search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • மூட்டைகளில் கியூ ஆர்கோடு, சிலிப் தைக்கப்பட்டு உள்ளதையும் அதன் செயல்பாட்டினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
    • மூட்டைகளில் கியூ ஆர்கோடு, சிலிப் தைக்கப்பட்டு உள்ளதையும் அதன் செயல்பாட்டினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் இயங்கும் வட்ட செயல்முறை கிடங்கினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பொது வினியோக திட்டத்துக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவற்றினை கேட்டறிந்து மூட்டைகளில் கியூ ஆர்கோடு, சிலிப் தைக்கப்பட்டு உள்ளதையும் அதன் செயல்பாட்டினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதை தொடர்ந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பினை அதிகப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் முருகானந்தம், துணைப்பதிவாளர் அமீர் அஹசன் முசபர் இம்தியாஸ், உதவி மேலாளர் சுந்தரராமன், கண்காணிப்பாளர் விஸ்வநாதன், குந்தா தாசில்தார் இந்திரா, குந்தா வட்ட வழங்கல் அலுவலர் வேடியப்பன் உள்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • இன்று காலை 5 மணியளவில் வீட்டு முன்பு இருந்து சத்தம் வந்தது.
    • செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ண சாகர் (வயது 22). கன்னியாகுமரியை சேர்ந்தவர் அபிஷ் (20), கதிரவன் (20). இவர்கள் 3 பேரும் மலுமச்சம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    மாணவர்கள் 3 பேரும் மலுமச்சம்பட்டி அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிக்கு சென்று வருவதற்கு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வந்தனர். கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பும் இவர்கள் அங்குள்ள காம்பவுண்டுக்குள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு மாணவர்கள் வழக்கம் போல மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றனர். இன்று காலை 5 மணியளவில் வீட்டு முன்பு இருந்து சத்தம் வந்தது. உடனடியாக மாணவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது 3 பேரின் மோட்டார் சைக்கிள்களும் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. இதனை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயை அணைத்தனர். இருந்த போதிலும் 3 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக எரிந்து நாசமானது.

    இந்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ேரால் கசிவு காரணமாக மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததா அல்லது முன் விரோதம் காரணமாக என்ஜினீயரிங் மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்து சென்றார்களா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • 460 வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்துக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி, மற்றும் உடுமலை, அமராவதி என உள்ளிட்ட 6 வனசரகங்கள் உள்ளன.

    இதில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை மற்றும் அரிய வகையான பறவைகளும் என பலதரப்பட்ட வனவிலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டுக்கான மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கும் உடுமலை வனக்கோட்டத்திற்கும் உட்பட்ட 6 வனச்சரகங்களில் 115 நேர்கோட்டுப் பாதை அமைக்கப்பட்டு 460 வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கணக்கெடுப்பு பணியின் போது மாமிச உண்ணி, தாவர உண்ணி சார்ந்த வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    • காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மாணவியின் பெற்ேறார் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார்.

    இந்தநிலையில் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழனியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் மாணவியை அவரது பெற்றோர் குரும்பபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அவரை அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவியை தேடி வருகிறார்கள்.

    • மாநகராட்சியே சுத்திகரிப்பதால் லிட்டருக்கு ரூ.6 மட்டுமே செலவாகும்.
    • கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது.

    கோவை,

    கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி ஆற்றில் இருந்து குடிதண்ணீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, சுத்திகரித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் குடிநீர் வடிகால் வாரியம் ஈடுபடுகிறது.

    இந்த நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுவாணியில் இருந்து குடிதண்ணீரை கொண்டு வந்து சுத்திகரித்து, மாநகராட்சி முழுவதும் விநியோகம் செய்து வருகிறோம். இதற்கான பணிகளில் குடிநீர் வடிகால் வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அவர்களுக்கு லிட்டருக்கு ரூ.11 வீதம் மாதந்தோறும் ரூ.4 கோடி வழங்க வேண்டி உள்ளது.

    எனவே சிறுவாணி ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை மாநகராட்சியே சுத்திகரித்து வழங்குவது என்று முடிவு செய்து உள்ளது. இந்த வகையில் லிட்டருக்கு ரூ.6 மட்டுமே செலவாகும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு உத்தேச அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது.

