற்றிகரமாக போரிட்டு வருகிறேன். என்னை எதிர்த்து போராட சக்தியற்ற காங்கிரஸ் பிரமுகர்கள் இன்று மிகவும் கீழ்த்தரமாக சென்று எனது தாயாரை அரசியலுக்கு இழுக்கின்றனர்.



    என்னோடு போட்டிப் போட்டு வெல்ல முடியாது என்பதால் அரசியல் பற்றி எதுவுமே தெரியாத என் தாயாரை இப்போது வம்புக்கு இழுக்கிறார்கள்.

    எனது தாயாரின் பெயரை இழுப்பதால் மட்டும் இந்த தேர்தலில் டெபாசிட் பறிபோகும் அளவுக்கு நீங்கள் அடையவிருக்கும் தோல்வியில் இருந்து தப்ப முடியாது.

    இங்கு நடைபெறும் சிறிய உள்ளாட்சி தேர்தலில்கூட இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனத்தை யாரும் முன்வைக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி தருமாறு அனைத்து தாய்மார்களையும், சகோதரிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

    என்னை மட்டுமில்லாமல் மத்தியப்பிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானைகூட மாமா என்று விமர்சித்து கிண்டல் செய்கிறார்கள். உங்கள் தாய்வழி மாமாக்கள் ஓட்டாவியோ கோத்ரோச்சி (போபர்ஸ் ஊழல்) மாமாவையும், வார்ரென் ஆன்டர்சன் (போபால் விஷவாயு விபத்துக்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்) மாமாவையும் நீங்கள் ஏன் நினைப்பதில்லை?

    எனது அரசில் 125 கோடி மக்களும் எஜமானர்கள். ஒரு மேடம் (சோனியா) கையில் உள்ள ரிமோட் கன்ட்ரோலால் இந்த ஆட்சி நடக்கவில்லை. மேடம் தலைமையிலான கட்சியின் ஆட்சி நடந்தபோது பணக்காரர்களுக்காக வங்கி கஜானாக்கள் காலி செய்யப்பட்டன. ஆனால், இந்த ஆட்சியில் தேவையில் உள்ள இளைஞர்களுக்காக வங்கி கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #Modi #ModiMother #Modislams

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்திப்பது அரசியல் செய்வதற்கு அல்ல ஆறுதலும், உதவிகளும் வழங்க மட்டுமே என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கும்போது மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. காவல்துறை பாதுகாப்போடு பிரதான சாலைகளில் செல்லும் அமைச்சர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மட்டுமே சந்தித்து திரும்புகிறார்களே தவிர, நகர கிராமப்புற பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மற்ற மக்களை சந்திப்பதில்லை என போகுமிடமெல்லாம் மக்கள் கூறுகின்றனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதாக கூறுகின்றனர். ஆகவே சில நாட்களுக்கு மட்டுமே நிவாரணம் அளிப்பதைவிட மத்திய மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி, அம்மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும்.

    அமைச்சர்கள் ஆங்காங்கே ஆய்வு கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல விடாமல் தடுப்பதை தவிர்த்து அதிகாரிகளை சுதந்திரமாக கிராமங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

    இதற்கு முன்பு புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகைக்கு யானைப்பசிக்கு சோளப்பொறியை தந்ததை போல் மத்திய அரசு நிவாரணம் கொடுத்துள்ளது. இம்முறையாவது அவ்வாறு இல்லாமல் இடைக்கால நிவாரண நிதியாக குறைந்தபட்சம் 5 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

    சோழநாடு சோறுடைத்து என்று சொல்வார்கள். ஆனால் செல்லும் இடங்களில் எல்லாம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அநாதைகள் போலவும், அகதிகள் போலவும் உணவுக்காக வீதிகளில் நிற்பது வேதனையாக உள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்திப்பது அரசியல் செய்வதற்கு அல்ல. ஆறுதலும், உதவிகளும் வழங்க மட்டுமே.

    அ.ம.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்.ஜி.ஓ.க்கள் போல செயல்பட்டு வருகிறார்கள். அ.ம.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் முகாம்களுக்கும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும், தொடர்ந்து அனுப்பப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

    தனியார் தொண்டு நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருவதை வரவேற்கிறேன். இந்த பணியில் அவர்களுக்கு இடையூறு ஏற் டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  #TTVDhinakaran #GajaCyclone

    முதல்-அமைச்சர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா? அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலின் கோர தாண்டவத்தால் நிலைகுலைந்து போயுள்ள டெல்டா மாவட்டங்களில், ஆறு நாட்களாகியும் மக்கள் உணவின்றி, குடிநீரின்றி, மாற்று துணியின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.

