search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருவளையம்"

    கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.
    கணினி திரைகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால் கண் சோர்வு மற்றும் கரு வளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு தவிர தினசரி உடற்பயிற்சி முக்கியம், அது பார்வை நரம்புகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க  உதவுகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

    1. வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.

    2. பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

    3. சோர்வான கண்களுக்கு இது சிறந்த மருந்தாகும். சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இது கண்சோர்வை குறைக்கும்.
     
    4. 4 தேக்கரண்டி பால் மற்றும்  2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலக்கவும். அதை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், கண்களைச் சுற்றி இந்த குளிர்ந்த கிரீம்மை மாஸ்க் போல் பயன்படுத்துங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்கள் கண்கள் புத்துயிர் மற்றும் ஆரோக்கியம்  பெரும்.

    5. பச்சை தேயிலை, கறுப்பு தேநீர் மற்றும் பல்வேறு பிற மூலிகை தேநீர் வகைகள் கருவளையத்திற்கு பெரிய தீர்வாகும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சில தேநீர் பைகளை வைக்கவும். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்கும். 
    முகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. கருவளையத்தை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன.
    முகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. பிரசவத்துக்குப் பின் சரியாக தூங்காமல் பல தாய்மார்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். அதை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

    ஹோம்மேட் தேன் ஐ பேக்

    வெள்ளரிக்காய் துண்டு - 3
    உருளைக்கிழங்கு துண்டுகள் - 3
    தேன் - 1 டீஸ்பூன்
    கற்றாலை ஜெல் - 1 டீஸ்பூன்

    வெள்ளரிக்காய், உருளைக்கிழங்களையும் தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.

    இதில் தேனும் கற்றாலை ஜெல்லும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    ஹோம்மேட் தேன் ஐ பேக் ரெடி. இதைக் கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போடவும். மறுநாள் காலை கழுவி விடலாம். ஒரு வாரத்திலே கருவளையம் மறைய ஆரம்பிப்பதை பார்க்க முடியும்.

    ஹோம்மேட் கிரீன் டீ ஐ பேக்

    homemade green tea eye cream


    பாதாம் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கற்றாலை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
    கிரீன் டீ - 1 டீஸ்பூன்

    இவற்றை ஒரு பவுலில் போட்டு, நன்கு கலந்து சுத்தமான டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் இரவில் உங்கள் கண்களை சுற்றி தடவிய பின், மோதிர விரலால் கிளாக் வைஸ் மற்றும் ஆன்டி கிளாக் வைஸாக சுற்றி மசாஜ் செய்யவும். 10 நாட்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
    செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண முடியும்.
    கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.

    சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.

    திக்கான கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும். பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து… பிறகு, கழுவிவிடலாம்.

    கண்ணுக்கு கீழ் வரும் பை: சிலருக்கு கண்ணுக்கு கீழ் சதைப் பை தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு, பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் 10 - 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.
    கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. இந்த கருவளையத்தை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சரிசெய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    முகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. சரியாக தூங்காமல், அதிக நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். அதை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

    கருவளையத்தைப் போக்கும் புதுமை சிகிச்சைகள்…


    ஹோம்மேட் ஹனி ஐ கிரீம்

    வெள்ளரி துண்டு - 3
    உருளை ஸ்லைஸ் - 3
    தேன் - 1 டீஸ்பூன்
    கற்றாலை ஜெல் - 1 டீஸ்பூன்

    வெள்ளரியையும் உருளைக்கிழங்கையும் நன்றாக கழுவி தனி தனியாக மிக்ஸியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.

    இதில் தேனும், கற்றாலை ஜெல் கலந்து நன்கு கலக்கவும். இப்போது ஹனி ஐ கிரீம் ( homemade honey eye cream) ரெடி.

    இந்த கிரீமை கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் கண்களை சுற்றி சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போட வேண்டும். மறுநாள் காலை கழுவி விடலாம். இந்த தினமும் போட்டு வரவேண்டும். தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தால் நல்ல வித்தியாசம் தெரிவதை காணலாம்.
    கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
    கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் மனதளவில் சோர்வடைய செய்து விடுவர்.

