search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்வெளி"

    விரைவில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கியிருந்த வீராங்கனை என்ற பெருமையை பெற உள்ளார். #USAstronaut #ISS #SoyuzMS13
    மாஸ்கோ:

    அமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அந்த வகையில், ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்கிற வீராங்கனையும் வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்கிறார்.



    சோயூஸ் எம்-13 விண்கலத்தில் செல்லும் இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 11 மாதங்கள் அல்லது 392 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்துவிட்டு பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்கப்போகிறார்.

    இதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #USAstronaut #ISS #SoyuzMS13
    நிலம், ஆகாயம், விண்வெளி ஆகியவற்றில் துல்லிய தாக்குதல் நடத்தும் துணிச்சலை இந்த அரசு காண்பித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸ் ஒழிந்தால், வறுமையும் ஒழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார். #PMModi
    மீரட்:

    பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற தேர்தலையொட்டி, நேற்று உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தையும் இதே மீரட் நகரில் இருந்து தொடங்கினேன். அப்போது, நீங்கள் காட்டிய அன்பை வட்டியுடன் திருப்பித் தருவேன் என்று கூறினேன். மேலும், 5 ஆண்டு சாதனை அறிக்கையை வெளியிடுவேன் என்றும், அதுபோல், 60 ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று எதிர்தரப்பிடம் கேட்பேன் என்றும் கூறினேன்.

    நான் சொன்ன மாதிரியே எனது சாதனை அறிக்கையை சில நாட்களில் வெளியிடப்போகிறேன். அத்துடன், கடந்த காலத்தில் நீங்கள் ஏன் செயல்படவில்லை, துரோகம் செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்பேன்.

    ஒருபுறம், வலிமையான வளர்ச்சி, மற்றொரு புறம் தொலைநோக்கு பார்வையற்ற எதிர்க்கட்சி. ஒருபுறம், காவலாளி. மற்றொரு புறம், களங்கப்பட்ட தலைவர்கள். இந்த தேர்தல், உறுதியான அரசுக்கும், உறுதியற்ற கடந்த காலத்துக்கும் இடையிலான போட்டி. இதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதற்கு இங்கே கூடி இருக்கும் மக்களே சாட்சி.

    நான் இந்த நாட்டின் காவலாளி. இந்த காவலாளியின் அரசுதான், நிலம், ஆகாயம், விண்வெளி என அனைத்து பகுதிகளிலும் துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கான துணிச்சலை காண்பித்துள்ளது.

    செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகணை பற்றி நான் அறிவித்ததை நாடக கொட்டகை பற்றி பேசியதாக நினைப்பவர்களை பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.

    இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தியபோது, சில எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டன. அவர்கள் பாகிஸ்தானில் புகழ்பெற விரும்புகிறார்கள். மக்கள், இந்திய கதாநாயகனை விரும்புவார்களா? பாகிஸ்தான் கதாநாயகனை விரும்புவார்களா?

    காங்கிரஸ் கட்சி, ஏழைகளுக்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏழைகளுக்கு வங்கிக்கணக்கு தொடங்க முடியாதவர்கள், இப்போது வங்கிக்கணக்கில் பணம் போடுவதாக சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்?

    நான் குழந்தையாக இருந்தபோது, ‘வறுமையை ஒழிப்போம்’ என்று இந்திரா காந்தி கோஷமிட்டதை கேட்டிருக்கிறேன். ஆனால், ஏழைகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தே வந்துள்ளது. வறுமைக்கு காரணமே காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சி ஒழியும்போது, வறு மையும்ஒழிந்து விடும்.

    உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அமைத்துள்ள கூட்டணி, மதுபானம் போன்றது. இவர்கள், ஒருவரை ஒருவர் சிறையில் தள்ளவே பாடுபட்டு வந்தனர். இப்போது, உத்தரபிரதேசத்தை கொள்ளையடிக்க ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய எனது அரசின் உதவியை ஒருபோதும் கேட்டதே இல்லை.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அதனால் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. ஆனால், 2014-ம் ஆண்டுக்கு பிறகு அவை நின்று விட்டன. நாடு இப்போது பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது.

    இருப்பினும், கலப்பட கூட்டணி தலைவர்கள், என்ன செய்தாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், நாடு பின்னோக்கி சென்று விடும். ஆகவே, பா.ஜனதாவுக்கே வாக்களியுங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 
    விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. #MissionShakti
    இஸ்லாமாபாத்:

    செயற்கைகோளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா நடத்தியது பற்றி பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் கூறியதாவது:-

    விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது. விண்வெளியில் ஆயுத போட்டியை தடுப்பது தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை பாகிஸ்தான் முழுமையாக ஆதரிக்கிறது.