    கடந்த இரண்டு நாட்களாக, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தபோது, பல கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரி கூட தங்களை காண வரவில்லை என்று மக்கள் கதறுகின்றனர்.

    இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஹெலிகாப்டரில் பறந்து வந்த முதல்வர், வானிலையை காரணம் காட்டி திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்லாமலேயே திரும்பியுள்ளார். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் சில பயனாளிகளுக்கு மட்டும் நிவாரண உதவி வழங்கிவிட்டு பறந்துவிட்டார்.



    தற்போது, முதல்-அமைச்சர் பிரதமரை நாளை சந்தித்து புயல் நிவாரண நிதி கோர இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

    நூற்றுக்கணக்கான கிராமங்களில், பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த அவர்களது நிலங்களையும், வீடுகளையும், கால்நடைகளையும், உடமைகளையும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட வந்து பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதல்வர் நிவாரண நிதியை கோர இருக்கிறார்? மிகப் பெரிய இயற்கை பேரிடர் நடந்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிவாரண நிதி கோராதது ஏன்?

    பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறியாமல், இழப்புகளை மதிப்பீடு செய்யாமல், அவசர அவசரமாக முதல்-அமைச்சர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும். நான் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்’ என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறினார். #LathaRajinikanth #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ளார். அவர் எப்போது அரசியல் களத்தில் குதித்து, புதிய கட்சியை தொடங்குவார் என்று அவரது ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள். இந்தநிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- உங்களது கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்.

    கேள்வி:- சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்துக்கு உறுதுணையாக இருக்கும் நீங்கள், அரசியலிலும் உறுதுணையாக இருப்பீர்களா?

    பதில்:- அவர் ஆன்மிக பாதை, அரசியல் பாதை என்று என்ன முடிவு எடுத்தாலும் நான் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருப்பேன்.

    கேள்வி:- ரஜினிகாந்த் நடித்த படங்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தமான படம் எது?

    பதில்:- அப்படி குறிப்பிட்டு சொல்ல முடியாது. பெரிய பட்டியலே இருக்கிறது.



    கேள்வி:- ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களின் கதை குறித்து உங்களிடம் விவாதிப்பாரா?

    பதில்:- பொதுவாகவே எல்லா விஷயங்களிலும் நாங்கள் கலந்து ஆலோசிப்போம்.

    கேள்வி:- திரை உலகில் ரஜினிகாந்துக்கு பொருத்தமான ஜோடி யார் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:- ஒருத்தர் என்று உண்மையாகவே சொல்லிவிட முடியாது. எல்லோரும் எனக்கு நண்பர்கள். எல்லோரும் எங்களுக்கு வேண்டியவர்கள். எல்லோரையும் நான் மதிக்கிறேன்.
     
    இவ்வாறு அவர் கூறினார். #LathaRajinikanth #Rajinikanth
    என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என்று குழந்தைகள் தின விழாவில் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ChildrensDay
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஊர்களுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று பேசி வரும் அவர் இன்று குழந்தைகள் தினத்தையொட்டி கதீட்ரல் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டார்.

    லிட்டில் பிளவர் மேல் நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    நான் இந்த பள்ளிகளுக்கு 37 வருடங்களாக தொடர்புடையவன். ராஜபார்வை படம் எடுக்க இந்த பள்ளி உதவியாக இருந்தது. தன்னம்பிக்கை விடாமுயற்சி அனைத்தும் எனக்கு பாடமாக இருந்தது. நானும் இந்த பள்ளியில் வெளியில் உள்ள மாணவன் என்றால் மிகையாகாது.



    இந்த குழந்தைகளுக்கு இருக்கும் நம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந்தால் இந்தியா பல் மடங்கு முன்னேறிவிடும். இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இதற்கு ஆசிரியர்களை பாராட்டுகிறேன். இங்கு வந்துசெல்லும் போதெல்லாம் என் மனதை இறுகும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அவர்கள் சந்தோ‌ஷம் தொடரட்டும். இவர்கள் என்னை விட நீண்ட ஆயுள் உடையவர்கள். அவர்கள் வாழ்த்தும்போது என் ஆயுளும் நீளும்.

