search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமையகம்"

    டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைவர்கள் மீது ஷூ வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #BJP #Manhurlsshoes
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையகம் அமைந்துள்ளது. இதில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு இன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

    இதில் பாஜக தலைவர்களான பூபேந்திர யாதவ் மற்றும் ஜி வி எல் நரசிம்ம ராவ் ஆகியோர் பேட்டியளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென ஒருவர், பாஜக தலைவர்கள் மீது ஷுவை கழற்றி வீசினார். இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த அதிகாரிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #BJP #Manhurlsshoes
    புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு இன்று கைப்பற்றியது. #Jaishheadquarters #Pakgovttakescontrol
    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் மீது எந்த நடவடிக்கை எடுக்காததுடன், இந்தியா மீதான தாக்குதல்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு இன்று கைப்பற்றியது.

    லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹவல்பூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் மாகாண அரசு கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி பவாத் சவுத்ரி இன்று இரவு தெரிவித்துள்ளார். #Jaishheadquarters #Pakgovttakescontrol
    4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. #YogaDay #NewYork
    நியூயார்க்:

    4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராஜ்ய பிரதிநிதிகள், ஆன்மிக தலைவர்கள், குழந்தைகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. துணைப்பொதுச்செயலாளர் அமினா முகமது பேசுகையில், “இன்றைய உலகம் நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானது. நமது முக்கிய மதிப்புகள் அழிந்து கொண்டிருக்கிற சவாலை சந்தித்து வருகிறோம். நமது வாழ்க்கையில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதையெல்லாம் கடந்து நின்று இன்றைய தினம் இளைய தலைமுறையினர் யோகாவில் ஈடுபட்டு உள்ளனர். நமது உடல், உள்ள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அதில் யோகா மிக முக்கியமான, சரியான பங்களிப்பு செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன், இந்தியாவில் தோன்றிய யோகா கலையின் பாரம்பரிய பெருமைகளை விளக்கினார். அவரும் யோகா பயிற்சி செய்தார்.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி யோகா தினத்தையொட்டி வெளியிட்டு இருந்த செய்தி கொண்ட வீடியோ திரையிட்டு காட்டப் பட்டது.  #YogaDay #NewYork #Tamilnews
    ×