    எனவே, கடந்த காலங்களில் இதேபோன்ற சோதனையை பிற நாடுகள் செய்தபோது கண்டித்த நாடுகள் எல்லாம், விண்வெளிக்கான ராணுவ அச்சுறுத்தலை தடுக்கும் செயல்களில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து விண்வெளி நடையை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. #NASA #FemaleSpaceWalk
    வாஷிங்டன்:

    அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இவர்கள் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய கட்டுமானப்பணிகளுக்காக சில மணி நேரம் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் மிதந்து கொண்டு வேலை செய்வது வழக்கம்.

    இதுவரை இந்தப் பணிகளை பெண்கள் மட்டுமே செய்தது கிடையாது. அதாவது ஆண் விண்வெளி வீரர்களின் துணையுடன்தான் விண்வெளி வீராங்கனைகள் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே செல்வது வழக்கம்.

    இந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் மார்ச் 29-ந் தேதி முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து விண்வெளி நடையை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக கிறிஸ்டினா கோச் மற்றும் அன்னே மெக்லைன் என்ற 2 விண்வெளி வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில், விண்வெளியில் பயன்படுத்தும் ஆடை பற்றாக்குறையின் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை நாசா நிறுவனம் ரத்து செய்துவிட்டது.
    ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (‘இஸ்ரோ’) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு 17 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் ஒரு திட்டம் தோல்வியில் முடிந்தது. மற்ற திட்டங்கள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 7 செயற்கைகோள்கள் மற்றும் 9 ராக்கெட்டுகள் அடங்கும். ‘உன்னதி’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதில் 45 நாடுகள் பங்கேற்கின்றன.

    இதில் நானோ செயற்கைகோளை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை வருகிற 17-ந் தேதி மத்திய மந்திரி தொடங்கி வைக்கிறார். ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு தயாரிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி, புதிய செயற்கைகோள்களை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ரூ.30 ஆயிரம் கோடி 2 ஆண்டுகளுக்கான திட்ட பணிகளுக்கு செலவு செய்யப்படும். இதன் மூலம் புதிதாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஏற்கப்படும். இந்த ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் மிக முக்கியமான விஷயம் ஆகும். இதில் 2 விஷயங்கள் உள்ளன. அதாவது ஒன்று என்ஜினீயரிங் மற்றும் மற்றொன்று மனிதர்கள் ஆகும்.

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது என்பது ‘இஸ்ரோ’ வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு என்றே மனித விண்வெளி அறிவியல் மையத்தை அமைத்துள்ளோம்.



    இதற்காக அட்டின் என்பவரை இயக்குனராக நியமித்துள்ளோம். ககன்யான் திட்ட பணிகள் முழுவதையும் அந்த மையமே பார்த்துக்கொள்ளும். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன்பு, சோதனைக்காக ஆளில்லாத விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும், 2021-ம் ஆண்டு ஜூலை மாதமும் விண்ணுக்கு ஏவப்படும்.

    இந்த சோதனையின்போது அதில் ஏதாவது குறைகள், பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தால், அதை சரிசெய்வோம். கடைசியாக 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த திட்ட இலக்கை அடைய முழுவீச்சில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நடப்பு ஆண்டில் ககன்யான் திட்டத்திற்கு தான் அதிகப்படியான முன்னுரிமை அளிக்கிறோம். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன், இந்தியாவில் ஆரம்பகட்ட பயிற்சி வழங்குகிறோம். அதன் பிறகு நவீன பயிற்சிகள் வெளிநாட்டில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரஷியாவில் வழங்கப்படலாம்.

    விண்கலத்தில் இந்தியர்கள் தான் அனுப்பப்படுவார்கள். விண்ணுக்கு பெண்களை அனுப்பவும் நாங்கள் விரும்புகிறோம். விண்ணுக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் இந்தியாவால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தமாட்டோம்.

    இறுதிக்கட்ட பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படலாம். விண்ணுக்கு செல்லும் மனிதர்கள் 7 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறினார். #ISRO #Sivan 
    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய ‘ரோவர்’ எந்திரத்துடன் சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #Chandrayaan2 #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் சில சோதனைகள் இன்னும் முடிவடையாததால், சந்திரயான்-2 விண்கலம் மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும். அதில் ரோவர் நகரும் ஆய்வு எந்திரம் பொருத்தப்படும். அந்த வாகனம், நிலவில் தரையில் இறங்கி ஆய்வு செய்யும். அது 500 மீட்டர் சுற்றளவுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.



