search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ணா"

    கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து, குஜராத்தில் உள்ள கவர்னர் வஜுபாய் வாலாவின் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். #Vajubhaivala #Congress #Protest
    அகமதாபாத்: 

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

    கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. எனவே, கவர்னரை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து, குஜராத்தில் உள்ள கவர்னர் வஜுபாய் வாலாவின் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணா நடத்தினர்.

    ராஜ்கோட்டின் நியூட்டன் நகர் சொசைட்டியில் உள்ள வஜுபாய் வாலா வீட்டின் முன்பு காங்கிரசார் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதுதொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் ராஜ்புத் கூறுகையில், கவர்னர் வஜுபாய் வாலாவின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீது படிந்துள்ள கறை போல் உள்ளது. மாநிலத்தை நிர்வகிக்கும் கவர்னர் பாஜக தொண்டர் போல் செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.

    இதேபோல். குஜராத்தில் அகமதாபாத் மற்றும் வதோதராவிலும் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். #Vajubhaivala #Congress #Protest
    கர்நாடகாவில் பா.ஜ.க. கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி நாளை தர்ணா போராட்டம் அறிவித்துள்ளது. #RJDdharna #BJPgovtinKarnataka
    பாட்னா :

    கர்நாடகாவில் பெரும்பான்மை பெறாத நிலையில் பா.ஜ.க. ஆட்சியமைத்ததை கண்டித்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி நாளை தர்ணா போராட்டம் அறிவித்துள்ளது.

    பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ரகுவன்ஷ் பிரசாத் சிங், ‘தனிப்பெரும்பான்மை இல்லாமல் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்தற்கு  ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி கண்டனம் தெரிவிகின்றது.

    மேலும், இதை எதிர்த்து பீகார் தலைநகர் பாட்னாவில் மிகப்பெரிய அளவில் தர்ணா போராட்டம் நடைபெறும். இதில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மட்டுமல்லாமல் கட்சியின் அணைத்து முன்னணியினர் மற்றும் தொண்டர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் நாளை தர்ணா போராட்டம் நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.

    பெரும்பான்மை இடங்களை வைத்துள்ள காங்கிரஸ்- மஜத கூட்டணியை புறக்கணித்துவிட்டு, எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அனுமதித்ததன் மூலம் குதிரை பேரம் நடைபெற வழிவகுத்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். #RJDdharna #BJPgovtinKarnataka
    ×