search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114229"

    • கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
    • குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் பகுதியில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் பெடரேசன், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி போன்ற பல்வேறு கோழிப் பண்ணையாளர்கள் சங்கங்கள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் ஒரு முட்டை ரூ.5.65 ஆக விற்பனையானது, படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டை ரூ.4.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்.இ.சி.சி. ரூ. 4.60 விலை நிர்ணயம் செய்துள்ள போதும், முட்டை வியாபாரிகள் ரூ.4-க்கு குறைவாக முட்டையை கொள்முதல் செய்கின்றனர். கோழி முட்டை விலை கடும் சரிவால் கடந்த 2 வாரங்களாக பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழிலில் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

    இதையொட்டி, எந்த சங்கத்தையும் சேராத கோழிப்பண்ணையாளர்களின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் ஏராளமான கோழிப் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தொழிலின் தற்போதைய நிலை குறித்து விவாதித்தனர்.

    கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. முட்டை விற்பனை விலையில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையை விடக் குறைந்த விலையிலேயே முட்டைகளை வியாபாரிகள் வாங்குகின்றனர். முட்டை விலையில் மைனஸ் என்பதே இருக்க கூடாது. தீவன மூலப்பொருட்கள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முட்டை விலையை உற்பத்தி செலவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என்.இ.சி.சி. மண்டல வாரியாக விலை நிர்ணயம் செய்யாமல் இந்தியா முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டை விலையை தினசரி நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் முட்டை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை நாமக்கல் பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோழிப் பண்ணையாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும். கடும் நெருக்கடி நிலையில் கோழிப் பண்ணை தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் உள்ளதாக பல பண்ணையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது.
    • முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 460 காசுகளாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள நாமக்கல், ஈரோடு, பல்லடம், திருப்பூர் உள்பட பல பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையை கிலோவுக்கு 8 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 92 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 84 ரூபாயாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. தைப்பூசத்தையொட்டி கறிக்கோழியின் நுகர்வு குறைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 4.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

    முட்டை கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் முட்டை கோழி விலை மாற்றம் செய்யாமல் ஒரு கிலோ 79 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 460 காசுகளாக நீடிக்கிறது.

    • கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.5.65 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிவடைந்தது.
    • தற்போது ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட பண்ணைகளில் 5.50 கோடி, முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைக்கான விற்பனை விலையை, இந்தியா முழுவதும் உள்ள விலையை அனுசரித்து, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) நிர்ணயம் செய்து அறிவிக்கிறது.

    கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.5.65 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக உள்ளது. ஒரு வாரத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.05 சரிவடைந்ததால், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    இது குறித்து நாமக்கல் மண்டல முட்டை ஒருங்கிணைப்புக்குழு துணைத்தலைவரும், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தலைவருமான சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கோழி முட்டை விலை இந்தியா முழுவதும் சரிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஐதராபாத் மண்டல என்.இ.சி.சி, இனி முட்டை விலை குறைக்கப்படமாட்டாது, குறைந்த விலை ஒரு முட்டைக்கு 415 பைசாதான் என அறிவித்துள்ளது. மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று 3 பைசா உயர்த்தி 418 என ஐதராபாத் என்.இ.சி.சி அறிவித்துள்ளது.

    பர்வாலா மண்டலத்தில் முட்டை மார்க்கெட் நிலவரம் சரியாகி வருகிறது. மேலும் ஹொஸ்பேட் மண்டலத்திலும், முட்டை விலை இதற்கு கீழ் குறையாது என அறிவிப்பு செய்துள்ளது. மண்டலங்களின் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு, நாமக்கல் விலையும் இதற்கு கீழ் குறையாது.

    எனவே பண்ணையாளர்கள் முட்டைகளை விற்கும் பொழுது, முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு, என்.இ.சி.சி விலையில் இருந்து 30 பைசாவுக்கு கீழ் குறைத்து விற்பனை செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு பண்ணையாளர்கள் யாரும் முட்டைகளை, குறைவான விலைக்கு விற்பனை செய்யாமல், அறிவிக்கப்பட்ட 30 பைசா மட்டுமே குறைத்து விற்பனை செய்ய வேண்டும்.

    வரும் நாட்களில் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது. எனவே பண்ணையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

    • முட்டை கொள்முதல் விலை அண்டை மாநிலங்களில் உள்ள விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மைனஸ் விலையை, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு தினசரி அறிவிக்கிறது.

    நாமக்கல்:

    தமிழகத்தில், நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 1,000 முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5.50 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டை, தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், லாரிகள் மூலம், தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 நாட்கள் முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. என்.இ.சி.சி நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.