    குறிச்சிகுளத்தில் இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், கிராஸ்கட் ரோடு ஆகிய பகுதியில் 10 சதவீதம் பணிகள் நிலுவையில் உள்ளது. இது வருகிற ஜூலை மாதத்துக்குள் முடிந்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • போலீசார் இறந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் சிறுமுகை பகுதிக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சிக்கதாசம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்த இறந்த ஆண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல பெரியநாயக்கன்பாளையம் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள துணிக்கடை முன்பு 60 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
    • அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    வால்பாறை,

    வால்பாறையில் நாளை முதல் 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலையாறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (26-ந்தேதி) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

    கோடை விழாவின் போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மலர் கண்காட்சியும் இடம் பெறுகிறது.

    கலை பண்பாட்டு துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டை மேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    காவல்துறை சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா? மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது அந்த காலமா? இந்த காலமா? பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் சனிக்கிழமை அன்று பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

    இக்கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.

    விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    • தற்போது, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்து 2-ம் கட்ட பணி நடக்கிறது
    • மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட நகரம், ஒன்றிய குடியிருப்பு பகுதிகளில் 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணியில், 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட நகர். ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.

    அதுபோல, 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, கல்வித்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2 வாரங்கள் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வட்டார கல்வித்துறை சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

    இதையடுத்து 2-ம் கட்டமாக பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள், பள்ளியில் இடை நின்ற மாணவர்கள் குறித்து கண்டறிந்து கணக்கெடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் உள்ள ஆசிரியர், சிறப்பாசிரியர், சத்துணவு பணியாளர், தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

    அதிலும், கிராமப்புறங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடர்ந்து நடக்கிறது. அப்போது ஆசிரியர்கள் பெற்றோர்களை சந்தித்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையிம் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழி வகை செய்யும் வகையில், பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை என்ற நோக்கத்தில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    தற்போது, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்து 2-ம் கட்ட பணி நடக்கிறது. இப்பணி வரும் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன், 5 வயது நிறைவடை்ந்த பள்ளி வயதுள்ள குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசு பள்ளியில் சேர விருப்பமுள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அருகேயுள்ள பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும்.

    மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில், கல்விக்காக தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கியதுடன், பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள், அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என்றனர்.

    • பீளமேடு போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜெயந்த் தாஸ் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கோவை,

    கோவை ஆவாரம்பாளையம் எம்.ஜி. ரோட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது.

    இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புரோக்கர் ஜெயந்த் தாஸ் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    அங்குள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 24, 31 மற்றும் 25 வயதுடைய 3 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் மீட்கப்பட்ட அழகிகளை காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜெயந்த் தாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஜெயாகவுரி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
    • கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    குனியமுத்தூர்,

    கோவை வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி ஜெயாகவுரி (வயது 44). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஜெயாகவுரியை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயாகவுரி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த டாக்சி டிரைவர் அருண்குமார் (25) என்பது தெரியவந்தது. விசாரணை முடிந்ததும் போலீசார் கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
    • தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

    கோவை,

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில், கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட மதுவிலக்கு, அமலாக்கப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவை ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா கூறியதாவது:-

    கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது, கடத்துவது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 7604010581 என்ற செல்போன் எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளோம்.இந்த எண் மூலம் வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

    குறிப்பாக முக்கிய பகுதியாக கருதப்படும் சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர், துடியலூர், தடகாம், காரமடை, மேட்டுப்பாளையம், வடவள்ளி, ஆலாந்துறை, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

    அதில் உள்ள செல்போன் எண் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு பணத்தை வழங்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றார் தாசில்தார்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு பணத்தை வழங்கப்பட்டது.

    இருந்தபோதிலும் மற்ற பகுதிகளில் அந்த வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசமும் மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

    விமான நிலைய நிலைய நிலஎடுப்பு தனி தாசில்தார் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையினர் கோவை சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளின் மின்சாரத்தை துண்டித்து , மீட்டர்களை எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் கூறியதாவது எங்களுக்கு இன்னும் சில நாட்கள் கால அவகாசம் தந்தால் நாங்களாகவே காலி செய்து விடுவோம்.

    திடீரென்று மின்சாரத்தை துண்டித்ததால் தற்சமயம் கோடை காலம் என்பதால் எங்களால் குடி இருக்க முடியவில்லை. பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் மின்சாரம் இல்லாமல் எப்படி இருப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்.இது குறித்து தனி தாசில்தார் கூறும்போது, ஏற்கனவே இந்த பகுதி பொதுமக்களுக்கு ஒரு மாத காலம் கால அவகாசம் அளித்திருந்தோம். அதன் பிறகும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. எனவே மாவட்ட கலெக்ட ரின் உத்தரவுப்படி மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றார்.

    ×