search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெய்னா"

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடாத எம்எஸ் டோனி அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார் என்று ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK #MSDhoni
    ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன் எம்எஸ் டோனி விளையாடமாட்டார். ரெய்னாதான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    பின்னர், முகுது வலி காரணமாக டோனி பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. டோனி இல்லாத இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது.



    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் டோனி பங்கேற்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘டோனி சிறப்பாக இருப்பதாக உணர்கிறார். அவரது முதுகு வலி சரியாகிவிட்டது. இதனால் அடுத்தப் போட்டியில் அவர் விளையாடுவார்’’ என்றார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் பிரித்வி ஷா. #IPL2019 #DDvKKR
    டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 10-வது லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.

    பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய இளம் வீரரான பிரித்வி ஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 54 பந்தில் 99 ரன்கள் எடுத்திருந்தார். 55-வது பந்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பாத்த நிலையில் பெர்குசன் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



    இதனால் அவரது மெய்டன் சதம் கனவு வீணாகியது. ஐபிஎல் வரலாற்றில் இதற்று முன் விராட் கோலி டெல்லி அணிக்கு எதிராகவும், ரெய்னா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராகவும் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். தற்போது பிரித்வி ஷா அந்த சோகமான சாதனையும் இணைந்துள்ளார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர்க கிங்ஸ் அதிரடி வீரர் ரெய்னா சாதனைகள் படைத்துள்ளார். #IPL2018 #Raina
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர்க கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. இதற்கு முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னாதான். அவர் 35 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்தார்.

    இதன்மூலம் இந்த சீசனில் 10 ஆட்டங்களில் 3 அரைசதத்துடன் 313 ரன்கள் குவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா ஐபிஎல் டி20 லீக் தொடங்கிய காலத்தில் இருந்தே விளையாடி வருகிறார். 11-வது சீசனில் விளையாடிடும் ரெய்னா, ஒவ்வொரு சீசனிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளார். எந்த பேட்ஸ்மேனும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.



    அத்துடன் ஜடேஜா பந்தில் ரகானே ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கேட்சை பிடித்ததன் மூலம் ஒரே பந்து வீச்சாளருக்காக அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் பந்து வீசும்போது 16 முறை கேட்ச் பிடித்து பொல்லார்டு முதல் இடத்தில் உள்ளார். ரெய்னா பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் பந்து வீச்சில் தலா 12 கேட்ச் பிடித்துள்ளார். சாஹல் பந்து வீச்சில் ஏபி டி வில்லியர்ஸ் 11 கேட்ச் பிடித்து 3-வது இடத்தில் உள்ளார்.
    ×