search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • கண்இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.
    • மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பவானி சங்கர் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ரங்கநாயகி(வயது72). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சுப்பு செட்டி வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி செயினை பிடித்தார். அப்போது அந்த வாலிபர்கள் அவர்கள் கையில் கிடைத்த 2 ½ பவுன் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    • பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
    • ஒரு ஸ்கூல் பேக் தலா ரூ.1000 முதல் ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு குழந்தைகளுக்கு புதிய நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் சீருடைகள் வாங்கும் பணியில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் குழந்தைகளுடன் கோவையில் உள்ள கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கூட்டம் அலை மோதி வருகிறது.

    கோவை கடைவீதிகளில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், தண்ணீர் பாட் டில்கள், டிபன் பாக்ஸ், லஞ்ச் பேக் ஆகியவை விற்பனைக்கு தயாராக உள்ளன. அடுத்தபடியாக வணிக வளாகங்களில் மாணவர்களுக்கான ஸ்கூல் பேக் விதம்விதமான ரகம், தினுசுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இங்கு சோட்டாபீம், ஸ்பைடர்மேன், ஆங்கி ரிபேர்ட்ஸ் உள்ளிட்ட கார்ட் டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பல்வேறு ரகம்-டிசைன்களில், குழந்தைகளை கவரும் வகையில் ஸ்கூல்பேக் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    ஒரு ஸ்கூல் பேக் தலா ரூ.1000 முதல் ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது. எனவே நடுத்தர குடும் பத்தை சேர்ந்தவர்கள் சாலையோரங்களில் விற்பனையாகும் ஸ்கூல் பேக்குகளை ரூ.300 முதல் ரூ.600 வரை மலிவான விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    இன்னொருபுறம் ஜவுளிக்கடைகளிலும் சீருடைகள் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கோவையின் அனைத்து பள்ளிகளுக்கு மான சீருடை துணிகள் பல்வேறு நிறம்-டிசைன்க ளில் விற்பனைக்கு வைக்கப் பட்டு உள்ளன.

    அங்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளுக்கான சீருடைகளை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. அடுத்தபடியாக கோவையின் பல்வேறு பகுதிகளில் தையல் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.

    இங்கு உள்ள டெய்லர்கள் மாணவர்களுக்கு சரியாக அளவெடுத்து சீருடைகள் தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கோவை கடைவீதியில் உள்ள சாலையோரங்களில் ஸ்கூல் பேக் விற்கும் வியாபாரிகள் கூறியதாவது:-

    பள்ளிகள் வருகிற 7-ந்தேதி திறக்க இருப்பதால் ஸ்கூல் பேக் விற்பனை களைகட்டி உள்ளது. இங்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் அதிகபட்சமாக ரூ.800 வரை புத்தகப்பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெற்றோர்களில் ஒரு சிலர் ஆன்லைன் மூலம் ஸ்கூல் பேக்குகளை வாங்கு கின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் ஓரளவு பாதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் பெரும்பா லானோர் புத்தகப்பை வாங்குவதற்காக கடை வீதிக்கு வருவதால், இங்கு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது என தெரிவித்து உள்ளனர்.

    • உமர், முஜீபுர் ரகுமானிடம் சென்று பஸ்சை நகர்த்து மாறு கூறினார்.
    • உக்கடம் போலீசார், முஜீபுர் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கேரளாவை சேர்ந்தவர் உமர்(வயது49). இவர் கேரள அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் உக்கடம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்காக நின்று கொண்டிருந்தார்.

    அப்போது இவரது பஸ்சுக்கு முன்பு மற்றொரு கேரள அரசு பஸ் நின்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சை கேரளாவை சேர்ந்த முஜீபுர் ரகுமான்(48) என்பவர் ஓட்டினார். அவர், பின்னால் வந்த பஸ்சுக்கு வழிவிடவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து உமர், முஜீபுர் ரகுமானிடம் சென்று பஸ்சை நகர்த்து மாறு கூறினார். இதயைடுத்து அவர் பஸ்சை நகர்த்தினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த முஜீபுர் ரகுமான், தகாத வார்தைகளால் திட்டி டிரைவர் உமரை கையால் சரமாரியாக தாக்கினர். இதில் உமர் படுகாயம் அடைந்தார்.

    இதனால் சிறிது நேரம் உக்கடம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பானது.