    இஸ்ரோ வெளிநாடுகளிலும் தரை கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. அது ரஷியா, ஜப்பான் நாடுகளாக இருக்கலாம். இஸ்ரோ டி.வி.யை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டுக்குள் இஸ்ரோ டி.வி. தொடங்கப்படும்.

    பூடான் நாடு, தங்கள் நாட்டில் தரை கட்டுப்பாட்டு மையத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆதித்யா விண்கலம் 2020-ம் ஆண்டு விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது சூரியனை ஆய்வு செய்யும்.

    இவ்வாறு சிவன் கூறினார். #Chandrayaan2 #ISRO #Sivan 
    விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட விர்ஜின் காலக்டிக் நிறுவனத்தின் விமானம், விண்வெளியின் எல்லை வரை சென்று வெற்றிகரமாக திரும்பி உள்ளது. #VirginGalactic #SpaceShipTwo #SpaceTour
    கலிபோர்னியா:

    அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜின் காலக்டிக் நிறுவனம், விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சிறப்பு விமானத்தை உருவாக்கி, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

    மூன்று முறை நடத்தப்பட்ட சோதனை தோல்வியடைந்த நிலையில், நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. விண்வெளிக்கு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானம், கலிபோர்னியாவின் மோஜவே பாலைவனத்தில் இருந்து புறப்பட்டு, விண்வெளிக்கு மிகவும் அருகில் சென்று வெற்றிகரமாக திரும்பியுள்ளது.

    ஸ்பேஸ்-ஷிப்-டூ என்று அழைக்கப்படும் அந்த விமானம் பூமியிலிருந்து 82.7 கிலோமீட்டர் உயரத்துக்கு சென்றது. இந்த சோதனை திருப்திகரமாக அமைந்ததால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் போட்டியில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஸோஸின் புளூ ஆரிஜின் நிறுவனங்களுடன் சர் ரிச்சர்டு பிரான்சனின் விர்ஜின் காலக்டிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

    2014ம் ஆண்டு சோதனை ஓட்டத்தின்போது நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியதால், விண்வெளி சுற்றுலா திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது குறிப்படத்தக்கது.  #VirginGalactic #SpaceShipTwo #SpaceTour
    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களுடன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. #ISRO #KSivan
    ஸ்ரீஹரிகோட்டா :

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ என்ற செயற்கைகோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு நேற்று செலுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக தீர்மானிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ராக்கெட் மூலம் ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பப்பட்ட 30 செயற்கைகோள்கள், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டுள்ளன. ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள், சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்பட்டது. பூமி ஆய்வுக்காக மட்டுமே அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த செயற்கைகோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புவிப்பரப்பின் மீது உள்ள பொருட்களை மிகத் துல்லியமாக அடையாளம் காண்பது இந்த செயற்கைகோளின் முதன்மை நோக்கமாகும். இந்த செயற்கை கோள் விவசாய மேம்பாட்டுக்கு முழுமையாக பயன்படுத்த முடியும்.

    தொடர்ந்து, பிரெஞ்சு கயானாவில் இருந்து டிசம்பர் 5-ந்தேதி அதிக எடை கொண்ட ஜிசாட்-11 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 4 டன் வரையிலான செயற்கைகோள்களை மட்டுமே செலுத்தும் திறன் கொண்டது. ஆனால் ஜிசாட்-11 5.86 டன் எடை கொண்டது. அதனால் இந்த செயற்கைகோளை இங்கிருந்து விண்ணில் அனுப்ப இயலாது என்பதால் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்படுகிறது.



    அதைத்தொடர்ந்து, 20 நாள்களில் ஜி.எஸ்.எல்.வி. ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். தொடர்ந்து, அடுத்த ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுகிறது.

    இஸ்ரோ இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 270 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது உலக அளவில் இஸ்ரோவுக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. புவி வட்டப்பாதையில் இப்போது இஸ்ரோவின் 47 செயற்கைகோள்கள் தகவல் தொடர்புகள், புவி கண்காணிப்பு, அறிவியல் ஆய்வுகள், கடல்சார் ஆய்வுகள் போன்ற பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகின்றன.

