search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்குவங்காளம்"

    மேற்குவங்காளத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார பாடலுக்கு தடைவிதித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசை விமர்சிக்கும் வகையில் பாடல் ஒன்றை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்கின்றனர்.

    ‘இனி திரிணாமுல் இருக்காது’ என தொடங்கும் அந்த பாடலை அமீத் சக்ரவர்த்தியை எழுத, பா.ஜ.க. எம்.பி.யும், பாடகருமான பாபுல் சுப்ரியோ இசையமைத்து பாடி உள்ளார்.



    பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த பாடலை பயன்படுத்தி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் இனி அந்த பாடலை பிரசாரத்துக்கு பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி பாபுல் சுப்ரியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதற்கிடையில், பா.ஜ.க.வின் பாடலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரசை தரக்குறைவாக விமர்சித்ததாக பாபுல் சுப்ரியோ மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission 
    மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் மேலும் ஒரு பாலம் இன்று உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KolkataBridgeCollapse
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மேஜர்ஹட் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மேம்பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இடிந்து விழுந்த மேஜர்ஹட் மேம்பாலத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி பார்வையிட்டார். விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரின் பன்சிடேவா பகுதியில் மேலும் ஒரு பாலம் இன்று உடைந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். போக்குவரத்து பெரிதும்
    பாதிக்கப்பட்டது.

    இரு தினங்களுக்கு முன் மேஜர்ஹட் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், இன்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #KolkataBridgeCollapse
    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இடிந்து விழுந்த மேஜர்ஹட் மேம்பாலத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று பார்வையிட்டார். #KolkataBridgeCollapse #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மேஜர்ஹட் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மேம்பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி இடிந்து விழுந்த மேஜர்ஹட் மேம்பாலத்தை இன்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசு வேலையும் வழங்கப்படும். இன்று மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தார். 

    இந்த மேம்பால விபத்துக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #KolkataBridgeCollapse #MamataBanerjee
    மேற்கு வங்காளத்தின் உள்ளாட்சி தேர்தல் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங். கட்சியினரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக, கம்யூனிஸ்டு கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, எதிர் வேட்பாளர் இல்லாத 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பாஜக, கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர்ந்த வழக்கில், திரிணாமுல் காங். கட்சியினர் பெற்ற வெற்றி செல்லாது என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாஜக, கம்யூனிஸ்டு கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உள்ளாட்சி தேர்தலில் 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரசார் பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை இன்று தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் உள்ளாட்சி தேர்தல் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். இந்த வெற்றியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இதன்மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்ற கம்யூனிஸ்டுகள், பாஜகவினர் முயற்சி தோல்வி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார். #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress #MamataBanerjee
    மேற்குவங்காளத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரசார் பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
     
    இதையடுத்து, எதிர் வேட்பாளர் இல்லாததால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 ஆயிரம் பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

    இவர்களது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். விசாரணை முடிவில் 20 ஆயிரம் பேரின் வெற்றி செல்லாது என கோர்ட் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலில் 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்துள்ளது.

    மேலும், இ-மெயில் மற்றும் வாட்ஸ் அப்பில் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress
    மேற்குவங்காளம் மாநிலம் டார்ஜீலிங்கில் உள்ள உறைவிடப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengal
    கொல்கத்தா:

    பீகார் மாநிலம் பாட்னா நகரைச் சேர்ந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன், மேற்குவங்காளம் மாநிலம், குளுகுளு பிரதேசமான டார்ஜீலிங்கில் உள்ள மிகப்பிரபலமான உறைவிடப் பள்ளியில் தங்கியவாறு நான்காம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில், நேற்று இரவு உணவு வேளையின் போது சிறுவனை காணாத விடுதி காப்பாளர், அவனது அறைக்கு தேடிச் சென்றார். அப்போது, அந்த அறையின் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் தூக்கில் அவன் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த காப்பாளர், உடனடியாக தூக்கில் இருந்து சிறுவனை கழற்றி, அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி, சிலுகுரியில் உள்ள வடக்கு வங்காளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தங்கள் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள சாத்தியமில்லை எனவே இந்த வழக்கை கொலை என்ற கண்ணோட்டத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் போலீசாரை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தரமான கல்வியைத் தேடி, பீகார் மாநிலத்தில் இருந்து மேற்குவங்காளம் வந்து படித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengal
    மேற்கு வங்க மாநிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்புடன் கிராம மக்கள் பல்வேறு விதமாக செல்பி எடுத்துக்கொண்டதில் மலைப்பாம்பு பரிதாபமாக உயிரிழந்தது.
    கொல்கத்தா:

    இன்றையை ஸ்மார்ட்போன் உலகில் செல்பி மோகம், அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்தாலும்,   அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டே வருகிறது.

    செல்பி மோகத்தால் மனிதர்கள் உயிரிழந்து வந்த நிலையில், தற்போது அதே செல்பி மோகம் உயிரினங்களையும் மரணிக்க செய்கிறது. மேற்கு வங்க மாநிலம் பாபுஜியோர் கிராமத்தை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் செல்லும் ஆற்றில் 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்துள்ளனர். பின்னர் அதனுடன் பல்வேறு விதமாக செல்பியை எடுத்துள்ளனர்.

    செல்பி எடுப்பதற்காக பாம்பினை மிக மோசமாக கையாண்டதால் மலைப்பாம்பு உயிரிழந்துள்ளது. சிலர் பாம்பின் கழுத்துப்பகுதியை பிடித்த வண்ணமும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட புகைப்படங்களை சேகரித்து, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
    மேற்குவங்காளத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் 16 பேர் உயிர் இழந்தனர். #Panchayatpolls #violence
    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநிலத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளிடையே 4 முனை போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இதற்கிடையில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடையே மோதல் வெடித்தது. அதே போல் பா.ஜ.க. தொண்டர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுபோட வந்த மக்களை கலவரக்காரர்கள் விரட்டி அடித்தனர். செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

    மாநிலம் முழுவதும் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் 16 பேர் உயிர் இழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். மேற்குவங்காளத்தில் தேர்தலின் போது நடந்த வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி அங்கு சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டதாகவும் எனவே உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ கோரிக்கை விடுத்து உள்ளார்.   #Panchayatpolls #violence
    ×