search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • மதன்குமார் அரிவாளை எடுத்து சார்லஸ் மரிய ஜான் தலையில் வெட்டினார்.
    • போத்தனூர் போலீசார் மதன்குமாரை கைது செய்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் ஜெரால்டு. இவரது மகன் சார்லஸ் மரிய ஜான் (வயது 22). இவர் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் காந்திஜி ரோட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

    இளம்பெண்ணுக்கு ஒரு தங்கை உள்ளார். அவரை அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மதன்குமார் (28) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இவர் அடிக்கடி பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்தார்.

    இது குறித்து அவர் தனது அக்காவிடம் தெரிவித்தார். அவர் தனது காதலன் சார்லஸ் மரிய ஜானிடம் கூறினார். இதனையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் மதன்குமாரை சந்தித்து எனது காதலியின் தங்கைக்கு உன்னை பிடிக்கவில்லை.

    எனவே அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்தி கொள்ளவும் என கூறினார்.சம்பவத்தன்று சார்லஸ் மரிய ஜான் தனது மோட்டார் சைக்கிளில் சுந்தராபுரம் ஆசிரியர் காலனி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அரிவாளுடன் அங்கு நின்று கொண்டு இருந்த மதன்குமார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். பின்னர் நீ மட்டும் அக்காவை காதலிக்கலாம், நான் அவரது தங்கையை காதலிக்க கூடாதா என கூறி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமார் அரிவாளை எடுத்து சார்லஸ் மரிய ஜான் தலையில் வெட்டினார். பின்னர் கையில் குத்தி கிழித்தார்.

    பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தகராறில் ஐ.டி. ஊழியரை வெட்டிய மதன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வடவள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையத்தை சேர்ந்தவர் 28 வயது கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தொழிலாளிக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இளம்பெண் தனது குழந்தைகளுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் தொழிலாளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.
    • ஏர் ஹாரன் சத்தங்கள் நோயாளிகளின் நெஞ்சை பதற வைக்கிறது.

    குனியமுத்தூர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எதிர்புறம் பஸ் நிலையம் உள்ளது. அனைத்து பஸ்களும் இங்கு வந்து திரும்பிச் செல்லும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து இறங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வது வழக்கம். ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவதும் அங்கிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறுவதும் வழக்கம்.

    இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிர்புறம் உள்ள பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களும்,

    அரசு பஸ்களும் போட்டி போட்டுக் கொண்டு ஏர் ஹாரன்களை ஒலிக்கின்றனர். அந்த பஸ் நிலையத்தின் பரப்பளவு மிகவும் குறைவானதாகும். ஒரு பஸ் வெளியே சென்றால் மட்டுமே, பின்னால் வரும் அடுத்த பஸ் வெளியேற முடியும் .

    டைமிங் பிரச்சினை காரணமாக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வது அங்கு வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் ஏர்ஹாரன் சத்தம் அந்த இடத்தில் எந்த நேரமும் ஒலித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இந்த சத்தம் காரணமாக அங்கு வரும் நோயாளிகளுக்கு பதட்டம், மன அழுத்தம் ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து நோயாளிகள் கூறுகையில், இவர்கள் அடிக்கும் ஏர்ஹாரன் பிரசவ வார்டு வரை கேட்கிறது. பொதுவாக சிகிச்சையில் இருக்கும் நோயாளியிடம் சத்தமாக பேசக்கூடாது என்று கூட மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஏர் ஹாரன் சத்தங்கள் நோயாளிகளின் நெஞ்சை பதற வைக்கிறது. டிரைவர்கள் இதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே நல்லது என்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுவாக நகர்ப்புற எல்லைக்குள் ஏர்ஹாரன் அடிக்க கூடாது என்று வட்டாரப் போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் அதையும் மீறி ஒரு சில டிரைவர்கள் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள். அவ்வாறு செயல்படும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து துறையினரும் போக்குவரத்து போலீசாரும் இதனை அன்றாடம் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கும் பட்சத்தில் நகர்ப்புற எல்லைக்குள் அமைதியான பயணத்தை மேற்கொள்ளலாம் என கூறினர்.

    • கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
    • பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பையும் பார்வையிட்டார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம்செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், கவுண்டம்பாளையம் பகுதியில்செயல்பட்டுவரும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையம் ஆகியவை குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்.

    வெள்ளக்கிணறு கிராமத்தில் 53 ஏக்கர் பரப்பளவில் 1,006 மனைகள் மேம்பாட்டுத்திட்டம் ரூ.50 கோடிமதிப்பீட்டில் செயல்படு

    த்தப்பட்டு வருவதையும், பெரியநாயக்கன்பாளையத்தில் சுமார் 10.81 ஏக்கர் பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ.152.87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக வீட்டுவசதி வாரிய கோயம்புத்தூர் பிரிவு அலுவலகத்தினை பார்வையிட்ட கலெக்டர் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, வெள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டுவசதித் துறையின் மூலம் மனை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், அப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பயனாளிகள் தேர்வு குறித்தும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்தவருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் ஆகிய நான்கு பிரிவுகளின் ஒதுக்கீடு செய்யப்படும் வீட்டுமனைப் பிரிவுகளின் எண்ணிக்கைகுறித்தும் கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையத்தில் சுமார் 10.81 ஏக்கர்பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ.152.87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த கலெக்டர் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

    பின்னர், கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில்பார்வையிட்டு, அம்மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை பரிசோதித்து பார்த்தார்.

    இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் (சிறப்பு திட்ட கோட்டம் -3) பெரியசாமி, முதன்மை கல்வி அலுவலர் பூபதி உள்பட தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய அலுவலர்கள்பலர் உடன் இருந்தனர்.

    • வ.உ.சி.க்கு முழு உருவச்சிலை நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார்.
    • ரூ.40 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறையின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவையில் நிறுவப்பட்டுள்ள வ.உ.சி.யின் 7 அடி உயர முழு உருவச் சிலையை விரைவில் தமிழக முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

    நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு, கோவையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார்.

    இதையடுத்து, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், வ.உ.சி. மைதானத்தில் அவிநாசி சாலையை ஒட்டிய இடத்தில் 50 அடி அகலம், 45 அடி நீளமுள்ள இடம் சிலை அமைக்க ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறும் போது,

    ரூ.40 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறையின் சார்பில், வ.உ.சி.க்கு முழு உருவ உலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    தரையில் இருந்து 4 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது 7 அடி உயரத்தில் பீடம் அமைத்து, 7 அடி உயரத்துக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராமாவரம் பகுதியில் உள்ள சிலை தயாரிக்கும் மையத்தில் இருந்து உலோகத்தால் இச்சிலை செய்யப்பட்டு, கோவைக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டு ள்ளது.

    மேடை பகுதியில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் தற்போது மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ திறந்துவைப்பார் என்றனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மாமனார் செல்வராஜ், குடிபோதையில் இருந்த பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் பிரதாப் (வயது 33). இவர் பொள்ளாச்சி ஆதியூரை சேர்ந்த செல்வ ராஜ் (42) என்பவர் மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை உள்ளனர்.

    பிரதாப்புக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் மனமுடைந்த பிரதாப் வடக்கிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் செல்வராஜ், குடிபோதையில் இருந்த பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டனர். இதனால் கோபமடைந்த செல்வராஜ் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். காயம் அடைந்த பிரதாப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ரூ.40 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    கோவை,

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மனைவி விஜயலட்சுமி( வயது 30). நேற்று இவர் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள 2 ஏடிஎம் மையங்களுக்கு சென்றார். ஏடிஎம் கார்டு பயன்படுத்தி விஜயலட்சுமி பணத்தை எடுக்க முடியவில்லை இதனையடுத்து அவர் அங்கு வந்த வாலிபர் ஒருவரின் உதவியை நாடினார் அவர் உதவி செய்வது போல நடித்து விஜயலட்சுமியின் ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை பயன்படுத்தி அவருக்கு தெரியாமல் ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார் இது குறித்து விஜயலட்சுமி குனியமுத்தூர் போலீஸ் இன் புகார் செய்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணுக்கு உதவி செய்வது போல நடித்து அவரது வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 40 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்
    • பஸ் வரவழைத்தால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அடுத்துள்ள இடிகரை பேரூராட்சியில் இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்.

