search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளி"

    பாகிஸ்தானின் கில்கிட்-பல்ட்டிஸ்தானில் பகுதியில் பெண்கள் பள்ளிகளை எரித்த முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பெண்களுக்கு கல்வியறிவு கூடாது என்று வாதிடும் பழமைவாதிகள் அதிகம் உள்ளனர். இவர்களில் பலர் பயங்கரவாதிகளாகவும் மாறி மாணவிகள் மீதும் பெண்கள் பயிலும் பள்ளிக்கூடங்களின் மீதும் தாக்குதலில் நடத்தி வருகின்றனர்.

    இந்த பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்த மலாலா யூசுப் சாய், பாகிஸ்தான் நாட்டில் பெண் கல்விக்கு எதிராக நடைபெற்றுவரும் சமூக அநீதியை உலகத்துக்கு தோலுரித்து காட்டினார்.

    இந்நிலையில்,  கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்குட்பட்ட டயாமர் மாவட்டம், சிலாஸ் நகரில் உள்ள 12 பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. தீ வைக்கப்பட்ட பள்ளிகளில் பாதி பள்ளிகள் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் ஆகும்.

    தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளிகளுக்கு தீ வைத்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்றிரவு டயாமர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 தனிப்படை போலீசார் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டாங்கர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய எதிர்தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.

    விடியவிடிய இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பள்ளி தீவைப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஷபீக் என்பவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Pakistanipolice #GilgitBaltistanshoolarson
    உடுமலை அருகே சிறுத்தையை கொன்று தோலை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை ருத்ரா பாளையத்தல் சிறுத்தை தோல் விற்பனை செய்ய முயன்றதாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தருமத்தம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 37).

    பன்றிமலை அமைதிச் சோலையை சேர்ந்த பாலுசாமி (70) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவரிகளிடம் இருந்து 2 வயது சிறுத்தையின் பதப்படுத்தப்பட்ட தோல் பறிமுதல் செய்யப்பட்டது. வேட்டையாடியது யார்? எந்த வனப்பகுதியில் சிறுத்தை கொல்லப்பட்டது.

    தோல் மட்டும் கிடைத்த நிலையில் நகம், பல் உள்ளிட்ட பொருட்கள் என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுத்தை தோலை வாங்க முயன்ற நபரை இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லை.

    இது குறித்து அமராவதி வனச்சரக அலுவலர் முருகேசன் கூறும்போது, சிறுத்தை தோலை விற்க முயன்ற இருவர் கோர்ட்டு உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சேகர் என்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறோம் என்றார்.

    சரண் அடைந்த குற்றவாளியை நீதிமன்றத்துக்குள் புகுந்து கைது செய்த தலைமை காவலருக்கு ரூ.500 அபராதம் விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    கோவை சிங்காநல்லூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட சந்தோஷ் என்பவர், கடந்த ஏப்ரல் 10-ந்தேதி திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    அப்போது சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர்கள், நீதிமன்ற அறைக்குள் நுழைந்து, சந்தோஷை கைது செய்தனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த திருப்பூர் பார் கவுன்சில், சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைத்தது.

    காவல் துறையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்ய கூடாது என காவல் துறையினருக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், தலைமை காவலர் ராபர்ட், டிரைவர் வேலன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். 3 பேரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர்.

    தலைமை காவலர் தான் கோர்ட்டுக்குள் சென்று கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று தெரியவந்தது. இதையடுத்து தலைமை காவலருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், டிரைவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

    நேரில் ஆஜரான காவல் துறை ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும் தங்களுடைய செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்தனர்.

    மேலும், நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, நீதிமன்றத்திற்குள் நுழைந்து சந்தோஷை கைது செய்த தலைமை காவலரின் மன்னிப்பை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.
    மத்திய பிரதேசத்தில் ஈவுஇரக்கமின்றி 9 வயது சிறுமியை கற்பழித்த குற்றவாளிக்கு புதிய சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கடந்த மே 21-ந்தேதி 9 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். அது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    கற்பழிப்பு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டசபையில் இந்த சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    ஏப்ரல் 21-ந்தேதி ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. புதிய சட்டத்தின் கீழ் சிறுமியை கற்பழித்த நபருக்கு முதன் முறையாக தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை சாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்யேந்திர சுக்லா தெரிவித்தார்.

