search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா"

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிணக்குகள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீர்க்கப்படும் என நம்புவதாக கூறி தேர்தலில் எதிர்க்காற்றை ஏற்படுத்த இம்ரான் கான் முயற்சிப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார். #ImranKhan #ImranKhanremarks #attempttoinfluencepolls #influencepolls #reverseswing #Modi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பு பேட்டி பிரபல ஆங்கில நாளிதழில் இன்று வெளியாகியுள்ளது. அவரை நேர்காணல் செய்த செய்தியாளர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிணக்குகள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீர்க்கப்படும் என நம்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, முன்னர் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலின்போதும் இம்ரான் கான் எனது பெயரை குறிப்பிட்டு அரசியல் ஆதாயத்துக்காக பேசி இருந்தார் என்று நினைவுகூர்ந்தார்.

    ‘இம்ரான் கான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பதை நாம் மறந்துவிட கூடாது. அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்து, இந்திய தேர்தல்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்த ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்துவீச்சு போன்றதாகும்.

    ஆனால், அப்படிப்பட்ட ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்தைகூட ‘ஹெலிகாப்டர் ஷாட்’ ஆக மாற்ற இந்தியர்களுக்கு தெரியும்’ எனவும் மோடி குறிப்பிட்டார். #ImranKhan #ImranKhanremarks #attempttoinfluencepolls #influencepolls #reverseswing #Modi
    பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரை விடுதலை செய்து, ஒரு மாத காலத்தில் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இம்ரான்கான் அரசுக்கு அங்குள்ள கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. #HamidNihalAnsari #Pakistancourt
    இஸ்லாமாபாத்:

    ஹமீத் நிகல் அன்சாரி (வயது 33) என்ற இந்தியர், பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். இவரது பூர்வீகம், மும்பை ஆகும்.

    இவர் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் 2012-ம் ஆண்டு சட்ட விரோதமாக நுழைந்தார் என்றும், அவர் பாகிஸ்தானின் போலி அடையாள அட்டையுடன் காணப்பட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    அவர் சமூக வலைத்தளம் ஒன்றின் மூலம் அறிமுகமான தோழியை சந்திப்பதற்காகத்தான் பாகிஸ்தான் சென்றதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மீது அங்குள்ள ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கில் அன்சாரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2015-ம் ஆண்டு ராணுவ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரது தண்டனைக்காலம் இன்று (15-ந் தேதி) முடிகிறது. ஆனால் அவரது விடுதலைக்கு அங்குள்ள இம்ரான்கான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து அன்சாரி தரப்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் காஜி முகமது அன்வர் வழக்கு தொடுத்தார்.

    அந்த வழக்கில், தண்டனைக்காலம் முடிவடையும் நிலையில், தன் கட்சிக்காரரை விடுதலை செய்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக கோர்ட்டு முறையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் ரூகுல் அமீன், கலந்தர் அலிகான் ஆகியோர் நேற்று முன்தினம் விசாரித்தனர்.

    அப்போது அன்சாரி தரப்பில் மூத்த வக்கீல் காஜி முகமது அன்வர் ஆஜராகி, “அன்சாரியின் தண்டனைக்காலம் டிசம்பர் 15-ந் தேதி (இன்று) முடிகிறது. ஆனால் அவரை விடுதலை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகமும், சிறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளனர். எனவே அவரை 16-ந் தேதி காலையில் விடுதலை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும்” என வாதாடினார்.



    அப்போது இம்ரான்கான் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்டார்னி ஜெனரல், “அவரை விடுதலை செய்வதற்கான ஆவணங்கள் இன்னும் தயார் ஆகவில்லை” என கூறினார்.

    உடனே நீதிபதி கலந்தர் அலிகான், “ தண்டனைக்காலம் முடிந்த பின்னர் எப்படி ஒருவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியும்? 2 நாளில் அவரது தண்டனை முடிகிறது. ஆனால் அவரை விடுதலை செய்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது” என கருத்து தெரிவித்தார்.

    உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜராகி இருந்த அதிகாரி, “ வரை விடுதலை செய்வதற்கான சட்ட ஆவணங்கள் தயார் ஆகிற வரையில் ஒரு மாத காலம் சிறையில் வைத்திருக்க முடியும்” என நீதிபதிகளிடம் குறிப்பிட்டார்.

    அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “அன்சாரியை ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.#HamidNihalAnsari #Pakistancourt
    உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்தது. #JuniorShooter #India ##ISSFWCH
    சாங்வான்:

    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது.

    12-வது நாளான நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் 16 வயதான இந்திய வீரர் உதய்வீர் சித்து 587 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அமெரிக்க வீரர் ஹென்றி லிவெரெட் 584 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா வீரர் லீ ஜாக்யோன் 582 புள்ளிகள் திரட்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் விஜய்வீர் சித்து 581 புள்ளிகளுடன் 4-வது இடமும், ராஜ்கன்வார் சிங் சந்து 568 புள்ளிகளுடன் 20-வது இடமும் பிடித்தனர்.

    25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,736 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 1,730 புள்ளிகளுடன் சீனா அணி வெள்ளிப்பதக்கமும், 1,721 புள்ளிகளுடன் தென்கொரியா அணி வெண்கலப்பதக்கமும் வென்றன.

    ஆண்களுக்கான 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய வீரர் குர்பிரீத் சிங் 581 புள்ளிகளுடன் 10-வது இடம் பிடித்தார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் விஜய்குமார் (576 புள்ளிகள்) 24-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அனிஷ் பன்வாலா (576 புள்ளிகள்) 25-வது இடமே பெற்றார்.

    இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் வென்று 4-வது இடத்தில் உள்ளது. சீனா 18 தங்கம், 14 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கமும், தென்கொரியா 11 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கமும், ரஷியா 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கமும் வென்று முறையே முதல் 3 இடங்களை வகிக்கின்றன.  #JuniorShooter #India ##ISSFWCH 
    பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரின் இன்றைய போட்டியில் 3-0 என இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. #HWC2018
    லண்டன்:


    பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியா அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெரும். 2 மற்றும் 3 வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெரும்.

    முன்னதாக, இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடனான போட்டியில்  1-1 என சமநிலை பெற்றது.

    இந்நிலையில், காலிறுதிக்கு தகுதி பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இத்தாலியை எதிர்த்து களமிறங்கியது.

    இன்றைய பரபரப்பான ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால்ரேம்சியாமி முதல் கோலை அடித்தார். இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நேகா கோயல் இரண்டாவது கோலையும், ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா 3-வது கோலையும் அடித்து அசத்தினர்.

    இறுதிவரை போராடிய இத்தாலி வீராங்கனைகளால் கோல் எதுவும் அடிக்க முடியாததால் 3-0  என இத்தாலியை வீழ்த்தி பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. #HWC2018
    ×