search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 115463"

    தென்ஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்களை வேட்டையாடுவதற்காக குரூகர் தேசியப் பூங்காவிற்கு சென்ற நபர் சிங்கங்களுக்கு இரையானார். #SouthAfrica #RhinoPoacher
    கேப்டவுன்:

    தென்ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் குரூகர் தேசியப் பூங்கா உள்ளது.

    இங்குள்ள காண்டாமிருகங்களை சட்டவிரோதமாக வேட்டையாடி அதன் கொம்புகளை கடத்தி விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு ஆசிய நாடுகளில் அதிக பணம் கிடைக்கிறது.

    இந்த நிலையில், லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த 5 பேர் காண்டாமிருகங்களை வேட்டையாடுவதற்காக குரூகர் தேசியப் பூங்காவுக்கு சென்றனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். அவரை யானை காலால் மிதித்து நசுக்கி கொன்றது. பின்னர் அவரது உடலை சிங்கக் கூட்டம் ஒன்று இழுத்து சென்றது.

    இதையடுத்து, அவருடன் வந்திருந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று, வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, கொல்லப்பட்டவரின் மண்டையோடு மட்டுமே கிடைத்தது. அவரது உடல் முழுவதையும் சிங்கங்கள் தின்றுவிட்டன.

    இறந்தவரின் உறவினர்களுக்கு தேசியப் பூங்கா அதிகாரிகள் தங்களின் இரங்கலை தெரிவித்தனர்.
    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் மோஷன் போஸ்டரை சூர்யா வெளியிட்டுள்ளார். #KombuVatchaSingamda
    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். 

    தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைந்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

    இதன் மோஷன் போஸ்டரை தமிழ் சினிமாவில் சிங்கம் என்று அழைப்படும் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.


    தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் முயற்சியால் செயற்கை கருத்தரிப்பின் மூலம் பெண் சிங்கம் ஒன்று 2 சிங்க குட்டிகளை ஈன்றது. #LionCubs
    கேப்டவுன்:

    26 ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்கள் அதிகம் வாழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அவை தொடர்ந்து அழிந்து வருகின்றன. 43 சதவீதம் சிங்கங்கள் அழிந்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் 20 ஆயிரம் மட்டுமே உள்ளன.

    இந்த நிலையில் சிங்கத்தின் இனத்தை காப்பாற்ற விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிடோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெண் சிங்கத்துக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்தனர்.

    முன்னதாக உடல் திடகாத்திரமான ஆண் சிங்கத்தின் விந்தணுவை (உயிரணு) சேகரித்தனர். அதை தகுதி வாய்ந்த பெண் சிங்கத்தின் கருமுட்டையுடன் இணைத்து செயற்கை கருத்தரிப்பு செய்தனர். பின்னர் அதை பெண் சிங்கத்தின் கர்ப்பபைக்குள் வைத்தனர்.


    அதை தொடர்ந்து 2 சிங்க குட்டிகள் பிறந்தன. அதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குட்டிகளும் நல்ல ஆரோக்யத்துடன் உள்ளன. ஒரே மாதிரியுள்ள 2 குட்டிகளும் வன விலங்குகள் சரணாலயத்தில் ஓடியாடி விளையாடுகின்றன. இவற்றை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.

    இதன் மூலம் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்க குட்டிகள் என்ற பெருமையை இவை பெற்றுள்ளன.

    இத்தகைய செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அழிந்து வரும் யானை இனத்தை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  #Artificially #LionCubs #ArtificialInsemination
    தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shepherd #Lion #Goats
    ஆமதாபாத்:

    குஜராத்தில் புகழ்பெற்ற கிர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. ஆசிய சிங்கங்களின் சரணாலயமாக விளங்கும் இந்த பூங்காவின் ஒரு பகுதி அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் பூங்காவின் எல்லையோரம் அமைந்துள்ள அம்பார்டி கிராமத்தை சேர்ந்த பவேஷ் பர்வாட் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி, தனது ஆடுகளை அருகில் உள்ள மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார்.

    இவர் மலையை நெருங்கியதும், அங்கே புதர்களுக்கு இடையே மறைந்திருந்த 2 சிங்கங்கள் திடீரென வெளியே வந்து ஆடுகளை வேட்டையாட முயன்றன. இதை எதிர்பாராத பவேஷ் பர்வாட், அந்த சிங்கங்களை விரட்ட முயன்றார். அப்போது ஒரு சிங்கம் திடீரென அவர் மீது பாய்ந்தது.

    இதனால் பவேஷ் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டை போட்டார். இதில் அவரது கைகளிலும், உடலிலும் சிங்கத்தின் நகக்கீறல்கள் விழுந்தன. இதனால் அவர் காயம் அடைந்தார்.

    எனினும் விடாமல் அவற்றுடன் சண்டையிட்ட பவேஷ், இடையிடையே சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கும் அழைத்தார். இதைக்கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் போட்டு சிங்கங்களை விரட்டினர். பின்னர் காயமடைந்த பவேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Shepherd #Lion #Goats  #tamilnews 
    ×