    ஆட்டத்துடன் சம்பந்தப்பட்டவன் நான். இங்கு நடனம் ஆடிய மாணவர்களுக்கு பாராட்டுக்கள். இங்கு வாழ்த்து பெற வந்தேன். வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவில் பாடிய பாடல் இன்று எனக்கே நம்பிக்கை அளிக்கக்கூடியதாக மாறியுள்ளது. புத்தகம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்திருந்தார்கள். அது விரைவில் அவர்களுக்கு அளிக்கப்படும்.

    புகழ் எனக்கு போதுமான அளவில் கொடுத்துவிட்டீர்கள். தகுதிக்கு அதிகமான புகழை தமிழகம் எனக்கு சேர்த்துள்ளது. இனி தமிழகத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    முன்னதாக விழாவில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினார்கள். கமல் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் கமல் நடிப்பில் இடம்பெற்ற உன்னால் முடியும் தம்பி பாடலையும் பாடினார்கள்.

    சக்தி என்னும் மாணவர் கமலிடம் பார்வைத் திறனற்றவர்களுக்கு படிக்க உதவும் பிரெய்லி புத்தகங்களை அச்சிடும் கருவி பழுதாகி விட்டதாகவும் அதனை தங்களுக்கு வாங்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தார். கமல் அந்த வேண்டுகோளை ஏற்று மும்பையில் இருந்து இறக்குமதி செய்து தருவிப்பேன் என்று உறுதி அளித்தார். #KamalHaasan #ChildrensDay

    ரஜினியின் அரசியல் குறித்து சாடிய முரசொலி நாளிதழின் ஆசிரியர் இனி யாருடைய மனதும் புண்படாதபடி கவனத்துடன் செயல்படுவோம் என விளக்கம் அளித்துள்ளார். #Rajini #Murasoli #RajiniPolitics
    சென்னை:

    தமிழகத்தில் ரஜினியின் அரசியல் வருகை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் தனது மன்ற நிர்வாகிகளுக்கான அவரது அறிக்கை குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்த முரசொலி நாளிதழ், ரஜினியின் ரசிகரின் கேள்விகள் போன்று அமைக்கப்பட்டு இருந்தது.

    இது ரஜினியின் அரசியல் வருகை குறித்து கடுமையாக சாடியதாக பலராலும் பேசப்பட்டதோடு, விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், முரசொலியின் தலைமை ஆசிரியர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

     

    அந்த விளக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக இருப்பதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajini #Murasoli #RajiniPolitics
    பதவி ஆசையில் அரசியலுக்கு வரக்கூடாது என்ற ரஜினிகாந்தின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress #Rajinikanth
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பதாக கூறி, அதை பெரிதுபடுத்துகிறார்கள். ஆனால் எங்களுக்குள் எந்த கோஷ்டி மோதலும் இல்லை.

    நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரே ரோட்டில் தலைவர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்ததை வைத்து கோஷ்டி பூசல் என்கிறார்கள். ஆனால் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.



    எங்கள் கட்சியில் இருக்கும் கோஷ்டிபூசலை சரிசெய்யும்படி, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். முதலில் உங்கள் கட்சிக்குள் சுப்பிரமணியசாமி, ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோசியுங்கள்.

    மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்பக் கூடாது. முதலில் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கை துடையுங்கள்.

    ரசிகர்கள் பண ஆசையுடனும், பதவி ஆசையுடனும் அரசியலுக்கு வரக்கூடாது என்று ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார். இது எல்லா கட்சியினரும் சொல்லும் பொதுவான கருத்து தான். இது வரவேற்கத்தக்கது.

    ரஜினியை தி.மு.க. விமர்சித்து இருப்பது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

    தகுதிநீக்க விவகாரத்தில் அவர்கள் அப்பீலுக்கு சென்றால் இடைத்தேர்தல் நடைபெறுவது காலதாமதம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி வாழப்பாடி ராமமூர்த்தியின் 16-வது நினைவுநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், நிர்வாகிகள் திருவான்மியூர் மனோகரன், கராத்தே ரவி, ஓட்டேரி தமிழ்செல்வன், தணிகாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். #Thirunavukkarasar #Congress #Rajinikanth

    ‘இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது’ என பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP
    நெல்லை :

    பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லை வந்தார். அவர் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து குறுக்குத்துறை படித்துறை தாமிரபரணி ஆற்றில் இறங்கி புனித நீராடி வழிபாடு நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா தாமிரபரணி ஆற்றில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. உள்ளூர் மட்டும் அல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

    விழாவுக்கு போலீசார் சிறந்த முறையில் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். அதேபோல் அரசும் படித்துறை பகுதியில் தேவையான பணிகளை செய்துள்ளது.