    ‘ககன்யான்’ விண்கலம் விண்ணுக்கு அனுப்புவதற்கான பணிகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. ககன்யானுக்கு முன்னதாக ஆளில்லாத முதலாவது விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து மேலும் ஒரு விண்கலம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    அதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் செல்லும் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    தொடர்ந்து அடுத்த ஆண்டு, 12 முதல் 14 செயற்கைகோள் அதாவது 15 நாட்களுக்கு ஒரு ராக்கெட் வீதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி என்கிற சொத்தை இஸ்ரோ திறமையாக கையாண்டு தொலை உணர்வு (ரிமோட் சென்சிங்) சேவையை நாட்டுக்கு வழங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #KSivan
    பாகிஸ்தான் நாட்டில் இருந்து முதன்முதலாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் சீனாவின் உதவியுடன் 2022-ல் நிறைவேற்றப்படும் என அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். #Pakistan #China #SpaceProject #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அரசு சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து முதல் நபரை விண்வெளிக்கு அனுப்ப சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்ட 2 செயற்கைகோள்களை சீனாவின் ராக்கெட்டுகளை பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது. 2022-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து முதல் வீரரை விண்வெளிக்கு அனுப்ப சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான ஒப்புதல் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெறப்பட்டதாக அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி அறிவித்துள்ளார்.



    சீனாவில் இருந்து ஆயுதங்களை வாங்கும் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருந்து வரும் நிலையில், நவம்பர் 3-ம் தேதி பிரதமராக சீனாவுக்கான தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #China #SpaceProject #ImranKhan
    ‘ககன்யான்’ விண்கலம் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா விண்வெளி துறையில் சாதனை படைத்து வருகிறது. அடுத்த கட்டமாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து உள்ளது.

    கடந்த 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி 2022-ம் ஆண்டுக்குள் ‘ககன்யான்’ விண்கலம் மூலம் இந்தியா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் என்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்பு, உலகளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 வீரர்கள் கொண்ட குழுவை 7 நாட்களுக்கு விண்வெளியில் அனுப்பி வைக்கும் திட்டம் இது.



    இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் அணுசக்தி, விண்வெளித்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் கே.சிவனுடன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார்.

    அப்போது ஜிதேந்திர சிங் கூறும்போது, “விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை இந்தியா 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றும். இந்த திட்டம் குறைந்த செலவிலானதுதான். இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரூ.10 ஆயிரம் கோடி தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்” என்றார்.

    மேலும், “அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளன. இந்த திட்டம், அந்த வரிசையில் இந்தியாவை நான்காவது நாடாக சேர்க்கும்” என்றும் குறிப்பிட்டார்.

    ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் நிருபர்களிடம் பேசும்போது, “விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைப்பதற்கான இந்த திட்டம் தொடர்பான சோதனைகள், 2004-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த திட்டம் எங்கள் முன் உரிமை பட்டியலில் இல்லை. அதற்காக இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) எடுத்துக்கொள்ளாது என்று அர்த்தம் ஆகாது” என குறிப்பிட்டார்.

    அப்போது மந்திரி ஜிதேந்திர சிங், “விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் முடிவு, அரசியல் முடிவுக்கு மேலானது ஆகும். இஸ்ரோவின் கவனம் எல்லாம் தகவல் தொடர்பு, விவசாயம், பருவ நிலை போன்ற முக்கிய துறைகள் சார்ந்த திட்டங்களில் இருக்கிறது. நாங்கள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப திட்டமிட்டு விட்டோம். இது குறிப்பிடத்தகுந்த ஒரு திட்டம் என்பதால் பிரதமர் அறிவிப்பதற்காக காத்து இருந்தோம்” என்று குறிப்பிட்டார்.

    விண்வெளிக்கு அனுப்புகிற வீரர்களின் பாதுகாப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளிக்கையில், “வீரர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது” என்று கூறினார்.

    ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தொடர்ந்து நிருபர்களிடம் பேசும்போது, “அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நிறைவேற்றுவதற்கு 19 திட்டங்கள் வரிசையில் நிற்கின்றன” என்று குறிப்பிட்டார்.

    மேலும், “சந்திரயான்-2 திட்டம்தான் மிக முக்கியமான திட்டம். இஸ்ரோவின் திட்டங்களில் எல்லாம் இது மிகவும் சிக்கலான திட்டம் ஆகும். வரும் ஜனவரி மாதம் சந்திரயான்-2 விண்வெளியில் செலுத்தப்படும்” எனவும் கூறினார்.


    விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்காக பயன்படுத்தப்படும் விண்வெளி கேப்ஸ்யூல் இயந்திரத்தை இஸ்ரோ சொந்தமாக தயாரித்து இன்று சோதனை செய்தது. #SpaceCapsule #ISRO
    புதுடெல்லி:

    விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கும், ராக்கெட் விண்வெளிக்கு செல்லும்போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிக்கவும் விண்வெளி கேப்ஸ்யூல் இயந்திரத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இந்த இயந்திரமானது அனைத்து கால நிலைகளையும் சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இந்த விண்வெளி கேப்ஸ்யூலை சொந்தமாக உருவாக்க இருப்பதாக  2 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோ அறிவித்து இருந்தது. அதன்படி, விண்வெளி கேப்ஸ்யூல் இயந்திரத்தை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

    பூமியில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அடுத்தகட்ட சோதனைகள் விரைவில் நடத்தப்படும். #SpaceCapsule #ISRO
    சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படத்தின் விமர்சனம். #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj
    பூமியை நோக்கி ஒரு எரிக்கல் ஒன்று விழுகிறது. இதனால், பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை விட சக்தி வாய்ந்த எரிக்கல் ஒன்று விரைவில் பூமியை நோக்கி விழ இருக்கிறது. இது விழுந்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

    இதனால் அதை தடுக்க ராணுவ தளபதி ஜெயப்பிரகாஷ், தன் உதவியாளர்களான நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன் ஆகியோருடன் முயற்சிக்கிறார். அந்த விண்கல்லை அழிக்க தேவையான சாதனங்கள் இங்கு இல்லாததால், விண்வெளியில் இருக்கும் வேறு நாட்டுக்குச் சொந்தமான விண்கலத்தை வைத்து அழிக்க நினைக்கிறார்கள்.

    விண்கலத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், அந்த விண்கலத்தை திருடி நமக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார்கள். அதற்காக திறமையான ஆளை தேடும் போது, மேஜிக் மேனாக இருக்கும் ஜெயம் ரவியை தேர்வு செய்கிறார்கள்.



    சிறிய தவறுக்காக மகனை விட்டு பிரிந்து சிறையில் வாழும் ஜெயம் ரவியிடம், எரிகல்லை அழிக்க உதவினால், அவரது தண்டனையை ரத்து செய்து, மகனுடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கின்றனர். மகன் மீதான பாசத்தால் ஜெயம் ரவிக்கு இந்த திட்டத்துக்கு ஒத்துக் கொள்கிறார். மேலும் இந்த திட்டத்தில் தனது நண்பர்களும் தனக்கு துணையாக இருந்தால்தான் எதையும் வெற்றியுடன் செய்ய முடியும் என்று கூறி ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜெயம் ரவி தனது குழுவுடன் விண்வெளிக்குச் செல்கிறார்கள்.

    இந்த நிலையில், அவர்களது ராணுவ தளத்தில் இருந்து ஜெயம் ரவிக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஜெயம் ரவியின் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்கள் செய்யும் திட்டத்தை சதி மூலம் முறியடிக்கச் செய்ய வேண்டும் என்றும் போன் செய்பவர் மிரட்டுகிறார். தன் மகனுக்காக எதையும் செய்யும் ஜெயம் ரவி, எரிக்கல்லை அழிக்க தேவையானதை செய்தாரா? தனது மகனை காப்பாற்றினாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் ஜெயம் ரவி, பாசமிகு அப்பாவாகவும், பொதுநலத்துடன் எரிகல்லை அழிக்க போராடுபவராகவும் வந்து அசத்தியிருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. பல காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் மூலம் இவருடைய மகன் ஆரவ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா... குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பாசக் காட்சிகளில் அப்பா, மகன் என இருவருமே போட்டிபோட்டு நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். 

    இதுவரை கல்லூரி பெண், கிராமத்து பெண் என நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். ஒரு ராணுவ அதிகாரிக்குண்டான மிடுக்குடனும், ஒரு சில இடங்களில் கவர்ச்சியாகவும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். 

    வில்லத்தனத்தில் ஆரோன் ஆசிஸ் ஆக்ரோஷமில்லாமல், அமைதியுடன் வந்து மிரட்டுகிறார். மற்றபடி ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் என அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    இந்தியாவின் முதல் விண்வெளி படமாக டிக் டிக் டிக் படத்தை உருவாக்கி இருக்கும் சக்தி சவுந்தர்ராஜனுக்கு பாராட்டுக்கள். விண்வெளி, விண்கலம் என விண்வெளி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பா, மகன் பாசம், மற்றொரு பக்கத்தில் எரிகல்லை அழிக்கும் திட்டம் என திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தில் கலை பணியில் எஸ்.எஸ்.மூர்த்தி மெனக்கிட்டிருக்கிறார் என்பது படத்தை பார்கும் போதே தெரிகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற வகையில் விண்வெளி சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். 

    டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `டிக் டிக் டிக்' விறுவிறுப்பு. #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj
    ×