    பின்னர் காயம் அடைந்த உமரை அருகில் இருந்த வர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கேரள அரசு பஸ் டிரைவர் உமர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார், முஜீபுர் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையில் அறையில் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை கே.ஜி.சாவடி போலீசார் நவக்கரை தனியார் கல்லூரி அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு மாணவர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்தார். அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று கஞ்சா எப்படி கிடைக்கிறது என்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படிக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (வயது 22) என்பவரிடம் திருச்சூர் பஸ் நிலையம் சென்று வினித் என்பவரின் கஞ்சாவை வாங்கி வந்து உடன் படிக்கும் நண்பர்கள் உதவியுடன் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அறையில் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதனை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த மாணவர்கள் திருச்சூரை சேர்ந்த எம். அர்ஜூன் (21), எர்ணாகுள்தை சேர்ந்த வி. அர்ஜூன் (22), திருச்சூரை சேர்ந்த அக்சய் (22) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • முதலீடு செய்து, தொகை திரும்பப் பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் இயங்கி வந்த சீனிவாசப்பெருமாள் பைனான்ஸ் கார்பரேசன்ஸ் மற்றும் ரங்கே கவுடர் வீதியில் இயங்கி வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பண்ட்ஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, தொகை திரும்பப் பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர்.

    இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதலீட்டாளர்களுக்கு டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. எனவே முதலீட்டாளர்கள் தங்களது தொகையினை பெறுவதற்கு டெபாசிட் ரசீது, ஆதார்,வாக்காளர் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் நகல் ஆவணங்களை கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.யிடம் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இம்ரான்கான் தனது கள்ளக்காதலியை சந்தித்து அழைத்து செல்வதற்காக கோவை வந்தார்.
    • உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் இம்ரான்கான்(வயது26). கூலி தொழிலாளி.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு அவரது நண்பர் ஒருவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்தனர்.

    இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில், இம்ரான்கானின் கள்ளக்காதலி மட்டும் குடும்பத்தினரை பிரிந்து கோவைக்கு தனியாக வந்தார்.

    அவர் உக்கடம் பகுதியில் வீடு எடுத்து தங்கியதாக தெரிகிறது. இதற்கிடையே தனது கள்ளக்காதலியை மறக்க முடியாமல் இம்ரான்கான் தவித்து வந்தார்.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இம்ரான்கான் தனது கள்ளக்காதலியை சந்தித்து அழைத்து செல்வதற்காக கோவை வந்தார்.

    பின்னர் அவரை நேரில் சந்தித்து தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் வர மறுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இம்ரான்கான் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.

    இதனையறிந்த அவரது தந்தை முகமத் ஹரூன் தனது மகனை அழைத்து செல்ல கோவை வந்தார்.

    பின்னர் இருவரும் உக்கடம் பஸ் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து சிங்காநல்லூர் சென்று மதுரை செல்வதற்காக புறப்பட்டனர்.

    அப்போது உக்கடம் பஸ் நிலையத்தில் வைத்து இம்ரான்கான் அவரது தந்தைக்கு தெரியாமல் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.

    பின்னர் இருவரும் பஸ்சில் ஏறி மதுரைக்கு சென்றனர். மதுரை அருகே செல்லும் போது, இம்ரான்கான் விஷம் குடித்த விவரத்தை தனது தந்தையிடம் கூறினார்.

    இதை கேட்டு அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். அவர் உடனே பஸ்சை நிறுத்தி மகனை பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த திருமணம் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.

    கோவை,

    மரங்களின் ராஜா என்று அழைக்கப்படும் அரச மரத்தை சிவ பெருமானாகவும், மரங்களின் ராணியான வேப்பமரத்தை அம்பாளாகவும், பக்தர்கள் பாவித்து, அரச, வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வருகின்றனர்.

    அப்படி செய்வதன் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும். அத்துடன் மாதம் மும்மாரி மழை பெய்யும். பெண்களுக்கு ஏற்படும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

    இப்பலன் அனைவருக்கும் சென்று சேர கோவை நேரு நகர் மேற்கு பகுதியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் கோவிலில் அரச, வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஐம்பொன் விக்ரக பிரதிஷ்டையும் நேற்று நடந்தது.

    கோவில் வளாகத்தில் உள்ள அரச வேம்பு மரத்தின் முன் வேள்விச்சாலை அமைத்து, வேதமந்திரங்கள் முழங்க மங்கல பொருட்கள் சமர்பித்து மஞ்சள் நாணை சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் அனைவரும் வேப்பமரத்திற்கு அணிவித்தனர். வேப்பமரத்தில் அணிவித்த மலர் மாலைகளை, அரசமரத்திற்கு மாற்றி அணிவித்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.

    • பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.
    • கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. மிகவும் தொன்மையான இந்த கோவில் குமரன் குட்டை கருப்பராயன் என்று அழைக்கப்படுவது உண்டு.

    மருதமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் முதலில் கருப்பராயனை வழங்கி சென்று வந்தனர். காலப்போக்கில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் கோவில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

    மேலும் பக்தர்கள் வழிபட முடியாத அளவிற்கு பல்கலைகழக மதில் சுவர் எழுப்பப்பட்டது. இதையடுத்து மக்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்று பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து கோவிலை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.

