search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 112625"

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையதளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #Plus2Result #Plus2Exam #TNResults
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. எனவே, விரைவாக வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் பட்டியலும் தயாரானது.



    இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. இதுதவிர தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

    தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். #Plus2Result #Plus2Exam #TNResults
    ஓட்டு போடுவதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #VotingProcessRecord #PostedFacebook
    அவுரங்காபாத்:

    மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஒரு வாக்குச்சாவடியில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார். இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். சற்று நேரத்தில் அது ‘வைரல்’ ஆனது. அந்த நபர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

    தேர்தல் அதிகாரி கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும், அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்செயல், தேர்தல் விதிமீறல் என்பதால், அவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேஸ்புக்கில் வீடியோ நீக்கப்பட்டது. 
    குரூப்-2 தேர்வு உத்தேச விடைகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. #TNPSC
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 11-ந்தேதி குரூப்-2 தேர்வினை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் நடத்தியது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைகள் 14-ந் தேதி(இன்று) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

    இவ்வாறு வெளியிடப்படும் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தன. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதை குறைக்க தேர்வாணையம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இந்த குரூப்-2 தேர்வு முதல் இணையவழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அத்தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித் தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும்.

    விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண் ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே (ஹால் டிக்கெட்) இருக்கும். தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தேர்வு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும். விடைக்குறிப்பில் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை, விடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்பு காலத்தில் தேர்வர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளடு செய்ய வேண்டும்.

    தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங்களை ‘பி.டி.எப்.’ கோப்புகளாக பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற் கான தகவல்களும் விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங் களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

    ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்படமாட்டாது. அஞ்சல், மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. வருகிற 20-ந்தேதிக்குள் தேர்வர் கள் இதை செய்ய வேண்டும். அதற்கு மேல் வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. #TelanganaAssemblyElections #Congress
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.

    காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.

    தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார். வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.



    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ஹுசூர் நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி பத்மாவதி மீண்டும் கோகட் தொகுதியில் போட்டியிடுகிறார். 

    சர்வே சத்யநாராயண எம்.பி செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதியிலும், பூனம் பிரபாகர் கரீம் நகரிலும், பல்ராம் நாயக் மெகபூபாபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். #TelanganaAssemblyElections #Congress 
    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட இன்றே, 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
    போபால்:

    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.

    ஆனால், இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.



    இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்திருந்தார்.

    இதன் அடுத்தகட்டமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். சித்தி மாவட்டம் சித்தி 77 தொகுதியில் கே.கே. சிங் என்ற வேட்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், பரஸ்வடா மாவட்டம் பாலகட் 110 தொகுதியில் கன்கர் முன்ஜார் போட்டியிடுவதாகவும், பாலகட் 111 தொகுதியில் அனுபா முன்ஜார் என்பவரும், நிவாரி பகுதியின் டிகம்பர் 46 தொகுதியில் மீரா யாதவ்வும், பன்னா பகுதியின் பன்னா 60 தொகுதியில் தர்ஷத் சிங் யாதவ்வும், புத்னி பகுதி செஹோர் 156 தொகுதியில் அசோக் ஆரியா ஆகியோரை வேட்பாளர்களாக நியமித்து சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
    திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவூதி அரேபியாவில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் கோல்ட் படம் பெற்றுள்ளது. #SaudiArabia #GoldMovie #AkshayKumar
    மும்பை:

    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை சமீபத்தில் விலக்கப்பட்டு, புதிய திரையரங்குகள் அமைக்கப்பட்டன.

    இந்நிலையில், இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், மவுனி ராய், குனால் கபூர் உள்ளிட்டோர் நடித்த கோல்ட் என்ற திரைப்படம் நேற்று சவூதி அரேபியாவில் திரையிடப்பட்டது.

    ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற விளையாட்டு வீரரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட்டது. சவூதி அரேபியாவில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டதன் மூலம், திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின், சவூதியில் வெளியான முதல் திரைப்படம் என்ற கூடுதல் பெருமையை கோல்ட் பெற்றுள்ளது. #SaudiArabia #GoldMovie #AkshayKumar
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் ரகசியமாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். #DonaldTrump #Omarosa
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் ரகசியமாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளார்.

    இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த உரையாடல் பதிவு, அவரும் ஜனாதிபதி டிரம்பும் உரையாடுவதாக அமைந்து உள்ளது.



    அந்த உரையாடலில் ஜனாதிபதி டிரம்பின் குரல் என்று நம்பப்படுகிற ஒரு குரல் ஆச்சரியத்துடன், “நீங்கள் பணியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறது.

    அதற்கு ஒமரோசா, “ ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து, நீங்கள் அனைவரும் நான் பணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்” என்று பதில் அளித்து உள்ளார்.

    உடனே டிரம்பின் குரல் என நம்பப்படுகிற அந்தக் குரல், “இல்லை... என்னிடம் யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. எனக்கு தெரியாது. நீங்கள் பணியில் இருந்து செல்வதை நான் விரும்பவில்லை” என்று கூறுகிறது. இப்படியாக அந்த உரையாடல் நீளுகிறது.

    இது குறித்து டிரம்ப் நேற்று முன்தினம் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ அந்தப் பெண், பணியை இழந்த பின்னர் என்னைத் தாக்கத் தொடங்கி உள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைவரை கேட்டு உள்ளேன்” என்று கூறி உள்ளார்.

    டிரம்பின் வக்கீல் ரூடி கிலானி கருத்து தெரிவிக்கையில், “வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்ததின் மூலம் அவர் சட்டத்தை மீறி விட்டார்” என கூறி உள்ளார்.  #DonaldTrump #Omarosa #tamilnews 
    2018-19ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். #publicexam #timetablereleased
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, 10-ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29 வரையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், 11-ம் வகுப்புகளுக்கு மார்ச் 6 முதல் 22 வரையிலும், 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்தார்.



    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு பதிவு செய்யும் முறையை ஆன்லைனில் கொண்டு வருவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதை தவிர்க்க, தமிழகத்திலேயே அதிகப்படியான மையங்களை அமைக்க தயார் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் 500 மையங்கள் கேட்டாலும் கொடுக்க தயார் எனவும், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மொழிப்பாடங்களில் சிறப்பாக கற்க ஆசிரியர்கள் உதவுவார்கள் என்றும், அதற்கு பெரிதும் உதவியாக ஸ்மார்ட் வகுப்பு திட்டம் இருக்கும் எனவும் கூறினார். 11-ம் வகுப்புகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் பாடங்கள் நீட் குறித்ததாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

    மேலும், நீட் தேர்வில் குறைந்தது 250 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெகு சில ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், பல ஆசிரியர்கள் பணியில் இருப்பதால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். #publicexam #timetablereleased
    தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்களை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. #TNEA2018 #TNEARandomNumbers
    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே மாதம் 3ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.



    இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் இன்று வெளியிடப்பட்டன. அண்ணா பல்லைகக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விண்ணப்பதாரர்களுக்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை  அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதன்மை செயலர் சுனில்பாலிவால், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஆகியோரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பழகன், பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 8ம் தேதி முதல் முதல் 14ம் தேதி வரை வரைசான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றார். இந்த ஆண்டு டிடி மூலம் 270 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.  #TNEA2018 #TNEARandomNumbers

    மே 6-ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டது. #NEET #NEET2018
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சங்கல்ப் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.

    இதையடுத்து, 2 மணிக்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது. மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். #NEET #NEET2018

    மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மத்திய அரசு பெருமிதம் அடைந்துள்ளது. #centralgovernment
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பு ஏற்று இன்றுடன் (சனிக்கிழமை) 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த 4 ஆண்டு காலங்களில் செய்த சாதனைகள் குறித்து மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    * பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்படும் 104 மாவட்டங்களில் பாலின பிறப்பு விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    * பெண் குழந்தைகள் நலன் மற்றும் அவர்களது எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் பிரதமர் சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற சேமிப்பு திட்டத்தின் கீழ் 1.26 கோடிக்கு மேல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் வரை ரூ.19 ஆயிரத்து 183 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    * வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2016-17-ல் 3.31 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகளும், 2017-18-ல் 2.82 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகளும் வழங்கப்பட்டன.

