search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிலையன்ஸ்"

    பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது. #France #AnilAmbani #TaxSettlement
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டில் ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அனில் அம்பானி நடத்தி வருகிறார். 2007ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டுவரை 141 மில்லியன் யூரோ பணம் வரியாக செலுத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. ஆனால், 7.6 மில்லியன் யூரோ மட்டுமே வரியாக தர முடியும் என்று அனில் அம்பானி தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது என அந்நாட்டு பத்திரிகை லி மாண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடன் பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் ஆனது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்து அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. #France #AnilAmbani #TaxSettlement
    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் கேட்காமல் விவாதத்தை ஒளிபரப்பிய ஆங்கில தொலைக்காட்சி மீது ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. #Rafale #Reliance
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தபின்பும் தொடர்ந்து புகார் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரபேல் ஒப்பந்தத்தில் உதிரி பாகங்கள் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சிபாரிசு இல்லாமல் ரபேல் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ‘உண்மையும் மீறலும்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேசிய பிரபலங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    இதில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்காமலேயே ஒளிபரப்பப்பட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர் பாக ஆங்கில தொலைக்காட்சி மீது ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி நஷ்டஈடு கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். வருகிற 26-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். #Rafale #Reliance
    ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக முகேஷ் அம்பானி இன்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 5 ஆண்டுகள் இந்த பதவியில் அவர் நீடிப்பார். #Reliance #MukeshAmbani
    மும்பை:

    இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான திருபாய் அம்பானி கடந்த 2002-ம் ஆண்டு காலமானார்.

    அவரது மறைவுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை அவரது மூத்த மகனான முகேஷ் அம்பானி ஏற்று கொண்டார்.

    உரத் தொழிற்சாலை, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட தொழில்களை வெற்றிகரமாக நிர்வகித்துவரும் ரிலையன்ஸ் குழுமம் தொலைத்தொடர்பு துறையிலும் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த குழுமத்தின் பங்குதாரர்களின் 41-வது ஆண்டாந்திர கூட்டம் கடந்த 5-ம் தேதி மும்பையில் நடைபெற்றது.



    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் பதவிக்காலம் வரும் 19-4-2019 அன்றுடன் முடிவடையும் நிலையில், அவரையே மீண்டும் தலைவராக நியமிக்க கோரும் தீர்மானம் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

    இந்த தீர்மானத்தை ஆதரித்து 98.5 சதவீதம் பங்குதாரர்களும், எதிராக 1.48 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

    இதையடுத்து, மேலும் ஐந்தாண்டு காலத்துக்கு ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவராக முகேஷ் அம்பானி நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4.17 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் சுமார் 59 லட்சம் ரூபாய் அளவிலான இதரப் படிகளுடன் அவர் இந்த பதவியில் தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Reliance #MukeshAmbani
    ×