    கண்களுக்குக் கீழ் உள்ள தோலானது 0.5 மி.மீ தடிமனும் மற்ற இடத்தில உள்ள தோல்  2மி. மீ தடிமனும் கொண்டது. அதனால் மற்ற தோலை விட கண்களுக்கு கீழ் உள்ள தோல் மிக விரைவில் பாதிப்படைகிறது. மிக விரைவில் கருவளையத்தை  மறைய வைக்கலாம்.
     
    காரணங்கள்:
     
    அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் நமக்கு உணர்த்துகிறது.
     
    தூக்கம் நமது உடலுக்கும் கண்களுக்கும் சிறந்த ஓய்வு ஆகும். சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நமது நேரத்தைக் கழித்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படும். ஒரு நாளுக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
     
    கண்களில் ஏற்படும் தொற்றினால் கண்களில் சில நேரம் அரிப்பு ஏற்படும். இதனால் கண்களை கசக்க நேரிடும். அதிகமாக கண்களை கசக்குவதால் மிகவும்  மெல்லிய தோலான கண்களுக்குக் கீழ் உள்ள தோல் கருமையடைகிறது.
     
    சிலருக்கு மரபியல் காரணங்களால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு ஏற்படலாம். சத்துக்குறைவினால் சிலருக்கு கண் கருவளையம் தோன்றும். சத்தான உணவு பழக்கவழக்க முறைக்கு மாறுவதே இதற்கு தீர்வு.
     
    பெண்கள் அன்றாடம் முகத்தில் பல கிரீம்களை உபயோகிக்கின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதனால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்கு அடியில் கருமையாக மாறுகிறது
     
    அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம்  ஏற்படுகிறது. அதனால் வெயில் காலங்களில் கருவளையம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது கண்ணை குளிர்ச்சி படுத்தும் விதமாக  கேரட் அல்லது வெள்ளரி பிஞ்சை மெல்லிதாய் நறுக்கி கண்ணின் மேல் வைத்தல் நலம் பயக்கும்.
    தூக்கமின்மை, சத்துக்குறைவு, தோலில் உண்டாகும் மாற்றம் போன்ற காரணங்களால், நாளடைவில் கண்களுக்குக் கீழே கருவளையம் உண்டாகிறது. இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் சரி செய்துவிடலாம்.
    தூக்கமின்மை, சத்துக்குறைவு, தோலில் உண்டாகும் மாற்றம் போன்ற காரணங்களால், நாளடைவில் கண்களுக்குக் கீழே கருவளையம் உண்டாகிறது. கருவளையம் வந்தபிறகு முகமே பொலிவிழந்து போவதாக உணர்கிறோம். தோலில் ஏற்படும் அதிக நிறமி காரணமாகவே இந்தக் கருவளையம் உண்டாகிறது. இதனால் கண்ணுக்கு ஆபத்தோ, வேறு எந்தத் தொந்தரவோ வருவதில்லை. இது, வெறும் அழகுக் குறைபாடுதான். இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் சரி செய்துவிடலாம்.

    கண்ணைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மெல்லியது. வெயிலில் சுற்றுவது, கண்களை அடிக்கடி கசக்குவது, தூங்காமல் இருப்பது, அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவற்றால் கருவளையம் உண்டாகிறது. வைட்டமின் குறைபாடுகள் மற்றும் கடும் காய்ச்சல், நிமோனியா, புற்றுநோய், காசநோய் போன்றவை தாக்கும்போதும் இந்தக் கருவளையம் உருவாகிறது.

    கண்களுக்குப் போதிய ஓய்வு தருதல், வைட்டமின் ஏ,ஈ, உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ளுதல், இரவில் விளக்கொளியை சரியாகப் பயன்படுத்தல், கணினியில் பணிபுரியும்போது கவனமாக இடைவெளி கொடுத்தல், மன உளைச்சல் இல்லாமல் மகிழ்ச்சியாக இருத்தல் போன்றவையே இந்தக் கருவளையம் உருவாகாமல் காக்கும்.

