search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர்"

    மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை புயலாக வலுவடைந்தது. புயலில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #ManipurStorm
    இம்பால்:

    மணிப்பூரில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதிலும் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது.

    கனமழையால் அங்கு புயல் உருவாகியுள்ளது.  இந்த புயலின் தாக்கத்தால் அங்கு காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள், சாலைகளில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகைகள் பறந்து கீழே விழுந்தன.



    இந்நிலையில், மணிப்பூரின் காக்சிங் மற்றும் சுரா சந்த்பூர் மாவட்டங்களில் புயல் தாக்கியதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மாநிலம் முழுவதிலும் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநில அரசு மழையில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. #ManipurStorm
    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாணவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பிரதமர் அலுவலகம் பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக மாறியுள்ளது என குற்றம் சாட்டினார். #LSpolls #RahulGandhi #PMModi
    இம்பால்:

    பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

    அதன் ஒருபகுதியாக, மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    இம்பாலில் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    உங்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை காங்கிரஸ் பாதுகாக்கும் என உறுதியளிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.



    பிரதமர் மோடி குறுக்கு வழியில் ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தி, பணமதிப்பிழப்பை கொண்டு வந்துள்ளார். அவர் விளம்பரத்திற்காகவே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். தற்போது பிரதமர் அலுவலகம், பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக மாறியுள்ளது.

    பிரதமரின் பல்கலைக்கழக சான்றிதழை இதுவரை எங்களால் பெற முடியவில்லை. பிரதமர் உண்மையிலேயே பல்கலைக்கழகத்துக்கு போய் உள்ளாரா என யாருக்கும் தெரியாது. டெல்லியில் ஆர்டிஐ மூலம் பிரதமரின் பல்கலைக்கழகம் சான்றிதழ் பற்றி கேட்டுள்ளோம். ஆனால் அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவித்தார். #LSpolls #RahulGandhi #PMModi
    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், இரண்டு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #CitizenshipAmendmentBill #ManipurProtest
    இம்பால்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அசாம், மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாகலாந்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூர் மாநிலத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு சமூக அமைப்புகள் தனித்தனி குழுக்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் இம்பால் நகரில் உள்ள 4 பெண்கள் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் பெண்கள், பிரதான மார்க்கெட்டில் அமர்ந்து தர்ணா போராடத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீடு திரும்ப மறுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து  போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த சம்பவத்தில் 6 பெண்கள் காயமடைந்தனர். இதேபோல் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே போராட்டம் நடைபெறுகிறது.



    இவ்வாறு போராட்டம்  தீவிரமடைந்திருப்பதால் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தேசிய மக்கள் கட்சி விலகும், என மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறியது குறிப்பிடத்தக்கது. #CitizenshipAmendmentBill #ManipurProtest
    உள்ளூர் போட்டியில் விளையாடிய மணிப்பூர் இளைஞர் ஒருவர் மூன்று ஹாட்ரிக்குடன் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். #CoochBeharTrophy #Manipur #RexRajkumarSingh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் நகரில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட கூச்பெகர் டிராபியில் அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின.

    இதில் முதலில் ஆடிய அருணாசல் முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்நிலையில், 16 ரன்கள் முன்னிலையுடன் அருணாசல் இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. மணிப்பூர் வீரர் இடதுகை பந்துவீச்சாளர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் (18),  எதிரணியை துல்லியமாக பந்து வீசி திணறடித்தார்.



    இவர் 9.5 ஓவர்கள் வீசி 11 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 3 முறை ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளார்.

    இதையடுத்து, அருணாசல் அணி 2வது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் 7.5 ஓவரில் வெற்றிக்கு தேவையான 55 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #CoochBeharTrophy #Manipur #RexRajkumarSingh
    அவதூறான செய்திகள் மற்றும் வீடியோக்களை பரவுவதை தடுக்கும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு இண்டர்நெட்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. #Internet
    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ரகுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியதன் மூலம் அடிதடி மற்றும் வன்முறைகள் ஏற்பட்டன. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.

    எனவே, இதுபோன்ற அவதூறான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு மொபைல் இண்டர்நெட்சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்ப்டுகிறது என தெரிவித்துள்ளது. #Internet 
    வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். #AssamFlood #NEflood

    கவுஹாத்தி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு நகரங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பேரிடர் மீட்புக் குழுவினர் செய்து வருகின்றனர்.



    இந்நிலையில், இந்த மழையினால் இதுவரை 12 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 6 பேரும், அசாம் மாநிலத்தில் 3 பேரும், திரிபுராவில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். #AssamFlood #NEflood
    கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜக ஆட்சியமைக்க கவர்னர் அழைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது. #KarnatakaCM #ManipurCongress
    இம்பால் :

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

    பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.

    குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.



    இந்நிலையில், தனிப்பெரும் கட்சி என்று கூறி கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது போல, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நாங்களே தனிப்பெரும் கட்சி எனவே நாளை மதியம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளோம்.

    கடந்த முறை தனிப்பெரும் கட்சியாக இருந்தும் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு எதன் அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது? என்பதற்கான விளக்கத்தையும் கவர்னர் ஜக்திஷ் முக்ஹியிடம் கேட்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

    மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியை புறம் தள்ளிவிட்டு 21 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அப்போதைய மணிப்பூர் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    #KarnatakaCMRace #ManipurCongress
    ×