search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்ட்ரியா"

    `வடசென்னை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமீர், தனுஷ் இல்லாமல் வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது என்று கூறினார். #VadaChennai #Dhanush #Ameer
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. அதில், வெற்றிமாறன், தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசும் போது,

    வடசென்னை படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவம். நிறைய கதைகளில் நடிக்க அழைக்கிறார்கள். குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் அதிகம் வருகிறது. ரவுடியாகவோ, வில்லனாகவோ நடிப்பதில் தப்பில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் எந்த இயக்குநரை நம்பி போகிறோம் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது வெற்றிமாறன் தான்.

    நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் வேறு ஒருவர் நடிப்பதாய் இருந்தது என்பது பின்னர் தான் தெரியும். முதல் நாள் படப்பிடிப்பில் தயக்கமாக இருந்தது. என்னை சுற்றி இருக்கும் ஆட்கள் அனைவருமே சினிமாவில் பெரிய ஆட்கள். இது சரியா வருமா என்று வெற்றியை அழைத்து கேட்டேன். ஏற்கனவே இயக்குநர் ஒருவர் என்னை அழைத்து நடனமாட விட்டுவிட்டார். அதையே இன்னமும் மறக்க முடியவில்லை. இந்த மாதிரியான ஒரு கதை வேறு ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி இந்த கதை என்னிடம் வந்தால், நான் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நான் நடிக்கமாட்டேன். ஒரு நல்ல இயக்குநர், தேசிய விருது வாங்கியவர் படப்பிடிப்பு தளங்களில் ஜாலியாக இருப்பது அரிதானது. 



    படம் பார்த்தேன். படத்தில் தனுஷை பார்த்து பிரமித்து போனேன். ஆரம்ப கால தமிழ் சினிமா அவருக்கு கொடுத்த விமர்சனங்கள், பேச்சுகள் அனைத்தையும் தாண்டி, இன்று தமிழ் சினிமாவின் ஆயுதமாக வந்து நிற்கிறார் தனுஷ் என்று நான் பார்க்கிறேன். 

    தனுஷின் திறமையை பார்க்கும் போது தான், ஏன் ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக 3 படங்கள் இயக்குகிறார் என்பது தெரிகிறது. நிச்சயமாக வெற்றிமாறன் என்ற இயக்குநர் வேறு ஒருவரை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது. #VadaChennai #Dhanush #Ameer

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் `வடசென்னை' படம் தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு வெட்டே கிடையாது என்று தனுஷ் தெரிவித்துள்ளார். #VadaChennai #Dhanush
    வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வடசென்னை'.

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    வடசென்னை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    வடசென்னை அதன் இயல்பான குணத்துடன் வெட்டு ஏதுமின்றி தணிக்கை குழுவில் `ஏ' சான்றிதழை பெற்றுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார். 
    சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது.

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு மற்றும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #VadaChennai #Dhanush

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வடசென்னை படம், சீனாவின் பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. #VadaChennai #Dhanush
    வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், சீனாவில் நடைபெற உள்ள பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் வட சென்னை படம் திரையிடப்பட இருக்கிறது. பிங்யோ சர்வதேச திரைப்பட விழா வருகிற 11-ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. #VadaChennai #Dhanush

    தானே சொந்தமாக பாடல் எழுதி பாடி ஹானஸ்ட்லி என்ற ஆல்பத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆண்ட்ரியா கவர்ந்திருக்கிறார். #Andrea #Honestly
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியாவின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலின் பெயர் (Honestly) "ஹானஸ்ட்லி".

    இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும், பாடியும் மற்றும் நடித்துள்ளார். இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரின் பங்களிப்பு இப்பாடலில் உள்ளது.

    ஆண்ட்ரியா தமிழில் தனுஷ், சிம்பு, பஹத் பாசில் போன்ற நடிகர்களுடன் வெற்றி திரைப்படங்களில் நடித்தவர். மேலும் யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் ஆனா பாடல்களும் பாடியுள்ளார்.



    தற்போது ஆங்கில மொழியில் இவரது (Honestly) "ஹானஸ்ட்லி" பாடல் வீடியோ காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
    பாடகி, நடிகை என பிசியாக இருக்கும் ஆண்ட்ரியா, சினிமா துறையில் எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். #Andrea
    ஆண்ட்ரியா நடித்த ‘விஸ்வரூபம்–2’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அடுத்து தனுசுடன் நடித்துள்ள வடசென்னை படம் திரைக்கு வர தயாராகிறது.

    சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சர்ச்சைகள் குறித்து ஆண்ட்ரியா கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

    ‘‘யாருக்காவது நல்லது நடந்தால் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் கெட்டது நடந்தால் அதை சொல்வது இல்லை. சினிமாவில் அந்த நிலைமை இப்போது மாறிக்கொண்டு வருகிறது. பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசுகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. 