    இந்த முட்டை கொள்முதல் விலை அண்டை மாநிலங்களில் உள்ள விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மைனஸ் விலையை, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு (நெஸ்பேக்) தினசரி அறிவிக்கிறது.

    நாமக்கல் மண்டலத்தில், கடந்த 2022 டிசம்பர் 24-ந்தேதி, ரூ.5.50 இருந்த முட்டை கொள்முதல் விலை, கடந்த ஜனவரி 9-ந் தேதி ரூ.5.65 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த உயர்ந்தபட்ச விலை, 20 நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த 21-ந்தேதி 20 காசு, 25-ந்தேதி 30 காசு, 27-ந்தேதி 25 காசு என 6 நாட்களில் ஒரு முட்டைக்கு என்.இ.சி.சி விலை 75 காசு சரிந்தது.

    இந்தநிலையில், இன்று நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மேலும் 30 காசு குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு வாரத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.05 சரிவடைந்துள்ளது.

    இந்த நிலையில் நெஸ்பேக் அமைப்பு ஒரு முட்டைக்கு 30 பைசா மைனஸ் விலை அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.30 மட்டுமே கிடைக்கும். ஒரு வாரத்தில், முட்டை கொள்முதல் விலை ரூ.1.05 சரிவடைந்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைத் தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் கடும் கவலையில் உள்ளனர்.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • முட்டை விலை தொடர் சரிவால் கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில், மொத்தம் 5.5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மைனஸ் விலையை தினசரி நெஸ்பாக் அமைப்பு வெளியிடுகிறது. முட்டை கொள்முதல் விலை, அண்டை மாநில விலைக்கேற்ப என்.இ.சி.சி மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில், கடந்த 2022 டிசம்பர் 24-ந் தேதி ரூ.5.50 ஆக இருந்த முட்டை விலை, கடந்த 9-ந் தேதி ரூ.5.65 காசாக உயர்ந்து, முட்டை கொள்முதல் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இந்த புதிய விலை 20 நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த 21-ந் தேதி முட்டை விலை 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை ரூ.5.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 25-ந் தேதி மேலும் 30 காசு குறைக்கப்பட்டு, ரூ.5.15 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முட்டை விலை மீண்டும் 25 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ.4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    முட்டைக்கான மைனஸ் விலை, ஒரு முட்டைக்கு 40 பைசா என்று நெஸ்பேக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.4.50 மட்டுமே கிடைக்கும். 6 நாட்களில் ஒரு முட்டைக்கு 75 காசு குறைக்கப்பட்டதால், நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டை உற்பத்தியாகும் நாமக்கல் பகுதி பண்ணையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. முட்டை விலை தொடர் சரிவால் கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-520, பர்வாலா-470, பெங்களூர்-495, டெல்லி-495, ஹைதராபாத்-490, மும்பை-550, மைசூர்-495, விஜயவாடா-490, ஹெஸ்பேட்-455, கொல்கத்தா-540.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ விலை ரூ.87 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ.89 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு 24-ந் தேதி 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
    • கடந்த 9-ந் தேதி 565 காசாக உயர்ந்து முட்டை கொள்முதல் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இந்த புதிய விலை 20 நாட்கள் நீடித்தது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பண்ணையாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த முட்டை கொள்முதல் விலையானது, தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு 24-ந் தேதி 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 9-ந் தேதி 565 காசாக உயர்ந்து முட்டை கொள்முதல் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இந்த புதிய விலை 20 நாட்கள் நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று நாமக்கலில் முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையில் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 565 காசாக இருந்த முட்டை விலை 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் 20 காசுகள் குறைந்துள்ளது, பண்ணையாளர்களை கவலையடைய செய்துள்ளது. அதே நேரத்தில் முட்டை நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    வட மாநிலங்களில் அதிக குளிர் உள்ளதாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்தாலும் முட்டை கொள்முதல் புதிய உச்சத்தை தொட்டது.

    இரண்டு வாரம் நீடித்து வந்த நிலையில் தற்போது 20 காசு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நெக் விலைவில் இருந்து 65 காசுகள் குறைத்து 500 காசுக்கு மட்டுமே முட்டை கொள்முதல் செய்கின்றனர்.

    மேலும் வட மாநிலங்களுக்கு கடந்த 4 நாட்களாக முட்டை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒரு கோடி முட்டையும், பண்ணைகளில் 2 நாட்கள் இருப்பு 9 கோடியும் என, மொத்தம் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு கொள்முதல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
    • பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.106 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து 555 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 10 காசு உயர்த்தி 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    கடந்த 2-ந் தேதி 555 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு நேற்று மேலும் 10 காசு அதிகரித்துள்ளது முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலை ஆகும்.