    தற்போது பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து முதல் கால யாக பூஜை, கணபதி ஹோமம், நவ வேள்வியும் நடந்தது. தொடர்ந்து 2-வது கால யாகம், கருப்பராயன் வேள்வியும், கருவறை உயிர் பூப்பு பூசை, கருப்பராயன் திருமேனி நிலை நிறுத்துதல் நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. 12 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து கருப்பராயன் சுவாமிக்கு நன்னீராட்டு மற்றும் அலங்காரம்நடந்தது. கோவை மாவட்டத்தில் முதல்முறையாக கருப்பராயன் கோவில் குடமுழுக்கு விழாவை பெண்கள் புனித நீர் ஊற்றி செய்து வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது. இதை பல்கலைக்கழக ஊழியர்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.

    • ஆட்டு இறைச்சியை கம்பியிலிருந்து எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பெரிய மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி அங்காளஈஸ்வரி. இவர்களது மகன் பால்பாண்டி (வயது 16). அந்த அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அங்காளஈஸ்வரி ரங்கசாமி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். தோட் டத்தில் உள்ள ஆடு இறந்து போனது. இதனையடுத்து ரங்கசாமி ஆட்டை அங்காள ஈஸ்வரியிடம் கொடுத்து அவர் ஆட்டை உப்பு கண்டம் போட்டு வீட்டில் உள்ள கம்பியில் காய வைத்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வம், அவரது மகன் பால்பாண்டி ஆகியோர் கம்பியில் காய வைக்கப்பட்டு இருந்த ஆட்டு இறைச்சியை எடுத்தனர். அப்போது திடீரென 2 பேரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிய செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஷர்மிளாவுக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
    • கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை,

    தமிழகம் முழுவதும் அண்மையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்ய தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வந்த ஷர்மிளா கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை மாவட்ட வருவாய் அலுவராக பதவி வகதித்து வந்த லீலா அலெக்ஸ் சென்னை வெளிவட்ட சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனிடையே கோவை மாவட்ட வருவாய் அலுவலராக ஷர்மிளா இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி கருமத்தம்பட்டி பாஜகவினர், பாஜக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கார்த்திக்காயணி தலைமையில் மதுபான கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, கடந்த 2 வருடங்களாக அனுமதியற்ற கட்டிடத்தில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இந்த கடை செயல்படுகிறது. எனவே இந்த கடையை உடனே சீல் வைத்து பூட்ட வேண்டும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சிறிது நேரம் கடையை மூடினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் நாளை(இன்று) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். இதனை அடுத்து சமரசம் அடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதற்கிைடயே அங்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.தையல்நாயகி சம்மந்தப்பட்ட தனியார் மதுபான கூட்டத்தை ஆய்வு செய்தார்.

    • எல்.ஐ.சி சிக்னலில் மேம்பாலம் பணிக்காக சிக்னலில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்

    கோவை,

    கோவை-அவினாசி சாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் மேம்பால பணிகள் மெதுவாக நடந்து வந்தாலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.

    குறிப்பாக சேலம் மற்றும் திருப்பூரில் இருந்து கோவைக்கு வரும் புதிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    எல்.ஐ.சி சிக்னலில் மேம்பாலம் பணிக்காக சிக்னலில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் லட்சுமி மில் சிக்னல் வரை சாலையில் ஆங்காங்கே யூடன் முறை அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

    மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. போக்குவரத்து மாற்றம் செய்வதற்காக ஆங்காங்கே சாலைகளில் யூடன் முறை அமைக்கப்பட்டுள்ளதால் கோவை விமான நிலையம் சிக்னல் முதல்-லட்சுமி மில் சிக்னல் வரை இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இந்நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக மாலை வேலைகளில் மழை பெய்து வருவதால் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகுகிறது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    பாலம் கட்டப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்தக் கட்டுமான பணி எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் கட்டப்படுவதைத்தான் கண்டிக்கிறோம்.

    பாலப் பணிகளுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டி–ருந்தாலும் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்ற முன்னறிவிப்பு பலகை எதுவும் முறையாக வைக்கவில்லை.

    அத்துடன் கட்டுமானப்பணிகள் நடைபெறும் சாலையில் போதிய பாதுகாப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் கோவை-அவிநாசி சாலையில் பயணம் செய்யும் புதிய வான ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    இங்கே மட்டுமல்லாமல் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் பாலம் கட்டுமான பகுதிகளிலும் இதுபோல் முன்னெச்சரிக்கை பலகை, தடுப்புச்சுவர் இல்லாததால் பல விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×