search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகை"

    நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பா.ஜ.க.வினர் சட்டசபை, முதல்-அமைச்சர், சபாநாயகர் வீடுகள் ஆகியவற்றில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். வருகிற 19-ந் தேதி இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் முன்கூட்டியே சட்டசபை கூட்டத்தை முடித்து வைக்க உள்ளனர். 19-ந்தேதி அன்று சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட இருக்கிறது.

    எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பா.ஜ.க.வினர் சட்டசபை, முதல்-அமைச்சர், சபாநாயகர் வீடுகள் ஆகியவற்றில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.

    இந்த போராட்டம் குறித்து பா.ஜ.க. சார்பில அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. போராட்ட திட்டத்தை ரகசியமாக வைத்துள்ளனர்.

    எந்த நேரத்தில் போராட்டம் நடக்கும் என்ற விவரங்களையும் பா.ஜ.க.வினர் கூறவில்லை.
    வேலூர் மாவட்ட அரசு பள்ளியில் ஆசிரியை பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டனர்.
    வேலூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் பகவான் வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றதை தாங்கிகொள்ள முடியாத மாணவ - மாணவிகள் அவரை வேறுபள்ளிக்கு செல்லவிடாமல் பாசப்போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ - மாணவிகள் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த தமிழாசிரியை விஜயா அங்கிருந்து குடியாத்தம் அருகே உள்ள பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

    ஆசிரியையின் பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி நேற்று காலை மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்கு வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் பெற்றோருடன் பள்ளி முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு சென்று மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாணவ - மாணவிகள் கூறுகையில், ‘இந்த பள்ளியில் தமிழாசிரியை விஜயா கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். எங்கள் அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகுவார். நாங்கள் அதிக மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்துள்ளார். தற்போது அவர் எங்கள் பள்ளியை விட்டு சென்றது எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே தமிழாசிரியை விஜயா மீண்டும் எங்கள் பள்ளிக்கு வரவேண்டும்’ என்றனர்.

    கோரிக்கையை கடிதமாக எழுதி கொடுக்குமாறும், அதை முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். 
    செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலரை தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலரை முற்றுக்கையிட்டனர்.

    ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரணம், பொன்பரப்பி, மருவத்தூர், வஞ்சனபுரம், ஆலத்தியூர் உள்ளிட பல்வேறு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திலும் இன்னும்  பல்வேறு  திட்டங்கள் செயல்படாமல் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேனை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதில் மாவட்ட தலைவர் பரமசிவம் ஒன்றிய தலைவர் சின்னபன், கந்தசாமி, பரணம் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செழியன், அண்ணாதுரை, அருணாசலம், சபரி, பாலு  உள்ளிட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
    ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலியான 10 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.



    அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். ஏற்கனவே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று அவர்களது உறவினர்கள் அறிவித்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை மூட எழுத்து பூர்வமாக அரசு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்”என்றனர். தொடர்ந்து அரசை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  #SterliteProtest

    மத்திய அரசின் காவிரி செயல் திட்டத்தை கண்டித்து புதுவையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காவிரி மீட்பு குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் தமிழ்நாடு, புதுவைக்கு துரோகம் செய்யும் மத்திய அரசின் காவிரி செயல் திட்டத்தை கண்டித்தும், கர்நாடகத்தின் அணைகளை திறந்து மூடும் அமைப்பை உருவாக்க கோரியும், காவிரி தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி அதிகாரம் உள்ள அமைப்பை சட்டப்படி உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசின் ஆவண காப்பகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி போராட்டம் நடத்த ஜீவானந்தபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மணிபாரதி முன்னிலை வகித்தார்.

    ஊர்வலம் ஆவண காப்பகம் அருகே சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 91 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று காலை போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கைவிட வேண்டும். ஆற்று மணல், தாது மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாத்து தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ரவி, தலைவர் மூர்த்தி, பொருளாளர் விஜய், மண்டல செயலாளர்கள் முத்துபாண்டி, சதாம்உசேன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேரை போலீசார் கைது செய்து பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 
    டெல்லியின் முக்கிய பகுதிகளை கண்காணிக்க சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில் நாளை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது. #CCTVscam #congress #Kejriwal
    புதுடெல்லி:

    பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். 

    இந்நிலையில், சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில்  மெழுகு வர்த்திகளை ஏந்தி ஊர்வலமாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறுகிறது. 

    அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நடைபெறும் இந்த போராட்டத்துக்கான அறிவிப்பை டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் ஹாரூன் யூசுப் இன்று மாலை வெளியிட்டனர்.

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் தலமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் காங்கிரசார் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எங்களது குற்றச்சாட்டு பொய் என்றால் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கள்மீது மான நஷ்ட வழக்கு தொடரட்டும் எனவும் அவர்கள் சவால் விட்டுள்ளனர். #CCTVscam #congress #Kejriwal
    தஞ்சையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை பிப்ரவரி 16-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் அதனை மத்திய அரசு நடைமுறைபடுத்தவில்லை.

    தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை. காவிரி பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு கர்நாடகாவில் நடைபெறும் தேர்தல்தான் காரணம்.

    அதில் தங்களுக்கு பாதகமாக முடிவு அமைந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது.

    காவிரி தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் உற்பத்தி கேள்விகுறியாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×