    நாட்டின் பிற மண்டல முட்டை விலை நிலவரம் வருமாறு:-

    சென்னை-575 காசு, ஹைதராபாத்-549, விஜயவாடா-546, பர்வாலா-557, மும்பை-606, மைசூரு-567, பெங்களூரு-565, கொல்கத்தா-615, டெல்லி-575 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல் நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கோழி ஒரு கிலோ ரூ.82-க்கும், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.106 எனவும் எவ்வித மாற்றம் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    • முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
    • குளிர்காலம் என்பதால் முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    நாமக்கல்:

    முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.55 காசுகளில் இருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று இரவு அறிவித்துள்ளது.

    இந்த விலை உயர்வு நாளை (9-1-2023) காலை முதல் அமலுக்கு வருகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    நாமக்கல் பகுதிகளில் இருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் நிலவுவதால் அங்கு முட்டையின் நுகர்வும் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து அதிகளவு அனுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள்.

    முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.65 காசுகள் என்பது கடந்த 50 ஆண்டுகால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் இதுவே முதல் முறை.

    • கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பதற்கு அதிக அளவில் முட்டை பயன்படுத்துவதால் தேவை அதிகரித்துள்ளது.
    • ஒரு கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோழி விலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து 530 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை பத்து காசுகள் உயர்த்தி 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பதற்கு அதிக அளவில் முட்டை பயன்படுத்துவதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

    நாமக்கலில் நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், ஒரு கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோழி விலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

    பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ ரூ.111-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையை, ரூ.2 உயர்த்தி ஒரு கிலோ ரூ.113 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு முட்டை அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு சுமார் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ, அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசித்தனர்.

    கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு கோழி பண்ணையாளர் சங்க தலைவர் சிங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது,

    8 கோடி முட்டைகள் ஏற்றுமதி

    இந்தியாவில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு முட்டை அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. துபாய் மஸ்கட், கத்தார், ஆப்பிரிக்கா, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகள் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு சுமார் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. உக்ரைன் போரால் பல நாடுகளில் கோழி தீவன பொருட்களின் விலை உயர்ந்து முட்டை உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளது.

    சர்வதேச தரம்

    வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் வகையில் சர்வதேச தரத்துடன் முட்டை தயாரிக்கும் கோழிப்பண்ணைகள் நாமக்கல் மண்டலத்தில் உருவாகி வருகிறது. இதனால் ஏற்றுமதிக்கு தடையில்லா சான்று பெற்று முட்டையை எளிதாக ஏற்றுமதி செய்ய முடிகிறது.

    முதன்முறையாக

    தற்போது முதன்முறையாக நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மலேசியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் ஆர்டரின் பெயரில் சென்னையில் இருந்து ஏர் கார்கோ விமான மூலம் கடந்த வாரம் 54,000 முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வரும் வாரங்களில் முட்டை ஏற்றுமதி மலேசியாவுக்கு தொடர்ந்து நடைபெறும். வாரம் 20 கண்டெய்னர் மூலம் ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

    தேவை அதிகரிப்பு

    மலேசியாவில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும் அங்கு முட்டையின் தேவை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடங்கிய பிறகு சிங்கப்பூருக்கும் இங்கே இருந்து ஏற்றுமதி செய்யப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய துணைத் தூதரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.
    • திருச்சி விமான நிலையத்திலிருந்து 90 ஆயிரம் முட்டைகள் அனுப்பி வைப்பு

    மலேசியாவில் தற்போது நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திடம், மலேசிய உணவு பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். 


    இதையடுத்து நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் ஷோபனா குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில் ஏற்றப்பட்டு மலசியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முட்டைகள் சோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.
    • அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.

    கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.

    இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அக்சயா என்ற தன்னார்வ நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த தன்னார்வ நிறுவனம் சைவ உணவை மட்டும்தான் வழங்கி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

    இதையடுத்து இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் முட்டை வழங்கப்பட்டது. மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.

    இதற்கான பணியை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சிமொழி குமரன் நேரில் பார்வையிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. முதல் நாள் 147 பள்ளி மாணவர்களுக்கும் அடுத்து 146 பள்ளி மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் கொடுக்கப்பட உள்ளது.

    இதேபோல கொரோனா முடிவுற்று பள்ளி தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு இயக்கப்படும் ஒரு ரூபாய் கட்டண பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தி பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்தனர். பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.

    இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதன்படி இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த இலவச பஸ் சேவையை பிற்பகலில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×