    இது குறித்து முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் கூறும் போது “கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இதன் மூலம் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுமிகளை கற்பழிப்பவர்கள் ஈவுஇரக்கமின்றி தூக்கிலிடப்படுவார்கள்” என்றார்.
    அமெரிக்காவில் 2014ம் ஆண்டு இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய வழக்கில் அமெரிக்கர் குற்றவாளி என என கோர்ட்டு அறிவித்தது
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் பிரவிண் வர்க்கீஸ். இந்திய வம்சாவளி மாணவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாயம் ஆனார். 5 நாட்களுக்கு பின்னர் அவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக கார்பன்டேல் பகுதி போலீசார் அறிவித்தனர்.

    19 வயதான பிரவிண் மரணம், விபத்தினால் நிகழ்ந்தது அல்ல என்று அவரது குடும்பத்தினர் கருதினர். அவர்கள் தனிப்பட்ட முறையில் டாக்டர்களை கொண்டு நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவு, கார்பன்டேல் பகுதி போலீசார் ஏற்பாட்டில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து முரண்பட்டது.

    இதையடுத்து வர்க்கீஸ் குடும்பத்தினர், கார்பன்டேல் பகுதி போலீஸ் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதன்பின்னர் இந்த வழக்கில் 19 வயதான கயேஜ் பெதுனே என்ற அமெரிக்கர் சிக்கினார்.

    இல்லினாய்சை சேர்ந்த இவர், பிரவிண் வர்க்கீசை சம்பவத்தன்று (2014-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி) இரவு ஒரு வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார். அப்போது கொகைன் போதைப்பொருள் வாங்க பிரவிண் வர்க்கீஸ் விரும்பி உள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் பிரவீண் வர்க்கீசை பெதுனே சரமாரியாக தாக்கி உள்ளார். அதில் அவர் உயிரிழந்தார்.

    இப்போது பெதுனே மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப் படலாம்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது மகன்சாவில் நீதி கிடைத்து உள்ளதில் பிரவிண் வர்க்கீசின் தாயார் லவ்லி வர்க்கீஸ் நிம்மதி அடைந்து உள்ளார். 
    அமெரிக்காவில் பெண்ணுக்கு பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தொழில் அதிபர் சஞ்சய் திரிபாதி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வருபவர் சஞ்சய் திரிபாதி (வயது 48). இந்தியரான இவர் தகவல் தொழில் நுட்பத்துறையில் நிர்வாகியாக இருந்து பின்னர் தொழில் அதிபர் ஆனவர் ஆவார்.

    இவர் அங்கு இளம்பெண்களை நாடுகிற பெரியவர்களுக்கான ‘டேட்டிங்’ இணையதளம் மூலம் 38 வயதான ஒரு பெண்ணுடன் பழகினார். தன்னை பெரும்பணக்காரர் என அறிமுகம் செய்து கொண்ட அவர், குறித்த நாள் அன்று அந்தப் பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்தார். ஓட்டலுக்கு வந்தால் நிச்சயம் பரிசு தருவதாக வாக்குறுதி அளித்து உள்ளார். அதன் பேரிலேயே அந்தப் பெண் அந்த ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு இருவரும் மது அருந்தினர்.

    அதன்பின்னர் அவர்கள் இருவரும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டனர். அப்போது அவர், அந்தப் பெண்ணுடன் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதுடன், மிருகவெறியுடன் தாக்கியதாகவும், அதில் அந்தப் பெண் அடையாளம் காண முடியாத அளவுக்கு படுகாயம் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    சஞ்சய் திரிபாதி மீது மேன்ஹட்டன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டில் அந்தப் பெண் ஆஜராகி, நடந்த சம்பவம் குறித்து உருக்கமுடன் விவரித்தார்.

    விசாரணை முடிவில், சஞ்சய் திரிபாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.  #Tamilnews 
    பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தூதரக முன்னாள் அதிகாரி மாதுரி குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாம் நிலை செய்தி தகவல் தொடர்புத்துறை அதிகாரியாக கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து 2010 வரை பணியாற்றியவர் மாதுரி குப்தா. 

    பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கடந்த 22-4-2010 அன்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தியா தொடர்பான சில முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல்களாக அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

    ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் மாதுரி தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இவருக்கு எதிரான வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மாதுரி குப்தா(61) மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார். 

    தண்டனை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இன்று முடிவடைந்த நிலையில் மாதுரி குப்தாவுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிபதி சித்தார்த் சர்மா உத்தரவிட்டார்.  #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI 
    ×