    அப்படி பேசினால்தான் தவறு செய்தவர்களை தண்டிக்க முடியும். சினிமா துறையில் எனக்கு அந்த மாதிரி நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை. அது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலியல் தொல்லைகள் எனக்கு நடந்தது என்று வெளியே வந்து தைரியமாக சொல்பவர்களையும், அப்படி நடப்பதை கண்டித்து பேசியவர்களையும் பாராட்ட வேண்டும். 



    எனக்கு நடிப்பு, இசை இரண்டு கண்கள் மாதிரி. எதில் வாய்ப்பு வந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்வேன். ஒரு படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டால் அதில் எத்தனை கதாநாயகர்கள் இருக்கிறார்கள். எத்தனை கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்றெல்லாம் சிந்திப்பது இல்லை. எனது கதாபாத்திரம் என்ன என்பதை மட்டும்தான் கண்டுகொள்வேன்.

    இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.
    விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியாகும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாகவே தனுஷ் களமிறங்க இருக்கிறார். #Dhanush #VadaChennai
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், தனுஷின் ‘வடசென்னை’ திரைப்படம் ஒருநாள் முன்னதாக அக்டோபர் 17ம் வெளியிட இருக்கிறார்கள்.



    வடசென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
    கமல் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதன் 3ம் பாகம் வெளியாகுமா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். #Kamal
    விஸ்வரூபம் 2 படத்தில் கமலும் ஆண்ட்ரியாவும் ரா அமைப்பில் பயிற்சி பெறும் காட்சிகள் சென்னை கிண்டியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் படமாக்கப்பட்டிருந்தது. அங்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கமல் காட்சி முடிந்ததும் பேசினார்.

    அப்போது விஸ்வரூபம் 3 வருமா? என்று கேட்டதற்கு ‘சினிமாவில் இல்லை. நிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன்’ என்றார். மேலும் ‘இங்கு நான் பயிற்சி எடுத்த காலம் குறுகியது தான், ஆனால் கற்றுக்கொண்டது நிறைய. இந்திய ராணுவத்தில் நாம் அதிகம் பங்கெடுக்க வேண்டும் அது என்னுடைய ஆசை. பயிற்சியின் போது இடம்பெற்ற ராணுவ அதிகாரிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

    படத்திற்காக பலமுறை பயிற்சி எடுத்து இருந்தால் கூட இந்த அளவிற்கு படம் வந்திருக்காது. ஆனால் இங்குள்ள உண்மையான ராணுவ வீரர்கள் உடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. விஸ்வரூபம் 2 வெளியிடப்படாத மாவட்டங்களில் படம் நிச்சயமாக வெளியாகும். படத்தை தடைவிதிக்க பின்புலத்தில் இருந்து நிறைய பேர் வேலை செய்கிறார்கள் அவர்கள் யார் என்று நான் சொல்லமாட்டேன்.



    எனவே நிச்சயம் இது சரி செய்யப்படும். படித்த இளைஞர்கள் அதிகாரிகளாக வர வேண்டும், இதுவும் அவர்கள் கடமையென நாடு காக்கும் பணியை செய்ய முன்வர வேண்டும். ஆனால் யாரையும் கட்டாயபடுத்தக்கூடாது. படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை, எதிர்மறையாகவே பார்க்க வேண்டும், எதிர்கொள்ள வேண்டும்’ என்றும் கூறினார்.
    கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாகிய நிலையில், முழு படமும் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் விநியோகஸ்தர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தென் மாவட்டங்களில் சில இடங்களில் படம் வெளியாகவில்லை.

    சிலர் பிண்ணனியில் இருந்து படத்தை வெளியாக விடாமல் தடுக்கின்றனர் என்றும், பிரச்சினை சரியாகி அந்த மாவட்டங்களிலும் படம் திரைக்கு வந்து விடும் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

    இந்த நிலையில் விஸ்வரூபம்-2 முழு படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



    முன்னதாக ரஜினிகாந்தின் கபாலி, காலா உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் திரையிட்ட உடனேயே திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டனர். சமீபத்தில் திரைக்கு வந்த விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்துமே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    திருட்டுத்தனமாக படத்தை வீடியோ எடுப்பவர்களை கண்டுபிடிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகவே திருட்டு வீடியோ தடுப்பு குழு ஒன்றையும் நியமித்து உள்ளது. அவர்கள் கண்காணிப்பையும் மீறி, புதிய படங்கள் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. #Vishwaroopam2 #KamalHaasan

    விஸ்வரூபம் 2 படத்தில் கமலுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா, படங்களில் நடிக்க எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை என்று கூறியிருக்கிறார். #Andrea #Vishwaroopam2
    ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’.  கமல் நாயகனாக நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்காக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆண்ட்ரியா ‘முதல் பாகத்தை விட 2 ம் பாகத்தில் தான் நான் யார் என்பது ரசிகர்களுக்கு தெரியும்.

    இந்த படத்தில் நடித்தபிறகு எனக்கு சமூக பொறுப்பு அதிகரித்துள்ளது. படங்களில் நடிக்க எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. கதை பிடித்து இருந்தால் உடனே சம்மதித்துவிடுவேன். 6 மாதங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.