    * பணியில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளை முறையாக கவனித்துக் கொள்ள 6 மாத பிரசவ கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    * பிரதமர் சுரக்‌ஷித் மாத்ரிதவா அபியான் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9-ந்தேதி தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிக அபாயம் நிறைந்த கர்ப்ப சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    * ஆபத்தில் சிக்கியுள்ள பெண்கள் காவல்துறைக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எச்சரிக்கை செய்யும் வகையில் அனைத்து செல்போன்களிலும் எச்சரிக்கை பொத்தான்கள் இருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    * பெண்கள் உதவி தேவை என்றால் தொடர்புகொள்ள அவசர கால தொடர்பு எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 29 மாநிலங்கள் இந்த வசதியை செயல்படுத்தி வருகின்றன.

    * குடும்ப ஆதரவு இல்லாத, கணவனை இழந்த பெண்களுக்காக விடுதிகள் அமைக்கப்பட உள்ளது.

    * தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.95 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    * 2018-19 பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான ஒதுக்கீடு 62 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.4 ஆயிரத்து 700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    * இஸ்லாமிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    * ஆண்டுக்கு ரூ.12 மட்டும் பிரீமியமாக செலுத்தி ரூ.2 லட்சம் பெறும் வகையில் பிரதமரின் சுரக்‌ஷா காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    * பிரதமரின் முதியோர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஓய்வூதிய முதலீட்டு வரம்பு ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது.

    * தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 464 கிராமங்கள் 100 சதவீதம் மின்சாரம் பெற்றுள்ளன.

    * காமன்வெல்த் போட்டியில் 66 பதக்கங்களை பெற்று இந்தியா 3-வது இடத்தை பிடித்தது.

    * கடந்த 4 ஆண்டுகளில் 92 மருத்துவ கல்லூரிகள் (46 அரசு மற்றும் 46 தனியார்) அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 646 பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    * தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறைகளுக்கான ஊக்கத்தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * குறைந்த விலையில் எல்.இ.டி. பல்பு வழங்கும் உன்னத் ஜோதி திட்டத்தின் கீழ் 29.83 கோடிக்கும் மேற்பட்ட பல்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

    * ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.

    * பணமற்ற ஊதிய பரிவர்த்தனையை ஏற்படுத்தும் வகையில் 50 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.



    * வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை 29.17 சதவீதம் அதிகரித்துள்ளது.

    * அதிக அளவு பணத்தை செலுத்திவிட்டு கணக்கு தாக்கல் செய்யாத 3 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 2.1 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    * பினாமி சொத்து சட்டம், கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம், வருவாயை தாமாக முன்வந்து தெரிவிக்கும் சட்டம் போன்றவைகள் அறிமுகம்.

    * மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * இந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் இந்திய ராணுவம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி பாகிஸ்தான் வசம் உள்ள கஷ்மீரில் துல்லியத் தாக்குதல்களை நடத்தியது.

    * எல்லை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 209 கோடி அனுமதிக்கப்பட்டது. எல்லை பகுதியில் 246 கிலோ மீட்டர் வேலி அமைப்பு. எல்லைச்சாலைகள் 566 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைப்பு. 785 கி.மீ. தூரத்துக்கு பேரொளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    * வன்முறை சம்பவங்கள் 36.6 சதவீதம் குறைந்துள்ளது.

    * கோட்டையாக்கப்பட்ட காவல்நிலையங்கள் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 320 காவல்நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #centralgovernment
    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. மறுகூட்டலுக்கு 24-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். #SSLC #ExamResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்கள் 36 ஆயிரத்து 649 பேரும் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்படுகிறது.

    www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.

    மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

    28-ந்தேதி முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமைய தலைமையாசிரியர்கள் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். 28-ந்தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

    துணைப் பொதுத்தேர்வு ஜூன் 28-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

    இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரித்துள்ளார். 
    ×