என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 115468
நீங்கள் தேடியது "வாக்காளர்"
மின்னணு விளம்பரத்திரை கொண்ட வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிப்பரப்பப்பட உள்ளது.
அரியலூர்:
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை கொண்ட வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிப்பரப்பப்பட உள்ளது.
அந்த வாகனத்தை கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அந்த வாகனத்தில் ஒளிப்பரப்பான வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், “அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பொதுமக்கள் தேர்தல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்காகவும், கருத்துக்களை தெரிவிப்பதற்காகவும் கலெக்டர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை மையம் இயங்குகிறது. பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்காக இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன், எழிலரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை கொண்ட வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிப்பரப்பப்பட உள்ளது.
அந்த வாகனத்தை கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அந்த வாகனத்தில் ஒளிப்பரப்பான வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், “அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பொதுமக்கள் தேர்தல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்காகவும், கருத்துக்களை தெரிவிப்பதற்காகவும் கலெக்டர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை மையம் இயங்குகிறது. பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்காக இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன், எழிலரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X