    விஸ்வரூபம் 2வும், வடசென்னையும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. 2 கதாநாயகிகள் என்று எந்த படத்தையும் ஒதுக்குவதில்லை. கதையில் எனக்கான முக்கியத்துவத்தை தான் பார்க்கிறேன். எதிர்காலம் பற்றிய எந்த திட்டமும் இல்லை’ என்று கூறி இருக்கிறார். ஆண்ட்ரியா அடுத்து கா என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
    கமல்ஹாசன் - பூஜா குமார் - ஆண்ட்ரியா ஜெரோமியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `விஸ்வரூபம் 2' படத்தின் விமர்சனம். #Vishwaroopam2Review #PoojaKumar #AndreaJeremiah
    இந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கமல்ஹாசனிடம் பயிற்சி பெறுகிறார் ஆண்ட்ரியா. இராணுவ பகுதியை விட்டு வெளியே சென்ற குற்றத்திற்காக கமல்ஹாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் கமல்ஹாசன், ரகசியமாக தனது வேலைகளில் ஈடுபடுகிறார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கச் செல்கிறார். 

    பின்னர், அமெரிக்காவில் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்ய செல்லும் கமல், பூஜா குமாரை திருமணம் செய்து கொள்கிறார். அவளது உதவியுடன் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்கிறார். முதலில் கமல் மீது அதீத அன்பு இல்லாமல் இருக்கும் பூஜா குமார், கமல் பாமை செயழிலக்கச் செய்யவே தன்னை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்து வருத்தப்படுகிறார். இருப்பினும் உள்ளுக்குள் கமலை காதலிக்கிறார்.



    இதற்கிடையே கமல் தனது குழுவினருடன் இந்தியா மற்றும் லண்டனில் வைக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்யும் முயற்சியில் இறங்க, அல்கொய்தா தலைவனான உமர், கமல்ஹாசனை கொல்வதற்காக தேடி வருகிறார். 

    கடைசியில், கமல் டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்தாரா? உமரை கொன்றாரா? அவரது முந்தைய வாழ்க்கையில் நடந்தது என்ன? அம்மாவுடனான சந்திப்பு, அதன் பின்னணியில் நடப்பது படத்தின் மீதிக்கதை. 



    கமல்ஹாசன் ஒரு நடிகராக தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நுணுக்கம் உண்டு என்பதற்கு ஏற்ப, அவரது நடிப்பே படத்தின் கதையை ஓட்டிச் செல்கிறது. முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் பூஜா குமார் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். காதல், கவர்ச்சி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணிபுரியும் ஆண்ட்ரியா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.

    முதல் பாகத்தில் தனது அமைதியான வில்லத்தனத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ராகுல் போஸ், இந்த பாகத்திலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மற்றபடி சேகர் கபூர், ராகுல் போஸ், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக பூர்த்தி செய்திருக்கின்றனர்.



    கமல்ஹாசன் ஒரு இயக்குநராக வழக்கமான அவரது பாணியை பின்பற்றியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி, நீட்சி என அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக நகர்வது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. வசனங்கள், பேச்சில் ஆங்காங்கே அரசியல் வசனத்தையும் நுழைத்திருக்கிறார். நியூயார்க்கில் வாழும் கதக் நடனக் கலைஞர், இந்தியாவின் ரகசிய உளவாளி, அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சியாளர், என பல்வேறு கதாபாத்திரங்களுடன் முதல் பாகத்தில் கலக்கிய கமல்ஹாசனின் அடுத்த ரூபங்கள் என்னென்ன என்பதையே விஸ்வரூபம் 2 படமாக உருவாக்கி இருக்கிறார்.

    ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `விஸ்வரூபம் 2' ரூபங்கள் குறைவு. #Vishwaroopam2Review #PoojaKumar #AndreaJeremiah

    கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் 22 இடங்களில் சென்சார் போர்டு கட், மியூட், காட்சி மாற்றம் ஆகிய இடங்களில் கை வைத்துள்ளது. #Vishwaroopam2
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார்கள். இந்த வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    தற்போது இப்படத்திற்கு சென்சார் போர்டு அளித்த கட், மியூட், காட்சி மாற்றம் ஆகியவற்றின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மொத்தம் 22 இடங்களில் சென்சார் போர்டு குழுவினர் கட், மியூட், காட்சி மாற்றங்கள் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் முன்னோட்டம். #VadaChennai #Dhanush
    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இசை - சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு - ஜி.பி.வெங்கடேஷ், ஆர்.ராமர், ஒளிப்பதிவு - வேல்ராஜ், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை இயக்குனர் - ஜாக்கி, சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் - ராபர்ட், ஆடை வடிவமைப்பு - அமிர்தா ராம், தயாரிப்பு - தனுஷ், தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி.சொக்கலிங்கம், தயாரிப்பு நிறுவனம் - வுண்டர்பார் பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - வெற்றிமாறன்.

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. படத்தை அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

    ×