search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனைனா"

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

    படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.



    இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். 

    தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். #ENPT #Dhanush #MeghaAkash #Sasikumar GauthamMenon

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
    தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், படக்குழு ஈடுபட்டு வருகிறது.


    படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.


    தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார். #ENPT #EnaiNokiPaayumThota #Dhanush #MeghaAkash

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதால், படம் கோடையில் ரிலீசாக வாய்ப்புள்ளது. #ENPT #Dhanush
    தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘வட சென்னை,’ ‘மாரி-2’ படங்கள் திரைக்கு வந்தன. 2 படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், இயக்குநர் கவுதம் மேனன் இரவு-பகலாக ஈடுபட்டு இருக்கிறார்.



    படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.

    தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார். #ENPT #EnaiNokiPaayumThota #Dhanush #MeghaAkash

    90-களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகர்களுடன் நடித்து பின்னர் சினிமாவில் இருந்து விலகிய அமலா, நீண்ட இடைவேளைக்கு பிறகு இணையதொடரின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். #HighPriestess #Amala #Sunaina
    காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சுனைனாவுக்கு வரவேற்பு பெற்றுத்தந்தது வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்கள் தான்.

    இதனையடுத்து சமர், தொண்டன் போன்ற படங்களில் நடித்தார். திரைப்படங்களி லிருந்து இணைய தொடர் பக்கம் திரும்பியுள்ள சுனைனாவுக்கு, ஹாரர் திரில்லரில் உருவான ‘நிலா நிலா ஓடிவா’ என்ற வெப் தொடர் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.



    தற்போது மற்றுமொரு புதிய தெலுங்கு இணைய தொடரில் நடிக்க சுனைனா ஒப்பந்தமாகியுள்ளார். ஹை பிரீஸ்டஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரை புஷ்பா என்ற பெண் இயக்குநர் இயக்க உள்ளார். இதில் நடிகை அமலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை அமலா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரையுலகில் இருந்து விலகினார். தற்போது இணையதொடர் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். #HighPriestess #Amala #Sunaina

    அறியாத வயதில் பள்ளி படிக்கும் போது, தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம்திறந்த சுனைனா, சம்பந்தபட்டவரை சட்டை காலரை பிடித்து கேட்க வேண்டும் என்று கூறினார். #MeToo #Sunanina
    காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, தெறி, சமர், கவலை வேண்டாம், காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இணைய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரக்கனியின் சில்லுகருப்பட்டி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகள் பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    ‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன்.



    அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மி‌ஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்கு புரியவில்லை. இப்படி 10-ம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் எனக்கு தொல்லை கொடுத்தார்.

    ஒரு கட்டத்தில் எனக்கு புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை.இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு இருக்கிறேன்.’’

    என்று சுனைனா கூறினார். #MeToo #Sunanina

    பூவரசம் பீபீ படத்தை அடுத்து ஹலீதா ஷமீம் இயக்கும் ‘சில்லு கருப்பட்டி’ படத்திற்காக சமுத்திரகனியுடன் சுனைனா இணைந்திருக்கிறார். #Sillukaruppati
    திரை உலகில் தற்போது அந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. ‘பூவரசம் பீபீ’ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கி வரும் 'சில்லு கருப்பட்டி' திரைப்படம் இந்த வகையை சேர்ந்தது. சமுத்திரகனி - சுனைனா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை டிவைன் புரடோக்‌ஷன் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கிறார்.

    தனது முதல் படமான 'பூவரசம்பூ பீபீ' முலம் திரை உலகினர் கவனத்தை மட்டுமின்றி, ரசிகர்கள் கவனத்தையும் பெருமளவு கவர்ந்த இயக்குனர் ஹலீதா ஷமீம், சில்லு கருப்பட்டி பற்றி கூறும்போது, ‘இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. அதிலொரு கதையில் தான் சமுத்திரக்கனி - சுனைனா ஜோடி ஒரு நடுத்தர வயது தம்பதியராக நடித்து உள்ளனர். 

    நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சராசரி தம்புதியனரின் வாழ்வியல் முறையை பதிவு செய்யும் அத்தியாயம் இவர்களுடையது. இவர்களுடன் ஓகே கண்மணி படத்தின் மூலம் பிரபலமான லீலா சாம்சன் ஒரு கதையிலும், தெய்வ திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழேணியின் உச்சத்தில் இருக்கும் சாரா அர்ஜுன் ஒரு கதையில் நடிக்கிறார். 