    அப்படியும் உங்கள் கண்களைக் கருவளையம் தாக்கினால், கவலைப்பட வேண்டாம். கவலையே அந்தப் பிரச்சனையைப் பெரிதாக்கி விடக்கூடும். உருளைக்கிழங்கு, வெள்ளரி, புதினா, கற்றாழை போன்ற இயற்கையான காய்கறிகள், பழங்களைக்கொண்டே கருவளையத்தை நீக்கிவிடலாம். அப்படியும் நீங்கவில்லை என்றால், இதற்கென இருக்கும் மருத்துவ ஆலோசகர்களை அணுகி, முகப்பூச்சுகளை எடுத்துக்கொள்ளலாம். 
    பெண்களின் அழகை கெடுக்கும் முக்கியமான விஷயம் கருவளையம். இங்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த கண் கருவளையத்தை சரிசெய்யும் முறைகளை காணலாம்.
    பெண்களின் அழகை கெடுக்கும் முக்கியமான விஷயம் கருவளையம். இங்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த கண் கருவளையத்தை சரிசெய்யும் முறைகளை காணலாம்

    தக்காளி ஜூஸை ஒரு டீ ஸ்பூன் எடுத்து, கருவளையம் இருக்கும் பகுதிகளில் தடவி, 10 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் காலை மாலை இருவேளைகளும் செய்துவர விரைவில் கருவளையம் சரியாகும்.

    துருவிய உருளைக்கிழங்கிலிருந்து சாறு எடுத்து, அதில் பஞ்சை ஊற வைத்து, அதை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். 10 நிமிடத்திற்கு பின், குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி வர கருவளையம் போய் விடும்.

    டீ பேக்குகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்தாலும் கண் கருவளையம் சரியாகும்.



    பாதாம் எண்ணெயை கொண்டு முகத்தில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு விட்டு, காலையில் கழுவி வர, அதில் இருக்கும் வைட்டமின் ஈ சக்தி, கருவளையத்தை போக்குகிறது.

    தினமும் குளிர்ந்த பாலில், பஞ்சை நனைத்து, கருவளையத்தில் தேய்த்து வர, கருவளையம் நீங்கி முகப்பொழிவு கூடும்

    வெள்ளிரிக்காயை ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்த பின் எடுத்து, அதை 10 நிமிடம் கருவளையத்தில் வைத்து வர முகம் புத்துணர்ச்சியடையும்.

    புதினா இலையை நீர் சேர்த்து விழுதாக அரைத்து அதை ஒரு வாரம் இரவு முழுவதும் கருவளையத்தில் தடவி வர ஆச்சரியப்படத்தக்க முகப்பொழிவு கிடைக்கும்.

    ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, முகத்தில் ஒரு 15 நிமிடம் ஊற வைக்க முகப்பொழிவு கிடைக்கும். இவ்வாறு ஒரு மாதம் இரவு செய்ய வேண்டும்.
    கண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு இயற்கை முறையை பயன்படுத்தி தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு, மனஅழுத்தம், தூக்கமின்மை, எலக்ட்ரானிக் கருவிகளை அதிகம் பயன்படுத்துதல், ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

    கருவளையத்தைப் போக்க, பால் அல்லது மூலிகை கிரீம்களைப் பயன்படுத்தி, க்ளென்சிங் செய்யப்படும். பிறகு, ஐஸ் கட்டிகள், கேரட் ஜூஸ் என, அவரவர் சருமத்துக்கு ஏற்றபடி கண்களைச் சுற்றி மிருதுவாக மசாஜ் செய்யலாம்.

    இமைகளின் மீது பஞ்சுவைத்து, அதன் மேல், வேப்பிலை, கற்றாழை, துளசி, ஆப்பிள் உள்ளிட்ட சில இயற்கை, மூலிகைப் பொருட்களால் ஆன கலவையை வைத்து, அரை மணி நேரம் அதன் சாறு சருமத்தில் இறங்கும் வகையில் விட வேண்டும். அதன் பிறகு, தூய நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    இந்த சிகிச்சையினால், கண்களைச் சுற்றியுள்ள சருமப்பகுதிக்குச் சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு, கருவளையம் மறையத் தொடங்குகிறது. இந்த சிகிச்சைக்கு அரை மணி நேரம் தேவைப்படும். வாரத்துக்கு ஒரு முறை செய்துகொண்டால், இரண்டே மாதங்களில் கருவளையம் முற்றிலுமாக மறையும்.
    ×