search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெராயின்"

    ஈரான் நாட்டில் இருந்து படகு மூலம் 100 கிலோ ஹெராயினை கடத்தி வந்த ஈரான் நாட்டினர் 9 பேரை குஜராத்தில் வழிமறித்து பிடித்த இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை கைது செய்தனர். #heroinseized
    அகமதாபாத்:

    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை கண்காணித்து தடுக்கும் பணியில் நமது நாட்டின் கடலோர காவல் படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்துக்குட்பட்ட கடல் பகுதியில் வந்த ஒரு படகை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்வதற்காக கடலோர காவல் படையினரின் ரோந்துப் படகு விரைந்து சென்றது.

    இவர்களை கண்டதும் சந்தேகத்துக்குரிய படகில் வந்தவர்கள் தங்களது படகை திடீரென்று தீயிட்டு கொளுத்தினர். ஈரான் நாட்டை சேர்ந்த அந்த படகை கடலோர காவல் படையினர் நெருங்குவதற்குள் பாதி எரிந்த நிலையில் அந்த படகு நீரில் மூழ்க தொடங்கியது.



    அந்த படகை சுற்றிவளைத்த கடலோர காவல் படையினர் அதில் வந்த 9 பேரை கைது செய்தனர். அவர்கள் கடத்திவந்த சுமார் 100 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MarineTaskForce #IranianNationals #100kgheroin #heroinseized 
    மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் மாநிலம் வழியாக ரூ.80 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திவந்த 6 பேரை டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர். #Delhipolice #heroinsmuggling #Rs80croreheroin
    புதுடெல்லி:

    இந்தியாவின் அண்டைநாடுகளான பூடான், நேபாளம், மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹெராயின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்திவரும் சில பெரும்புள்ளிகள் இடைத்தரகர்கள் மூலமாக நமது நாட்டின் பல பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    அவ்வகையில், மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் மாநிலம் வழியாக 20 கிலோ ஹெராயின் கடத்திவந்த 6 பேரை டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என தெரிவித்துள்ள அதிகாரிகள் கைதான நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Delhipolice #heroinsmuggling #Rs80croreheroin
    பாகிஸ்தானில் இருந்து வந்த ரூ.50 கோடி ஹெராயினை காரில் கடத்திச் சென்ற கணவன் - மனைவியை பஞ்சாப் மாநில போலீசார் கைது செய்தனர். #Rs50croreheroin #heroinrecovered
    சண்டிகர்:

    காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு சாலை வழியாக ஹெராயின் கடத்தப்படவுள்ளதாக பஞ்சாப் சிறப்புப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதைதொடர்ந்து, லூதியானா மாவட்டத்தில் அதிகாரிகள் தீவிரமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது வாதுமை பருப்பு பைக்குள் சுமார் 10 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    அந்த காரில் வந்த முகமது அர்பி மற்றும் அவரது மனைவி ஜமிலா பேகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் சுஞ்சாமா கிராமத்தை சேர்ந்த அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ஹெராயின், காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதி வழியாக கடத்தி வரப்பட்டு, லூதியானாவில் உள்ள இடைத்தரகருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #Rs50croreheroin #heroinrecovered 
    காஷ்மீரில் இருந்து ஆப்பிள் பெட்டிகளில் மறைத்து டெல்லி எடுத்துச் செல்லப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #NCB #HeroinSeized
    புதுடெல்லி:

    பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் போதைப்பொருள், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து, ஜம்மு அருகே உள்ள சுங்கச்சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகள், ஆப்பிள் பழப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். குப்ராவா மாவட்டத்திலிருந்து ஹெராயின் கடத்தி வரப்படுவதாகவும், டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். #NCB #HeroinSeized
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் எனப்படும் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். #Heroin #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருள்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 2 கிலோ அளவிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இந்த ஹெராயின் பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, ஹெராயின் கடத்தியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #Heroin #JammuKashmir
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா நகரில் இருந்து கடத்தப்பட இருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #JammuKashmir #HeroinSeized
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் உட்பட எல்லையோர மாநிலங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க, போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஹந்த்வாரா பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 22.145 கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் எனப்படும் மிக உயர்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

    இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், இவர்களுடன் தொடர்பில் இருந்த பஞ்சாப் மாநிலத்தில் இருந்த ஒருவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17.49 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #JammuKashmir #HeroinSeized
    பஞ்சாப் மாநிலத்தில் ஹெராயின் கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 74 கோடி ரூபாய் அளவிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. #Heroinceased
    காந்திநகர்:

    பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்தியாவுக்கு ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது சுமார் 14.8 கிலோ அளவிலான ஹெராயினை கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் போலீசார் வசம் சிக்கினர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் வீரர் ஒருவர் தங்களுக்கு உதவி வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  ஹெராயினின் மதிப்பு சுமார் 74 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற போதைப்பொருட்கள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #Heroinceased
    ×