    மகா புஷ்கர விழாவில் சுவாமி நெல்லையப்பர் தீர்த்தவாரி நடைபெறாதது ஒன்று தான் குறைவாக இருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபத்தில் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் எழுந்தருள வேண்டும். அங்கு சுவாமி, அம்பாளுக்கு தீர்த்தவாரி நடத்த வேண்டும். விழா முடிவடையும் நேரத்திலாவது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்த்தவாரியை நடத்த வேண்டும்.

    இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு, எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது. இதற்கு சபரிமலை புரட்சியும், தாமிரபரணி எழுச்சியும் எடுத்துக்காட்டு ஆகும்.

    பாரதீய ஜனதா கட்சி தேர்தல் பணிகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி விட்டது. தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். அவர்கள் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டன. நாங்கள் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP 
    நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று கட்சி குறித்த அறிவிப்பு இல்லை என செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார். #Rajini
    சென்னை:

    பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தாம் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், மாநிலம் முழுவதும் தனது ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டது.

    மேலும், அடுத்தடுத்து அதிரடியாக அவரது அரசியல் வரவு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திரைப்படங்களிலேயே ஓய்வின்றி இருந்தார். அவ்வப்போது செய்தியாளர்களை சந்திப்பதும், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதுமாய் இருந்துவந்தார்.

    இதையடுத்து, சமீபத்தில் அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடனான கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் அவர் பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கட்சி பணிகளில் தீவிரமாக இறங்குவார் எனவும், தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்சிப்பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்ததாக தெரிவித்தார்.

    ஆனால், டிசம்பர் 12 அன்று கட்சி குறித்த அறிவிப்புகள் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார். #Rajini
    விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணிதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களை படித்து விட்டு மக்களிடத்திலும் சென்று அவர்களிடம் கலந்து பேசியதினால் மக்கள் நீதிமய்யம் தங்கள் கருத்தை முன்வைக்கிறது.

    அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் நாங்கள் வேண்டுவது ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான் இது தொழில் துறை முன்னேற்றத்துக்கு எதிரானது அல்ல மக்களுக்கு உயிர்ச் சேதம் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு சேதம் இல்லாமல் தொழிற்சாலைகள் வர வேண்டும்.

    இப்போது விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கும் 8 லட்சம் டன் என்பதால் உலகத்தில் சட்டதிட்டங்களை மீறிய முதல் காப்பர் ஆலையாக இது இருக்கும். இந்த ஆலை தமிழகத்தில் இருந்து விடக்கூடாது என்பது தான் எனது வேண்டுகோள் முன்னேற்றத்தை என்றும் மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

    ஆனால் அது மக்களுக்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும். தனி வியாபாரியின் முன்னேற்றமாக இருக்கக் கூடாது. அது தொடர்பான மனுவை அரசு செயலாளரிடம் மக்கள் நீதி மய்யக் கட்சி நிர்வாகிகள் கொடுக்க உள்ளனர்.

    பெட்ரோல் விலையை தினம் தினம் என நிறைய நாட்கள் ஏற்றிவிட்டு கொஞ்சமாக குறைத்திருப்பதற்கு பெயர் குறைப்பது அல்ல ஏறித்தான் இருக்கிறது என்பதுதான் அதற்கான அர்த்தம். பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும். வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் இது பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விலை ஏற்றம்.



    விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணிதான். அவர் சொன்னது போல் ஊழலுக்கு எதிரானது என்பதை அவர் ஊர்ஜிதப்படுத்தி விட்டாரேயானால் கண்டிப்பாக என்னுடைய சகோதர மனப்பான்மையுடையவர் அவர். அவரை வரவேற்கிறோம்.

    இப்போது 6000 கிராம சபைகளை தொட்டுக் கொண்டிருக்கிறோம். 12500-க்கும் மேல் கிராம சபைகள் உள்ளன. அதை தொட்டு விட்டால் அனைவருக்கும் தெரியக் கூடிய மாற்றங்களை நாம் பார்க்க முடியும். பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு இணையான பலம் கிராம சபைக்கு உண்டு என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு யாரிடம் ஒப்புதல் வாங்கினார்கள். மக்கள் இருக்கும் இடத்தில் மக்களுக்கு பாதிப்பு இருக்கும் போது அவர்களிடம் தான் பேச வேண்டும். எங்கேயோ ஒரு அலுவலகத்தில் பேப்பரை நகர்த்திவிட்டால் அது தமிழகத்துக்கான முன்னேற்றமாக இருக்காது.