    நிவேதிதா சதிஷ் -மணிகண்டன் ஆகியோர் ஒரு கதையிலும் நடித்து உள்ளனர். இவர்களுடன் க்ராவ் மகா ஸ்ரீராம், ராகுல், ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி உள்ளனர். மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம், யாமினி யஙனமூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் தங்களது தனித்திறமைகளை தங்களுக்கு அளிக்கப்பட்ட பகுதிகளில் திறம்பட வெளிப்படுத்தி உள்ளனர். பிரதீப் குமார் இசை அமைக்கிறார்’ என்றார். 
    `காதலில் விழுந்தேன்', `மாசிலாமணி' படங்களில் இணைந்து நடித்த நகுல் - சுனைனா ஜோடி 9 வருடங்களுக்கு பிறகு `எரியும் கண்ணாடி' என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். #EriyumKannadi #Nakul #Sunaina
    நகுல் - சுனைனா இருவரும் கடந்த 2008-ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். அதனைத் தொடர்ந்து மாசிலாமணி படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த இவர்கள், புதிய படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

    `எரியும் கண்ணாடி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை சச்சின் தேவ் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.



    விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. முருகானந்தம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ரியாஸ் முகமது படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    நகுல் நடிப்பில் அடுத்ததாக `செய்' என்ற படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. #EriyumKannadi #Nakul #Sunaina

    தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறியுள்ள இயக்குநர் கவுதம் மேனன், படத்தின் ரிலீஸ் அறிவிப்பையும் வெளியிட்டார். #ENPT #Dhanush
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும், படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் நேற்று அறிவித்தார். படப்பிடிப்பின் கடைசி நாளான நேற்று படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய கவுதம் மேனன், இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    `கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நன்றி தனுஷ், எங்களுடன் இந்த பயணத்தில் இணைந்த சசிகுமாருக்கு மிக்க நன்றி. இனி தர்புகா சிவா, எடிட்டர் பிரவீன் படத்தை பார்த்துக் கொள்வார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சசிகுமார், தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.



    தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். 

    அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே படங்கள் தீபாவளி ரேசில் இருந்து தள்ளிப்போனதால், விஜய்யின் சர்கார் படத்துடன் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா மோதவிருக்கிறது. #ENPT #Dhanush #SasiKumar #MeghaAakash

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. #ENPT #Dhanush
    விக்ரமின் துருவ நட்சத்திரம், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன். 

    இதில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில காரணங்களால் படம் முழுமையடையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் சமரசமாகித் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து, “இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடு இரவில் மும்பையில் உள்ள உயரமான கூரையில் நடைபெற்றது. அழகிய மேகா, ‘டஃப்பி’ சசிகுமார் ஆகியோர் காட்சியுடன் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்கான உங்களது (சசிக்குமார்) பங்களிப்பை பாராட்டத்தான் வேண்டும்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தனுஷ் அண்ணன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சசிகுமார் நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோ‌ஷன் பிக்சர்ஸ் பி.மதனுடன் இணைந்து கவுதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளது. #ENPT #Dhanush #SasiKumar #MeghaAakash

    தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
    தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

    படத்தின் 90 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து விசிறி சூட் என்ற ஆடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
    தர்புகா சிவா இசையில் விசிறி, நான் பிழைப்பேனோ என இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். #ENPT #Dhanush

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். #ENPT #Dhanush #SasiKumar
    தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. 

    கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இந்த படத்தில் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

    படத்தின் 90 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு நேற்று இரவு துவங்கியிருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் தனுஷ் - சசிகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளனர். இந்த வாரத்திற்குள் மீதமுள்ள காட்சிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

    படத்தின் புதிய டைட்டில் லோகோ ஜூலை 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து படம் விரைவில் திரைக்கு வரும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து வெளியாகிய இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ENPT #Dhanush
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிகர் சசிகுமார் தனுஷுக்கு அண்ணனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush #SasiKumar
    தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. 

    கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் சசிகுமாருடன் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் கவுதம் மேனன், சசிகுமார் இருவரும் அதனை உறுதிப்படுத்தினர். 

    இந்த நிலையில், படத்தில் தனுசுக்கு அண்ணனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து விரைவில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சசிகுமார் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமான சுப்பிரமணியபுரம் படம் வெளியாகி நேற்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்தது.



    அதனை ஒட்டி இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் பாராட்டி டுவிட்டரில் எழுத நேற்று சுப்ரமணியபுரம் படத்தின் 10-வது ஆண்டு விழா சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கும் சசிகுமார், அடுத்த ஆண்டு மீண்டும் இயக்குனராக தன்னை பார்க்கலாம் என்று உறுதி அளித்து இருக்கிறார். சுப்பிரமணியபுரத்தின் பார்ட் 2 வருமா? என்ற கேள்விக்கு வாய்ப்பே இல்லை. ஒரு சுப்பிரமணியபுரம் தான் என்றும் கூறி உள்ளார். #ENPT #Dhanush #SasiKumar

    ×