search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கைகோள்"

    நேபாள விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நேபாளிசாட்-1, அமெரிக்காவில் இருந்து நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. #Satellite

    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் முதன் முறையாக செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளது. நேபாள்சாட்-1 என பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைகோளை நேபாளத்தை சேர்ந்த ஆப்காஸ் மாஸ்கி மற்றும் ஹரிராம் ஸ்ரெத்தா ஆகியோர் தயாரித்தனர்.

    அந்த செயற்கைகோள் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருந்து நேற்று மதியம் 2.31 மனிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தகவலை நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி தெரிவித்துள்ளது.

    நேபாளம் முதன்முறையாக சொந்தமாக தயாரித்த செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. இது நாட்டுக்கு பெருமை என நேபாள பிரதமர் கே.ஆர்.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். #Satellite

    மே மாதம் முதல் மாதந்தோறும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #ISRO
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ‘ககன்யான்’ திட்டம் மூலம் 2021-ம் ஆண்டில் விண்வெளி ஆய்வுக்காக விஞ்ஞானிகளை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது.

    மேலும் பூமி கண்காணிப்பு, காலநிலையை முன்கூட்டி அறிந்து கொள்வது, தொலைதொடர்பு வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தி அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பாதுகாப்புக்கான செயற்கைகோள்களை அதிக அளவு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    பாதுகாப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவிவருகிறது. அனைத்து வகை செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக மாறி உள்ளது.

    தற்போது நாட்டின் பாதுகாப்பு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது. இதனை படிப்படியாக விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது பூமி கண்காணிப்புக்கான 8 செயற்கைகோள்கள் அடுத்த மாதத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.



    ரேடார்களை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்’ வகை செயற்கைகோள் மற்றும் ‘கார்ட்டோசாட்-3’ வரைபட செயற்கைகோள் பாதுகாப்பு துறை பயன்பாட்டுக்காக விண்ணில் ஏவப்பட உள்ளன. ஏற்கனவே ஏவப்பட்ட ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்களில் இருந்து துல்லியமான தகவல் களை பெறமுடியாததால் தற்போது ஏவப்பட உள்ள செயற்கைகோள்களில் துல்லியமான தரவுகளை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இந்த செயற்கைகோள்கள் மூலம் இரவு நேரத்திலும், மழைக்காலங்களிலும் தரவுகளை தெளிவாக பெற முடியும். எல்லையை கண்காணிக்க இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். செயலிழந்த செயற்கைகோள்களுக்கு பதிலாக தான் புதிய செயற்கைகோள்கள் ஏவப்பட இருக்கிறது.

    ரீசாட்-2பி மே மாதமும், கார்ட்டோசாட்-3 ஜூன் மாதமும், ரீசாட்-2பிஆர்1 ஜூலை மாதமும், ஜீசாட்-1 (புதியது) செப்டம்பர் மாதமும், ஆர்1சாட்- 2பிஆர்2 அக்டோபர் மாதமும், ஜி1சாட்-2 மற்றும் ஆர்1சாட்-1ஏ நவம்பர் மாதமும், ஜி-சாட்-32 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள். #ISRO
    செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர். #Modi #MissionShakti #RamNathKovind #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “மிஷன் சக்தி, இந்தியாவின் பெருமைமிகு தருணம். இந்த சோதனை, இந்தியாவின் விஞ்ஞான திறன் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்“ என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகளால் நாம் பெருமைப்படுகிறோம்“ என்று கூறியுள்ளார்.

    நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்தன், சுரேஷ் பிரபு, ஸ்மிரிதி இரானி, முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். #MissionShakti #RamNathKovind  #VenkaiahNaidu
    விமானப்படை தகவல் தொடர்புக்காக ‘ஜிசாட்-7ஏ’ என்ற செயற்கைகோள் வருகிற 19-ந்தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள். #GSAT7A #ISRO
    சென்னை:

    இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-7ஏ செயற்கைகோளை இஸ்ரோ வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) விண்ணில் ஏவுவதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக 2,250 கிலோ எடையில் ஜிசாட்-7ஏ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளோம். இதனை அடுத்த வாரம் ‘ஜி.எஸ்.எல்.வி- எப் 11’ ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம்.

    ஜிசாட்-7ஏ செயற்கைகோளில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியும், கியூ-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதனுடைய ஆயுட்காலம் 8 ஆண்டுகள். இது இஸ்ரோ தயாரித்துள்ள 35-வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும். பல்வேறு இடங்களில் உள்ள இந்திய விமானப்படைக்கான ரேடார் நிலையங்களை இந்த செயற்கைகோள் மூலம் இணைக்க முடியும்.



    ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விமானப்படையின் போர்த்திறன்களை அதிகரிப்பதுடன், உலகளாவிய நடவடிக்கைகளையும் அதிகளவில் தெரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும். 2013-ம் ஆண்டு ‘ஜிசாட்-7’ என்ற செயற்கைகோள் கடற்படைக்காக தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2-வது முறையாக ‘ஜிசாட்-7ஏ’ செயற்கைகோளை தயாரித்து விமானப்படைக்காக அர்ப்பணிக்க இருக்கிறது.

    இதற்கான ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 7-வது ராக்கெட்டாகும். தகவல் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் ‘இன்சாட் 4சிஆர்’ செயற்கைகோளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடைய இருப்பதால், அதற்கு மாற்றாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது பிரெஞ்சு கயானாவில் இருந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும்.

    தொடர்ந்து சந்திரயான் விண்கலமும் அடுத்த மாதம் 3-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 13-ந்தேதிக்குள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது பூமியை 320 ராணுவ செயற்கைகோள்கள் சுற்றிவருகின்றன. அதில் 13 இந்தியாவுக்கு சொந்தமானவை.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.  #GSAT7A #ISRO

    சூரியனை இதுவரை இல்லாத வகையில் நெருக்கமாக சென்று ஆய்வு செய்வதற்காக நாசா தயாரித்துள்ள செயற்கைகோள் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. #Nasa #ParkerSolarProbe
    நியூயார்க்:

    சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970 களில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான ‘ஹீலியஸ் 2’ சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை. 

    ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனையே, சுமார் ‘நாற்பது லட்சம் மைல்கள்’ தொலைவில் அல்லது மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை நாசா அனுப்புகிறது.  அமெரிக்க நேரப்படி நாளை அதிகாலை 3.30 அனுப்பப்படுகிறது. புறப்படுவதற்கு  70 சதவீதம் கால நிலை  சாதகமாக உள்ளதாக நாசா கூறி உள்ளது.

    சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது என்றும் கூறப்படுகிறது. சூரியனின்  வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணித்து ஆய்வு செய்கிறது.

    ஏனென்றால், இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்கிறது நாசா. 
    ×