    அதுவும் அத்திப்பா ளையம் தொடக்கப்பள்ளி, இடிகரை தொடக்கப்பள்ளி, இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் அவர்கள் படிக்க செல்கிறார்கள். இந்த நிலையில் இங்கிருந்து படிக்க வரும் மாணவ, மாணவிகள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை நடத்து வந்து அங்கு நிற்கும் அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்கு வருகின்றனர்.

    மேலும் பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று வருவதால் அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர இயலவில்லை. இதனால் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் நின்று விடுகிறார்கள்.

    மேலும் பள்ளி குழந்தைகள் நடந்து வரும் பகுதி காட்டு பகுதியாக உள்ளது.

    ஏற்கனவே இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இடிகரை பள்ளி சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் காலை நேரத்தில் அரசு பஸ் ஒன்று ரங்கநாதர் பாலிடெக்னிக் அருகே வந்து நின்று செல்கிறது. அதுவும் சுமார் 20 நிமிடம் நிற்பதால் அந்த பஸ் எம்.ஜி.ஆர் நகருக்கு வரவழைத்தால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பயன் அடைவார்கள். மேலும் இது மாணவர் சேர்க்கையையும் அதிகரிக்க உதவும் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • உழவர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது
    • 45 உழவர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் கோவை வேளாண் அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தரமான விதை உற்பத்தி மற்றும் வர்த்தகம் குறித்து உழவர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் முனைவர்.குமாரவடிவேலு தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் தேசிய விதை கழகத்தின் மண்டல மேலாளர் செல்வேந்திரன்,கோவை விதை மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    விதை மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் பேசும்போது, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் மூலமாக விவசாயிகள் உற்பத்தியை பெருக்கலாம். விதை நேர்த்திகள் செய்வதன் மூலமாக தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த முகாமில் தேசிய விதை கழகத்தின் மேலாளர் சிந்துஜா அனைவரையும் வரவேற்றார். இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 45 உழவர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோவை வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானி சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

    • கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த குமார் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காரமடை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.

    காரமடை காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்ெபக்டராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செந்தில்குமாருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் இப்ராஹிம், விஜயராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • கடந்த 2005-ம் ஆண்டு லிங்காபுரம்-காந்தவயல் இடையே 21 அடி உயரத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.
    • தற்போது 168 அடி நீளம், 53 அடி உயரத்தில் பாலம் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியில் லிங்காபுரம் கிராமம் உள்ளது.

    இங்கிருந்து பழங்குடியின கிராமங்களான காந்தவயல், உலியூர், ஆலுர், மேலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பவானிசாகர் நீர்த்தேக்கத்தை தாண்டி செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் ஆண்டு தோறும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கேரளா பகுதியில் பெய்து வரும் மழைநீர் பவானிசாகர் நீர்த்தேக்கத்தில் தேங்கி நிற்கும்.

    இதனிடையே வருடத்தில் 6 மாதங்கள் லிங்கபுரத்திலிருந்து காந்தவயல், ஆலுர், மேலூர், உலியூர் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

    இதனையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு லிங்காபுரம்-காந்தவயல் இடையே 21 அடி உயரத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.

    ஆனால் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் நீர் பிடிப்பு அதிகமாகும் போது பாலம் தண்ணீரில் மூழ்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் இப்பகுதி மக்கள் விளை பொருட்களை எடுத்துச் செல்லவும், தங்களது அன்றாட தேவைகளுக்கு சென்று வரவும் சாலை வசதி இல்லாததால் நீர் தேக்கத்தின் வழியாக பரிசல் மற்றும் மோட்டார் படகு சேவையை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து தற்போது 168 அடி நீளம், 53 அடி உயரத்தில் இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட ரூ.14 கோடி செலவில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    தற்போது இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதனிடையே இப்பணிகளை சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், துணைத்தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    5 வரை அந்த பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    இருகூர் மின்னூட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28-ந் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை அந்த பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. இருகூர், ஒட்டர்பாளையம், பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூர், ராவத்தூர், சிந்தாமணிப்புதூர், சின்னயம்பாளையம் (ஓரு பகுதி), தொட்டிபாளையம் (ஒரு பகுதி), அத்தப்பக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×