என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 112469
நீங்கள் தேடியது "தாய்லாந்து"
ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. #WomensCricket #AsiaCup #India
கோலாலம்பூர்:
ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் மலேசியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய 2-வது ‘லீக்‘ ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்டது.
முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுத்தது. மோனா மேஸ்ரம் 32 ரன்னும், கம்ரிதா மந்தனா 29 ரன்னும் கேப்டன் கவூர் 17 பந்தில் 27 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய தாய்லாந்து அணியால் இந்திய வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 66 ரன்னே எடுக்க முடிந்தது.
இதனால் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா பெற்ற 2-வது வெற்றியாகும்.
கவூர் 3 விக்கெட்டும், தீபதி சர்மா 2 விக்கெட்டும், பூஜா, பூமை யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இலங்கை- மலேசியா மோதும் ஆட்டம் பிற்பகலில் நடக்கிறது.
இந்திய அணி 3-வது ஆட்டத்தில் வங்காள தேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. நாளை ஒய்வு நாளாகும்.#WomensCricket #AsiaCup #India
ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் மலேசியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய 2-வது ‘லீக்‘ ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்டது.
முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுத்தது. மோனா மேஸ்ரம் 32 ரன்னும், கம்ரிதா மந்தனா 29 ரன்னும் கேப்டன் கவூர் 17 பந்தில் 27 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய தாய்லாந்து அணியால் இந்திய வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 66 ரன்னே எடுக்க முடிந்தது.
இதனால் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா பெற்ற 2-வது வெற்றியாகும்.
கவூர் 3 விக்கெட்டும், தீபதி சர்மா 2 விக்கெட்டும், பூஜா, பூமை யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இலங்கை- மலேசியா மோதும் ஆட்டம் பிற்பகலில் நடக்கிறது.
இந்திய அணி 3-வது ஆட்டத்தில் வங்காள தேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. நாளை ஒய்வு நாளாகும்.#WomensCricket #AsiaCup #India
தாய்லாந்து நாட்டில் திமிங்கலம் ஒன்று பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #PlasticPiecesInWhaleStomach #Thailandwhaledies
பாங்காக்:
பிளாஸ்டிக் மற்றும் பாலீதின் பயன்பாட்டால் சுற்றுப்புறச்சூழல் மாசு, கடல்வளம், நிலத்தடி நீர்மட்டம், மண்வளம், விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவை கடலில் வீசப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டு அதிகளவில் இறந்து வருகின்றன.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சோங்லா மாகாண கடற்கரையில், திமிங்கலம் ஒன்று திடீரென கரை ஒதுங்கியது. அந்த திமிங்கலத்துக்கு அப்பகுதியில் இருந்தவர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் அந்த திமிங்கலம் உணவு உண்ணாமல் இருந்துள்ளது.
இதையடுத்து, அந்த திமிங்கலத்தை சோதித்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் ஏதோ சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அதனால் தான் திமிங்கலத்தால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதால், அதை அகற்றும் முயற்சியில் இறங்கினர். 5 நாள் சிகிச்சைக்கு பின் திமிங்கலத்துக்கு வாந்தி ஏற்பட்டு 8 கிலோ எடையிலான 80 பிளாஸ்டிக் பைகள் வெளியேறின.
சிறிது நேரத்தில் திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் கழிவால் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துவரும் நிலையில், பிளாஸ்டிக் பைகள் திமிங்கலம் உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #PlasticPiecesInWhaleStomach #Thailandwhaledies
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X