    எங்களுக்கு பூத் கமிட்டி இல்லை என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் எங்களின் பூத் கமிட்டி இயங்கும் போது தெரியும். நாங்கள் ரொம்ப அழுத்தமாக, படிப்படியாக எப்படி செய்ய வேண்டுமோ அதை நியாயமாக செய்து கொண்டிருக்கிறோம். இதை பணம் கொடுத்து செய்ய நாங்கள் முயலவில்லை. எல்லாவற்றையுமே உழைப்பால், வியர்வை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான வேலை அழுத்தமாக நடந்து கொண்டிருக்கிறது.

    கன மழைக்கு முன்பு எடுத்தது போல இல்லாமல் தற்போது நல்ல படியான நடவடிக்கையை எடுக்க வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று தாராபுரத்தில் கமல்ஹாசன் பேசினார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
    தாராபுரம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவன தலைவர் கமல்ஹாசன் திருப்பூர் மாவட்டத்தில் இன்று மக்களுடனான பயணம் மேற்கொண்டார்.

    தாராபுரம் மகாராணி கல்வி நிறுவனத்தில் அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். திறந்த வெளியில் நின்று அவர் பேசியதாவது:

    நான் கல்லூரிகளில் பேசக்கூடாது என கூறி மேடை கொடுக்க மறுத்து தடை விதிக்கிறார்கள். மாணவர்கள் திறந்த வெளியில் நிற்கிறீர்கள். அதனால் தான் நானும் திறந்த வெளியில் நின்று பேசுகிறேன்.



    நாளைய பற்றிய சிந்தனையை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். அதை சொல்வதற்காகவே இங்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இளைஞர்கள் பங்கு அரசியலுக்கு தேவை.

    நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும். என் மக்கள், என் தமிழகம் என்று அனைவரும் நினைத்து பாடுபட வேண்டும்.

    மாணவர்கள் அரசியல் புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது. நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் உள்ளது. அதனை மறந்து விடாதீர்கள்.

    நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி டி.வி.யில் கிடைக்காது. வெயிலில் நிற்கும் இந்த அன்பு உன்னதமானது. பிக்பாசும், சினிமாவும் எனக்கு புகழை தேடி தரலாம். ஆனால் நேரில் இங்கே வந்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் எனக்கு அன்பை தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பொன்னிவாடி எல்லப்பாளையம் சென்றார். அங்குள்ள நல்ல தங்காள் அணையில் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசும் போது, தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சபை உள்ளது. கிராம சபை குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    நான் மட்டும் லஞ்சத்தை ஒழிக்க வரவில்லை. உங்களுடன் இணைந்து லஞ்சத்தை ஒழிக்க வந்துள்ளேன். நீங்கள் சேர்ந்தால் தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்றார்.


    அரசியலுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #EdappadiPalaniswami #Scam
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது அரசியலுக்காகத்தான். ஆளும் எந்த கட்சியாக இருந்தாலும், அந்த கட்சிகள் மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.

    ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். எதிர்கட்சிகள் எதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். தனக்கு பயமில்லை எனவும், எதையும் சந்திக்க தயாராக உள்ளோம் என முதல்வரே கூறியுள்ளார். ஆகவே இந்த அ.தி.மு.க. அரசு எதற்கும் பயப்படாது.

    முல்லை பெரியாறு அணை பகுதியில் மட்டும் மழை பொழிந்து கேரளாவில் வெள்ளம் ஏற்படவில்லை. பாலக்காட்டிலும் மழை பெய்துள்ளது. பாலக்காட்டில் பெய்த மழை நீர் முல்லை பெரியாறு அணைக்கு வந்ததா?. அங்கு இருக்கும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு அரசியலுக்காக இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.


    எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஊழல், கமி‌ஷன் நடைபெறுவதாக கூறி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சர்க்காரியா ஊழல் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் நடைபெற்றது.

    2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கீழ் கோர்ட்டில் தான் தி.மு.க. விடுதலை பெற்றுள்ளது. ஆனால் மேல்மட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்களைத்தான் இன்றுவரை கூறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். #ADMK #ThambiDurai #EdappadiPalaniswami #Scam
    ×